பக்கங்கள்

29 டிசம்பர் 2010

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புத்தான்.-ப்ரியாமணி.

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புதான். இனி இந்த மாதிரி படங்களில் நடிக்கமாட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியாமணி.
பருத்திவீரன் படம் மூலம் மறு வாழ்வு பெற்றவர் நடிகை ப்ரியாமணி. ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு எல்லோரும் பாவாடை தாவணி கெட்டப்பையே தருவதாகவும், கிளாமர் உடைகளில் ஆட விருப்பமாக இருப்பதாகவும் கூறி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ப்ரியாமணி.
ஆனால் பருத்திவீரன் ரேஞ்சுக்கு அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதில் கிடைத்ததோ துக்கடா வேடம்.
இந்த நிலையில் அவர் நடித்து தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ரத்தசரித்திரம் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் இப்படிக் கூறுகிறார், "ஆந்திராவில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம்தான் அந்த படத்தின் கதை. அதனால் இப்படம் ஆந்திராவில் சுமாராகப் போனது. ஆனால் தமிழில் ஓடவில்லை. நான் நடித்த பருத்திவீரன் படத்தை பார்த்துதான் இப்படத்திற்காக ராம்கோபால் வர்மா என்னை தேர்வு செய்தார். எனக்கு கொடுத்த வேடத்தில் நான் நூறு சதவீத உழைப்பை கொடுத்தேன். நானே டப்பிங்கும் பேசினேன். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது பெரிய வருத்தம் தந்துள்ளது. இந்த மாதிரி படங்களை ஒப்புக் கொள்வது தவறுதான். இனி ரத்த சரித்திரம் போன்ற சின்ன வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதையும், பாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்", என்று கூறியுள்ளார்.

24 டிசம்பர் 2010

போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய்!

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சூட்கேஸ் விமான நிலையத்தில் மாயமானது. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக டிரஸ்ஸை தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அவசர டிரஸ்ஸாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தி விட்டார் ஐஸ்வர்யா.
சென்னையில் நடந்த ஒரு புரமோஷனல் நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து வந்தார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி. அவரது டிரஸ் இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, நான் டிராக் சூட்டிலேயே நிகழ்ச்சிக்கு வந்து விடட்டா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திய அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர்.
ஐஸ்வர்யாவின் சூட்கேஸ் காணாமல் போனது தங்களது தவறுதான் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒத்துக் கொண்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவரது பேக்கை கண்டுபிடித்துக் கொடுத்தனர் விமான நிறுவனத்தினர்.
சும்மா சொல்லக் கூடாது, நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.
இருக்காதா பின்னே, உலக அழகின்னா சும்மாவா...!

15 டிசம்பர் 2010

திருநங்கை கல்கி திரைப்பட நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வருபவர் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர். தமிழகத்தின் பிரபலமான திருநங்கைளில் இவரும் ஒருவர். திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வருபவர்.
இந்த நிலையில் தற்போது கல்கி திரைப்பட நாயகியாகியுள்ளார். நர்த்தகி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் கல்கி. திருநங்கைகள் குறித்த படம் இது. திருநங்கைகளை நல்ல வெளிச்சத்தில் காட்டும் கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கல்கவி.
புன்னகைப் பூ கீதா இப்படத்தை தயாரிக்கிறார். விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்திரித்த முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

12 டிசம்பர் 2010

சிம்புவுக்காக துடிக்கும் ஷம்மு!

சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஷம்மு துடியாத் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்புவுக்கு திரையுயலகில் நிறைய நண்பர்கள். அவர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் நிறையவே உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷம்மு.
மலையாளத்து ஷம்மு, காஞ்சிவரம் படம் மூலம் நடிகையாக வந்தவர். தொடர்ந்து சில படங்களில் நடித்த ஷம்மு இப்போது தமிழில் லைம் லைட்டில் இல்லை.
தமிழில் நிறையப் படங்கள் இல்லாதது குறித்து ஷம்முவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதைகளாக வரும் படங்களை மட்டுமே ஏற்று நடிக்க காத்திருக்கிறேன். கதைக்குத் தேவையான கவர்ச்சிக்கும் நான் தயார்தான். ஆனால் கவர்ச்சிக்காக கதையில் காட்சிகளைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
நல்ல கதைக்காக காத்திருக்கும் ஷம்மு, சிம்புவுடனும் நடிக்க துடிப்புடன் இருக்கிறாராம்.
இவர் சிம்புவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆனால் இதுவரை தனக்கு சிம்பு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லையே என்று ஏக்கப்படுகிறார் ஷம்மு. சிம்புவுக்கு நான் நெருங்கிய தோழிதான். ஆனால் இதுவரை அவர் என்னை ஒரு படத்தில் கூட நடிக்க கூப்பிடவில்லை. அவர் எப்போது கூப்பிட்டாலும் உடனே கால்ஷீட் தர தயாராகவே இருக்கிறேன். பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி, சிம்பு கேட்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயாராம் ஷம்மு.
ஷம்முவுக்கேற்ற ஜம்மென்ற கதை ரெடியானால் கூப்பிடலாம் என்று சிம்பு இருக்கிறாரோ என்னவோ!

09 டிசம்பர் 2010

கமல்,த்ரிஷா இருவரையும் கைதுசெய்ய வேண்டும்.

நடிகர் கமல்-த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தில் கமல் எழுதியுள்ள பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கோவை இந்து மக்கள் கட்சியின் பிரச்சார அணி செயலாளர் கிருஷ்ண கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர்.
அப்புகார் மனுவில், ’’மன்மதன் அம்பு படத்தின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் கமலஹாசன் எழுதியுள்ள “கண்ணோடு” எனத் தொடங்கும் பாடல் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வேதமான பிரபந்தம் குறித்து அவதுறு பரப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் கடை பிடிக்கும் வரலட்சுமி நோன்பை அசிங்கப் படுத்தும் வகையிலும், வக்கிரமான பாலுணர்வை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்து சமய கடவுளான அரங்கநாதர் குறித்தும் அவதூறு செய்யப்பட்டுள்ளது. இது ரெங்கநாதரின் பக்தரான எனக்கும், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் பெண்கள் இந்த பாடல் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த பாடலை எழுதிய கமலஹாசன் மீது மத உணர்வை புண்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வக்கிரமான பாலுணர்வுகளை தூண்டுதல் ஆகிய குற்றங்களை செய்ததற்காக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளனர்.

07 டிசம்பர் 2010

நமீதா ஏன் இப்படி ஆனார்!

விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து எல்லோரது இதயத் துடிப்பையும் எகிற வைப்பது நமீதாவின் வழக்கம்.
நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த நமீதா ஜாக்கெட் என்ற பெயரில் வெறும் பிரா மட்டுமே அணிந்து வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முன்பக்கம் முழுசாக மூடிக் கொண்டிருந்த நமீதா, முதுகுப் பக்கத்தை கிட்டத்தட்ட முழுசாகவே திறந்து வைத்து 70 எம்எம் ஷோ காட்டினார்.
இதில் அனைவரையும் கவர்ந்த விசயம், நமீதாவின் பின்கழுத்திலிருந்து முதுகு வரை நீண்டிருந்த டாட்டூ. இந்த கறுப்பு நிற டாட்டூவை அவர் பெங்களூரில் குத்திக் கொண்டாராம். பார்க்க செம கவர்ச்சியாக இருக்கிறது என பலரும் கூறியதால், இப்போது வேறு சில கவர்ச்சிப் பிரதேசங்களிலும் குத்திக் கொள்ளப் போகிறாராம் டாட்டூவை.. அதாவது முன் கழுத்து, தோள் பட்டையில்!!
த்ரிஷா ஏற்கெனவே கழுத்துக்குக் கீழே டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இப்போது நமீதா பேக் சைடில் குத்தியுள்ளார்.

05 டிசம்பர் 2010

கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.
லட்சுமி ராய் இதுவரை ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தையே எட்டவில்லை. ஆனாலும் படு பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து செய்திகளில் அடிபட்டவண்ணமிருக்கிறார்.
தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய்க்கு மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறதாம்.
தற்போது மங்காத்தா படத்திற்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ளார் லட்சுமி ராய். அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் மலையாளப் படங்களில் நடிக்கப் போகிறார்.
மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்துத வருகிறார் லட்சுமி ராய்.
மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் அந்தஸ்து இல்லை, முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகவும் இல்லை. ஆனாலும் படு பிசியான நடிகையாக லட்சுமி ராய் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

01 டிசம்பர் 2010

நான் யாரையும் காதலிக்கவில்லை,-சரண்யா.

"நான் யாரையும் காதலிக்கவில்லை; தாயார் துன்புறுத்துகிறார்; அவருக்கு அறிவுரை கூறுங்கள், என்று மாயமானதாக கூறப்பட்ட நடிகை சரண்யா போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சரண்யா(22). சினிமா நடிகை. "காதல், பேராண்மை படத்தில் நடித்துள்ள இவர், "மழைக்காலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, தன் மகள் சரண்யாவை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை அடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், தி.நகர் போலீஸ் நிலையம் வந்த நடிகை சரண்யா, உதவி கமிஷனர் மனோகரனை சந்தித்து தன் நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அப்போது சரண்யா, "என் தாயார் கூறியது போல் நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமா தொடர்பாக என் அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்ததால், வீட்டில் இருந்து வெளியேறி வெளியில் தங்கி நடித்து வருகிறேன். நான் சென்னையில் தான் இருக்கிறேன். என் தாயார் என்னை துன்புறுத்துகிறார். நான் எல்லாவற்றையும், அவரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.

29 நவம்பர் 2010

அடித்தாரா நயன்தாரா?

ஹன்சிகாவை பிரபு தேவா காதலிப்பதாகவும், இருவரும் ஹோட்டலில் ஒன்றாக இருந்ததை கையும் களவுமாகப் பிடித்த நயன்தாரா, பிரபு தேவாவின் சட்டையைப் பிடித்து சண்டை போட்டார் என்றும் செய்திகள் வந்தன.
நயன்தாரா வந்ததும் அங்கிருந்து நைசாக நழுவப் பார்த்த ஹன்சிகாவை அடித்தார் நயன்தாரா என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை சமீபத்தில் செய்தி வெளியிட்டு இன்னும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த விவகாரம் குறித்து ஹன்சிகா இன்று விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், எனக்கு இப்போதுதான் 19 வயசாகுது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர்.
பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்ற அளவில் அவரை நேசிக்கிறேன். எனக்கு அண்ணன் மாதிரின்னு கூட சொல்லலாம்.
நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவில்லை" என்றார்.
என்னமோ போங்க... இதுக்கெல்லாம் 'ஐ விட்னஸா' தேடிக்கிட்டிருக்க முடியும்!

28 நவம்பர் 2010

தமிழுக்கு வரும் மதுரிமா.

தெலுங்கு சினிமாவின் கவர்ச்சிகரமான நாயகிகளில் முக்கியமானவரான மதுரிமா இப்போது தமிழுக்கும் வருகிறார்.
மலையாளத்து ஷாஜி கைலாஷ் இயக்க, ஆர்.கே. நாயகனாக நடிக்கும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தின் நாயகியாக நடிக்கிறார் மதுரிமா.
இந்தியில் பெரும் வெற்றிப் படமாக, பரபரப்பாகப் பேசப்பட்ட 'அப்தக்சப்பன்' படத்தின் மூலக் கதையைத் தழுவி உருவாக்கப்படும் படம் இந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு. இப்படத்தின் டைட்டிலை கமல்ஹாசனிடமிருந்து பிரத்யேக அனுமதி பெற்று வாங்கியுள்ளனராம்.
இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் ஆர்.கே. அவருக்கு ஜோடி போடுகிறார் மதுரிமா. தெலுங்கைப் போல தமிழிலும் கவர்ச்சித் தென்றலை அவர் தவழ விட வருவதால் இங்கு ஏற்கனவே உள்ள ஹீரோயின்கள் வட்டாரத்தில் சற்றே நடுக்கம் ஏற்பட்டுள்ளதாம்.
இப்படத்தின் வெற்றியைப் பொறுத்து அடுத்தடுத்து தமிழிலும் தடபுடலாக நடிக்க தயாராகி வருகிறாராம் மதுரிமா.

26 நவம்பர் 2010

கிள்ளாதீங்கண்ணே என்று கண்டித்த சினேகா!

கோழிப் பண்ணையைப் பார்வையிட வந்த போது, தனது இடுப்பை தொடர்ந்து கிள்ளியபடியும், இடித்தபடியும் இருந்த இளைஞரை, சற்றுகோபத்துடன், தயவு செய்து இப்படி செய்யாதீங்கண்ணே என்று கூறி கண்டித்தார் நடிகை சினேகா. இதையடுத்து அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர்.
நடிப்பு தவிர விளம்பரப் படங்கள், கடை திறப்பு உள்ளிட்டவற்றிலும் பிசியாக இருக்கிறார் சினேகா. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், ஹோட்டல் திறப்பு விழாவில் சினேகா கலந்து கொண்டார்.
அழகான சேலையில், கழுத்து நிறைய நகையைப் பூட்டிக் கொள்ளாமல் சிம்பிளாக அதே சமயம் படு க்யூட்டாக வந்த சினேகாவைப் பார்க்க கூட்டம் கூடி விட்டது.
ஹோட்டல் திறப்பை முடித்த பின்னர் அதன் உரிமையாளர் வைத்துள்ள ஈமு கோழிப் பண்ணையைப் பார்க்கச் சென்றார் சினேகா. இதையடுத்து அங்கு பெரும் கூட்டம் கூடி விட்டது. கூடியிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் சினேகாவை மனம் போனபடி படம் பிடித்தனர்.
பெண்கள் சிலர் தங்களுக்கு போஸ் தருமாறு கூறவே சினேகாவும் புன்னகைத்தபடி நின்றார். இதையடுத்து தங்களது செல்போன்களில் சினேகாவை படம் எடுத்தனர் அப்பெண்கள்.
அப்போது சினேகாவை நெருக்கியபடி நின்ற ஒரு நபர் அவரது இடுப்பைக் கிள்ளியுள்ளார். இதைப் பார்த்து கோபமடைந்த சினேகா, அவரிடம் திரும்பி, அப்போதிருந்தே இடித்துக் கொண்டே இருக்கறீங்கண்ணே, நல்லா இல்லே. இன்னொரு முறை இப்படி செய்யாதீங்க என்று கண்டித்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அந்த நபரை கடுமையாக எச்சரித்து, திட்டி அங்கிருந்து அனுப்பி விட்டனர்.

24 நவம்பர் 2010

காவலன் படத்தை திரையிட உயர்நீதிமன்றம் தடை!

நடிகர் விஜய் நடித்துள்ள காவலன் படத்தை 6 வார காலத்திற்கு வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த சந்திரா இன்கார்பரேட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சரவணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில்,
நடிகர் விஜய்- அசின் நடித்த காவலன் படத்தை ஏகவனூர் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் ரொமேஷ்பாபு தயாரித்துள்ளார். டைரக்டர் சித்திக் இயக்கி உள்ளார். வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.
படத்தை அடுத்த மாதம் 17-ந் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ரொமேஷ்பாபுவிடம் இருந்து ரூ.5.50 கோடிக்கு வாங்கினேன். இதற்கான ஒப்பந்தம் 29-9-2010 அன்று போடப்பட்டது. இதுவரை நான் ரூ. ஒன்றரை கோடியை முன்பணமாக கொடுத்துள்ளேன்.
இந்நிலையில் காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமையை உரிமையாளர் ரொமேஷ்பாபு சினிமா பாரடைஸ் நிறுவன உரிமையாளர் சக்தி சிதம்பரத்துக்கு விற்றுள்ளார்.
இதுபற்றி நான் சக்திசிதம்பரம் மற்றும் இப்படத்தை பிரின்ட் செய்யும் கலர் லேப்புக்கும் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன். மேலும் தயாரிப்பாளரிடம், கலர் லேப்பிடம் இருந்து வெளிநாட்டு உரிமை எனக்கு வழங்கியதற்கான கடிதம் வாங்கி தரும்படி வலியுறுத்தினேன்.
அதற்கு அவர் இனி என்னிடம் கலர் லேப் கடிதம் கேட்டால் வெளிநாட்டு உரிமைக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
நான் தயாரிப்பாளரிடம் மீதி தொகையை கொடுக்கும் போது கலர்லேப் என்னிடம் காவலன் பட பிரின்டை ஒப்படைக்க வேண்டும். வேறு யாருக்கும் பிரின்ட் கொடுக்க கூடாது என தடை விதிக்க வேண்டும். வெளிநாட்டு உரிமையை வேறு யாருக்கும் கொடுப்பதற்கும், படத்தை வெளியிடவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை இன்று விசாரித்த நீதிபதி ராஜேஷ்வர், படத்தை 6 வாரத்திற்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், விளக்கம் அளிக்கும்படி தயாரிப்பாளர் ரொமேஷ் பாபு, விநியோகஸ்தர் சக்திசிதம்பரம், கலர் லேப் நிர்வாகி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

21 நவம்பர் 2010

சீதையாக நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா போராட்டம்!

தெலுங்குப் படத்தில் சீதை வேடத்தில் நடிகை நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. ராமாயண கதையை இதில் படமாக்குகின்றனர். இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரபுதேவாவுடன் கள்ளக் காதல் கொண்டு, பிரபுதேவா குடும்பத்தில் புயலைக் கிளப்பி வரும் நயனதாரா, சீதை வேடத்தில் நடிப்பதா என்று அங்கு ஆட்சேபனை கிளம்பியது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், சீதை வேடத்தில் நயனதாராவே நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு இந்து அமைப்புகள் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிவசேனா சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரன் நினைவுப் பூங்கா முன்பு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை ஏற்க முடியாது. இது இந்துக்களை இழிவுபடுத்தும் செயல். எனவே இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். நயனதாரா இந்த வேடத்தில் நடிப்பது உறுதியானால் அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

18 நவம்பர் 2010

அசினுடன் விஜய் நெருக்கம்!

இலங்கை சென்று வந்ததால் தமிழர்களால் சபிக்கப்பட்டவர் அசின். இப்போது விஜய்யின் காவலன் படத்தில் தமிழர்களின் எதிர்ப்போடு நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அசினுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை கேட்டு வாங்கியது காவலன் படக்குழு. படபிடிப்பு தளத்தின் முன்பு பல தமிழ் இயக்கங்கள் போராட்டம் நடத்தியது தான் காரணம். என்ன வேடிக்கை!
இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் சித்திக். அவர் இது பற்றி பேசியதாவது, படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பது என் வேலை. மற்றதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொன்னார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தபோது, இலங்கை சம்மந்தமாக எதுவும் அசினிடம் கேட்க கூடாது என்று கட்டளையிட்டார்கள். மீறி இலங்கைப் பேச்சை எடுத்தும் அசின் விறு விறுவென வெளியேறினார். இப்படியெல்லாம் இருக்கிற நிலையில்...
காவலன் படத்தின் பாடல் காட்சி பூனேவின் அருகில் உள்ள லவாசா மலையில் எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் அசின் பயங்கர நெருக்கம் காட்டி இருக்கிறாராம். விஜய்யுடன் அசினுக்கு இது மூன்றாவது படம் என்பதால் புரிதல் அதிகமாய் இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறது சினிமா வட்டாரம்.
இருந்தாலும் பாடல் காட்சி ரொம்ப சூப்பரா வந்திருக்கு என்று சொல்கிறது படக்குழு. இந்தி பக்கம் போனதிலிருந்து அசின் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி வருகிறார் என்றும் இப்பொது சல்மான் கானுடன் நடிக்கும் ரெடி படத்திலும் சல்மானுடன் அசின் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதும் காத்து வழியாக கிடைத்த செய்தி. உண்மை என்னனு யாருக்கு தெரியும்!?

17 நவம்பர் 2010

என் திறமை கோடம்பாக்கத்திற்கு தெரியவில்லை!

பாலிவுட்டெல்லாம் போயும், பார்த்தும் பருப்பு வேகாததால் கோலிவுட்டுக்கு திரும்பி வந்திருக்கிறார் பத்மப்ரியா. வந்தவர் தன்னைத் தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும், தனக்கு தெரிந்த இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கும் தூது மேல் தூது விட்டு வாய்ப்பு தேடியும், வாய்ப்புகள் எதுவும் வாயிற் கதவை தட்டாததால் நொந்து நூடுல்ஸ்ஆகிப் போய் விட்டார். தனக்கு தெரிந்த நெருக்கமான மீடியாக்காரர்களிடம், என்னைப் போன்ற திறமையான நடிகைகளின் அருமை கோடம்பாக்கத்திற்கு தெரியவில்லை என புலம்போ புலம்பென புலம்பி வருகிறாராம். தங்களது திறமை தெரிந்து வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களையும், அடித்தார், துவைத்தார் என அசிங்கப்படுத்தி விடுகிறீர்களாமே மேடம்? அது மட்டும் சரியா?

15 நவம்பர் 2010

ரஜினி படத்தை 60 முறை பார்த்த சிக்கு புக்கு நடிகை!

ஒரு காலத்தில் என்க்கு தமிழ் கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்வது நடிகை களின் பேஷனாக இருந்தது. அப்படிப் பேசும் நடிகைகளுக்குத்தான் இங்குள்ள இங்குள்ள இயக்குநர்கள் சிலரும் ஆதரவை வாரி வாரி வழங்கி வந்தனர்.
ஆனால் இன்று நிலைமை தலைகீழ்... நடிக்க வரும் முன்பே தமிழைக் கொஞ்சமாகவேனும் கற்றுக் கொண்டு வரும் அளவுக்கு நடிகைகள் மாறியிருக்கிறார்கள் (இதிலும் விதிவிலக்குகள் உண்டு!).
அந்த மாதிரி நடிகைகளில் ஒருவர் ப்ரீத்திகா. பாலிவுட் நடிகை அம்ரிதா ராவின் தங்கை. பூர்வீகம் தமிழ்நாடுதான் என்றாலும் பிறந்து, வளர்ந்தது மும்பையில். ஆனால் தமிழ் அட்சர சுத்தமாகப் பேசுகிறார்.
சிக்கு புக்கு படத்தில் ஆர்யா ஜோடியாக அறிமுகமாகும் ப்ரீத்திகா, படத்தில் ஒப்பந்தமான பிறகு, தமிழை தெளிவாகக் கற்றுக் கொண்டுவிட்டாராம்.
பாலிவுட்டிலேயே இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாமே...? என்றால், 'வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. அப்போதுதான் தமிழில் சிக்குபுக்கு வாய்ப்பு வந்தது. தமிழில் அறிமுகமாவது இந்திக்கு நிகரான பெருமைதான்..." என்கிறார்.
ப்ரீத்திகாவின் பேவரிட் நடிகர் ? வேறு யாராக இருக்க முடியும்... சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.
ரஜினிதான் என் ஆல்டைம் பேவரிட் ஹீரோ... குழந்தையாக இருந்ததிலிருந்து இன்றுவரை நான் பார்க்கும் படங்கள் அவருடையதுதான். இந்தியில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த சால்பாஸ் படத்தை அறுபது தடவை பார்த்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள், அவருக்கு நான் எந்த அளவு ரசிகை என்று. இப்போது எந்திரன் பார்த்து பிரமித்துப் போனேன். அதிலும், இரும்பிலே ஒரு இதயம் பாடலில், அவரது நடனம்... சான்ஸே இல்லை..." என்றார்.

11 நவம்பர் 2010

ரசிகனுக்கு கன்னத்தில் அறைந்த ஜெனிலியா!

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்தவர் ஜெனிலியா. முன்னணி நடிகர்களான விஜய்யுடன் சச்சின், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம், தனுஷுடன் உத்தமபுத்திரன் படங்களிலும் நடித்துள்ளார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் விஜயவாடாவில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஜெனிலியாவை அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டார்கள்.
ஜெனிலியா வந்ததும் கூட்டம் அவரை மொய்த்துக்கொண்டது. விழா நடத்தியவர்களால் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டார் ஜெனிலியா.
அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ஜெனிலியாவின் உடம்பை தொட்டு சில்மிஷம் செய்தார். இதில் பொறுமையிழந்த ஜெனிலியா , ரசிகர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற ரசிகர்களும் விலகிக் கொண்டனர்.
ஆனால் பின்னர் இதனை மறுத்தார் ஜெனிலியா. 'ரசிகர் கூட்டத்தில் நான் மாட்டிக் கொண்டதும், குறிப்பிட்ட ஒரு ரசிகர் தன்னை நெருக்கியதும் உண்மையே... ஆனால் அவரை தள்ளிவிட்டதோடு சரி. அடிக்கவில்லை,' என்று கூறியுள்ளார் ஜெனிலியா.

09 நவம்பர் 2010

முற்றும் துறந்த வித்யா பாலன்!

எப்எச்எம் என்ற இதழுக்காக பிளவுஸைத் துறந்து முழு முதுகையும் காட்டியபடி அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.
முதுகு தெரிய வித்யா பாலன் கவர்ச்சி போஸ் கொடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் கூட கொடுத்துள்ளார். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக பிளவுஸையும் துறந்து முழு முதுகும் தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் அவர்.
எப்எச்எம் இதழின் அட்டைப் படத்திற்காகத்தான் இந்த கவர்ச்சிகரமான போஸ். வெறும் சேலை ஒன்றை முன்பக்கமாக சுற்றிக் கொண்டு, பிளவுஸ் இல்லாமல், முழு முதுகும் தெரியும் படி வித்யா பாலன் கொடுத்துள்ள இந்த போஸ் சூட்டைக் கிளப்பியுள்ளது.
எப்எச்எம் இதழின் 3வது ஆண்டையொட்டி இந்த ஸ்பெஷல் தரிசனம் கொடுத்துள்ளார் வித்யா. இந்த மாதம் இந்த கவர்ச்சி இதழ் விற்பனைக்கு வருகிறது.
விரைவில் மறைந்த கவர்ச்சிக் கன்னி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவுள்ளார் வித்யா பாலன். இப்படத்தில் வரலாறு காணாத அளவுக்கு கவர்ச்சியைக் கொடுக்க அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதற்கான ஒத்திகைதான் இந்த முதுகு போஸா...

05 நவம்பர் 2010

கடும் வெயிலில் சுருண்டு விழுந்த வசுந்தரா!

வட்டாரம், ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அதிசயா என்ற வசுந்தரா. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மும்பையில் செட்டிலானவர். நடிப்பதற்காக தமிழகத்துக்கு வந்து போகும் இவர் சில தெலுங்கு , கன்னடப் படங்களிலும் தலை காட்டியுள்ளார்.
இப்போது `தென்மேற்கு பருவக் காற்று' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தேனி அருகே ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் நடந்து வருகிறது.
கடும் வெயிலில் பொட்டல் வெளியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது கதாநாயகன் விஜய் சேதுபதி, சைக்கிளில் செல்லும் கதாநாயகி வசுந்தராவை துரத்தும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தது.
சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த வசுந்தரா திடீரென்று தலைகுபுற கீழே விழுந்ததோடு வயிற்றை பிடித்துக் கொண்டு கதறி அழவே இயக்குனர் உள்பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் அதிர்ந்துவிட்டனராம்.
உடனடியாக ஒரு டாக்டர் வரவழைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடும் வெயில் காரணமாக, அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் சிகிச்சைக்குப் பின் தொடர்ந்து நடித்துக் கொடுத்துவிட்டே சென்றாராம் வசுந்தரா.

03 நவம்பர் 2010

உத்தமபுத்திரனை சன் வாங்க மறுத்தது ஏன்?

தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தை சன் பிக்ஸர்ஸ்தான் வெளியிட்டது. சன் வெளியீடாக வராமல் போயிருந்தால் அந்தப் படம் பப்படம் ஆகியிருக்கும்.
இதனாலேயே தனுஷின் அடுத்த படமான குட்டியையும் சன்னிடம் விற்க முயன்றனர். ஆனால் குட்டியை வாங்கவில்லை சன். ஜெமினி நிறுவனமே தனியாக ரிலீஸ் செய்து கையை சுட்டுக் கொண்டது (இன்றைக்கு சன்னுடன் நெருக்கமாக உள்ளது ஜெமினி!)
அடுத்து உத்தமபுத்திரன் படம் வெளியாகிறது. இந்தப் படத்தை சன் பிக்ஸர்தான் வெளியிடும் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் படத்தில் அவ்வளவாக சன்னுக்கு திருப்தியில்லையாம். மேலும் எந்திரனையே தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் தொடர வைக்கும் பணிகளில் சன் பிக்ஸர்ஸ் தீவிரமாக உள்ளதால், உத்தமபுத்திரனை வாங்க மறுத்துவிட்டார்களாம்.
சமீபத்தில் நடந்த பிரஸ் மீட்டில், இது குறித்த கேள்விகளுக்கு இப்படி சமாளித்தார்கள் தனுஷும் இயக்குநர் ஜவஹரும்.
"படம் பிரமாதமாக வந்துள்ளது... இந்தப் படம் தெலுங்கு , கன்னடத்தில் சூப்பர் ஹிட். அந்த நம்பிக்கையில்தான் யாருக்கும் விற்காமல் சொந்தமாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்", என்று இருவரும் திரும்பத் திரும்ப கூற, 'இதுக்குப் பேருதான் மீசைல மண் ஒட்டலைங்கறது' என்று நமுட்டு சிரிப்பு சிரித்தனர் நிருபர்கள்!

02 நவம்பர் 2010

'மனுச நாத்தத்தைவிட மீன் வாடை எவ்வளவோ தேவலை!'

நடிகைகள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதே புதியாத சமாச்சாரம். டிஸ்கொத்தேக்களில் மது நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்கள், மீன் வாடைக்கு பயப்படுவார்கள்.
பெரிய பாம்புகளுடன் தைரியமாக நடிக்கும் இவர்கள்தான், கரப்பான் பூச்சிக்காக ஊரைக் கூட்டுவார்கள்.
குத்து ரம்யாவும் இந்த ரகம்தான். இவருக்கு தமிழர்களை அறவே பிடிக்காது. ஆனால் தமிழ்ப் படங்களின் வாய்ப்பு மட்டும் வேண்டும்.
காவிரி பிரச்சினைக்காக இங்கே கோலிவுட் உண்ணாவிரதமிருந்தபோது, இவர் பெங்களூரில் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என கொடிபிடித்து உண்ணும் விரதமிருந்ததை மறக்க முடியாது.
ஆனாலும், ரோஷக்கார தமிழ் சினிமாக்காரர்கள் இந்த குத்து ரம்யாவை தேடிப்போய் அழைத்து வந்து தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து குதூகலித்தனர். அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம், சரி விடுங்கள், அது கெளதம் மேனன் படம்.
இப்போது ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடிக்கிறார் இந்த குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா.
இப்படத்தில் ஜீவா வக்கீலாகவும், மீன் விற்பவராகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்படிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரம்யா கேரவனை நோக்கி ஓடினாராம். பதறிப்போன இயக்குநர் அவரிடம் உடம்பு சரியில்லையா? என்று கேட்க திவ்யாவோ, "உடம்பு நல்லாத்தான் இருக்கு, மீன் வாடையைத்தான் பொறுக்க முடியவில்லை," என்று கூறி உள்ளார்.
நாளைக்கொரு வேஷம் போடுகிற மனுஷன் நாத்தத்துக்கு இந்த மீன் நாத்தம் ஆயிரம் மடங்கு பெட்டர்... வாங்க உங்க சீனை வேணும்னா சீக்கிரம் முடிச்சிடறேன்", என்று கூறி அழைத்துப் போனாராம் இயக்குநர்.

01 நவம்பர் 2010

நாயகியின் கன்னம் பழுத்தது!

ஹீரோ கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் டைமிங் மிஸ் ஆனதால், நிஜமாகவே கன்னத்தில் பளார் என அறை விழ பொறி கலங்கிப் போய் கன்னம் வீங்கி கதறி அழுதாராம் நடிகை உதயதாரா.
இப்போதெல்லாம் ஷூட்டிங்கின்போது நடக்கும் நிஜக் காட்சிகள் குறித்த நிகழ்வுகள் கோலிவுட்டிலிருந்து நிறைய வருகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது ஹீரோயின் அல்லது ஹீரோ மூழ்கிய செய்திகள் , அடிப்பது போன்ற காட்சியின்போது நிஜமாகவே அடித்து விடுவது, ஹீரோயினைக் கடிப்பது போன்ற காட்சியில் நிஜமாகவே கடித்து விடுவது (நடிகர் விக்னேஷ் நடிகையின் கன்னத்தைக் கடிப்பது போல நடித்தபோது நிஜமாகவே கடித்து விட்டதாக செய்தி வந்தது) என்று நிஜங்கள் குறித்த பல செய்திகள் வருகின்றன.
அந்த வரிசையில் ஹீரோவிடம் அடி வாங்கிய ஹீரோயின் கதை குறித்த செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. பகவான் என்று ஒரு படம். யுவராஜா என்பவர்தான் நாயகன். உதயதாராதான் நாயகி.
நாயகியை ரவுடிகள் சிலர் கிண்டல் செய்கிறார்கள். அதை நாயகி ஹீரோவிடம் போய் சொல்கிறார். பொங்கி எழும் ஹீரோயினை அழைத்துக் கொண்டு ரவுடிகளிடம் செல்கிறார். ஆனால் அங்கு ரவுடிகளாக ஹீரோயின் சொன்னவர்கள் எல்லாம் சமூக சேவகர்கள் எனத் தெரிகிறது.
நாயகி தன்னை ஏமாற்றி விட்டதை அறியும் ஹீரோ கடும் கோபமடைந்து அவரை பளார் என அறைகிறாராம். இது சீன். இந்த சீனில் யுவராஜும், உதயதாராவும் நடித்தனர். யுவராஜ் ஓங்கி அறைவது போல நடித்தபோது படாரென உதயதாரா திரும்பிக் கொள்ள வேண்டும். ஆனால் டைமிங் மிஸ் ஆகி உதயதாரா திரும்பாமல் இருந்து விட்டார். பிறகென்ன கன்னம் பளுத்துப் போய் வீங்கி விட்டதாம்.
வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விட்டாராம் உதயதாரா. கதறி அழுத அவரை நீண்டநேரம் ஆறுதல் படுத்தினார் யுவராஜ். இருந்தாலும் உதயதாரா தேறி வர அரை மணி நேரம் ஆனதாம். பின்னரே அந்தக் காட்சியமைப் படமாக்கி முடித்தார்களாம்.

30 அக்டோபர் 2010

விமானம் தாமதம்,கடுப்பான லட்சுமி ராய்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் பயணமான லட்சுமிராய், தனியார் விமான சேவை குளறுபடியால் தன் லக்கேஜைத் தொலைத்து, விமானத்தையும் தவறவிட்டார்.
இதனால் சொந்த ஊருக்குப் போகாமல் மும்பையில் சகோதரி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்து லட்சுமிராய் கூறுகையில், "தீபாவளி பண்டிகை கொண்டாட எனது சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்பட்டேன். பெல்காம் செல்ல நேரடி விமானம் கிடையாது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து மும்பை போய் காரில் பெல்காம் செல்லத் திட்டமிட்டேன்.
சென்னையில் தனியார் விமான நிலையத்தில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 7.30 மணிக்குதான் கிளம்பியது. தாமதம் காரணமாக நான் பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்டு விடுவேனே என்று அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்களோ சென்னை விமானம் பெங்களூர் போய் சேர்ந்த பிறகு தான் மும்பைக்கு செல்லும் விமானம் புறப்படும் என்றனர்.
ஆனால் பெங்களூர் சென்று இறங்கியபோது மும்பை விமானம் முன் கூட்டியே கிளம்பி போய் இருந்தது. நான் அதிர்ந்து போனேன். விமான நிலைய அதிகாரிகள் நாளை இதே நேரத்தில் கிளம்பும் விமானத்தில் உங்களை மும்பை அனுப்பி வைக்கிறோம் என்றனர். பெங்களூரிலிருந்து மும்பை போக ஒரு நாள் பெங்களூரில் காத்திருக்க முடியுமா?
எனக்கு ஆத்திரமாக வந்தது. தயாரிப்பு நிறுவனமொன்றில் சொல்லி மும்பைக்கு வேறு டிக்கெட் எடுத்து பயணமானேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது லக்கேஜ் மாயமாகி இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போனது.
இதனால் என் தீபாவளி ட்ரிப்பையே ரத்து செய்துவிட்டேன். மும்பையில் உள்ள எனது சகோதரி வீட்டில்தான் இந்த ஆண்டு தீபாவளி...", என்றார் கோபத்துடன்.

29 அக்டோபர் 2010

எல்லோரும் பாராட்டுறாங்க!-ரீமா சென்.

ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
"காரணம் இருக்கே... இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க..." என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா... இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
"இல்லையில்லை... விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்...," என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
"என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்...", என்றார்.

27 அக்டோபர் 2010

விக்ரம் - அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.
அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.
உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.
இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.

25 அக்டோபர் 2010

நீயா?நானா?பிரியாமணி,விமலாராமன் மோதல்!

தெலுங்குப் படம் ஒன்றின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் ப்ரியாமணிக்கும் விமலா ராமனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள்.
சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. .
எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி.
"நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை ... நானும் அவளும் ஒண்ணா... நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?", என்று ப்ரியாமணி எகிற, "உங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தைத்தான் ராவணன்ல பார்த்தோமே... அதுக்கு இது ஒண்ணும் குறைஞ்சிடலை... போங்க", என்று பதிலுக்கு எகிறியிருக்கிறார் இயக்குநர்.
விஷயம் கேள்விப்பட்ட விமலா ராமன், "பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்...!" என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார்.

24 அக்டோபர் 2010

மன்மதன் அம்பு பிரமாண்ட வெளியீடு!

மன்மதன் தன் அம்பை நாணேற்றித் தயாராக வைத்திருக்கிறாராம். எந்த நிமிடத்திலும் எய்யப்படலாம் என்று சொல்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் முத‌ல் முறையாக கமல்-த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.
எந்திரனைப் போல் இப்படத்தையும் பெரிய அளவில் வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்களாம். அதற்காக இந்தி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது இப்படம்.
எந்திரனைவிட ஒரு தியேட்டரிலாவது அதிகமாக ரீலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயலில் இறங்கியிருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதற்கான விளம்பரத்துக்காகவே பல கோடிகளைச் செலவிட ஆயத்தமாகி வருகிறார்களாம்.

21 அக்டோபர் 2010

மீனாட்சியின் கவர்ச்சி உடையும்; பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்!

பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.
அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.
மீனாட்‌சியின் உடை பற்றி படத்தின் டைரக்டரும் ஹீரோவுமான கரு.பழனிப்பன் பேசுகையில், மீனாட்சி அணிந்து வந்திருக்கும் உடை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த பங்ஷனுக்‌கு எப்படி வரணும்னு நான் மீனாட்சிக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன் பண்ணி நல்லா டிரஸ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்புறமும் இப்படி… என்ன செய்ய?, என்றார். அதோடு படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை குறிப்பிட்டு பேசினார். “பையன் ஒழுங்கா படிக்காம மக்கா இருந்தான்னா போவட்டும். அவனை சினிமா ஹீரோவாக்கிட்டு போறேன்” என்பதுதான் அந்த டயலாக்காம்.

20 அக்டோபர் 2010

கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்! நாயகிகளின் புது பாலிஸி!!

தமிழ் சினிமா நாயகிகளில் பலரும் சமீப காலமாக கவர்ச்சியை நம்பித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. முன்பெல்லாம் சினிமாக்களில் கவர்ச்சிக்கு என்று தனி நாயகி இருப்பார்.
அவர் காமெடி நடிகருக்கு ஜோடியாகவோ, விலைமாது கேரக்டரிலேயோ அல்லது ஏதாவது தள்ளுவண்டி, இட்லிக்கடைக்காரியாகவோ நடிப்பார். அதற்கு பிறகு வந்த சினிமாக்களில் ஒரு பாடல் குத்துப்பாட்டாகவும், அந்த குத்துப்பாட்டில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டமும் இடம்பெற்றன.
ஆனால் சமீப காலமாக கவர்ச்சிக்கு தனி நடிகை தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு படத்தின் நாயகிகளே கவர்ச்சி உடையில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.
சினிமாவில் நுழைந்தபோது பாவாடை தாவணியணிந்து பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்த நயன்தாரா பில்லா படத்தில் நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதேபோல புதுமுக நடிகைகள் பலரும் எதற்கும் ரெடி என்கிற பாலிஸியுடன்தான் சினிமாவில் நுழைகிறார்கள். இதனால் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பாலிஸியுடன் இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரீமா சென். பட வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் பல கண்டிஷன்களை போடும் ரீமா கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு வந்த வாய்ப்புகளையெல்லாம் பல காரணங்களுக்காக தட்டிக்கழித்த அவர், ஆக்ரோஷ் என்ற இந்திப்படத்தில் நடித்தார்.
அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட் ஆகி விட்டதால் இனி மும்பையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

19 அக்டோபர் 2010

காதலியை குரூப் செக்ஸுக்கு அழைத்த இளவரசர் ஹரி!

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையே 7 ஆண்டு காலமாக காதல் இருந்தது. இந்த காதல் இப்போது காணாமல் போய்விட்டது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
செல்சி இப்போது வீட்டுமனைகளை உருவாக்கும் டான் பிலிப்சன்னை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இளவரசர் ஹாரி இப்போது லண்டன் இரவு விடுதிகளில் பல பெண்களுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்து உள்ளது.
மற்ற பெண்களுடன் சேர்ந்து (குரூப் செக்ஸ்) தன்னுடன் சந்தோஷமாக இருக்கும்படி அவர் காதலியை கேட்டுக்கொண்டார். இதை கேட்டு கொதித்து போன செல்சி, ஹாரியை ஒரேயடியாக உதறிவிட்டு போய்விட்டார்.

17 அக்டோபர் 2010

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா!

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை என்கிறார் தமன்னா.
தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.

13 அக்டோபர் 2010

5 படங்கள் ஒரு ஹீரோ!

ஜீவா தற்சமயம் 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் சாய்ரமணி இயக்கும் சிங்கம் புலியில் ஜீவாவுக்கு இரட்டை வேடம். வழக்கறிஞராகவும் மீன் வியாபாரியாகவும் அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கே.வி ஆனந்தின் கோ, ஆர். கண்ணன் இயக்கத்தில் வந்தான் வென்றான், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவுத்திரம் ஆகியவை மற்ற மூன்று படங்கள்.
ஷங்கரின் 3 இடியட்ஸ் படத்தில் இவரது கேரக்டர் நிச்சயமாகும் பட்சத்தில் இந்த லிஸ்ட் 5 படங்களாக மாறும். ஜமாய்ங்க ஜீவா.

11 அக்டோபர் 2010

நயன்தாரா மேனேஜர் – பிஆர்ஓ நீக்கம் – பல லட்சம் மோசடி?

தனக்கு மேனேஜராக இருந்த அஜீத் மற்றும் பிஆர்ஓ ஜான்சன் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளார் நயன்தாரா.
இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகை அதிர வைத்துள்ளது.
பிரபலமான அந்த ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவிடம் அந்தத் தொகையை காட்டாமல் ரூ 60 லட்சம்தான் சம்பளம் பேசப்பட்டதாக மேனேஜர் அஜீத் மற்றும் பிஆர்ஓ சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்ட நயன்தாரா, நேரடியாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை உரிமையாளரிடமே தொடர்பு கொண்டு விசாரிக்க, அவரும் முதலில் மழுப்பி, பின்னர் உண்மையைக் கூறியுள்ளார்.
கோபத்தை அடக்கிக் கொண்ட நயன்தாரா, மீண்டும் மேனேஜரையும், பிஆர்ஓவையும் அழைத்து விசாரிக்க அவர்கள் தொடர்ந்து அந்த ரூ 60 லட்சம் கதையையே தொடர்ந்தார்களாம்.
கஷ்டப்பட்டு நடிப்பது நான், சம்பளம் பேசுவதாகக் கூறி எனக்கே தெரியாமல் பணத்தை அபகரிப்பதா?”, என்று கோபம் காட்டிய நயன்தாரா, உடனடியாக இருவரையும் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நயன்தாரா தொடர்பான அனைத்துப் படங்களுக்கும் இந்த இருவர்தான் சம்பளம் பேசினார்களாம். அதிலெல்லாம் எந்த அளவு பணம் கணக்கில் வராமல் போனதோ என்று அங்கலாய்த்தாராம் நயன். ஆனால் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது (திருடனுக்கு தேள் கொட்டிய கதை!) என்ற சூழல் காரணமாக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காக்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, நானாகவே நயன்தாராவிடமிருந்து விலகி வந்துவிட்டேன் என்றும், பணவிவகாரம் பற்றிய எதுவும் உண்மையில்லை என்றும், கூறினார்.
சம்பந்தப்பட்ட பிஆர்ஓவைத் தொடர்பு கொண்டால், அவர் போனையே எடுக்கவில்லை!

09 அக்டோபர் 2010

எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்!

சினிமா நகைச்சுவை நடிகரும், அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
69 வயதாகும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 1986ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படத்தில் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இவர் பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, ஆத்தா உன் கோவிலிலே, சின்னப்பதாஸ், காக்கை சிறகினிலே, கதாநாயகன், நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், வண்டிச்சோலை சின்னராசு, தங்கமான புருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே, ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

08 அக்டோபர் 2010

ஜெனிலியாவுக்குப் பெருசு பல்லு – கே.எஸ்.ரவிக்குமார் விட்ட ‘ஜொள்ளு’!

ஜெனிலியாவுக்கு பல் வரிசை பெரிசா இருந்தாலும், ஆள் பிரமாதமான அழகுடன் இருக்கிறார் என்று ஜெனிலியாவின் பல்லை வைத்து உத்தமபுத்திரன் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜொள்ளினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
வழக்கமாக பார்த்திபன்தான் இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஹீரோயின்களின் அழகை விமர்சித்து புளகாங்கிதப்படுவார். அந்த பெருமைக்குரிய வரிசையில் நேற்று தன்னையும் நுழைத்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
ரெடி என்ற பெயரில் தெலுங்கில் எடுத்த படத்தை ரீமேக் செய்துள்ளனர் உத்தமபுத்திரன் என்ற பெயரில். தனுஷ்தான் நாயகன், ஜெனிலியாதான் நாயகி. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. புன்னகை இளவரசி சினேகா குத்துவிளக்கை ஏற்றி வைத்து மங்களகரமாக விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் ஜெனிலியாவின் அழகைப் புகழ்ந்து அகமகிழ்ந்தார். அவர் பேசுகையில்,
படத்தின் கதாநாயகி ஜெனிலியா, அழகான நடிகை. முத்து பல் வரிசை என்று சொல்வார்கள். அவருக்கு பல்லுதான் கொஞ்சம் பெரிசு. என்றாலும், அழகாகத்தான் இருக்கிறார் என்றார் ரவிக்குமார்.
இவராவது பரவாயில்லை, ஜெனிலியாவைப் போல ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஒட்டுமொத்தமாக ஜொள்ளி குதூலகலித்தார் விவேக்.
அவர் பேசும்போது, ஜெனிலியாவை பார்த்தால், பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என்று சொன்னார்கள். பக்கத்து வீட்டில், இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி என்றார் விவேக்.
சென்னையில், மழையால் ஈரம் என்றால், இவர்கள் பேசியதால் அந்த மேடையே ஓவர் ஈரமாகிப் போச்சு போங்கோ…!

07 அக்டோபர் 2010

நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி.

தனது கணவரை நடிகை நயனதாராவின் பிடியிலிருந்து மீட்டுத் தரக் கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பிரபுதேவாவின் மனைவி ரமலத், இன்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், வழக்கில் நயனதாராவையும் சேர்க்க வேண்டும். பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தனது கணவருடன் நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து பிரபுதேவாவை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நான் விவாகரத்துக்கு உடன்பட மாட்டேன் என்று கூறி குடும்ப நல கோர்ட்டை அணுகியுள்ளார் ரமலத்.
ரமலத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து வக்கீல்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ரமலத். இதற்காக இன்று குடும்பநல கோர்ட்டுக்கு வந்த ரமலத்துடன் அவரது குழந்தைகளும் வந்திருந்தனர்.
வழக்கறிஞர் ஆனந்தன், ரமலத் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,
நானும் பிரபுதேவாவும் கடந்த 9.8.1995ல் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.
பிரபுதேவா-நயனதாரா கள்ளக்காதல்
ஆனால் நயன்தாரா வருகைக்கு பிறகு பிரபுதேவா நடவடிக்கைகள் மாறின. அவரை வைத்து எனது கணவர் வில்லு என்ற படத்தை இயக்கினார். அப்போது நெருக்கமாக பழகினர். அவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தற்போது பிரபுதேவா வீட்டுக்கு வருவதில்லை. நயன்தாராவுடனேயே இருக்கிறார்.நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேட்டி அளித்துள்ளார். நயன்தாராவும் என்னை தொடர்பு கொண்டு இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்து கொள்வது அநீதி, நானும் என் குழந்தைகளும் பிரபுதேவாவை சார்ந்து வாழ்கிறோம்.
கல்யாணத்திற்கு தடை விதிக்க வேண்டும்
எனவே பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு இக்கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
தங்களை கணவன், மனைவியாக பாவித்து பேட்டி அளிப்பதை தடை செய்ய வேண்டும். நயன்தாராவை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் ரமலத்.
சற்றும் மனம் தளராத பிரபுதேவா-டிசம்பரில் கல்யாணமாம்!
ரமலத் இப்படி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளபோதிலும் நயனதாரா மீதான மோகத்தை பிரபுதேவா சற்றும் குறைத்துக் கொள்வது போலத் தெரியவில்லை.
டிசம்பரில் வைத்து நயனதாராவை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும், நயனதாராவும், இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

05 அக்டோபர் 2010

யோகா கத்துக்க…! – த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்.

“யோகா கத்துக்க… ஹெல்த்துக்கு நல்லது. எப்போதும் இளமையாகத் தெரிய உதவும்.. “- இதுதான் சமீபத்தில் த்ரிஷாவுக்கு நடிகை ஷ்ரியா அனுப்பிய செய்தி.
ஏன் இந்த திடீர் அட்வைஸ்..?
கோவையில் உள்ள அந்த ஆசிரமத்துக்கு தொடர்ந்து செல்லும் ஷ்ரியா, அங்கு உடற்பயிற்சி மற்றும் யோகா கற்று வருகிறார். இதனை மற்றவர்களுக்கும் சொல்லி, ஆசிரமத்துக்கு வருமாறு அட்வைஸ் பண்ணுகிறார்.
சரி, ஷ்ரியாவின் இந்த அட்வைஸுக்கு த்ரிஷா என்ன பதில் சொன்னார்..?
“நீ சொல்றது உண்மைதான். நானும் இந்த ஆசிரமத்தின் சென்னைக் கிளையில் சேர்ந்துவிட்டேன். இப்போ தினமும் யோகா பண்றேன். இல்லேன்னா மாஸ்டர் விடமாட்டேங்கிறார்.. ஆனாலும் எனக்கு இந்தப் பயிற்சி ரொம்பப் பிடிச்சிருக்கு..!

04 அக்டோபர் 2010

குத்தாட்ட நடிகைகளை மிஞ்சினர்: கவர்ச்சிக்கு மாறிய கதாநாயகிகள்!

முந்தைய கால கட்டத்தில் கவர்ச்சிக்கென சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இருந்தனர். அவர்களை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா, அனுராதா வந்தார்கள். அவர்கள் அரைகுறை ஆடையுடன் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்ட பயன்படுத்தப்பட்டனர்.
இப்போது அது போன்ற நடிகை வகையறாக்கள் மங்கிப்போய் விட்டார்கள். கதாநாயகிகளே அவர்கள் பணியை கையிலெடுத்து கொண்டனர். புதிதாக வரும் கதாநாயகிகள் கவர்ச்சியின் எல்லை வரை தொடுகிறார்கள்.
சீ சீ என பத்மினி, சரோஜாதேவி காலத்தில் முகம் சுழிக்கப்பட்ட நீச்சல் உடை காட்சிகளிலும் கலக்குகிறார்கள். இதனால் சமீப காலங்களில் தலை தூக்கிய சில குத்தாட்ட நடிகைகளும் ஓரிரு படங்களோடு காணாமல் போயினர்.
நமீதாதான் அதிகபட்ச கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார். தமிழில் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நயன்தாரா “பில்லா” படத்தில் நீச்சல் உடைக்கு இறங்கினார். அதன் பிறகு அனைத்து கதாநாயகிகளுக்கும் துணிச்சல் வந்தது. ஆடை கட்டுப்பாடுகளை அவிழ்த்து போட்டனர்.
குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்த சினேகா தெலுங்கு படங்களில் கவர்ச்சி மழை பொழிகிறாராம். முத்தக்காட்சிகளிலும் வரிந்து கட்டுகின்றனர்.
சிம்பு- நயன்தாரா முத்தக்காட்சி போஸ்டர்கள் சில வருடங்களுக்கு முன் நகரமெங்கும் சூடேற்றின. திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதட்டோடு உதடு பதித்தார். அருந்ததிக்கு பின் தமிழ் மார்க்கெட்டில் வலுவாக காலூன்றியுள்ள அனுஷ்காவும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார்.
புதுவரவு நாயகிகளான தபஸ்ரீ, ஹன்சிகா மோட்வாணி போன்றோரும் கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? என பாடவைத்த நாயகிகள் ஆடை அவிழ்ப்பு செய்து ஹாலிவுட் தோற்றத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

01 அக்டோபர் 2010

தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா.

சிங்கம் படம் ரிலீஸுக்குத் தயாரான நேரம்… அனுஷ்காவைப் பற்றி சில செய்திகள் இப்படி கசிந்தன.
“அனுஷ்கா மகா உயரமான நடிகையாச்சே…அவரை ஹீரோயினாக்குவதில் எக்கச்சக்க பிரச்சினைகள்”, “ஒத்துழைப்பு சரியில்லை” என்றெல்லாம் சிங்கம் படத்தின் முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அனுஷ்கா, இனி தமிழில், அதுவும் உயரம் குறைந்த ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவோடு தெலுங்குக்கே திரும்பினார்.
தமிழில் பல பெரிய தயாரிப்பாளர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்ட அவரை, சமாதானப்படுத்தி அழைத்து வந்தது சிம்புவும் ‘வானம்’ பட இயக்குநர் கிரிஷ்ஷும்தானாம்.
இப்போது மேலும் நான்கு புதிய தமிழ்ப் படங்களில் நடிக்குமாறு பெரும் தொகையுடன் அனுஷ்காவை அணுகியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அவர்களிடம், “வேண்டவே வேண்டாம். உங்கள் பட நாயகர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பழியை என்மீது போடுவார்கள். எதற்கு வம்பு… எனக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று பெரிய கும்பிடு போட்டாராம்.

27 செப்டம்பர் 2010

சென்னையை மறக்கமாட்டேன்: அசின்.

சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன் என்று நடிகை அசின் கூறினார்.
சென்னையில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் தீவிர ரசிகை நான்.
தமிழில் அவர் இயக்கிய பிரண்ட்ஸ் மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அப்போது ஹிந்திப் படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்வவிட்டது.
இப்போது அதே பாடிகார்ட் படம்தான் தமிழில் காவலனாக ரீமேக்காகிறது. சித்திக்தான் இயக்குகிறார். இந்த படத்தில் நான் நடிப்பதில் மகிழ்ச்சி. ஹிந்தியில் நடிப்பதால் தமிழை மறந்துவிடவில்லை. என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ் திரையுலகம்தான். சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன். இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

24 செப்டம்பர் 2010

த்‌ரிஷாவை முத்தமிட மறுத்த நடிகர்.

கூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? த்‌ரிஷா சம்மதம் தெ‌ரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது?
இந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தை தெலுங்கில் ‌ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்‌ரிஷா.
லவ் ஆ‌ஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்‌ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் ச‌ரிவராது என்று த்‌ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார்.
பவன் கல்யாணை என்ன சொல்வது. ஜென்டில்மேன் என்பதா? இல்லை பிழைக்க‌த் தெ‌ரியாதவர் என்பதா?

22 செப்டம்பர் 2010

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயதுப் பெண் அமெரிக்க டீன் அழகியாக தேர்வு.

அனிஷா பனீசர் என்ற 16 வயது இந்திய வம்சாவளிப் பெண், அமெரிக்காவின் பர்பக்ட் டீன் என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால் அவர் இங்கிலாந்து பிரஜை என்பதால் இந்தப் பட்டத்தை அவருக்குத் தரக் கூடாது என்று தோல்வி அடைந்த அழகிகளின் பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அனிஷா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் கிளாமர்கானில் உள்ள லங்கான் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கார்டிப்பில் உள்ள ஹோவல்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது விடுமுறை கால வீட்டுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். வந்த இடத்தில் டீன் ஏஜ் அழகிகளுக்கான பர்பக்ட் டீன் அழகிப் போட்டி குறித்து கேள்விப்பட்டு அதில் கலந்து கொண்டார்.
இதில், அமெரிக்காவில் பிரபலமான பல்வேறு டீன் ஏஜ் அழகிகள் 30 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அத்தனை பேரையும் தனது அசத்தல் அழகு மற்றும் அறிவால் தோற்கடித்து விட்டார் அனிஷா. இதையடுத்து அவருக்கு 2000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால் அனிஷாவுக்கு பட்டத்தைக் கொடுத்ததற்கு தோல்வி அடைந்த அழகிகளும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்கு எப்படி அமெரிக்க அழகிப் போட்டி பரிசைத் தரலாம் என்று அவர்கள் முறையிட்டனர். ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனிஷா. இதெல்லாம் பொறாமையால் வரும் வார்த்தைகள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக வெற்றி பெற்ற என்னை வி்மர்சிப்பது தவறு என்றார் படு கூலாக.
அனிஷாவுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தில் பயிற்சி பெறவும் இந்தப் போட்டி மூலம் 18,000 டாலர் ஸ்காலர்ஷிப் தொகையும் கிடைத்தது. மேலும் தனியாகவும் ஒரு டிவி நிகழ்ச்சியை அவர் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

21 செப்டம்பர் 2010

பெண்ணின் நிர்வாணப் படத்தை இணையத்தில் விட்ட நபர் கைது.

தாம் முன்னர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவவிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். குறித்த பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இந்நபர் அப்பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார். இப்படங்களை அவர் கையடக்கத் தொலைபேசி மூலமும் உலாவ விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இன்னொரு நபரையும் போலீசார் தேடிவருகின்றனர். கைதான நபரை ஒக்ரோபர் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

20 செப்டம்பர் 2010

எந்திரனால் வந்த நெருக்கடி... !

உற்சவம் வரும்வரை சாமியும் கருவறையில்தான், தேரும் தெருவரைதான்’ என்ற நிலையில் உள்ளனவாம் தற்போது வெளியாகவிருக்கும் சில தமிழ்ப் படங்கள்.
எந்திரன்’ இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அக்டோபர் 1ல் வெளியாகிறது.
அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்றப் பெருமையை பெற்றுள்ளது எந்திரன்.
உலகமெங்கும் எதிர்பார்த்த ஒரு படம் வெளியாகிறது என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், எந்திரன் வெளியாவதில் சில வருத்தங்களும் இல்லாமல் இல்லை.
பொதுவாகவே, எந்த ஒரு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, அல்லது வெளியான சிலதினங்களுக்குப் பின்போதான் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இது வழக்கம்தான். என்றாலும், மற்ற மொழிப் படங்களைவிட தமிழ் படங்களுக்கு இந்த நெருக்கடி ரொம்பவே அதிகம்தான்.
அதிலும் எந்திரன் படவெளியீட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் படங்கள் கொஞ்சம் ஏராளம்தானாம்...
ஆரம்பத்தில் எந்திரன் எப்போது வெளியாகும் என்பது எவருக்கும் தெரியாத மர்ம நாவலாக இருந்து வந்தது. அந்தா இந்தா என்று செப்படம்பர் 24ந் தேதி எந்திரன் ரிலீஸ் என எந்திரன் படக்குழு முதலில் வெளியிட்டது. ஆனால் அதன்பிறகு வந்த சில தகவல்கள் எந்திரன் ரிலீஸ் தேதியை கன்னீத்தீவு கதையாக நீட்டித்துக்கொண்டிருந்தன. எப்படியோ ஒருவழியாக அக்டோபர் 1ல் எந்திரன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே இப்போது தெரிவிக்கப்பட்டுவிட்டது.
செப்படம்பர் 24ந் தேதி வெளியாக வேண்டிய எந்திரன், அக்டோபர் 1ந்தேதி வரை தள்ளிப்போனதற்கான காரணமும் கொஞ்சம் காரசாரமாகவே உள்ளது.
ஆர்யா - நயன்தாரா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காகத்தான் எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டதாக சினிமாவட்டாரங்களில் கிசுகிசுக்கபட்டும் வருகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசன். ஆனாலும், உலகமெங்கும் படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்புக்கும், சன் பிக்சர்ஸ் தரப்புக்கும் நடந்த ஒருவாரகால பேச்சுவார்த்தையின் பலன்தான் எந்திரன் ரிலீஸின் காலதாமதம். (ஓ... பாஸுக்கு வழிவிட்டதா மாஸு)
என்னதான் எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து, இப்போது பெற்றுவரும் வெற்றிக்கு கெடுவைத்துவிடுமே என்று வருத்தப்பட்டு வருகிறதாம் பாஸு டீம். இந்தப் படத்திற்கு ஏற்பட்ட நிலைதான் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கும்.
வெளியான படங்களைவிட வெளியாகப்போகும் படங்களுக்கும் அதேகதிதான். சிக்கு புக்கு, ஈசல், வ குவாட்டர் கட்டிங், சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, உள்ளம் தள்ளாடுதே, பட்டாபட்டி 50 - 50 மற்றும் தனுஷ் நடித்த ஆடுகளம், சீடன் உட்பட 30 க்கும் மேற்பட்டப் படங்கள் எந்திரனால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருக்கின்றனவாம்.
எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஜீரோ ஆக்கிய சின்னப் பட்ஜெட் படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கணக்கின்றி உள்ளன. எண்பதுகளில் எடுத்து கொண்டால்...‘கரகாட்டக்காரன்’ படம் அப்போது வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் அத்தனையையும் ஓரங்கட்டியது.
ஏன்...! ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படம் வெளியான போது, புது முகங்கள் மட்டுமே நடித்த ‘மோனிஷா என் மோனலிஷா’படம் வெளியாகி ஹிட்டும் ஆனது.
அதைவிட கடந்த ஆண்டுகளில் வெளியான சுப்பிரமணியபுரம், வெண்ணிலாக் கபடிக்குழு, பசங்க, நாடோடிகள், ஈரம் போன்றப் படங்கள் பெரிய அளவில் விளம்பரங்கள் ஏதுமில்லாமலே அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களே தராத வெற்றியை மிகப்பெரிய அளவில் பெற்றன. பெரிய படம், சின்னப் படம் என்பது எல்லாம் பட்ஜெட்டில்தான். படத்தின் வெற்றியில் இல்லை...
என்னதான் மாஸ் படங்களுக்கு ஆரம்பத்தில் மவுசு இருந்தாலும் தரமான படங்கள் மட்டும்தான் மக்கள் மனதில் இருக்கும்...

18 செப்டம்பர் 2010

நமீதா நடிக்கும் 'ஃபயர்'!!!


ஃபயர் என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நமீதா கவர்ச்சிக் கொடி கட்டவுள்ளாராம்.
அதிரடியும், கவர்ச்சியும் கலந்த மசாலாப் படமாக இது உருவாகப் போகிறதாம். படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பவர் நமீதா. படத்தை அப்துல்லா இயக்க, கரீமுன்னிசா தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து அப்துல்லா கூறுகையில், 'நமீதாவை நாயகியாகப் போட்டு ஃபயர் படத்தை உருவாக்கப் போகிறேன். நமீதாவுக்கு இதில் முக்கியமான ரோல். இதுவரை பார்த்திராத நமீதாவை இதில் காணலாம்.
படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளன. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஹாங்காங்கிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெறவுள்ளது. படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அதேபோல 2 நாயகர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஆனாலும் நமீதாவுக்கே முக்கியத்துவம் அதிகம்' என்றார்.

17 செப்டம்பர் 2010

அத மட்டும் கேட்காதீங்க - அசின் மறுப்பு.

ஈழத்தமிழர்களை கொன்றுக்குவித்த சிங்கள பூமிக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. அதை மீறி அசின் இலங்கை சென்றார். அசின் மீது தமிழ் சினிமா அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தன.
அப்போது அசின் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தன. அதனால் விஜய் - அசின் நடித்த்துவரும் காவலன் திரைப்படம் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
அதன் பிறகு ‘சென்னைக்கு வரவே பயமாக இருக்கு’ என்ற அசின் தமிழகத்திலும், தமிழ்த்திரையுலகிலும் சுதந்திரப் பறவையாக வலம் வரத்தொடங்கினார்.
இப்படியான நிலையில் 16ந் தேதி இரவு சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் காவலன் படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய், அசின், வடிவேலு, இயக்குனர் சித்திக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கண்டிப்பாக கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு ‘கேள்வி’... கேட்கப்பட்டது. ஆனால் பதில் தான் ம்ம்ம்ஹூம்... ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் - சித்திக் இணைந்திருக்கும் படம் ‘காவலன்’. இந்தப் படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவையான திரைக்கதையில் பயணிக்கிறதாம். வழக்கமான விஜய்யின் கமர்ஷியல் ஆக்‌ஷன் இதில் குறைவு. வடிவேலுவின் கூட்டணியில் காமெடிக் கொடி மிகமிக உயரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் படம் காவலன். சுருக்கமாக சொன்னால் இன்னொரு பிரண்ட்ஸ்.
சரி; இப்போ படத்தை விட முக்கியமான ஒரு விஷயத்துக்கு வருவோம்...
அசின் இலங்கை போன விவகாரத்தால், அவர் நடிக்கும் படங்களை புறக்கணிக்கப்போவதாக சில அரசியல் அமைப்புகள் சொல்லியுள்ளன. இதை எப்படி சமாளிக்கப் போகிறீங்க? என்ற கேள்வி காவல் படக்குழுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் சித்திக்,“படத்தை நல்லபடியா எடுத்து முடிப்பது என் கடமை. அதை முதலில் சிறப்பா முடிக்கனும். படம் வெளியாகும் போது ஏற்படும் பிரச்சனை பற்றி அப்போ பார்த்துக்கலாம்” என்றார்.
இந்தக் கேள்விக்கு விஜய்யின் பதில் மௌனம் மட்டுமே... மற்ற சில கேள்விகளுக்கு மட்டும்தான் வாயைத் திறந்தார்.
“ அசின் இந்திப் படங்களில் தற்போது பிஸியா இருக்காங்க. அவரை மீண்டும் தமிழுக்கு கொண்டுவரனும் என நினைத்தேன். வந்துட்டாங்க. இந்தப் படம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே நடிக்க வேண்டிய படம், அப்போது என்னால இதில் நடிக்க முடியாத சூழ்நிலை. அந்த வாய்ப்பு இப்போ அமைந்திருக்கு.
இந்தப் படத்தின் தலைப்பு, காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமாக கூறப்பட்டது. ஆனால் படதுக்கு ‘காவலன்’என்றுதான் தலைப்பு வச்சிருக்கோம். இதைத் தெரியப்படுத்ததான் இந்த பிரஸ் மீட்டிங். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீசாகுது.’’ என்று தனது படத்தைப் பற்றி மட்டுமே பேசி முடித்தார் விஜய்.
அசின் பேசும் போது , “விஜய்யுடன் நான் நடிக்கும் 3வது படம் இது. இதற்கு முன் நானும் விஜய்யும் நடித்த சிவகாசி, போக்கிரி படங்கள் பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகும். சித்திக் சாரின் படங்களை சின்னக் குழந்தையிலிருந்து பார்த்துட்டு வாரேன். இப்போ அவரின் படத்தில் நான் நடிக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே பெருமையான விஷயம்” என்று வேகவேகமாக பேசினார்.
ஏன் அவர் அப்படி அவசரம் அவசரமாக பேசினார் என்பது எல்லோரும் அறிந்துதான். எங்க நம்மிடம் இலங்கை சென்றுவந்த விவகாரம் பற்றி கேட்டு விடுவார்களோ? என்று நினைத்தவரிடம்... அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.(இந்தப் பிரச்சனைக்கு அவர்தானே காரணம். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்காமல் வேற யாரிடம் கேட்பது)
ஆனால் அதற்கு, “அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’ என்று மட்டும் கோபமாக கூறிவிட்டார் அம்மணி.
அப்படியே ஒருவேளை காவலன் படம் வெளியாவதில் ஏதாவது சிக்கல் வந்தால், அவருக்கென்ன... அம்மணிக்குதான் பாலிவுட் நடிகர்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்குதுல்ல...

16 செப்டம்பர் 2010

கவர்ச்சி வலம் வரும் பிரியாமணி!

தெலுங்குப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகை பிரியாமணி. பிகினி உடைகள் என்றாலும் அவர் கவலைப்படுவதில்லை. படு கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
தற்போது அடுத்த கட்டமாக ஹீரோவுக்கு இங்கிலீஷ் கிஸ் தரும் காட்சியில் நடித்துள்ளார். விஜி சிபிவிஸ்தா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரியாமணி நடிக்கிறார். இதில் சுமந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் கட்டத¢தை நெருங்கியுள்ளது.
இதுவரை தயாரான காட்சிகளை பட யூனிட் திரையில் பார்த்திருக்கிறது.
சுமந்த்-பிரியாமணி ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என அனைவரும் பாராட்டினார்களாம். இதையடுத்து இயக்குனர் விஜிக்கு ஒரு யோசனை தோன்றியது.
இதில் இருவரையும் முத்தக் காட்சியில் நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அது. தயங்கியபடியே பிரியாமணியிடம் கேட்க, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிரியா. கூச்ச சுபாவம் காரணமாக ஹீரோ சுமந்த் தயங்கினாராம். பின் ஒரு வழியாக அவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் விஜி.
இதையடுத்து ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மட்டுமே இருக்க சுமந்த்-பிரியாமணி நடித்த ஆங்கில முத்தக் காட்சி படமாகியுள்ளது. படத்தில் இக்காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்கிறது யூனிட்.
தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனாலும் என்ன அந்தப் படத்தை தமிழில் டப் செய்யமாட்டார்களா என்ன....அப்போது தமிழ் ரசிகர்களும் அந்தப் படத்தைப் பார்த்து ஆனந்தமடைவார்கள் என்கிறது படத் தயாரிப்பு குழு.

15 செப்டம்பர் 2010

ஆபாச போட்டோ-நயன்தாரா மாட்டல்!

நடிகை நயன்தாரா மீதான ஆபாச போஸ்டர் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுகிறது. அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படம் கடந்த 2008 ம் ஆண்டு வெளியானது. கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்டன. அதில் நயன்தாரா ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன.
இது பொதுமக்கள் மனதை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி திருவனந்தபுரம் கோர்‌டில் நாகராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்தின் டைரக்டர் ராஜுசுந்தரம், ஆபாச போஸ் கொடுத்த நடிகை நயன்தாரா, தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால் போலீசார் இந்த வழக்கில் ஆதாரங்கள் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை முடித்து விட்டனர். இதையடுத்து முதலில் வழக்கு தொடர்ந்த நாகராஜ் மீண்டும் கோர்ட்டில் புதுவழக்கு தொடர்ந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.