பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

சண்டைக் காட்சியில் காயமடைந்தார் ஸ்ருதிஹாசன்.



7ஆம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.
சர்க்கஸ் பின்புலத்தில் 7ஆம் அறிவு தயாராகி வருகிறது. இதற்காக ஸ்பெஷல் சண்டைக் கலையையும், மே‌ஜிக்கையும் கற்றிருக்கிறார் சூர்யா.
ஹீரோயின் ஸ்ருதிக்கும் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. இதில் நடித்த போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சின்ன காயம்தான், அதனை பொருட்படுத்தாமல் நடித்தேன் என தனது டுவிட்ட‌ரில் ஸ்ருதி எழுதியுள்ளார்.
முருகதாஸின் இந்தப் படத்துக்கு ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் இசையமைக்கிறார்.

29 ஆகஸ்ட் 2010

திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?


காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். திருமணமான ஆண்களைக் காதலிக்கும் பெண்கள் படித்த, படிக்காத என எல்லா தரப்பிலும் உள்ளனர் என்பது ஒப்புக் கொள்ளக்கூடிய நிஜம்.
இப்படிப்பட்ட காதல்களின் பின்னணி என்ன...? தன் அப்பாவின் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு, அவர் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட பெண்கள் பலர் தனக்கு வரப்போகும் கணவனு க்கும் அதே மாதிரி குணங்கள் இருக்க வேண்டுமென எதிர்பார்ப்ப துண்டு. இத்தகைய குணாதிசயங்களுடன் ஒரு ஆணை சந்திக்கும் பெண், அவனையே தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள நினைக்கிறாள்.
அவனுக்கு ஏற்கனவே நடந்த திருமணம் அவளுக்கு ஒரு பொருட்டாக இருப்பதில்லை. குழந்தை உள்ளம் கொண்ட பெண்கள் இம்மாதிரி உறவுகளுக்கு சுலபமாக அடிமையாகி விடுவதுண்டு. அவளது குழந்தைத் தனங்களையும், தவறுகளை யும் சகித்துக் கொள்ள தன்னைவிட பல வயது மூத்த ஆணை நாடுகிறாள். அவன் திருமணமானவனாக இருந்தாலும் கவலைப்படுவதில்லை.
குழந்தைப் பருவத்திலிருந்து பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத பெண்கள் பருவ வயதை அடைந்ததும் அந்த அன்பும், அரவணைப்பும் திருமணமான ஒரு ஆணிடம் கிடைக்கும் போது அவனிடம் தன்னை இழக்கிறாள். உடல் மற்றும் இனக்கவர்ச்சிகளும் இத்தகைய உறவுகளுக்கு ஒரு காரணம்.
திருமணமான ஆணிடம் சாதாரண நட்பாக ஆரம்பிக்கும் இப்பழக்கம் நாள டைவில், காதலாகி, உடலளவில் நெருங்கவும் வாய்ப்புகள் அதிகம். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்றும், அதற்காக எதையும் விலையாகக் கொடுக்கத் தயார் என்றும் நினைக்கும் பெண்களும் இத்தகைய உறவுகளில் திருமணமானவன் என்று தெரிந்த பிறகும் தன் சுயநலம் கார ணமாக அவன் குடும்பம் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை.
வேலைக்குச் செல்லும் பெண்களில் சிலர் திருமணமான ஆண் ஊழியர்க ளிடம் காதல் வயப்படுவதுண்டு. தன் மனைவியைப் பற்றி சதா குறை சொல்லிக் கொண்டும், விமர்சனம் செய்து கொண்டும் புலம்பும் ஆண்களை நம்பி அவர்கள் வலையில் சுலபமாக விழுந்து விடுவதுண்டு.

ஷாகித்துடன் அசின்: பிரியங்கா கோபம்.



விளம்பர படத்துக்காக ஷாகித்துக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார் அசின். இதனால் பிரியங்கா சோப்ரா கோபமடைந்தார்.ஷாகித் கபூர், அசின் பங்கேற்ற விளம்பர படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல ஸ்டூடியோ ஒன்றில் நடந்தது.
இந்தி, தமிழில் வெளியாகும் இந்த விளம்பரத்தில் இந்தியில் சரியாக பேசிய ஷாகித், தமிழில் பேச சிரமப்பட்டார். இதையடுத்து ஷாகித்துக்கு அசின் உச்சரிப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது செட்டுக்கு வந்த ஷாகித்தின் சமீபத்திய காதலி பிரியங்கா சோப்ரா இதை பார்த்து கொதிப்படைந்தார்.
இதுபற்றி ஷூட்டிங்கில் இருந்தவர்கள் கூறும்போது, ‘செட்டுக்கு வந்த பிரியங்காவால் அசினை பார்த்ததும் தாங்கிகொள்ள முடியவில்லை. ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். ஷாட் முடிந்ததும் நேராக ஷாகித்துடன் சென்று பேசிக்கொண்டிருந்தார்.
அடுத்த ஷாட் முடியும் வரை பிரியங்கா கோபமாகவே இருந்தார்’ என்றனர்

28 ஆகஸ்ட் 2010

ஆண்கள் விரும்பும் ஈர முத்தம்!


ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள்.
பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு. ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது. இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.
எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை. ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.

27 ஆகஸ்ட் 2010

பிளேபாய் இதழுக்கு நிர்வாண போஸ்.



அமெரிக்காவில் வெளியாகும் பிரபல மாத இதழ் பிளேபாய். பக்கத்திற்கு பக்கம் மாடல்கள், நடிகைகளின் அரைநிர்வாண கவர்ச்சி படங்கள் நிறைந்திருக்கும். நடுப்பக்கம் ரொம்ப விசேஷம்.
மிக பிரபலமான மாடல் அல்லது நடிகையின் முழு நிர்வாண படம் நடுப்பக்கத்தில் இடம்பெறும். இந்த இதழின் நடுப்பக்கத்தில் இங்கிலாந்து பாடகி, பாடலாசிரியர், நடிகை, நடன கலைஞர், மாடல் என பல முகங்கள் கொண்ட செரில் கோல் (27) படம் இடம்பெற வேண்டும் என விரும்பினர் அதன் நிர்வாகிகள். ‘புன்னகையை தவிர உடலில் ஒன்றும் இருக்கக் கூடாது’ என்பது நிபந்தனை.
இதற்காக 7,70,000 டாலர் (சுமார் 3 கோடியே 60 லட்சம்) தர முன்வந்துள்ளது இதழை வெளியிடும் ஹக் ஹெப்னர் பப்ளிகேஷன் நிறுவனம். ஆனால் இன்னும் செரில் கோல் சம்மதம் தெரிவிக்கவில்லை.

25 ஆகஸ்ட் 2010

இராட்சத ஆணுறுப்பின் சொந்தக்காரர்! (காணொளி)


ஜஸ்ரின் பார்க்கர் என்கிற இந்த இளைஞனிடம் அப்படி என்ன அதிசயம் இருக்கின்றது? உலகிலேயே மிகப் பெரிய இராட்சத உறுப்பு ஒன்றின் சொந்தக்காரராக இருந்து வருகின்றார்.
எல்லோருமே உலகில் ஏதோ ஒரு வகையில் அதிசயம் ஆனவர்கள்தான் என்று கூறுகின்றார் இவர்.
இப்படி இராட்சத உறுப்பின் சொந்தக்காரராக இருக்கின்றமையில் நன்மையும், தீமையும் இருக்கின்றது என்கின்றார். இவரிடம் இருக்கும் அதிசயத்தை காண காணொளியை கிளிக் பண்ணுங்கள். இக்காணொளி சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டது.

24 ஆகஸ்ட் 2010

ஆண்கள் விபச்சாரிகளை நாடுவது ஏன்? புதிய ஆய்வு.



ஆண்கள் விபச்சாரப் பெண்களை நாடுவது ஏன் என்ற தலைப்பில் ஒரு சர்வதேச அமைப்பைச் சேர்ந்த மன நல நிபுணர்கள் ஆய்வு நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 ஆண்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு பதிலை வாங்கி ஆய்வு செய்துள்னர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன காரணம்- செக்ஸ் தேவையை உடனடியாகத் தீர்க்க விபச்சாரப் பெண்கள்தான் சரியான வழி என்று கூறியுள்ளனராம். கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், இது இன்ஸ்டன்ட் காபி, இன்ஸ்டன்ட் உணவு காலம். விபச்சாரம் என்பது இன்ஸ்டன்ட் செக்ஸ் என்று கூறினாராம்.
21 சதவீதம் பேர் குறிப்பிட்ட இனம், செக்ஸ் அம்சங்கள் பொருந்திய பெண்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம். அந்த மாதிரிப் பெண்களை தேடிப் போதாக அவர்கள் கூறியுள்ளனர். 20 சதவீதம் பேர், தங்களது மனைவி அல்லது தோழிகளிடம் எதிர்பார்த்த இன்பம் கிடைக்காததால் விபச்சாரப் பெண்களை நாடுவதாக கூறியுள்ளனர். 1
5 சதவீதம் பேர் விபச்சாரப் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் எந்தவித கமிட்மென்ட்டும் கிடையாது. அதனால்தான் போகிறோம் என்று கூறியுள்ளனர். செக்ஸ் வெறி, போதை, குடிப்பழக்கம் காரணமாக விபச்சாரப் பெண்களை நாடுவதாக 3 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

23 ஆகஸ்ட் 2010

பெண் ஊழியரின் தண்ணீர் போத்தலில் விந்தை கலந்தவர் கைது.


அமெரிக்காவின் சான்டா அனா பகுதியில், சக பெண் ஊழியரின் தண்ணீர் பாட்டிலில் தனது விந்தணுவைக் கலந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுபோல இரண்டு முறை செய்துள்ளாராம் மைக்கேல் கெவின் லல்லனா என்ற அந்த 31 வயது நபர்.
புல்லர்டன் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல். இவர் மீது தற்போது பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வது, பெண் மீதான வன் தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட மைக்கேல் பின்னர் 500 டாலர் பணம் கட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். செப்டம்பர் 14ம் தேதி அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படவுள்ளது. நியூபோர்ட் பீச் பகுதியில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மியூச்சுவல் மார்ட்கேஜ் நிறுவனத்தில்தான் பணியாற்றி வருகிறார் மைக்கேல். அன்றைய தினம் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியையின் டெஸ்க்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதில் தனது விந்துவைக் கலந்து விட்டார்.
இது தெரியாமல் அந்த ஊழியை, தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார். அது ஒரு மாதிரியாக இருக்கவே உடனடியாக பாட்டிலை கீழே போட்டு விட்டார். இதுகுறித்து தனது நிறுவனத்தில் அவர் புகார் கொடுத்தார். நிறுவனம் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போட்டு விட்டு வேறு பாட்டிலை அவருக்குக் கொடுத்தது - நடந்தது தெரியாமல். இந்த நிலையில் 3 மாதம் கழித்து அந்தப் பெண்ணும், மைக்கேல் உள்ளிட்ட மேலும் 6 பேரும் ஆரஞ்ச் பகுதியில் உள்ள கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அப்போது ஏப்ரல் 9ம்தேதி இதேபோல செய்துள்ளார் மைக்கேல். இந்த முறையும் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்துள்ளார் அந்தப் பெண். அப்போதும் தண்ணீர் ஒரு மாதிரியாக இருக்கவே சந்தேகமடைந்த அவர் தனியார் ஆய்வகத்தில் சோதனைக்காக அதைக் கொடுத்தார். பரிசோதனை செய்து பார்த்த தனியார் ஆய்வகம், அதில் விந்து கலந்திருப்பதாக பெண் ஊழியைக்குத் தகவல் கொடுத்தது.
இதையடுத்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார் அந்தப் பெண். இதையடுத்து போலீஸார் டிஎன்ஏ சோதனை நடத்தினர். அதில் சிக்கிக் கொண்டார் மைக்கேல். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பெண் ஊழியையின் தண்ணீர் பாட்டிலில் விந்தைக் கலந்தது ஏன் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

21 ஆகஸ்ட் 2010

திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண்.

கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லாரா கார்டர்(25) என்ற பெண் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் "தி சன்" என்ற பத்திரிகைக்கு கொடுத்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். லாரா இங்கிலாந்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேனேஜராக பணிபுரிகிறார். அவரது தோழி ஒருவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க சென்ற லாராவுக்கு, குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. ஆனால் இதற்காக ஒருவரை திருமணம் செய்து, வாழ்க்கை முழுவதும் அவருடன் வாழ லாராவுக்கு இஷ்டம் இல்லை. விந்து தானம் பெற்று செயற்கை முறையில் கருத்தரித்துக் கொள்ளலாம் என குழந்தை பேறு மையத்துக்கு சென்றார். கன்சல்டிங் கட்டணம் 295 பவுண்ட்(ரூ.21 ஆயிரம்), விந்து தானம் அளிப்பவருக்கு 2 ஆயிரம் பவுண்ட் (ரூ.1 லட்சத்து 46 ஆயிரம்) நன்கொடை வழங்க வேண்டும் என்றனர். இவ்வளவு பணம் செலவு செய்வதற்கு பதில், அழகான ஆண்களை மயக்கி ஓசி.யில் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்ள என முடிவு செய்தார் லாரா. கருத்தரிக்க உரிய நாட்கள் எவை என்பதை மருத்துவ சோதனை மூலம் அறிந்து, அந்த நாட்களில் பார், நைட்கிளப் ஆகிய இடங்களுக்கு சென்றார். மது அருந்தியது போல் நடித்து, அங்கு வரும் அழகான ஆண்களை நோட்டமிட்டு, அவர்களுடன் பேச்சு கொடுப்பார். ஜொள்ளு விடும் ஆண்களிடம் உங்களுக்கு எஸ்.டி.டி(பாலியல் நோய்கள்) இருக்கிறதா என கேட்பார். இல்லை என்று கூறிவிட்டால் அவர்களை மயக்கி தள்ளிச் சென்றுவிடுவார். வாய்ப்பு கிடைத்தால் தனி அறை. இல்லையென்றால் கார், நைட்கிளப் டாய்லெட்டில் முடித்துவிடுவார். சில ஆண்கள், ஆணுறை வேண்டும் என கேட்பார்களாம். அதெல்லாம் வேண்டாம் என லாரா கூறுவாராம். வற்புறுத்தும் ஆண்களுக்காவே, ஓட்டை போட்ட ஆணுறை ஒன்றை கைவசம் எடுத்துச் செல்வாராம் லாரா. காரியத்தை கச்சிதமாக முடித்துவிட்டு, வாந்தி எடுப்பதற்காக பல நாட்கள் காத்திருப்பார் லாரா. ஆனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கர்ப்பமாவதற்காக கடந்த ஒரு ஆண்டில் இப்படி 20 ஆண்களுடன் போராடியுள்ளேன் என சோகமாக பேட்டியளித்துள்ளார் லாரா.

19 ஆகஸ்ட் 2010

மொபைலில் திருச்சியை கலக்கும் ஆபாச ஆடியோ.



கழிப்பறையில் எடுத்தது, கருவறையில் எடுத்தது என செல்போன்களில் அவ்வப்போது ஆபாச காட்சிகள்தான் பரவும். இதில் லேட்டஸ்ட்.. ஆபாச ஆடியோ. ‘ரூம் பூரா கும்னு மல்லிகைப்பூ வாசம்’ என்று ஆரம்பித்து முதலிரவு அனுபவத்தை மாஜி காதலனிடம் ஒரு பெண் விளக்குகிறார். ‘அனுபவம் எப்படி’ என்று முதலில் காதலன்தான் அவளுக்கு போன் செய்து விசாரிக்கிறான். இவள் சொல்ல ஆரம்பிக்கிறாள். 20 நிமிடம் ஓடுகிறது இந்த டேப். ஆரம்பம் முதல் இறுதி வரை கிளுகிளுப்பு. நடுநடுவே அந்த பெண் வெட்கத்தில் சிரிக்கிறார். சில கேள்விகளுக்கு கூச்சத்துடன் விளக்குகிறார். சிலவற்றுக்கு ‘சீ போடா’ என்கிறாள். ‘10ம் தேதி ஊருக்கு வர்றேன். அப்ப விலாவாரியா சொல்றேன்’ என்று சில்லறை சிதறலாய் சிரித்து கிளைமாக்ஸ் வைத்து முடிக்கிறார் பெண். அப்போதும் அவன் விடவில்லை. கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கிறான். ‘ஆடி மாசம் எப்படி’ என்கிறான். அதற்கும் புது விளக்கம் கொடுக்கிறார் புதுப்பெண். பேச்சுக்கு நடுவே ‘ஏய்.. சத்தம் போடாதீங்கடா. சார் முக்கியமான வேலையா இருக்கேன்’ என்கிறார் அந்த காதலன். பள்ளி அல்லது டியூஷன் போல தெரிகிறது. மாஜி காதலி சொன்ன விளக்கங்களை அவளுக்கே தெரியாமல் பதிவு செய்து மொபைல் வழியே உலவவிட்டிருக்கிறான் காதலன். திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் இளைஞர்களின் மொபைலில் இந்த கிளுகிளு ஆடியோதான் தற்போது உலா வருகிறது.

18 ஆகஸ்ட் 2010

நடிகை வெளியே சொன்னதால் கோபத்தில் இயக்குனர்!!



இப்போதான் ‘காதல் டூ கல்யாணம்’ படத்துக்காக கல்யாண காட்சியில நடிச்சிட்டு வந்தேன். வழக்கம் போல மந்திரங்கள் ஓத, மேள தாளம், கூட்டம் என அதே ஸ்டைல். இன்னும் எத்தனை முறை எனக்கு கல்யாணம் செய்து பார்ப்பார்களோ தெரியவில்லை என டுவிட்டரில் எழுதிவிட்டார் திவ்யா.
தமாஷாக எழுதியது என திவ்யா நினைத்துக் கொண்டாலும் சம்பந்தப்பட்ட படக்குழு அப்செட்டாம். அதிலும் குறிப்பாக ‘காதல் டூ கல்யாணம்’ பட இயக்குனர் மிலின்த் ராவ் கோபமாகிவிட்டதாக கூறப்படுகிறது. ‘அந்த காட்சிக்கு ஒத்திகை பார்த்து, கூட்டம் சேர்த்து, செட் போட்டு, எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில ஷூட் பண்ணினோம்.
அந்த அம்மாவுக்கே அது தெரியும். அது தெரிஞ்சும் படத்துல வந்த காட்சியை லீக் பண்ணினது மட்டுமில்லாம, அதைப் பத்தி கமென்ட்டும் அடிச்சிருக்கிறாரே’ன்னு யூனிட் பேசிக்கொண்டிருக்கிறதாம். இப்படி உங்க படத்தை பற்றியே கமென்ட் அடிச்சிருக்கீங்களே என திவ்யாவிடம் கேட்டால், ‘நோ கமென்ட்ஸ்’ என்கிறார்.

15 ஆகஸ்ட் 2010

உண்மையான காதல் எது?



காதலை பல பரிணாமத்தில் சொல்லும் திரைப்படங்களுக்கிடையே, இளைஞர்களுக்குக் காதலை கற்றுத்தர வருகிறது "ஆர்வம்'. மதுரையில் உள்ள ஒரு ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை "மூவி ட்ரீம்ஸ்' சார்பில் அனில்.டி. தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் அனிலுக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன் இவர் தயாரித்த படம் "பாடகசாலை'. இந்தப் படத்தில் நடித்த சத்யா, சஞ்சய் ஆகியோர்தான் "ஆர்வம்' படத்திலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மீனு கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
உண்மையான காதல் எது? பொய்யான காதல் எது? என்பதை விளக்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆதித்யன். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். அவர் படத்தைப் பற்றி கூறும்போது,
""காதலை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களும் கவரும் வகையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். படத்தின் தலைப்பிற்கேற்ப ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாகவும் இருக்கும்'' என்றார்.
இப்படத்தின் மூலம் ரோணி ராஃபேல் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை உடுமலை கரிசல் முத்து, எல்.ஜி.ரவிசங்கர் ஆகியோர் எழுதி உள்ளனர். தென்காசி, குற்றாலம், தென்மலை, மதுரை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.

13 ஆகஸ்ட் 2010

கிளாமராக நடிக்க தயங்க மாட்டேன்.



கிளாமராக நடிக்க தயங்கமாட்டேன் என்று மலர் மேல்நிலைப்பள்ளி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள நடிகை ஹசிகா தெரிவித்தார்.பொறியியல் கல்லூரி மாணவியான ஹசிகாவின் சினிமா விஜயம் பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில்:பெங்களூர்தான் சொந்த ஊர். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. படித்து முடித்த பின்னர் சினிமாவில் நடிக்கும் முடிவில் இருந்தேன். அது போலவே இப்போது சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் போது மாடலிங், விளம்பரம் என ஆர்வம். தெலுங்கு, கன்னடம் என நிறைய சினிமா வாய்ப்புகள் அப்போதே வந்தன.ஆனால் தமிழ் படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். இதோ இப்போது நினைத்தப்படியே தமிழில் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு பின் அடுத்த படம். நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். மலர் மேல்நிலைப்பள்ளி படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கிறேன். முழுக்க முழுக்க காதல் படம். மாதுரி தீட்சித் என் ரோல் மாடல். அவரைப் போல் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். தமிழில்தான் தொடர்ந்து நடிக்க போகிறேன். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தெரியும். கதைக்கு தேவை என்றால் கிளாமருக்கு தடையில்லை என்றார்.

10 ஆகஸ்ட் 2010

ஜூலியா ராபர்ட்ஸ் இந்துவாக மாறுகிறார்.


பிரபல ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ், இந்து மதத்துக்கு மாறுகிறார். ஹாலிவுட்டின் பெண் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ். இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். படுபிஸியாக இருக்கும் ஜூலியா, தனது குடும்பத்தோடு இந்து மதத்துக்கு மாற முடிவு செய்துள்ளார். அடுத்த பிறவியில் அமைதியான வாழ்வு வேண்டும் என்பதற்காக இந்த முடிவாம். தற்போது 42 வயதாகும் ஜூலியா, கத்தோலிக்க பெற்றோருக்கு பிறந்தவர். சமீபத்தில் இவர் நடித்த ‘ஈட் பிரே லவ்’ என்ற படத்தின் ஷூட்டிங் இந்தியாவில் நடந்தது. எலிசபெத் கில்பெர்டின் பிரபலமான நாவலை அடிப்படையாக வைத்து தயாரான இந்தப் படத்தில், விவாகரத்தான பெண் கேரக்டரில் ஜூலியா நடிக்கிறார். படத்தில், அவர் உலகம் முழுவதும் சுற்றி வருவார். ஆன்மீகத்தை தேடி இந்தியா வரும்போது காதல் வயப்படுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தியா வந்திருந்தபோது, இந்து மதத்தின் பெருமைகளையும், பாரம்பரியத்தையும் பற்றி தெரிந்துகொண்ட ஜூலியா, அதில் வெகுவாக ஈர்க்கப்பட்டு இந்துவாக மாறியுள்ளார். இப்போதெல்லாம் கணவர் டேனியல் மோடர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்து கோயில்களுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டார். “என் வாழ்க்கையில் நண்பர்களோடும், குடும்பத்தோடும் பிஸியாகவே இருந்துவிட்டேன். அடுத்த பிறவியிலாவது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். அதற்காகத்தான் இந்து மதத்தில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறேன்” என்று நெகிழ்கிறார் ஜூலியா. இவர் யோகா கலையிலும் வல்லவர் என்பது கூடுதல் டிப்ஸ். தனது சொந்த படக் கம்பெனிக்குகூட ‘ரெட் ஓம் பிலிம்ஸ்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார். அவர் இந்துவாக மாறி இருப்பதை அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த இந்து தலைவர்கள் வரவேற்றுள்ளனர். ஜூலியாவின் இந்த முடிவு, தனது படத்தை பப்ளிசிட்டி செய்யும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டதல்ல என்று அவரது தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

09 ஆகஸ்ட் 2010

மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் திரிஷா பேசுகிறார்.



கமல்ஹாசனும், கே.எஸ்.ரவிக்குமாரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மன்மதன் அம்பு படத்தில் சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் திரிஷா. திரிஷாவுக்கு நல்லா தமிழ் தெரியும், ஆனாலும் ஆங்கிலத்தில்தான் நிறைய பேசுவார். நல்ல குரல் வளமும் உண்டு, ஆனாலும் படங்களில் அவருக்கு டப்பிங் குரல்தான். இப்படி படு முரண்பாடாக வளைய வந்து கொண்டிருந்த திரிஷா இப்போது கமல்ஹாசன், கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியிடம் சிக்கி வழிக்கு வந்துள்ளார். இவ்வளவு நல்லா தமிழ் தெரியுது, இவ்வளவு நல்ல குரல் வளம் வேறு, பிறகு எதற்கு இரவல் குரல், நீங்களே உங்களுக்கு இந்தமுறை டப்பிங் கொடுக்கப் போகிறீர்கள் என்று திட்டவட்டமாக இருவரும் திரிஷாவிடம் கூறி விட்டனராம். மன்மதனே வேண்டுகோள் விடுக்கும்போது மறுக்க முடியுமா, சரி என்று ஒத்துக் கொண்டு விட்டாராம் தென்னிந்தியத் தேவதை. இதையடுத்து மன்மதன் அம்பு படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேசப் போகிறார் திரிஷா. இதுவரை திரிஷா நடித்த அத்தனை படங்களிலும் இரவல் குரல்தான். இப்போதுதான் முதல்முறையாக அவரே அவருக்காகப் பேசப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரிஷா பேசப் போவதை கேட்கவே இப்பவே 'திரில்'ஷாவா இருக்கு....!