பக்கங்கள்

21 நவம்பர் 2017

தமிழில் குத்தாட்டம் போட வருகிறார் சன்னி லியோன்!

Ähnliches Fotoஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே ஸ்தம்பித்தது. பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்' படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது சன்னிலியோன் சென்னை வர இருக்கிறார். வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறாராம். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறாராம்.

01 அக்டோபர் 2017

நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டப திறப்புவிழா!(காணொளி)

நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டப திறப்புவிழா!(காணொளி)

24 செப்டம்பர் 2017

உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் !

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு சாப்பிடவில்லை மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார்.    ப்ரஹ்லாத் ஜானியை மாதாஜி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். 100- 200 கிலோமீட்டர் நடந்தாலோ மற்றும் சில நேரம் 12 மணிநேரம் தியானம் செய்தால் ஜானிக்கு பசி அல்லது சோர்வு ஏற்படுமாம்.10 நாட்களுக்கு மேல் ஒரு மனிதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இந்நிலையில், ஜானியை மருத்துவர்கள் கண்காணித்தனர், அதில் 15 நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை அவர் உட்கொள்ளவில்லை என்பதை அறிந்து அவர்கள் வியப்படைந்தனர்.ஜானி எதுவும் சாப்பிடவில்லை என்பதால் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் இல்லை. ஜானியின் கழிவறை மூடப்பட்ட நிலையில் அவரது ஆடைகளும் சோதிக்கப்பட்டது, அதிலும் எந்த தடயங்களும் இல்லை என கூறப்படுகிறது.

27 ஜூலை 2017

பெண்கள் மூக்கு குத்துவது அறிவியல் சார்ந்தது!

பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம் ஒளிந்துள்ளது.மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

04 ஜூலை 2017

பிகினியில் அசத்தும் நடிகை!

பாலிவுட் நடிகைகளிக்கு நிகராக இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தற்போது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதில் நடிக்கும் நடிகைகளும் பிரபலம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களும் பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். தற்போது பிகினி புகைப்படம் வெளியிடுவது ஒரு ட்ரண்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நாகினி சீரியலில் நடித்து தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை மவுனி ராய் அதிக அளவில் தனது பிகினி படங்களை வெளியிட்டு வருகிறார்.

04 ஏப்ரல் 2017

மாணவனின் வீடு புகுந்த பெண்ணால் பெற்றோர் அதிர்ச்சி!

கேரள மாநிலத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவனை பேஸ்புக் மூலம் காதலித்து அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் கதவைத் தட்டினர். கதவை திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்த போலீஸார் திரும்பி சென்றுவிட்டனர்.நேற்று முன்தினம் காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் போலீஸில் புகார் செய்தனர். எஸ்ஐ லாலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை போலீஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனினும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று மாணவர் கூறியதால் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

05 மார்ச் 2017

கமலஹாசன் ஆன்ட்ரியாவின் லீலைகள் இன்று வெளியிடப்படும் என சுசித்ரா அறிவிப்பு!

Bildergebnis für susithraஇன்று மாலை 6 மணிக்கு கமலஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம். இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள் என  தெரிவித்துள்ளார்.