பக்கங்கள்

21 ஜூலை 2018

என் வலியை கார்த்திக்கு உணர்த்துவேன்-ஸ்ரீரெட்டி!

ஸ்ரீ ரெட்டி 
தன்னுடயை வலி என்ன என்று நடிகர் கார்த்திக்கு உணர்த்துவேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மீது தடாலடியாக பாலியல் புகார்களை கொடுத்து வருகிறார்.தமிழ் பிரபலங்களான ஏஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கடுமையாக குற்றம் சுமத்திய ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடப் போவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை வந்த
ஸ்ரீரெட்டியிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு... ஆதாரம் வேண்டுமென்றால் பிறப்புறுப்பில் தான் கேமரா பொருத்தவேண்டும் என காட்டமாக பதிலளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றும், நிரூப்பிக்க முடிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். கார்திக்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, "நான் நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறேன். மதிப்பிற்குரிய நடிகர் கார்த்தியின் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன், இல்லையென்றால் என்னுடைய வலி என்ன என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்" எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காத்தானே தவிற பயன்படாத அறிவுரைகள் கூற இல்லை என்று குறிப்பிட்டு, என்னுடைய கஷ்டத்தை நினைத்து பாருங்கள். லாஜிக் பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

14 ஜூன் 2018

பசுவின் மரண தண்டனை இரத்து!

விலக்கு அளிக்க வேண்டும் ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஸாராசிவோ கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.இவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்பதால் பசு எல்லைத்தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்தனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரசவ காலம் பென்காவிற்கு பிரசவ காலம் நெருங்கியதால் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. விலக்கு அளிக்க வேண்டும் கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வந்தது. தப்பிய பென்கா 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு பென்காவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல்கேரிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு கர்ப்பிணி பசுவின் மரண தண்டனையை இரத்து செய்துள்ளது.

13 மே 2018

திருமணத்திற்கு முன் தவறில்லை என்கிறார் யாஷிகா!

கன்னித்தன்மைதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண்.அடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக இருப்பார் என்று எழுந்துள்ள விமர்சனங்களை யாஷிகா கண்டுகொள்ளவில்லை.படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை 3 வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார் யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா.திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார். ஸ்கூட்டி அல்ல மாறாக புல்லட் ஓட்டும் யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருகிறார்.இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.

25 பிப்ரவரி 2018

சிறீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் போனி கபூர்!

சோகம் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நேற்று அவருக்கு ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவர் இறந்துவிட்டார் என்பதையே பலராலும் நம்ப முடியவில்லை.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார். திருமணம் முடிந்த உடன் போனி கபூர் மும்பை திரும்பிவிட்டார்.ஸ்ரீதேவியும், குஷியும் துபாயில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க போனி கபூர் நேற்று மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்.கணவர் தன் மீது உள்ள பாசத்தால் திரும்பி வந்ததை பார்த்து ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். போனி கபூர் ஆசை, ஆசையாய் துபாய் சென்றதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் தற்போது அவருக்காக வருத்தப்படுகிறார்கள்.ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் போனி கபூர். தனது இன்ப துன்பத்தில் பங்கேற்ற ஸ்ரீதேவி இறந்ததை அவரால் நம்ப முடியவில்லை.பாலிவுட்டில் நடிக்க சென்ற ஸ்ரீதேவி தயாரிப்பாளரான போனி கபூருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார். அப்போது தான் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.