பக்கங்கள்

28 ஜூன் 2011

புரட்டிப்போட்ட ஸ்ரேயா.

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை ஸ்ரேயா. கடந்த வாரம், இடுப்புக் கீழே போட்டோ எடுக்கக் கூடாது என புகைப்படக்காரர்களைத் திட்டியதால் பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றார்.
இந்த வாரம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மது குடித்தால் தப்பில்லை என்பதுபோல கருத்து சொல்லி மாட்டிக் கொண்டுள்ளார். மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன. 18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.
ஸ்ரேயா கருத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை அறிந்த ஸ்ரேயா உடனே தனது கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டதாக, பழியை பத்திரிகைகள் மீது போட்டுள்ளார். மது குடிப்பதை ஆதரித்து நான் எந்த கருத்தும் சொல்லவே இல்லை. நான் சொல்லாத விஷயத்துக்கு என் மீது கண்டனம் தெரிவித்தால் என்ன அர்த்தம்?, என்று திருப்பிக் கேட்டுள்ளார் ஸ்ரேயா.

25 ஜூன் 2011

நானா அப்படிச்சொன்னேன்?ஐயோ!ஐயோ!

ஆர்வக் கோளாறில் அல்லது தங்களின் இயல்பான குணாதிசயம் காரணமாக திமிராகப் பேசிவிடுவதும், நிலைமை விபரீதமான பிறகு, 'நானா... எப்போ அப்படிச் சொன்னேன்' என்றை பிளேட்டைத் திருப்பிப் போடுவதும் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நடிகைகளுக்கும் சாலப் பொருந்தும்!
சில தினங்களுக்கு முன் மும்பையில் ஒரு படவிழாவில், என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்லி கேவலப்படுத்த வேண்டாம். நான் பாலிவுட் நடிகை. அப்படிச் சொல்வதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியவர் காஜல் அகர்வால்.
இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா புள்ளிகளின் கடும் கண்டனத்துக்குள்ளானார். இனி அவரை வைத்து சினிமா எடுக்க வேண்டாம் என முன்னணி இயக்குநர்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை கைமீறியுள்ளது. காஜல் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் சக நடிகைகள் சிலரே கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக ஜெர்மனி போய் திரும்பி வந்துள்ள காஜலிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காஜல், "இதெல்லாம் சுத்தப் பொய். நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் ஒரு மும்பைப் பெண். அதுதான் எனக்கு பெருமை. நான் ஒருபோதும் தென்னிந்திய நடிகையாகிவிட முடியாது, என்றுதான் சொல்லியிருந்தேன். அதை திரித்து எழுதிவிட்டார்கள்.
தென்னிந்திய படங்கள் மீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. கடந்த சில தினங்களாக நான் வெளிநாட்டில் இருந்தேன். அதற்குள் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் பரப்பி எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கி வைத்துள்ளனர்," என்றார்.

23 ஜூன் 2011

இடுப்புக்கு கீழே வேணாம்!

தம்மாத்தூண்டு டாப்ஸ்… எப்போது நழுவுமோ என பயப்பட வைத்த லூஸ் ஸ்கர்ட்… இதுதான் அந்த விழாவில் நடிகை ஸ்ரேயாவின் உடை.
சும்மா விடுவார்களா புகைப்படக்காரர்கள்… சுட்டுத் தள்ளினர் ஸ்ரேயாவை. நிகழ்ச்சியை சுத்தமாக மறந்துவிட்டு ஸ்ரேயாவையே சுற்றிச் சுற்றி வந்தனர்.
உடனே ஒரு போட்டோகிராபரை அழைத்த ஸ்ரேயா, அவர் எடுத்திருந்த படங்களைக் காட்டுமாறு கேட்டார். அவருடம் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார்.
வேறு வழியின்றி அவரும் அழிக்க, “இனி டாப்ல மட்டும் எடுங்க, இடுப்புக்கீழே எல்லாம் எடுக்கக் கூடாது”, என கடுமையாகக் கூறினார்.
“நான் மட்டுமா எடுத்தேன்… எல்லாரும்தான் எடுத்திருக்காங்க. அப்படியே எடுக்கக் கூடாது என்றாலும், பொது நிகழ்ச்சிக்கு வரும் ஸ்ரேயா போன்றவர்கள் இந்த அளவு கவர்ச்சியாக வந்தால் என்ன செய்வது? நான் எடுக்காவிட்டாலும் மற்றவர்கள் எடுக்கத்தானே செய்வார்கள்,” என்றார் கோபமாக.
இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, ” எனக்கு கேமரா ப்ளாஷ் அலர்ஜி இருக்கிறது. அதனால்தான் கூப்பிட்டு சொன்னேன்,” என்றார்.
நாள் முழுக்க ஹெவி கேமரா ப்ளாஷில் இருப்பதுதான் ஸ்ரேயாவின் தொழிலே. அவரை இந்த சின்ன ஸ்டில் கேமரா ப்ளாஷ் பாதித்துவிட்டது என்றால்… என்ன சொல்றது போங்க!

20 ஜூன் 2011

எல்லை தாண்ட மாட்டேன்.

எதற்கும் ஒரு எல்லை உண்டு. கிளாமருக்கும் எல்லை உண்டு. அதைத் தாண்டி நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன் என்கிறார் தமன்னா.
சில வாரங்களுக்கு முன்பு வரை தமன்னாதான் தமிழ் சினிமாவின் ஒய்யார நாயகியாக இருந்தார். அத்தனை ஹீரோக்களும் தமன்னாவுடன் ஜோடி போட அலை மோதிய காலம் அது.
ஆனால் இன்று தமன்னாவை பூதக் கண்ணாடி வைத்துத் தேட வேண்டியுள்ளது. காரணம், இப்போது அவர் தமிழில் அவ்வளவாக நடிப்பதில்லை. மாறாக தெலுங்கில் பிசியாகி விட்டார்.
இருப்பினும் தற்போது ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக வேங்கை படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.
இதில் சாதாரண கல்லூரி மாணவியாக மகா எளிமையாக நடிக்கிறாராம் தமன்னா. ஏன் கிளாமர் பக்கம் போகவில்லையா என்று கேட்டால், எனக்கு கிளாமர் நடிப்பு, சாதா நடிப்பு என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நல்ல கதையா என்றுதான் பார்ப்பேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.அது கிளாமருடன் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும்.
அதேசமயம், கிளாமர் காட்டுவதிலும் ஒரு எல்லை உண்டு. எல்லை கடந்தால் அது விரசமாகி விடும். அதற்கு எனது ஓட்டு எப்போதுமே கிடையாது. அதற்காக கிளாமரே கூடாது என்றெல்லாம் இல்லை.
இப்போது கூட பத்ரிநாத் என்ற படத்தில் கிளாமராகத்தான் நடித்திருக்கிறேன். அதேபோல 100பர்சன்ட் லவ் என்ற படத்திலும் கிளாமர் காட்டியுள்ளேன். எல்லாம் எல்லை கடக்காத அழகான கிளாமர்தான் என்று நீண்ட விளக்கமளித்து பெருமூச்சு விட்டார்.
சரி தமிழ் என்னாச்சு என்று கேட்டால், மறுபடியும் நீளமாக பேசினார் தமன்னா. அப்படியெல்லாம் கிடையாது. நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை எனக்குப் பிடித்தாற் போல இல்லாததால் ஒப்புக் கொள்ளவில்லை. மற்றபடி தமிழை நான் புறக்கணிக்கவில்லை. நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் மறுபடியும் நடிப்பேன் என்று கூறி நிறுத்தினார்.
கார்த்தி கல்யாணத்திற்குப் போவீங்களா தமன்னா...?

17 ஜூன் 2011

நிலாவை குழப்பிய குறுஞ்செய்தி.

என்னைப் பின் தொடர்ந்து, என்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து ஆபாசமாக மெயில் அனுப்பி என்னை டார்ச்சர் செய்தவனை சும்மா விடக் கூடாது. தண்டித்தே ஆக வேண்டும். இவனால் என்னால் வெளியில் கூட போக முடியவில்லை என்று கொதித்துக் கூறுகிறார் நடிகை நிலா.
மீரா சோப்ரா என்ற இயற்பெயரைக் கொண்ட நிலாவுக்கு தமிழில் வாய்ப்புகள் அமாவாசை ஆகி விட்டதால் டெல்லியிலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த நிலையில் அவருக்கு ஆபாச இமெயில்கள் தொடர்ந்து வரவே டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நிலா கூறுகையில்,
இந்த ஆபாச இமெயில்களால் நான் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். எனக்குத் தெரிந்தவர்கள்தான் இதைச் செய்கிறார்கள் என்பதை நினைக்கும்போது பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
என்னால் வெளியில் போகவே முடியவில்லை. வீட்டோடு முடங்கிப் போய் அழுதபடி இருந்தேன்.
அனுப்பியது யார் என்பது எனக்குத் தெரியும். என் மீது பற்று கொண்டிருப்பதால் இவ்வாறு அனுப்பி விட்டதாக நான் கருதி அமைதியாக இருந்தேன். ஆனால் தொடர்ந்து இந்த ஆபாச மெயில்கள் வந்ததால்தான் போலீஸாரை அணுகினேன்.
இந்த நபரை சும்மா விடக் கூடாது. பிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றார் நிலா.

14 ஜூன் 2011

கதாநாயகியாகிறார் ஸ்ரீதேவியின் மகள்.

முன்னால் கனவுக் கன்னி ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்போது கதாநாயகியாகிறார்.
1970 மற்றும் 80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. இந்திப் படங்களிலும் நடித்தார். 1996-ல் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் குடியேறினார். இவருக்கு ஜான்வி, குஷி என இருமகள்கள் உள்ளனர்.
ஜான்வி வளர்ந்து விட்டபடியால் கதாநாயகியாக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு அல்லது தமிழ் படத்தில் அறிமுகம் செய்கிறார். இதற்காக இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் தெலுங்கில்தான் தன் மகளை அறிமுகப்படுத்துவேன் என்று கூறிவந்தவர் ஸ்ரீதேவி.
ஏற்கெனவே இப்படிக் கூறி தெலுங்கில் தன் மகள் கார்த்திகாவை அறிமுகப்படுத்தி படுதோல்வி கண்டவர் ராதா. பின்னர் கார்த்திகாவை 'கோ' தமிழ் படத்தில் அறிமுகம் செய்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடுகிறது.
இதைப் பார்த்தபிறகு, தனது முடிவை மாற்றிக் கொண்ட ஸ்ரீதேவி, ஜான்வியை தமிழில் முதலில் நடிக்க வைக்க விரும்புகிறார்.

11 ஜூன் 2011

ஸ்ருதியை தாக்கும் நித்யா.

கமலின் கலைவாரிசு, ஸ்ருதிஹாசனுக்கும் நடிகர் சித்தார்த்துக்கும் நெருக்கம் இருந்து வருவதாக டோலிவுட் மீடியா தொரந்து எழுதி வந்தது. இந்த கிசு கிசு விவகாரத்தை இரண்டுபேரும் மறுத்து வந்ததோடு, இது என் தனிப்பட்ட விஷயம் என்று கமல் பாணியில் திமிராக பதில் சொல்லி வந்தார் வருகிறார் சித்தார்த்.
‘அகனாக ஒக்க தீருடு ‘ என்ற தெலுங்கு தோல்விப் படத்தில் சேர்ந்து நடித்த இவர்கள் இருவரும், வம்படியாக ‘ஓ மை பிரண்ட் ‘ என்ற தெலுங்குபடத்தில் ஜோடி சேர்ந்திருகிறார்கள்.
இந்த படத்துக்கு கதாநாயகியாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சித்தார்த்துடன் போட்டோ ஷூட்டும் நடத்தப்பட்ட நிலையில், படத்திலிருந்து நீக்கப்பட்டார் நித்தியாமேனன். சித்தார்த்தின் வற்புறுத்தலால்தான் நித்தியா நீக்கப்பட்டதாக டோலிவுட் மீடியா எழுதியதை சித்தார்த்த எதுவும் பேசவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட கதாநாயகியான நித்தியாவே முன்வந்து உண்மையை தைரிடமாக உடைத்து, ஸ்ருதியைத் தாக்கியுள்ளார்.
தற்போது தமிழில் ‘வெப்பம், ‘180’ படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் மலையாள கலைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். அவர் வெப்பம் படத்தின் பேச் ஒர்க் படப்பிடிப்புக்காக சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்துக்கொண்டனர். அப்போது “என்னை மலையாள நடிகை என்று எழுதாதீர்கள். நான் படம் இயக்குனர் ஆகவே பெரிதும் விரும்புகிறேன். என்றாலும் கன்னடத்தில்தான் நான் முதலில் நடிகை ஆனேன்.
பிறகு மலையாள படத்தில்தான் நாயகி ஆனேன். கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய நான்குமொழிப் படங்களிலும் நடித்துவருகிறேன்.இப்போது சொல்லுங்கள் என்னை மலையாள நடிகை என்று சொல்வதில் அர்த்தமிருகிறதா? தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் படத்தில் நடிக்க மறுத்ததைப் பற்றி கேட்கிறார்கள்.
அவருக்கும் எனக்குமான வயது வித்தியாசம் அதிகம். படத்தில் எங்களைப் பார்த்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதனால்தான் மறுத்தேன். ‘180’ படத்துக்குப் பிறகு சித்தார்த்துடன் நான் நடிக்க வேண்டிய தெலுங்கு படம் ‘ஓ மை பிரண்ட்’. கடைசி நேரத்தில் நான் நீக்கப்பட்டது ஏன் என்று கேட்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சித்தார்த், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க விரும்பினார். அதனால் நான் நீக்கப்பட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு ஸ்ருதிஹாசனே காரணம்” என்று தைரியமாக பேசுகிறார் நித்தியா மேனன்.

09 ஜூன் 2011

காதல் திருமணம் எல்லாம் கிடையாது.

காதல் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், வீட்டில் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்வேன் என நடிகை சினேகா கூறினார்.
கடலூரில் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்தார் நடிகை சினேகா. அவரைக் காண கொளுத்தும் வெளியிலிலும் குவிந்தனர் ரசிகர்கள். உடனே திரண்டு நின்ற ரசிகர்கள் மற்றும் பொது மக்களை பார்த்து சினேகா கையசைத்தார். பதிலுக்கு ரசிகர்களும் கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த ஆர்வத்தில் ரசிகர்கள் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. பொலிஸ்காரர்களும் மற்றும் கடை காவலர்களும் நடிகை சினேகாவை பாதுகாப்பாக கடைக்குள் அழைத்துச் சென்றனர். பின்னர் நடிகை சினேகா குத்து விளக்கேற்றி, கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நகைக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளின் குறிப்பிட்ட மாதிரிகளை எடுத்து அவர் தனது கழுத்தில் அணிந்து வாடிக்கையாளர்களிடம் காண்பித்தார். பின்னர் பேசிய அவர், நான் இன்னும் நடிப்பில் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. நல்ல படங்கள் தான் முக்கியம். சம்பளமல்ல. அதனால் தான் இன்னும் கண்ணியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதில் உறுதியாக உள்ளேன்.
என் திருமணம் இப்போது நடக்காது. அப்படி நடந்தாலும் அது நிச்சயமாக காதல் திருமணமாக இருக்காது. வீட்டில் பார்க்கும் பையனைத்தான் மணப்பேன் என்றார்.

07 ஜூன் 2011

கவர்ச்சிக்கு மாறும் அனுயா.

ஹோம்லி கேரக்டரை விட கவர்ச்சியான கேரக்டர் தான் பொருத்தமாக இருக்கும் என்று பலரும் கூறுவதால், இனி கவர்ச்சியான வேடத்தில் நடிக்க அனுயா தயாராகி கொண்டு இருக்கிறார். சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுயா. முதல்படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அனுயா, மதுரை சம்பவம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார். இந்நிலையில் சிலகாலம் காணாமல் போய் இருந்த அனுயாவுக்கு தற்போது, "நண்பன்" படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆனால் படத்தில் அவருக்கு கதாநாயகி வேடம் அல்ல, இலியானாவின் அக்காவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அனுயாவுக்கு கவர்ச்சி வேடம் தான் பொருத்தமாக இருக்கும் பலரும் கூறிவருகின்றனர். இதனால் கவர்ச்சிக்கு மாற தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, சிவா மனசுல சக்தி, நகரம் போன்ற படத்தில் நல்ல ரோல் அமைந்தது, இருப்பினும் நடிப்புடன் கொஞ்சம் கவர்ச்சியையும் சேர்த்து நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இதனால் நானும் கவர்ச்சியாக நடிக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன். அதற்கேற்றாற்போல் நல்ல கதை அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன். தற்போது நண்பன் படத்தில் இலியானாவின் அக்காவாக நடிக்கிறேன். அக்கா கேரக்டர் என்றாலும், என்னுடைய கேரக்டர் நிச்சயம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

04 ஜூன் 2011

பணத்தைக் காட்டியதும் ஓக்கே சொன்ன த்ரிஷா.

மலையாளத்தில் பாடிகார்ட் என்ற பெயரில் உருவாகி, பின்னர் தமிழில் காவலன் என்ற பெயரில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தற்போது தெலுங்கில் பாடிகார்ட் என்ற பெயரிலேயே தயாராகிறது.
பாடிகார்ட் படத்தில் செக்ஸியான காட்சிகள் எதுவும் கிடையாது. இயல்பான கதையோட்டத்தைக் கொண்ட அப்படத்தை பெரிய அளவில் கொம்பாக்காமல் தமிழிலும் சற்று இயல்பாக எடுத்ததால் அப்படம் பெரிய ஹிட் ஆனது.
இந்த நிலையில், தெலுங்கு பாடிகார்டில் பெரிய அளவில் மசாலாவை சேர்த்து இணைக்கவுள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிப்பவர் திரிஷா. படத்தில் ஒரு காட்சியில் பிகினி உடையில் அவரை உலவ விட்டுள்ளனர்.
இந்தக் காட்சியில் நடிக்க முதலில் தயங்கியுள்ளார் திரிஷா. எக்ஸ்டிராவாக தருவதாக தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவிக்கவே சம்மதித்துள்ளாராம் திரிஷா. இந்தக் காட்சியில் நடிப்பதற்காக எக்ஸ்டிராவாக ரூ. 25 லட்சத்தை வாங்கியுள்ளாராம் திரிஷா.
தெலுங்கில் தற்போது நாயகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க கவர்ச்சிக் களத்தில் குதித்து ரசிகர்களை இழுப்பதில் நாயகிகளிடையே பெரும் அடிதடியே காணப்படுகிறது. இந்த நிலையில்தான் போட்டிக் களத்தில் திரிஷாவும் இப்படிக் குதித்துள்ளாராம்.
அதை விட முக்கியம் இது தெலுங்குப் படமாச்சே, கவர்ச்சி மசாலா இல்லையென்றால் எப்படி...?

02 ஜூன் 2011

ஜெய் ஆகாஷின் ஆயுதப் போராட்டம்.

சியான் விக்ரம் அளவுக்கு பெரிய போராட்டம் இல்லாவிட்டாலும், லண்டனின் புலம்பெயர்ந்து வாழும் ஜெய்ஆகாஷ் எப்படியாவது தமிழ்சினிமாவில் எனக்கான ஆங்கீகாரத்தை அடைந்தே தீருவேன் என்று போராடிக்கொண்டிருகிறார்.
அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘ஆயுதப்போராட்டம்’ படத்தின் இசையை நேற்று சென்னையில் வெளியிட்டார்கள். ஜெய் ஆகாஷின் நெருங்கிய நண்பர்களான விஜய் ஆண்டனி, சமுத்திரகணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.ஜெய் ஆகாஷின் ஆயுதபோராட்டம். கொஞ்சம் சர்ச்சை, விவாதம், இன உணர்வு, தமிழ்தேசியம் என்று எல்லாம் பேசுகிற கமர்ஷில் படமாம். மொத்த படக்குழுவும் தாய்லாந்தில் மூன்று மாதம் தங்கியிருந்து முழு படத்தையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியிருகிக்கிறார்கள். இந்தப்படத்தில் தாய்லாந்தின் ராணுவ உதவி பெற்று காடுகளில் படமாக்கியிருகிறார்கள். இதற்குமுன் காதலன் காதலி என்ற படத்தை ஜெய் ஆகாஷ் இயக்கி நடித்தார்.
அந்த படத்தை தயாரித்த அதே ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் தான் இந்த படத்தையும் தயாரித்திருகிறது. காதலன் காதலி படத்தை, நாங்கள் எதிர்பார்த்த பட்ஜெட்டை விட குறைவாக, அதே நேரத்தில் படத்தை சிறப்பாகவும் எடுத்துக்கொடுத்தார். அந்த நன்றிக்காக இந்தப்படம். இதிலும் கலக்கி விட்டார் ஜெய் ஆகாஷ் என்று பாராட்டுகிறார்கள். இந்தகாலத்தில் தயாரிப்பாளர்கள் பாராட்டுவது அபூர்வம்.
போகட்டும்! இந்தமுறையாவது பெரிய வெற்றி ஜெய் ஆகாஷுக்கு கிடைக்கட்டும் என்று வாழ்த்தி விட்டு படத்தின் கதையைச் சொல்லுங்கள் என்றோம். ஒரு இலங்கை தமிழ் இளைஞனுக்கும் ஒரு இந்திய தமிழ் இளைஞனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டம்தான் கதை.
இந்த இரண்டு தமிழ் இளைஞர்களாகவும் நடித்திருப்பது ஆகாஷேதானாம். இன்னும் கொஞ்சம் துருவியதில் வாழ்ந்து மறைந்த ஒரு விடுதலைபுலி போராளியின் கடிதங்களில் இருந்து கதைக்கான பல திருபங்களை எடுத்துக்கொண்டாராம் இயக்குனர்.