பக்கங்கள்

28 ஜூலை 2011

படத்தை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஒருபடத்தில் நடிக்க போவதாக முன்னரே செய்திகள் வெளியாகின. அந்த செய்தி இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனுஷின் பிறந்ததினமான இன்று(28.07.11) இப்படத்தை ஆரம்பிக்கிறார் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், தேசிய விருது பெற்ற உற்சாகத்தில் இருக்கிறார். கூடவே அவருக்கு இன்று பிறந்தநாளும் கூட. இந்தபிறந்தநாளில் இன்னொரு சந்தோஷமும் தனுஷ்க்கு கூடி வந்திருக்கிறது. அதாகப்பட்டது ஏற்கனவே மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், ஒரு படம் நடிக்க போவதாக இருந்த தனுஷ், அந்தபடத்தை தன்னுடைய பிறந்தநாளான இன்றே துவங்கியிருக்கிறார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதரிக்கும் முதல் படம் இது. படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். புதுமுகம் ஒருவர் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா தனுஷூம், வேல்ராஜ் இருவரும் ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்தப் படத்துக்காக ஒரு பாடல் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது. விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மேனன் பாடியுள்ளனர். இந்தப் பாடலைத்தான் இன்று ஷூட் செய்கிறார்கள். படப்பிடிப்பு சென்னை மற்றும் புறநகரிலேயே இருக்குமாம். இந்தபடம் பற்றிய முழுவிபரத்தை தனுஷ் நாளை வெளியிடுவார் எனத் தெரிகிறது. இதனிடையே படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஸ்ருதிக்கு பதிலாக, அமலா பால் நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

18 ஜூலை 2011

அடம்பிடிக்கும் வித்யாபாலன்.

கவர்ச்சி நடிகை சில்க் வேடத்தில் நடிப்பேன்; ஆனால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று முன்பு ஒரு பேட்டியில் கூறி, எக்கச்சக்க விமர்சனத்துக்கு ஆளான வித்யாபாலன் மீண்டுமொரு பேட்டியால் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்தால் கவர்ச்சியாகத்தானே நடிக்க வேண்டும். ஆனால் அம்மணி அதற்கு மாறாக நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தார். ஒருவழியாக அவரை சரிகட்டிய படக்குழுவினருக்கு மீண்டும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் வித்யா.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில், எந்த வகையான காஸ்ட்யூமும் தனக்கு ஓ.கே தான்;ஆனால் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் மட்டும் கூடவே கூடாது என்று கண்டிஷன் போட்டிருக்கிறார் வித்யா பாலன். தற்போது ஐதராபாத்தில் சூட்டிங் நடந்து வருகிறது. படத்தில் வித்யாவை கவர்ச்சிகரமாக காட்டும் பொறுப்பை அவரது காஸ்ட்யூம் டிசைனர் நிஹாரிகா கான் ஏற்றுள்ளார். அவரிடம்தான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார் வித்யா. ஏன் ஸ்லீவ்லெஸ் வேண்டாம்? என்று அம்மணியிடம் கேட்டால், ஸ்லீவ்ஸெல் போட்டால் தனது தோள்பட்டைகளும், அக்குளும் பட்டவர்த்தனமாக தெரியும். அதை நான் விரும்பவில்லை என்று கூறுகிறாராம். என்னத்த சொல்ல?

15 ஜூலை 2011

ஐயையோ!எல்லாமே பொய்.

தனக்கும், தனது கணவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஒன்றாகத் தான் இருப்பதாகவும் நடிகை பூமிகா தெரிவித்துள்ளார்.
நடிகை பூமிகா, யோகா பயிற்சியாளர் பரத் தாகூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக பூமிகா மும்பை நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக பரத் தாகூர் படம் ஒன்றை எடுத்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பூமிகா கடுப்பாகியுள்ளதாகவும் பேசப்பட்டது.
இதைப் பார்த்து பூமிகா அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
எனக்கும், எனது கணவருக்கும் இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை. நாங்கள் ஒன்றாகத் தான் இருக்கிறோம். நாங்கள் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதை நான் பலமுறை மறுத்துள்ளேன். ஆனாலும் வதந்திகள் நின்றபாடில்லை. இந்த வதந்திகளை நம்பாதீர்கள் என்றார்.

10 ஜூலை 2011

ஜெனிலியா வீட்டில் சம்மதம் கிடைத்தது.

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது வேலாயுதம் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இருவரும் “துங்கே மேரி கஸம்” என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
ரிதேஷ் தேஷ்முக் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் ஆவார். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக ரிதேஷின் தந்தை காதலர்களை பிரிக்க கடும் முயற்சி செய்தார். ஆனாலும் அவர்கள் காதலில் உறுதியாக இருந்தனர். ரகசியமாக சந்தித்து வந்தார்கள்.
சமீபத்தில் டோரன்டோவில் நடந்த பட விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் கைகோர்த்தபடி நடந்து சென்று காதலை உறுதிபடுத்தினர். அருகருகே உட்கார்ந்து விழாவை கண்டு களித்தனர்.
காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. பட விழாவில் ரிதேசும் ஜெனிலியாவும் நெருக்கமாக உட்கார்ந்து இருந்தபோது ஜெனிலியாவின் தாயாரும் உடன் இருந்தார்.
ஜெனிலியாவுக்கு தற்போது இரண்டு இந்திப் படங்கள் கைவசம் உள்ளன. “போர்ஸ்” என்ற படத்தில் ஜான் அபிரகாமுடனும் இன்னொரு படத்தில் அபிஷேக்பச்சனுடனும் நடிக்கிறார். இப்படங்கள் முடிந்ததும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

05 ஜூலை 2011

சீறும் ஸ்ரேயா.

சென்னை நட்சத்திர ஹோட்டல் பார்ட்டியில் பங்கேற்ற நடிகை ஸ்ரேயா, குடிபோதையில் குத்தாட்டம் போட்டதாக வெளியான செய்தியை அவரே மறுத்துள்ளார். சர்ச்சையின் நாயகியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. சினிமா வாய்ப்புகள் இருக்கிறதோ... இல்லீயோ...? அம்மணியைப் பற்றி தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் செய்தி கொஞ்சம் மோசமான செய்திதான். நடிகை ஸ்ரேயா குடித்துவிட்டு போதையில் ஆடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் உலா வருகின்றன. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவுக்குப் பிறகு, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் ஸ்ரேயா பங்கேற்று அளவுக்கு மீறி குடித்து போதையில் தள்ளாடினாராம் ஸ்ரேயா. விருந்து முடிந்து அளவுக்கதிகமான போதையில் கீழே விழப்போன ஸ்ரேயாவை அவரது தோழிகள்தான் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காரில் உட்கார வைத்ததாக செய்திகள் வெளியாயின.
இந்த செய்தியைப் படித்ததும் கொதித்துப் போன ஸ்ரேயா, "நான் போதையில் தள்ளாடியதாகவும், ஆட்டம் போட்டதாகவும் செய்தி பரவி இருப்பது வேதனையளிக்கிறது. எனக்கு எதிராக இது போன்ற அவதூறு பரப்பியவர்களை சும்மா விடமாட்டேன். நான் நட்சத்திர ஹோட்டல் பப்களுக்கு அபூர்வமாகத்தான் போவேன். கடந்த சில நாட்களாக எந்த பப்புக்கும் போகவில்லை. மதுவும் அருந்தவுமில்லை. என்னைப் பற்றி இது போன்று வதந்திகளை பரப்பியது யார் என்று தெரியவில்லை. இன்டர்நெட்டில் நான் குடித்து விட்டு ஆடுவது போன்று படம் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. மார்பிங் செய்து அந்த போட்டோவை வெளியிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.
போற போக்கைப் பார்த்தால் சர்ச்சைகளில் சிக்குவதில் த்ரிஷாவை முந்தி விடுவார் போலிருக்கிறதே?

02 ஜூலை 2011

சினிமாவிற்கு விடை கொடுத்த நயன்.

நயன்தாரா, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்யம்தான் அவரது கடைசி படம். இந்தப் பட ஷூட்டிங்கின் கடைசி தினமான நேற்று, படப்பிடிக்குழுவினரிடம் கதறி அழுதபடி விடைபெற்றார் நயன்தாரா!
இனி நான் நடிக்க மாட்டேன். உங்களை ஷூட்டிங்கில் சந்திப்பது இதுவே கடைசி என்று கூறிவிட்டுச் சென்றார்.
வில்லு படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவர்-மனைவி போல் வாழ ஆரம்பித்தனர்.
நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.
நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபு தேவா. விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் பிரபு தேவாவும் ரம்லத்தும். திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர். இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபு தேவா. இந்த செட்டில்மென்டும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.
விவாகரத்து தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.
கடைசி படம்:
திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, ‘ஸ்ரீராமராஜ்யம்’ என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.
இது, என்.டி.ராமராவ் நடித்த ‘லவகுசா’ என்ற படத்தின் ரீமேக். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.
கண்ணீர் கதறல்:
நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார்.
அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். “திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே” என்றார். அதற்கு நயன்தாரா, “திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று ‘அவர்’ கண்டிப்பாக கூறிவிட்டார்” என்று பதில் அளித்தார்.
கடிகாரம்-மோதிரம் பரிசு:
பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் ‘மேக்கப்மேன்’ ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்.