தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர்.
ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர்.
இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது.
இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர்.
வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா.
சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார்.
தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.
நாம் அன்பு செலுத்தும் உள்ளங்கள் நல்லுள்ளங்களாக இருப்பின், துன்பங்களில் கூட இன்பங்களை காணலாம்.
30 செப்டம்பர் 2012
27 செப்டம்பர் 2012
நயன்தாராவால் தவிக்கும் ஜெய்!
நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல் இருக்கிறாராம்.
நயன்தாரா, ஆர்யா நடிக்கும் படத்தில் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் நடிக்கிறார். அதிலும் படத்தில் நயனை காதலிக்கிறார். படத்தில் அவர்களுக்கு ஒரு டூயட் கூட இருக்கிறது. நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது, அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம்.
இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் மனிதர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம். அட்லீ எடுக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. முக்கோண காதல் கதை கொண்டது இப்படம். ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிசியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார். கவலைப்படாதீங்க ஜெய், நயன் ரொம்பவே நல்லவர். தைரியமா போய் நடிங்க. ஜெய் நடித்து கடைசியாக வந்த படம் எங்கேயும் எப்போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
16 செப்டம்பர் 2012
சதைப்பிடிப்பான பெண்களைத்தான் பிடிக்கும்!
வித்யா பாலன் |
14 செப்டம்பர் 2012
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு இல்லை!
பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது பற்றி அவர் கூறியதாவது: என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள். ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான்.
நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட் டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் மேம்போக்கான தோற்றங்களை பார்த்து என்னை எடைபோடுவது பிடிக்காது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்தவகையில் இருக்கிறது.
12 செப்டம்பர் 2012
நானியின் ஜோடி ப்ரணீதா!
ப்ரணீதா. |
07 செப்டம்பர் 2012
'மைதிலி'க்காக 'பிகினி'க்குத் தாவிய சதா!
சுத்தமாக ஓய்ந்து போய்க் கிடக்கிறது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா.
பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம்.
நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா.
படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா.
ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலான உறவு குறித்த கதையாம் இது.... அதைச் சொல்லுங்க முதல்ல!
04 செப்டம்பர் 2012
முகத்தை காட்டாமல் ஓடிய பிரீத்தி ஜிந்தா!
பிராக்கில் இருந்து மும்பை திரும்பிய பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விமான நிலையத்தில் தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறினார்.
பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை.
தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை.
அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.
02 செப்டம்பர் 2012
பணத்துக்காக பலருடனும் உறவு கொண்டுள்ளேன்... !
முன்பு பணத் தேவைக்காக பலருடனும் உடலுறவு வைத்துள்ளேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.
சில நடிகைகள் வாயைத் திறந்தாலே பலானதாகவே இருக்கும். அந்த வரிசையில் ஷெர்லினும் ஒருவர். டிவிட்டரில் இவர் லேட்டஸ்டாக சொல்லியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக வெகு ஓப்பனாக கூறியுள்ளார் ஷெர்லின்.
இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு பலமுறை டிவிட்டரில் உங்களுடன் படுக்க வேண்டும். என்ன ரேட் என்று சொல்லுங்கள் என்று கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
கடந்த காலத்தில் நான் பலமுறை பணத்திற்காக உறவு வைத்துக் கொண்டுள்ளேன். பணம் எனக்கு அப்போது நிறைய தேவைப்பட்டது. இதற்காக நான் இதில் ஈடுபட்டேன். அதில் எனக்கு வருத்தமோ, தயக்கமோ ஏற்படவில்லை. ஒரு முறை கூட நான் ஓசியில் யாருடனும் படுத்ததில்லை. எல்லாமே பணத்திற்காகத்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருந்தேன்.
ஆனால் இப்போது நான் அப்படியில்லை. என்னுடைய வாழ்க்கைத் தரத்தின் அளவு மாறி விட்டது. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷெர்லின்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)