பக்கங்கள்

21 செப்டம்பர் 2010

பெண்ணின் நிர்வாணப் படத்தை இணையத்தில் விட்ட நபர் கைது.

தாம் முன்னர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவவிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். குறித்த பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இந்நபர் அப்பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார். இப்படங்களை அவர் கையடக்கத் தொலைபேசி மூலமும் உலாவ விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இன்னொரு நபரையும் போலீசார் தேடிவருகின்றனர். கைதான நபரை ஒக்ரோபர் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக