பக்கங்கள்

11 செப்டம்பர் 2010

பிரபல நடிகையின் கணவர் கைது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்.பி., முருகையனின் பேரன் எஸ்.தணிகைவேல். இவர் திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில சக்தி பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகை பாரதியை ரகசிய திருமணம் செய்தார். கடந்த மாதம் வங்கிகளை ஏமாற்றியதாக மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில வெளியே வந்தார். இந்நிலையில் தற்போது ஆள் கடத்தல் வழக்கில் மீண்டும் தணிகைவேலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் காவல்நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபற்றி காவல்நிலைய ஆய்வாளர் இளவழகனிடம் கேட்டபோது, 2006ஆம் ஆண்டு புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தணிகைவேலுக்கு கடன் தந்துள்ளார். அந்தப் பணத்தை அவர் திருப்பி கேட்டபோது, அவரை அடியாட்களை வைத்து தணிகவேல் கடத்தியுள்ளார். இவரை அப்போது கைது செய்தோம். அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமலும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஏமாற்றி வந்தார். மேலும் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகும்போது, இங்குள்ள வழக்கை மறைத்து நீதிபதியிடம் பொய் சொல்லியுள்ளார். இது எங்களுக்கு தெரிந்ததும், அவர் மீதான வழக்குப் பதிவு பற்றி தகவல் தெரிவித்தோம். அவர்கள் கைது செய்வதற்கான ஆணையை தந்தனர். அதன்பின்பே தணிகைவேலை கைது செய்தோம் என்றார்.
தற்போது உடல்நிலையை காரணம் காட்டி தற்போது தணிகைவேல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக