பக்கங்கள்

31 ஜனவரி 2011

கவர்ச்சிக்கு ஆசைப்படும் அஞ்சலி!

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் 'மீட்டர்'!
சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!
இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.
இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த 'ரேட்' கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.
"இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்...", என்றார்.

28 ஜனவரி 2011

கண் பார்வையற்றோருக்கு உதவுங்கள்-ஸ்ரேயா.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, பின் இந்தி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரேயாவிற்கு தமிழில் இப்போது கைவசம் உள்ள படம் ரவுத்திரம். ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்திப் பட உலகில் அதிகம் இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறார் ஸ்ரேயா. அப்படியும் வாய்ப்பு மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே ஓய்வு நேரத்தில் யோகா, பொது நலப் பணிகள் என உபயோகமாகக் கழிக்க முடிவு செய்துள்ளார்.
இப்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பார்வையற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் புதிய வழிகளைத் திறக்கலாம்.
போதிய கல்வி மற்றும் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். வருத்தமான விஷயம் என்னவென்றால் யாருமே பார்வையற்றோருக்கு வேலை கொடுப்பதில்லை. சமூகம் அவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வு நீங்கும். என்னால் முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்," என்றார்.
ஏற்கெனவே சில ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி அளித்து வருகிறார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் அதிகம் தலை காட்டுவதில்லையே என்று கேட்டதற்கு, "நானாகத்தான் குறைத்துக் கொண்டேன். நல்ல கதை, பேசப்படும் அளவுக்குப் பாத்திரம்... இதுதான் முக்கியம். பணம் பெரிதல்ல...", என்றார்.

25 ஜனவரி 2011

அமலாவின் வாயால் வந்த வினை!

முளைச்சு ஒன்றரை இலை விடுவதற்குள் அலப்பறையை ஆரம்பித்தவர் அமலா பால். அதற்கான அறுவடை வேகவேகமாக கிடைத்து வருகிறது.
அமலாவுக்கு மைனா படம் திருப்புமுனையாக அமைந்த போது பலரும் அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து ஒப்பந்தம் செய்தனர். ஆனால் விக்ரம் படத்தில் கமிட்டானதும் இவர்களை துச்சமாக நினைக்க‌த் தொடங்கினார் அமலா. விளைவு?
களவாணி படத்தின் இயக்குனர் சற்குணம் தனது அடுத்தப் படத்தில் அமலாவை ஒப்பந்தம் செய்திருந்தார். ஓவர் அலட்டல் காரணமாக அவரை தற்போது படத்திலிருந்தே நீக்கியிருக்கிறார்.
அதேபோல் முருகதாஸ், ஹாலிவுட் நிறுவன கூட்டுத் தயா‌ரிப்பில் சரவணன் இயக்கும் படத்திலிருந்தும் அமலாவுக்கு கல்தா கொடுத்திருக்கிறார்கள். அந்த வேடத்தில் அனன்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

23 ஜனவரி 2011

வயிற்றுக்கு பிரச்சனையின்றி சாப்பிடும் முறை!

சிலருக்கு எதைச் சாப்பிட்டாலும் செரித்துவிடும். ஆனால் சிலருக்கோ அதைச் சாப்பிட்டுவிட்டு இதைச் சாப்பிட்டால் வயிறு பிரச்சனை, இதைச் சாப்பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறு என்று பிரச்சனை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான். ஆனாலும், வயிற்றின் தன்மை அறிந்து அதற்கேற்றாற் போல் சாப்பிட்டால், அது வயிற்றுக்கும் நன்மைதானே.
அப்படிப்பட்ட, வயிற்றுக்கு உகந்த ‌சில பொருட்கள் எவை? ஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.
சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள். அதில், பசும்பால், மோர், சூப் வகைகள், தண்ணீர், பழரசம் போன்றவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ஜீரணமாகி உடலிற்குச் சக்தியளிக்கக் கூடியவை.
நல்ல வெய்யில் நேரத்தில் குளிர்ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பிட்டால் வயிற்றில், குறிப்பாக இரைப்பையில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாது. இது உடல் வெப்பத்தை திடீர் என்று அதிகரிக்கும்.
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது. ஆனால், சாப்பிடுவதற்கு உட்காருவதற்கு முன் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிடும் போது இடையிடையே சிறிது தண்ணீர் அருந்தலாம். ஆனால் அதிக அளவில் தண்ணீர் அருந்தக்கூடாது.
சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள் தோன்றக்கூடும்.
சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும் போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்ணீர்விட்டு மோர் பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.
பரங்கிக்காய், பெரிய காராமணி, காராமணி, கத்தரிக்காய், அகத்திக்கீரை போன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே, இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.
ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்த சோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.

19 ஜனவரி 2011

மன அழுத்தத்தில் இருந்து விடுபடவேண்டுமானால் கட்டிப்பிடியுங்கள்!

வா‌ழ்‌க்கை‌யி‌ல் எ‌ப்போது‌ம் டெ‌ன்ஷனா? மன அழு‌த்‌த‌‌த்தா‌ல் அ‌வ‌தி‌ப்படு‌கி‌றீ‌ர்களா? ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌கிறதா? கை‌யி‌ல் வெ‌‌ண்ணையை வை‌த்து‌க் கொ‌ண்டு நெ‌ய்‌க்கு அலைவானே‌ன்?
ஆ‌ம்.. உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌த் துணை‌யிடமே உ‌ள்ளது மரு‌ந்து. வா‌ழ்‌க்கை‌த் துணையை அடி‌க்கடி க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பதா‌ல் மன அழு‌த்த‌ம் குறையு‌ம் எ‌ன்று ஆ‌ய்‌வு ஒ‌ன்று கூறு‌கிறது.
சு‌வி‌ட்ச‌‌ர்லா‌ந்து நா‌‌ட்டி‌ல் உ‌ள்ள ஜூ‌ரி‌ச் ப‌ல்கலை‌க் கழக‌த்தை‌ச் சே‌ர்‌ந்த டா‌க்ட‌ர் ‌பீ‌ட் டி‌ட்ச‌ன் தலைமை‌யிலான குழு‌வின‌ர் சுமா‌ர் 51 த‌ம்ப‌திக‌ளிட‌ம் இது கு‌றி‌த்த ஆ‌ய்வை நட‌த்‌தின‌ர்.
எ‌ப்படி‌ப்ப‌ட்ட ப‌ணி அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், அ‌திக மன உளை‌ச்சலு‌க்கு ஆளானவ‌ர்களாக இரு‌ந்தாலு‌ம், வார‌த்‌தி‌ல் பல முறை து‌ணையை‌க் க‌ட்டி‌ப்‌பிடி‌ப்பது, மு‌த்த‌மிடுவது, உடலுறவு‌க் கொ‌ள்வது போ‌ன்றவ‌ற்‌றி‌ல் ஈடுபடு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு மனு அழு‌த்த‌ம் குறை‌ந்‌திரு‌ந்தது.
இது வெறு‌ம் க‌ண்துடை‌ப்பு ‌ஆ‌‌ய்வு ம‌ட்டும‌ல்ல. அதாவது அ‌றி‌விய‌ல் ‌ரீ‌தியாகவு‌ம் இதனை ஆ‌ய்வு செ‌ய்தவ‌ர்க‌ள் ‌விள‌க்கு‌கிறா‌ர்க‌ள்.
அதாவது, அலுவலக ‌பிர‌ச்‌சினைக‌ள், ‌வீ‌ட்டு ‌பிர‌ச்‌சினைக‌ள் என எதையு‌ம் த‌ங்களது படு‌க்கை அறை‌க்கு‌ள் நுழைய ‌விடாம‌ல், வா‌ழ்‌க்கை‌த் துணையை அ‌‌ன்பாக நட‌த்து‌ம், ஒருவரு‌க்கொருவ‌ர் த‌ங்களது அ‌ன்பை ப‌ரிமா‌றி‌க் கொ‌ள்ளு‌ம் த‌ம்ப‌திகளு‌க்கு, மன அழு‌த்த‌த்து‌க்கு காரணமான கா‌ர்டிசா‌ல் எ‌ன்ற ஹா‌ர்மோ‌ன் குறைவான அள‌விலேயே சுர‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலு‌ம் மன அழு‌த்த‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌சில த‌ம்ப‌திகளு‌க்கு இடையே, நெரு‌க்க‌த்தை உருவா‌‌க்‌கிய‌ப் ‌பிறகு அவ‌ர்களது மன அழு‌த்த‌ம் பெருமளவு குறை‌ந்ததாகவு‌ம் கூ‌றியு‌ள்ளன‌ர். வெறு‌ம் மன அழு‌த்த‌த்தை‌க் குறை‌ப்பத‌‌ற்காக ம‌ட்‌டு‌ம் நமது வா‌‌ழ்‌க்கை‌த் துணையை‌க் க‌ட்டி‌பிடி‌ப்பதா‌ல் ‌எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. இருவருமே மன‌ம் ஒரு‌மி‌த்து, த‌ங்களது அ‌ன்பை வெ‌ளி‌க்கா‌ட்டு‌ம் ‌விதமாக நெரு‌க்கமாக இரு‌ப்பதா‌ல்தா‌ன் உ‌ண்மையான பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
இதையு‌ம் பு‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் ஆ‌ய்வு மே‌ற்கொ‌ண்ட ‌பீ‌ட் டி‌ட்ச‌ன்.

17 ஜனவரி 2011

சீமான்,சத்தியராஜ் இணையும் சட்டப்படி குற்றம்!

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் சட்டம் ஒரு இருட்டறை. 1981 இல் வெளிவந்த இந்தப் படம் அந்த நேரத்தில் பெரிய ஹிட். இதை இப்போது 'சட்டப்படி குற்றம்' என்ற தலைப்பில் அவரே ரீமேக் செய்ய இருக்கிறார். இதில் சீமான், சத்யராஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஏற்கெனவே இவர் இயக்கத்தில் அமீர் நடிப்பதாக இருந்தது. ஆனால், நடிக்கிறேன் என ஒப்புக் கொண்டு அதன் பிறகு எஸ்கேப் ஆகிவிட்டார் அமீர்.
நீண்ட நாள் கழித்து எஸ்.ஏ.சி நடிப்பில் நடிப்பதில் சத்யராஜுக்கு சந்தோஷமாம். சீமானும் தன் கோபத்தை காட்ட நல்ல வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறாராம். படத்தை இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி இயக்க இருக்கிறாராம் எஸ்.ஏ.சி. சென்னையிலும் ஈரோடு காட்டு பகுதிகளிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். தன் மகன் விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறார் எஸ்.ஏ.சி. பொங்கலுக்கு பிறகு மாநாடு. அதன் பிறகு சட்டப்படி குற்றம்...

14 ஜனவரி 2011

கருத்தரித்த பெண்கள் கைபேசி பாவித்தால் பிள்ளைகள் முரடர்கள் ஆவார்களாம்.

கர்ப்பமடைந்த பெண்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், அவர்களின் குழந்தைகள் முரட்டுத்தனம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்பு உள்ளது' என, அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மொபைல் போனுக்கும், குழந்தைகள் நலனுக்கும் உள்ள தொடர்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து ஆய்வுக்குழுத் தலைவர் லீகா கெய்பட்ஸ் கூறியதாவது:
மொபைல்போன் மற்றும் குழந்தைகள் நலன் பற்றிய இந்த ஆய்வில், 7 வயதான 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர். அதேபோல், 1996 முதல் 2002 வரை கர்ப்பமடைந்த பெண்கள் பற்றியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
ஒரு லட்சம் பேரிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், கர்ப்பமடைந்த பெண்கள் தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தினால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்குபெற்ற 3 சதவீத குழந்தைகள் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சில சமயம் முரடர்கள் போல் நடந்து கொண்டனர். உடல் பருமன், எளிதில் உணர்ச்சி வசப்படுதல் போன்ற பாதிப்புகளையும் கொண்டிருந்தனர்.
இதற்கு சிறுவர்களின் தாய் கர்ப்பமாக இருந்த காலத்தில், தொடர்ச்சியாக மொபைல்போன் பயன்படுத்தியது தான் காரணம் என தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெற்றோரும் இதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும், இதுகுறித்து தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறு லீகா கூறினார்.

12 ஜனவரி 2011

கமலின் மகள் என்பதால் எனக்கு பொறுப்பு அதிகம்!

கலையை என் தந்தையிடமும் ஒழுக்கத்தை தாயிடமும் கற்றேன். அதே நேரம் தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரணும் என்பார் என் தந்தை கமல்ஹாஸன். இதை மனதில் வைத்துள்ளேன், என்றார் நடிகை ஸ்ருதி.
கமல் மகள் ஸ்ருதி 7-ஆம் அறிவு படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் சித்தார்த் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நடிகையானது என் சிறு வயது கனவு இசையமைத்தல், பாடுதல், நடிப்பு இவற்றில் நடிக்கவே ரொம்ப பிடிக்கிறது. இசையமைப்பது கடினமான வேலை.
கமல் மகள் என்ற முத்திரையால் எனக்கு பொறுப்பு கூடியுள்ளது. கமல் மகளாக என்னை பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கலையை என் தந்தையிடமும், ஒழுக்கம், கட்டுப்பாடுகளை தாயிடமும் கற்றேன். நான் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள்.
என் அழகு ரகசியம் என்பது நிம்மதியான தூக்கம். நிறைவாக தூங்கினால் முகத்தில் பொலிவு ஏற்படும் முகத்தை அடிக்கடி சுத்தம் செய் வேன், அரிசி உணவுகளை சாப்பிட மாட்டேன்.
சர்க்கரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தெலுங்கு இயக்குனர் கே.விஸ்வநாத், என்னை வைத்து ஒரு படம் இயக்க விரும்பினார். கால்ஷீட் இல்லாததால் அவர் படத்தில் நடிக்க முடியவில்லை. என் தந்தை நிறைய அறிவுரைகள் சொல்லி இருக்கிறார்.
தப்பு செய்தால் அதற்கான பலனை அனுபவித்து தான் தீர வேண்டும் என்பார். அதேநேரம் என் நடிப்பு சம்பந்தமாக ஆலோசனைகள் எதுவும் அவர் சொல்வதில்லை,"என்றார்.

09 ஜனவரி 2011

காதல் தெரிவில் எச்சரிக்கையாக இருங்கள்!

நீங்கள் மணமாகாத இளம் பெண் என்றால் உங்களை பல இளைஞர்கள் காதலிக்க கூடும். காதல் என்பது திருமணம் என்ற புனிதமான ஒரு நிலையை நோக்கி உங்களை கொண்டு செலுத்தும் ஒரு சக்தி, அதனால் காதல் விஷயத்தில் எச்சரிக்கை மனப்பான்மை வேண்டும்.
உங்களை காதலிப்பதாகக் கூறும் இளைஞன் உங்கள் அழகை மட்டுமே வர்ணிப்பவனாக இருந்தால் அவனை நம்பாதீர்கள். ஏனென்றால் உங்கள் அழகு எந்தச் சமயத்திலும் பின்னாளில் குறையக்கூடும். திருமணமான பிறகு அழகு குறைந்தபோது உங்களிடம் கவர்ச்சியை எதிர்பார்த்த இளைஞன் ஏமாற்றமுற்று தடம் மாறக்கூடும்.
அழகாக கவர்ச்சியாக இருக்கிறான் என்பதற்காக எந்த ஓர் இளைஞனையும் பெண்கள் காதலிக்கக் கூடாது. அழகு என்பது இனிப்பு பலகாரங்களுக்கு போடப்படும் வண்ணம் போன்றது. வண்ணம்தான் பண்டத்திற்குக் கவர்ச்சியை கொடுக்கக்கூடும். ஆனால் வண்ணம் இல்லாததினாலேயே தின்பண்டத்தின் சுவை கெட்டுவிடப் போவதில்லை.தின்பண்டத்தில் கலந்துள்ள இனிப்பு போன்றது ஓர் இளைஞனின் குண நலன்கள். இனிப்பு இல்லாவிட்டால் தின்பண்டமே இல்லை என்பது போல, வாழ்க்கைக்கு எழில் சேர்ப்பது கணவராக வருபவரின் குணநலன்தான்.
ஆகவே தங்கள் காதல் ஜோடியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

07 ஜனவரி 2011

இப்படியும் சாதித்திருக்கிறார் இவர்!

2500 பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று அறிவித்து உள்ளார் பிரித்தானிய பிரஜையான போல் பின்ற் என்பவர். உலகில் அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற சாதனைக்கு சொந்தக்காரர் என்று உரிமை கொண்டாடுகின்றார். இவர் பெண்களை மயக்குகின்றமைக்காக உயர் தொழில் வசிப்பவர் போலவும், கோடீஸ்வர வர்த்தகர் போலவும் காட்டிக் கொள்வர்.குறிப்பாக வைத்திய ஆலோசகர், பாரிஸ்டர், வங்கியாளர் போன்ற பதவிகளை வகிக்கின்றவர் போல வேடம் இட்டு ஒரு தொகை பெண்களை ஏமாற்றி இருக்கின்றார். இவரின் வண்டவாளம் அகப்பட்டமையால் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையை விட்டு வெளியேறி வந்த நிலையிலேயே அதிக பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவர் என்கிற உரிமையைக் கொண்டாடுகின்றார்.

02 ஜனவரி 2011

அரண்டு போயிருக்கும் தமன்னா!

அமலா பால் மற்றும் ஹன்சிகா மோத்வானியின் படு வேக வளர்ச்சியைப் பார்த்து தமன்னா அரண்டு போயிருக்கிறாராம். தன்னைத் தேடி வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவையும், ஹன்சிகாவையும் நோக்கி திரும்பியதால் அப்செட்டும் ஆகியுள்ளாராம்.
மைனா படத்தின் மூலம் உயரத்திற்கு வந்துள்ளார் அமலா பால். இப்போது கோலிவுட்டில் அவருக்குத்தான் செம கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதேபோல விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் இணைந்துள்ள ஹன்சிகாவுக்கும் பெரும் கிராக்கியாகியுள்ளது.
கவர்ச்சியாக நடிக்க சற்றும் வெட்கப்படுவதோ, தயங்குவதோ கிடையாதாம் ஹன்சிகா. இதனால்தான் அவருக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மறுபக்கம் அமலா பால் பிசியாகி வருகிறார். அவரைத் தேடி பிரபல நடிகர்களின் படங்களும் ஓடி வர ஆரம்பித்துள்ளன. இதனால் வருகிற வாய்ப்புகளை வளைத்துப் போட ஆரம்பித்துள்ளார் அமலா.
இது தற்போது முதலிடத்தில் இருக்கும் தமன்னாவை கவலைக்குள்ளாக்கியுள்ளது. தனக்கு வர வேண்டிய சில வாய்ப்புகள் அமலாவைத் தேடி போனதால் அப்செட் ஆகி விட்டாராம் தமன்னா.
இந்தப் போட்டியை சமாளிக்கவும், தனது நிலையை ஸ்திரமாக்கவும் அவர் சில திட்டங்களுடன் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

01 ஜனவரி 2011

காணொளியில் நித்தியானந்தாவுடன் நானில்லை.

நித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை. அது ஜோடிக்கப்பட்ட பொய்யான காட்சி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில், அவரது படுக்கையறையில் நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை போலீசார் பல்வேறு ரசாயண சோதனைகளுக்கு உட்படுத்தியதில், அந்தக் காட்சி எந்த ஒட்டு வேலையும் இல்லை, உண்மையானதுதான் என்று போலீசார் கர்நாடக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அவர் கூறுகையில், "நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை.
எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும்.
நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன", என்றார் ரஞ்சிதா.