பக்கங்கள்

12 செப்டம்பர் 2019

லொஸ்லியாவிடம் கண்டிப்பு காட்டிய தந்தை மரியநேசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வீட்டுக்குள் வந்த போட்டியாளர் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் தன் மகளிடம் மனம் குமுறி கலங்கியதும், லொஸ்லியாவிடம் ஒரு கண்டிப்பான தந்தையாக நடந்து கொண்ட விதமும் சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில், தற்போது ஏழு போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். 75 நாட்கள் கடந்த நிலையில், பிக் பாஸ் 3 போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன. இச்சூழலில், போட்டியாளர்களின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில், மலேசியாவை சேர்ந்த போட்டியாளர் முகேன் ராவின் தாய் மற்றும் தங்கையை வீட்டுக்குள் அனுப்பி ஆச்சரியப்படுத்தினார் பிக் பாஸ். 75 நாட்கள் கழித்து தாய் மற்றும் தங்கையை பார்த்த மகிழ்ச்சியில் முகேன் ராவ் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் முகேனோடு கண் கலங்கினர்.முகேன் ராவ்வை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் குடும்பத்தாரை பிக் பாஸ் அனுப்பி வைத்தார். அதற்கு முன்னதாக, கடந்த வாரம் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்ட இயக்குநர் சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தார். தொடர்ந்து, லொஸ்லியாவின் தாய் மற்றும் தங்கைகள் மட்டுமின்றி கனடாவில் பணியாற்றி வந்த தந்தை மரியநேசனும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். பல நாட்கள் கழித்து தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கதறி அழுதார் லொஸ்லியா. மகளை கட்டியணைத்து தேற்றினார்.லொஸ்லியாவை தேற்றிவிட்டு சக போட்டியாளர்கள் முன்னிலையிலேயே குமுறிய மரியநேசன், "என்னிடம் என்ன சொல்லி நீ வந்த, நான் உன்னை அப்படியா வளர்த்தேன், இதைப்பற்றி பேசக்கூடாது, நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை. தலைகுனிஞ்சு வாழக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா, மற்றவங்க காறி துப்புறதை என்னை பாக்கவச்சிட்ட," என்று தழுதழுத்தார் மரியநேசன்.மரியநேசனை சமாதானப்படுத்தினார் இயக்குநர் சேரன். லொஸ்லியா தந்தை ஆதங்கப்பட்டதை பார்த்து ஓரமாக அமைதியாக நின்றிருந்தார் கவின், குற்ற உணர்ச்சியில் வீட்டுக்குள் சென்ற கவின் ஒருபக்கம் அழத் தொடங்கினார்.கனடாவில் தன்னோடு வேலைப்பார்க்கும் சக நண்பர்கள்கூட முகத்துக்கு நேராக லொஸ்லியாவை பற்றி கிண்டல் பேசுவதாக குறிப்பிட்ட மரியநேசன், மகளை வைத்து காசு பார்க்க விஜய் டிவிக்கு அனுப்பிவிட்டாயா என்று தனது நண்பர்கள் கேள்விகேட்டதாகவும், மகளோட கல்யாணத்துக்கு போறியா என்று கேலி பேசுவதாகாவும் லொஸ்லியாவிடன் சொல்லி ஆதங்கப்பட்டார் அவர். மேலும், லொஸ்லியாவுக்கு ஆலோசனை வழங்கிய அவர், "பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது எப்படி இருந்த... உனக்கு யாரையுமே இங்க தெரியாது. இப்பவும் அப்படியே இரு. எல்லார்கிட்டையும் நல்லா பேசு. அதுக்குன்னு பேசாமலும் இருந்துடாத. முக்கியமா பிக் பாஸை ஒரு விளையாட்டா பாரு. இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னாடி என்கிட்ட என்ன சொன்ன... அப்பா பிக் பாஸ்ல கலந்துகிட்டு கெத்தா வெளியே வருவேன்னு சொன்ன... அப்படி கெத்தா வெளியே வரணும். நம்ம மக்கள் இப்படியும் பேசுவாங்க, அப்படியும் பேசுவாங்க. நானும், அம்மாவும் எப்போதும் உனக்கு ஆதரவா இருப்போம். ஆனா, ஒழுங்கா வந்த வேலையை மட்டும் பார்க்கணும்," என்றார். கமல் ஹாசன் முன்னிலையில் லொஸ்லியா கால் மீது கால் போட்டு உட்காருவதை மரியநேசன் சுட்டிக்காட்டியதற்கு, தான் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே அப்படித்தான் அமர்ந்திருப்பதாகவும், கமல் ஹாசன் மீதான மரியாதை எப்போதும் மனதில் இருப்பதாகவும் அதுவே போதும் என்று தந்தையிடம் கூறினார் லொஸ்லியா.இந்த பிரச்சனை குறித்து லொஸ்லியாவின் தந்தையிடம் கவின் மன்னிப்பு கேட்ட நிலையில், தனக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை என்றும், இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் தனக்கு மகிழ்ச்சித்தான் என்றும் தெரிவித்தார் மரியநேசன். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையின் ஆதங்கத்தை மரியநேசன் வெளிப்படுத்தியதாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ட்விட்டரிலும் மரியநேசன் குறித்து பல விவாதங்களும் நடைபெற்றன.நேற்றைய நிகழ்ச்சியில் கவின் அழுததை தொடர்ந்து, இணையத்தில் #Staystrongkavin என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது. இந்த டிரெண்டுக்கு கவின் ரசிகர்கள்தான் காரணம். பலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டனர். சிலர், எதோ ஒரு தருணத்திலாவது லொஸ்லியா கவினுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என்று சிலர் தெரிவித்திருந்தனர்.இன்னும் வரக்கூடிய நாட்களில், போட்டியாளர்கள் தர்ஷன், சேரன், வனிதா, ஷெரீன் மற்றும் சாண்டி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதர உள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

04 ஏப்ரல் 2019

நான் கிக்தான் சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்!

சினிமா எல்லாம் தெரிந்து தான் சினிமாவுக்கு வந்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார். போனி கபூர் அஜய் தேவ்கனை வைத்து தயாரிக்கும் இந்தி படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் அவர் சினிமா வாழ்க்கை பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது நடிகர்கள், நடிகைகளுக்கு என்ன பிரச்சனை, அவர்கள் எல்லாம் ஜாலியாக, சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை நடிகர்கள், நடிகைகளுக்கும் கஷ்டம் உள்ளது.நடிகர்கள், நடிகைகள் தங்களின் கஷ்டத்தை வெளியே சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் தங்களின் சின்ன சின்ன ஆசைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். அவர்கள் எது செய்தாலும் அதில் தவறு கண்டுபிடிக்க முயற்சி செய்வார்கள்.நான் நடிகையானதன் மூலம் எந்த ஆசையையும் விட்டுக்கொடுக்கவில்லை. முன்பு போன்றே ஷாப்பிங் செல்கிறேன். நடிகையாக இருப்பது எனக்கு கஷ்டமாக இல்லை. ஒன்று வேண்டுமானால் மற்றொன்றை விட்டுக்கொடுக்க வேண்டும். பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அதை எல்லாம் தெரிந்து கொண்டு தான் நடிக்க வந்தேன்.வெளியே சென்றால் மக்கள் அவர்களை மொய்த்துக் கொள்கிறார்கள், எங்கேயும் போக முடியவில்லை என்று நடிகர்கள், நடிகைகள் வருத்தப்படுவார்கள். எனக்கு அந்த வருத்தம் இல்லை. மக்கள் மொய்த்துக் கொள்வது பிடித்துள்ளது. அதிலும் ஒரு கிக் உள்ளது என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

21 ஜூலை 2018

என் வலியை கார்த்திக்கு உணர்த்துவேன்-ஸ்ரீரெட்டி!

ஸ்ரீ ரெட்டி 
தன்னுடயை வலி என்ன என்று நடிகர் கார்த்திக்கு உணர்த்துவேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மீது தடாலடியாக பாலியல் புகார்களை கொடுத்து வருகிறார்.தமிழ் பிரபலங்களான ஏஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது கடுமையாக குற்றம் சுமத்திய ஸ்ரீரெட்டி, சினிமாவில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக போராடப் போவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை வந்த
ஸ்ரீரெட்டியிடம் எல்லாவற்றுக்கும் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு... ஆதாரம் வேண்டுமென்றால் பிறப்புறுப்பில் தான் கேமரா பொருத்தவேண்டும் என காட்டமாக பதிலளித்தார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றும், நிரூப்பிக்க முடிந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தெரிவித்தார். மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். கார்திக்கு பதிலளிக்கும் விதமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, "நான் நடிகர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகிறேன். மதிப்பிற்குரிய நடிகர் கார்த்தியின் வார்த்தைகள் என்னை புண்படுத்துகின்றன. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என நம்புகிறேன், இல்லையென்றால் என்னுடைய வலி என்ன என்பதை உங்களுக்கு உணர்த்துவேன்" எனக் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்கம் என்பது நடிகர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காத்தானே தவிற பயன்படாத அறிவுரைகள் கூற இல்லை என்று குறிப்பிட்டு, என்னுடைய கஷ்டத்தை நினைத்து பாருங்கள். லாஜிக் பேசாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.

14 ஜூன் 2018

பசுவின் மரண தண்டனை இரத்து!

விலக்கு அளிக்க வேண்டும் ஐரோப்பாவில் எல்லை தாண்டி சென்ற கர்ப்பிணி பசுவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் உரிய ஆவணம் இல்லாமல் எல்லைத் தாண்டினால் மரண தண்டனை விதிக்கப்படும் சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஒன்று பல்கேரியா. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மஸாராசிவோ கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ்.இவர் ஏராளமான பசுக்களையும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது மந்தையில் பென்கா என்ற கர்ப்பிணி பசுவும் உள்ளது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு சென்ற பென்கா, பல்கேரிய எல்லையைத் தாண்டி செர்பியாவிற்குள் நுழைந்தது. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இல்லாத நாடு என்பதால் பசு எல்லைத்தாண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து ஐரோப்பிய அதிகாரிகள் எல்லைத் தாண்டிய கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதித்தனர். இந்நிலையில் எல்லை தாண்டிய காரணத்துக்காக பசுவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரசவ காலம் பென்காவிற்கு பிரசவ காலம் நெருங்கியதால் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கர்ப்பிணி பசுவான பென்காவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. விலக்கு அளிக்க வேண்டும் கர்ப்பிணியான பென்காவின் நிலையை கருத்தில் கொண்டு ஐரோப்பிய பாராளுமன்றம் மரண தண்டனையில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் ஆதரவு திரட்டப்பட்டு வந்தது. தப்பிய பென்கா 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு பென்காவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பல்கேரிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த கோரிக்கையை ஏற்ற பல்கேரிய அரசு கர்ப்பிணி பசுவின் மரண தண்டனையை இரத்து செய்துள்ளது.

13 மே 2018

திருமணத்திற்கு முன் தவறில்லை என்கிறார் யாஷிகா!

கன்னித்தன்மைதிருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமாகியுள்ளார் யாஷிகா ஆனந்த். படத்தை பார்த்தவர்களால் யாஷிகா பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் யாஷிகா கவர்ச்சியான உடைகள் அணியும் தில்லான பெண்.அடல்ட் காமெடி படத்தில் நடித்திருக்கிறார் என்றால் இவர் எந்த மாதிரியான பெண்ணாக இருப்பார் என்று எழுந்துள்ள விமர்சனங்களை யாஷிகா கண்டுகொள்ளவில்லை.படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை 3 வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார் யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா.திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்று யாஷிகா தெரிவித்துள்ளார். ஸ்கூட்டி அல்ல மாறாக புல்லட் ஓட்டும் யாஷிகா பேட்டிகளில் ரொம்பவே ஓபனாக பதில் அளித்து வருகிறார்.இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் யாஷிகா. சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளன.

25 பிப்ரவரி 2018

சிறீதேவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கணவர் போனி கபூர்!

சோகம் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நேற்று அவருக்கு ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.அவர் இறந்துவிட்டார் என்பதையே பலராலும் நம்ப முடியவில்லை.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூர் மற்றும் இளைய மகள் குஷியுடன் துபாய் சென்றார். திருமணம் முடிந்த உடன் போனி கபூர் மும்பை திரும்பிவிட்டார்.ஸ்ரீதேவியும், குஷியும் துபாயில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க போனி கபூர் நேற்று மும்பையில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளார்.கணவர் தன் மீது உள்ள பாசத்தால் திரும்பி வந்ததை பார்த்து ஸ்ரீதேவி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். போனி கபூர் ஆசை, ஆசையாய் துபாய் சென்றதை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் தற்போது அவருக்காக வருத்தப்படுகிறார்கள்.ஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வந்து நல்லடக்கம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார் போனி கபூர். தனது இன்ப துன்பத்தில் பங்கேற்ற ஸ்ரீதேவி இறந்ததை அவரால் நம்ப முடியவில்லை.பாலிவுட்டில் நடிக்க சென்ற ஸ்ரீதேவி தயாரிப்பாளரான போனி கபூருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவருடன் இருந்து பார்த்துக் கொண்டார். அப்போது தான் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

21 நவம்பர் 2017

தமிழில் குத்தாட்டம் போட வருகிறார் சன்னி லியோன்!

Ähnliches Fotoஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் ஏராளமான ஆபாச படங்களில் நடித்துள்ளார். ‘ஜிஸ்ம் 2’ என்ற இந்திப்படத்தில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்தது. தமிழில் `வடகறி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் சன்னிலியோன் இடம்பிடித்தார். சமீபத்தில் கூட கேரளா சென்ற சன்னிலியோனை பார்க்க ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால் கொச்சியே ஸ்தம்பித்தது. பிரபல தயாரிப்பாளர் தாணுவின் மகன் கலாபிரபு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடித்து வரும் 'இந்திரஜித்' படத்தில் சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆட உள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக சன்னிலியோன் சென்னைக்கு வெகுவிரைவில் வரவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது சன்னிலியோன் சென்னை வர இருக்கிறார். வருகிற டிசம்பர் 2ஆம் தேதி இ.வி.பி பிலிம் சிட்டியில் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சன்னிலியோன் நடனமும் ஆடவிருக்கிறாராம். பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கிறாராம்.

01 அக்டோபர் 2017

நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டப திறப்புவிழா!(காணொளி)

நடிகர் திலகம் அவர்களின் மணிமண்டப திறப்புவிழா!(காணொளி)

24 செப்டம்பர் 2017

உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் !

77 ஆண்டுகளாக தண்ணீர் மற்றும் உணவு உட்கொள்ளாமல் வாழும் 82 வயது சாமியார் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இந்தியாவில் ப்ரஹ்லாத் ஜானி (82) என்பவர் வாழ்ந்து வருகிறார், கடந்த 77 ஆண்டுகளாக தான் உணவு சாப்பிடவில்லை மற்றும் நீர் குடிக்கவில்லை என்று கூறுகிறார்.    ப்ரஹ்லாத் ஜானியை மாதாஜி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். 100- 200 கிலோமீட்டர் நடந்தாலோ மற்றும் சில நேரம் 12 மணிநேரம் தியானம் செய்தால் ஜானிக்கு பசி அல்லது சோர்வு ஏற்படுமாம்.10 நாட்களுக்கு மேல் ஒரு மனிதனால் தண்ணீர் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.இந்நிலையில், ஜானியை மருத்துவர்கள் கண்காணித்தனர், அதில் 15 நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீரை அவர் உட்கொள்ளவில்லை என்பதை அறிந்து அவர்கள் வியப்படைந்தனர்.ஜானி எதுவும் சாப்பிடவில்லை என்பதால் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் இல்லை. ஜானியின் கழிவறை மூடப்பட்ட நிலையில் அவரது ஆடைகளும் சோதிக்கப்பட்டது, அதிலும் எந்த தடயங்களும் இல்லை என கூறப்படுகிறது.

27 ஜூலை 2017

பெண்கள் மூக்கு குத்துவது அறிவியல் சார்ந்தது!

பெண்கள் மூக்கு குத்துவது, காது குத்துவது அழகுக்காக மட்டும் அல்ல அதில் அறிவியல் மற்றும் மருத்துவம் ஒளிந்துள்ளது.மூக்குத்தி குத்திக் கொள்வதால் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம். இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன. உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்லாமல் மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும். பருவ வயதை அடைந்த பெண்களுக்கு தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது. மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

04 ஜூலை 2017

பிகினியில் அசத்தும் நடிகை!

பாலிவுட் நடிகைகளிக்கு நிகராக இந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் அவர்களது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தற்போது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அதில் நடிக்கும் நடிகைகளும் பிரபலம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது அவர்களும் பாலிவுட் நடிகைகளுக்கு நிகராக பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். தற்போது பிகினி புகைப்படம் வெளியிடுவது ஒரு ட்ரண்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் நாகினி சீரியலில் நடித்து தமிழகத்தில் அனைவரையும் கவர்ந்துள்ள நடிகை மவுனி ராய் அதிக அளவில் தனது பிகினி படங்களை வெளியிட்டு வருகிறார்.

04 ஏப்ரல் 2017

மாணவனின் வீடு புகுந்த பெண்ணால் பெற்றோர் அதிர்ச்சி!

கேரள மாநிலத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவனை பேஸ்புக் மூலம் காதலித்து அவரை வீடு புகுந்து பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். எர்ணாகுளம் கண்ணங்கட்டு பகுதியைச் சேர்ந்தவர் மெடில்டா (21). அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோட்டை அருகே ராமபுரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 17 வயது மாணவனுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 2 நாள்களுக்கு முன்னர் மெடில்டா, மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற மெடில்டா, மாணவன் இருந்த அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.இதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாரும் கதவைத் தட்டினர். கதவை திறக்க முயற்சித்தால் தற்கொலை செய்து கொள்வதாக இருவரும் மிரட்டியதால் போலீஸார் செய்வதறியாது திகைத்த போலீஸார் திரும்பி சென்றுவிட்டனர்.நேற்று முன்தினம் காலை மாணவனின் பெற்றோர் மீண்டும் கதவை தட்டியும் திறக்கவில்லை. இந்நிலையில் பெற்றோர் மீண்டும் போலீஸில் புகார் செய்தனர். எஸ்ஐ லாலு தலைமையில் போலீஸார் விரைந்து சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து பெற்றோரின் புகாரின்பேரில் சிறுவனை பலாத்காரம் செய்ததாக மெடில்டாவை போலீஸார் கைது செய்து ராமாபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.மாணவனை எர்ணாகுளம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது. எனினும் பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை என்று மாணவர் கூறியதால் அவர் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

05 மார்ச் 2017

கமலஹாசன் ஆன்ட்ரியாவின் லீலைகள் இன்று வெளியிடப்படும் என சுசித்ரா அறிவிப்பு!

Bildergebnis für susithraஇன்று மாலை 6 மணிக்கு கமலஹாஸன்-ஆண்ட்ரியா லீலை வீடியோவை வெளியிடப் போவதாக பாடகி சுசித்ரா ட்விட்டரில் அறிவித்துள்ளார். பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டார், வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் வீடியோக்களை பார்க்கவே பலர் தூங்காமல் ட்விட்டரும், கையுமாக உள்ளனர்.இந்நிலையில் சுசித்ரா புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார். முன்னதாக அனிருத்-ஆண்ட்ரியா புகைப்படத்தை வெளியிட்ட அவர் தற்போது ஆண்ட்ரியா வேறு ஒருவருடன் இருப்பதை வெளியிட உள்ளாராம். இது குறித்து சுசி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கமல் ஹாஸன்-ஆண்ட்ரியா லீலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. தயாராகுங்கள் என  தெரிவித்துள்ளார்.

12 ஆகஸ்ட் 2016

ஷாருக்கானை தடுத்த அமெரிக்கா மன்னிப்பு கோரியது!

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற திரை நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதற்கு அந்நாட்டு ராஜ்ய உயர் அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.அமெரிக்க வெளியுறவு துணை செயலர் நிஷா பிஸ்வால், அமெரிக்காவின் டெல்லியில் இருக்கும் இந்தியத் தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோர் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நுழையும் போது பாலிவுட் நட்சத்திரமான ஷாருக்கான் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.பாதுகாப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு மதிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ஷாருக்கான், ஒவ்வொரு முறையும் குடியேற்ற துறை தடுத்து வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்திருக்கிறார்.முன்னதாக, ஷாருக்கானின் முஸ்லிம் பெயரால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மறுத்துள்ளது.

22 ஜூலை 2016

மகனை சுட்டுக்கொல்லுமாறு குவான்டீலின் தந்தை குமுறல்!

சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டு கொல்ல வேண்டும் என்று பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய பிரபல மாடல் அழகி குவான்டீல் பலூச்சின் தந்தை கூறியுள்ளார். பாகிஸ்தானில் செலிபிரிட்டி மாடல் அழகியாக வலம் வந்தவர் குவாண்டீல் பலூச். இவர் கடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாண நடனம் ஆடத்தயாராக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து சலசலப்பை உருவாக்கி வந்தார். மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டனாக இருந்த ஷாஹித் அப்ரிதியைத் திட்டுவது, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பது என தொடர்ந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் ஜூலை 14 ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்ததில், குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாக அவரது அண்ணன் வாசிம், பலூச்சை ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது. தற்போது வாசிம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு முன்பு அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து விட்டதாகவும், இதனால் தான்தான் கொலை செய்தேன் என்று தனது தங்கைக்குத் தெரியாது என்றும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.இந்நிலையில் குவாண்டீலின் தந்தை அன்வர் ஆசிம், சகோதரியை ஆணவக்கொலை செய்த தன் மகனை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் "அவனை பார்த்தவுடன் சுட்டுக்கொல்ல வேண்டும். எங்களுக்கு போதை மருந்தை கொடுத்துவிட்டு, என் மகளை கொலை செய்து விட்டான். அவளை கழுத்தை நெரித்த போது எங்களை கூப்பிட்டு இருப்பாள் எங்களுக்கு கேட்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

16 ஜூலை 2016

பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!

http://img.vikatan.com/news/2016/03/18/images/5.jpgபாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது. சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

26 மே 2016

சிம்பு நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு!

இது நம்ம ஆளு
சிம்பு,நயன்தாரா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பில் நாளை வெளியாகிறது இது நம்ம ஆளு திரைப்படம். மூன்று வருடமாக இன்று நாளை என இழுத்தடித்து வந்த இந்த திரைப்படம் ஒரு வழியாக நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள். பிரிந்து விட்ட பின்னர் படத்திற்காக இருவரும் சேர்ந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. போதா குறைக்கு மூன்று வருட போராட்டத்திற்கு பின்னர் படம் வெளிவருவதால் சிம்பு ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர். சிம்பு, நயன்தாரா இருவருமே அதிகமாக கிசுகிசுக்கப்படும் பிரபலங்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என கூறப்படுகிறது. சிம்புவுக்கு தற்போது திரைப்படங்கள் தோல்வி முகமாக இருந்தாலும், தொடர் வெற்றிகளை குவித்து வரும் நயன்தாரா இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெற்று சிம்புக்கு புதிய சினிமா பாதையை உருவாக்கும் என கூறுகிறார்கள். காதலை மைய கருத்தாக கொண்டு நான் செதுக்கியுள்ள திரைப்படம் தான் இது நம்ம ஆளு. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் தம்பதியர்களின் காதல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எனக்குள் வெகு நாட்களாக இருந்து வந்தது. எனது அந்த தேடலின் முயற்சி தான் இந்த 50 சதவீத காமெடி மற்றும் 50 சதவீத காதல் திரைப்படம் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் பாண்டிராஜ். மேலும், படத்தில் நாயகன், நாயகியாக நடித்த சிம்பு, நயன்தாராவிற்கு நான் காதல் காட்சிகளை சொல்லி தர வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவர்கள் இருவரின் சிரிப்பு, காதல் பார்வை, செல்ல கோபம் என அனைத்தும் படத்தின் லவ் கெமிஸ்டிரிக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. அவர்களின் காதல் காட்சிகள் யாவும் நடிப்பு போலவே இல்லை. பத்து வருடத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து நடிக்கும் இந்த படம், எது மாதிரியும் இல்லாம, புது மாதிரியும் இல்லாம, ஒரு மாதிரியா இருக்கும்" என்றார் பாண்டிராஜ். இயக்குனர் பாண்டிராஜ் முன்னாள் காதலர்களை வைத்து இயக்கி இருக்கும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. படம் எப்படியோ, சிம்பு, நயன்தாரா இருவரையும் திரையில் சேர்ந்து பார்க்கவே கூட்டம் அள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

16 மே 2016

நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்-ரஜினிகாந்த்

நிச்சயமாக இது வித்தியாசமான தேர்தல்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். தமிழகத்தில் 232 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கு மட்டும் வரும் 23-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வாக்குப்பதிவு செய்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. நிச்சயமாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்," என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்றார் ரஜினி.

05 பிப்ரவரி 2016

காதுக்குள் வாழ்க்கை நடத்திய எறும்புகள்(காணொளி)

இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில் வாழ்ந்து வரும் பன்னிரண்டு வயது சிறுமி ஒருவரின் காதுக்குள் எறும்புகள் குடித்தனம் நடத்தி வந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சிறுமியின் காதுக்குள் இருந்து ஆயிரம் வரையான எறும்புகள் மருத்துவர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை இங்கே காணலாம்.

11 ஜனவரி 2016

பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!

‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.

26 செப்டம்பர் 2015

நயன்தாராவால் போக்கு வரத்துத் தடை!

சேலத்தில் புடவைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே புடவைக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல்
பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது.

26 அக்டோபர் 2014

பூஜா ஈழத் தமிழரைக் கரம் பிடிக்கிறார்!

பூஜா
வரும் டிசம்பர் மாதம் நடிகை பூஜாவுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஜெ.ஜெ. படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா. இவரது தாய் பெங்களூர், தந்தை சிங்களர் ஆவார். உள்ளம் கேட்குமே, ஜித்தன், தம்பி, நான் கடவுள், விடியும் முன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த நான் கடவுள் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பூஜாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டதஇந்நிலையில், சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பூஜா, மீண்டும் விடியும் முன் படம் மூலம் தமிழில் மறு பிரவேசம் செய்தார்.இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் தோன்றுவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது பூஜாவிற்கு திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது காதல் திருமணம் என்றும், மாப்பிள்ளையின் பெயர் தீபக் சண்முகநாதன் என்றும் கூறப்படுகிறது. ஈழத்தைச் சேர்ந்த தீபக், மாடலிங் மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார்.தீபக் தனது பிறந்தநாளான அக்டோபர் 17ம் தேதி தனது காதலை பூஜாவிடம் தெரிவித்ததாகவும், அதற்கு பூஜா ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பொதுவாக இது போன்ற திருமணம், காதல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவரும் போது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் ஆம், இல்லை என விளக்கமளிப்பர். ஆனால், பூஜா தொடர்ந்து மவுனம் சாதிப்பது திருமணத் தகவலை உறுதி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.

16 அக்டோபர் 2014

கமலஹாஷனுக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறலலால் பரபரப்பு!

பாபநாசம் படப்பிடிப்பின் போது நடிகர் கமல்ஹாசன் மூக்கில், நடிகர் கலாபவன் மணி ஓங்கிக் குத்தும் காட்சியின்போது மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ரப்பர் உள்ளே போய் விட்டதால் கமல்ஹாசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதித்து எண்டோஸ்கோப்பி மூலம் ரப்பரை வெளியே எடுத்த பிறகே அவர் அபாய கட்டத்தைத் தாண்டி உயிர் பிழைத்தார்.மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்' படம் தமிழில் ‘பாபநாசம்' என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமலஹாசன், கவுதமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது.

கேரளாவில் படப்பிடிப்பு:
தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

ஓங்கிக் குத்திய கலாபவன் மணி:
இந்தக் காட்சியில் கமல்ஹாசனும், கலாபவன் மணி உள்ளிட்டோரும் நடித்தனர். பாதுகாப்புக்காக கமல்ஹாசன் மூக்கில் ரப்பர் பொருத்தப்பட்டிருந்தது. காட்சியின்போது கலாபவன் மணி ஓங்கிக் குத்தினார். ஆனால் சற்று பலமாக குத்தி விட்டார். இதனால் ரப்பர் கமல்ஹாசனின் மூக்குக்குள் போய் விட்டது. இதனால் அவர் மூச்சு விட முடியாமல் திணறினார். இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரப்பர் அகற்றம்: 
பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை கன்னியாகுமரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவமனையில் கமல்ஹாசன் சேர்க்கப்பட்டார். உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோப்பி மூலம் ஆபரேஷன் செய்து ரப்பரை வெளியே எடுத்தனர். ஒய்வுக்கு பின்னர் சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

13 ஆகஸ்ட் 2014

பச்சையாக வலம்வரும் ஸ்ருதி!

நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன். தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார். நடிகைகள் பச்சை குத்துவது பேஷனாகி வருகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை விதம் விதமான பச்சைகளுடன் நடமாடும் நடிகைகள் பலர்.ஸ்ருதி ஹாசன் முதலில் பச்சை குத்தியது அவரது முதுகில்தான். தமிழில் அதைக் குத்தியுள்ளார்.பின்னர் கையில் ரோஜா பூவை பச்சை குத்திக் கொண்டார். பின்னர் காலிலும் ஒரு பச்சையைப் பதித்தார். தற்போது 5 ஆவது முறையாக தநது கையில் ஒரு பச்சையைப் பதித்துள்ளார்.திரிஷாதான் இந்த வகையில் முதல்வர், முன்னணியில் இருப்பவர். இவர் தனது மார்பில் நெமோ என்ற மீனைப் பச்சை குத்தி அசத்தியவர். திரிஷாவின் கணக்கு இந்த வகையில் மூன்று பச்சைகளாம்.நடிகை நயன்தாரா பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தபோது தனது கையில் பிரபு என்று பச்சை குத்தினார். காதல் முறிவுக்குப் பின்னர் அதை அழிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டார்.நமீதா தனது அகன்ற முதுகில் பச்சை குத்தி வைத்துள்ளார்.ரீமா சென் தனது கவர்ச்சிகரமான வயிற்றுப் பகுதியில் அழகிய பறவையை பச்சை குத்தி வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் இப்படி பச்சை நாயகியாக வலம் வருவோர் வரிசையில் குஷ்பு, சிம்ரன், சினேகா, பிரியா மணி என பலரை காணலாம் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

31 ஜூலை 2014

வெற்றி வலம் வரும் ப்ரியா ஆனந்த்!

ப்ரியா ஆனந்த்
அரிமா நம்பியைத் தொடர்ந்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன. தமிழில் ஒரு காலத்தில் தோல்விப் பட நடிகையாகப் பார்க்கப்பட்டவர் ப்ரியா ஆனந்த். அவர் அறிமுகமான வாமனன் படம் தொடங்கி அடுத்தடுத்து படங்கள் சரியாகப் போகாத நிலையில், அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல் கைகொடுத்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படங்களில் வாய்ப்பு கிடைத்தது.சமீபத்தில் அவர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி வெளியானது. இந்தப் படம் வர்த்தக ரீதியாக நல்ல வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ப்ரியா ஆனந்த் நடித்த இரு படங்கள் வெளியாகின்றன. வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி இரும்புக் குதிரை படம் வெளியாகிறது. இதில் பிரான்சுக்குப் போகும் பாண்டிச்சேரி பெண்ணாக நடித்துள்ளார். அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ம் தேதி ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் வெளியாகிறது. இதில் விமலுக்கு ஜோடியாக, மருத்துவக் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் ப்ரியா. இந்தப் படங்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள வை ராஜா வை படம் வெளியாகிறது.