பக்கங்கள்

11 ஜனவரி 2016

பாரதிராஜாவின் கனவை நனவாக்குகிறார் பாலா!

‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்று 2007-ல் வார இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார் இயக்குநர் பாரதிராஜா. இந்நிலையில், பாரதிராஜாவின் கனவுப்படத்தை இயக்க முன் வந்துள்ளார் இயக்குநர் பாலா. இதற்காக ஒரு பெரிய நடிகர் பட்டாளத்தை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டணியில் மனிஷா கொய்ராலாவும் இணைந்துள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஓர் இளம் நடிகை இந்தப் படத்தில் நடிக்க உள்ளார். பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலா எப்படி கையாளப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இப்போதிருந்தே உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக