பக்கங்கள்

29 ஏப்ரல் 2012

ரீமா விரும்பும் வேடம்!

Reema Senகல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.
இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.
இயக்குநர் 'சரீமா' என்று சொன்னாரா என்பது தெரியவில்லை...!

24 ஏப்ரல் 2012

பிரசன்னா,சினேகா திருமண அழைப்பு!

Prasanna and Snehaநடிகை சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் மே 11-ந்தேதி திருமணம் நடக்கிறது. இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலாகி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

முகூர்த்த ஆடைகள், நகைகள் வாங்குதல் என இத்தனை நாள் தீவிரமாக இருந்தவர்கள், இப்போது திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளனர்.
சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களில் கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தார்.
இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "விஜய், அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன். இருவரும் குடும்பத்தினருடன் என்னை சந்தித்தனர். வாழ்த்தும் சொன்னார்கள். சினேகாவிடம் டெலிபோனில் வாழ்த்து கூறினார்கள். கமல்ஹாசனை ஏற்கனவே சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம்," என்றார்.
ரஜினிக்காக காத்திருக்கிறோம்..
அடுத்து ரஜினிக்கும் அழைப்பிதழ் கொடுக்க காத்திருக்கிறார்கள் சினேகாவும் பிரசன்னாவும். கேரளாவில் கோச்சடையான் படப்பிடிப்பு முடிந்து ரஜினி வந்ததும் சந்தித்து அழைப்பு தருகின்றனர்.
கோச்சடையானில் ரஜினி தங்கையாக நடிக்கவிருந்து, பின்னர் நீக்கப்பட்டார் சினேகா என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஏப்ரல் 2012

தமன்னாவிற்காக குடியுங்க!

Tamannaahஃபேண்டா கூல்டிரிங்க்ஸ் குடித்தால் நடிகை தமன்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கொக கோலா நிறுவனத்தின் கூல்டிரிங்கான ஃபேண்டாவின் தென்னிந்திய பிராண்டு அம்பாசிடராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். நடிகை ஜெனிலியா திருமணமாகிப் போனதையடுத்து தான் தமன்னா பிராண்டு அம்பாசிடராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைக் கவர ஃபேண்டா புது முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விற்கப்படும் ஃபேண்டா பாட்டில்களின் லேபிலுக்குப் பின்னால் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பரிசுகள் அறிவிக்கப்பட்டுருக்கும். நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் தமன்னாவை சந்தி்ககும் வாய்ப்பு கிடைக்கும்.
ஃபேண்டா விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்துகொள்கிறார். அவர் தனது ரசிகர்களை விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பேசவிருக்கிறார். தமன்னாவை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அழகிய செல்போன்கள் உள்பட பல பரிசுகளை வெல்லலாம்.
என்ன ஃபேண்டா வாங்கியாச்சா?