பக்கங்கள்

19 ஆகஸ்ட் 2010

மொபைலில் திருச்சியை கலக்கும் ஆபாச ஆடியோ.



கழிப்பறையில் எடுத்தது, கருவறையில் எடுத்தது என செல்போன்களில் அவ்வப்போது ஆபாச காட்சிகள்தான் பரவும். இதில் லேட்டஸ்ட்.. ஆபாச ஆடியோ. ‘ரூம் பூரா கும்னு மல்லிகைப்பூ வாசம்’ என்று ஆரம்பித்து முதலிரவு அனுபவத்தை மாஜி காதலனிடம் ஒரு பெண் விளக்குகிறார். ‘அனுபவம் எப்படி’ என்று முதலில் காதலன்தான் அவளுக்கு போன் செய்து விசாரிக்கிறான். இவள் சொல்ல ஆரம்பிக்கிறாள். 20 நிமிடம் ஓடுகிறது இந்த டேப். ஆரம்பம் முதல் இறுதி வரை கிளுகிளுப்பு. நடுநடுவே அந்த பெண் வெட்கத்தில் சிரிக்கிறார். சில கேள்விகளுக்கு கூச்சத்துடன் விளக்குகிறார். சிலவற்றுக்கு ‘சீ போடா’ என்கிறாள். ‘10ம் தேதி ஊருக்கு வர்றேன். அப்ப விலாவாரியா சொல்றேன்’ என்று சில்லறை சிதறலாய் சிரித்து கிளைமாக்ஸ் வைத்து முடிக்கிறார் பெண். அப்போதும் அவன் விடவில்லை. கேள்விமேல் கேள்வி கேட்டு துளைக்கிறான். ‘ஆடி மாசம் எப்படி’ என்கிறான். அதற்கும் புது விளக்கம் கொடுக்கிறார் புதுப்பெண். பேச்சுக்கு நடுவே ‘ஏய்.. சத்தம் போடாதீங்கடா. சார் முக்கியமான வேலையா இருக்கேன்’ என்கிறார் அந்த காதலன். பள்ளி அல்லது டியூஷன் போல தெரிகிறது. மாஜி காதலி சொன்ன விளக்கங்களை அவளுக்கே தெரியாமல் பதிவு செய்து மொபைல் வழியே உலவவிட்டிருக்கிறான் காதலன். திருச்சி மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் இளைஞர்களின் மொபைலில் இந்த கிளுகிளு ஆடியோதான் தற்போது உலா வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக