பக்கங்கள்

30 நவம்பர் 2011

எதிர்ப்பால் அதிர்ந்த ஜெய்!

ஒரு நடிகையை நிச்சயம் திருமணம் செய்ய மாட்டேன் என்று நடிகர் ஜெய் அறிவித்தது அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
நடிகை என்றால் அவ்வளவு கேவலமா என்று திரையுலகில் கண்டனக் குரல் ஒலித்ததால் தனது அறிக்கைக்கு புதிய விளக்கம் தந்துள்ளார்.
அஞ்சலிக்கும் ஜெய்க்கும் காதல் என்ற செய்தி பரவியதால், இனி ஜெய்யுடன் நடிக்க மாட்டேன் என அஞ்சலியும், அஞ்சலியை நான் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணவும் மாட்டேன் என்று ஜெய்யும் மாறி மாறி அறிக்கை விட்டனர். ஜெய் ஒரு படி மேலே போய், வாழ்க்கையில் ஒரு நடிகையை திருமணம் செய்வதாக இல்லை என்று கூறிவிட்டார். இது சக நடிகைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நடிகைகளை திருமணம் செய்ய மாட்டேன் என்றால் என்ன அர்த்தம் நடிகைகள் பற்றி அவதூறாக பேசுவதா? என்றெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது. ஜெய்யுடன் நேரில் பேசியும் கண்டித்தனர்.
இதையடுத்து தனது அறிக்கைக்கு ஜெய் அளித்துள்ள விளக்கம்:
நடிகை பற்றி நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டுள்ளனர். நான் சொல்ல வந்த அர்த்தம் வேறு.
நான் நடிகன் என்பதால் உள்ளூர்-வெளியூர் என்று படப்பிடிப்பில் இருப்பேன். என் மனைவியும் பிசியான நடிகையாக இருந்தால் சந்தோஷமாக இருக்குமா? என்ற அர்த்தத்தில்தான் நடிகையை திருமணம் செய்ய கொள்ள மாட்டேன் என்றேன். மற்றபடி நடத்தை பற்றியோ ஒழுக்கம் பற்றியோ நான் எதுவும் பேசவில்லை," என விளக்கம் அளித்துள்ளார்.

27 நவம்பர் 2011

அன்புக்கொன்று ஆசைக்கொன்று....!

தனக்கு வரும் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் என இரண்டு மனைவிகள் கொண்டவராக இருப்பார் என கிளி ஜோசியம் சொன்னதால், ஷாக் ஆனார் நடிகை தன்ஷிகா.
பாலிமர் டிவியில் ஞாயிறுதோறும் ஒன்பது மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சம்திங் சம்திங் வித் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் "பேராண்மை'' மற்றும் ''அரவான்'' படங்களின் நாயகி தன்ஷிகா கலந்துகொண்ட சிறப்பு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.
'அயன்' ஜெகன் தொகுப்பாளராக இருந்து நடிகை தன்ஷிகாவோடு மிகவும் மாறுபட்ட முறையில் சுவாரஸ்யமாக கலந்துரையாடிய இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது.
நிகழ்ச்சியின் ஒரு அம்சமான கிளி ஜோசியத்தில் தன்ஷிகா என் வருங்காலக் கணவர் எப்படி இருப்பார்? எப்படிப்பட்ட குணாதிசயம் கொண்டவராக இருப்பார் என்று கேட்டார்.
அதற்கு கிளி எடுத்துக் கொடுத்த சீட்டை வைத்து ஜோசியர், "உங்கள் கணவர் அன்புக்கு ஒன்றும் ஆசைக்கு ஒன்றும் வச்சிருப்பார் என்று பதிலளித்தார்."
உடனே பதறிய தன்ஷிகா, "அய்யய்யோ எனக்கு அப்படிப்பட்ட கணவரே வேண்டாம்... என் கணவர் எனக்காக மட்டுமே வாழும் அன்புகொண்டவராக அவர் இருக்கவேண்டும்," என்றார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களோடுஆடிப்பாடி நிகழ்ச்சியை கலகலப்பூட்டிய நடிகை தன்ஷிகா தனது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'அரவான்' படம் பற்றிய வெளிவராத தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த சுவாரசியமான நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை பாலிமர் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது!

25 நவம்பர் 2011

பெண்ணைத்தான் சொன்னேன் பெண்களையல்ல.

சமீப காலமாக பரபரப்பாகப் பேசப்படும் தனுஷின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் பெண்களுக்கு எதிரானது அல்ல என்று நடிகர் தனுஷ் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்திய சினிமா படங்கள் பலவற்றில் பெண்களை இழிவுபடுத்தி பாடல்கள் எழுதப்படுவதாக மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சிம்பு பாடிய “எவண்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்” என்ற பாடலும் ‘லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே…’ பாடலும் பெண்களுக்கு எதிரானவை என்று கண்டிக்கப்பட்டன.
அந்த வரிசையில் தனுஷ் பெண்களை இழிவுபடுத்தி 3 என்ற படத்தில் ஒய் திஸ் கொலை வெறிடி பாடலை எழுதி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாடல் வெளியான 5 நாட்களில் இண்டர்நெட்டில் 20 லட்சம் பேர் இந்தப் பாடலைக் கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து தனுஷிடம் கேட்டபோது, “எனது மனைவி ஐஸ்வர்யா 3 படத்தை இயக்குகிறார். பாடலுக்கான சூழ்நிலையை அவர் விளக்கியதும் இந்த பாட்டை எழுதினேன். படத்தில் இடம் பெறும் ஒரு பெண் கேரக்டரை பற்றிய பாடல் அது. ஒட்டு மொத்த பெண்களையும் இழிவுபடுத்தி அந்த பாடலை எழுதவில்லை. ஒரு பெண்ணை மட்டும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். ‘கேர்ள்’ என்று ஒருமையில்தான் எழுதினேன். ‘கேர்ள்ஸ்’ என்று எல்லா பெண்களையும் குறிப்பிடவில்லை” என்றார்.

20 நவம்பர் 2011

மயங்க வைத்தார் நாகார்ஜுனா!

செட்டில் நாகார்ஜுனாவைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டேன். அவர் மீது அப்படியொரு பிரமிப்பு என்றார் நடிகை அமலா பால்.
தமிழை விட தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் அமலா பால், சமீபத்தில் ஹைதராபாதில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ப்ள்ஸ்டூ முடித்ததுமே நடிக்க வந்துவிட்டேன். இதை பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் என்னை எஞ்ஜினீயருக்கு படிக்க வைக்க விரும்பினார்கள். ஆனால் எனது அண்ணன் அவர்களை சமரசப்படுத்தி என் ஆசைப்படி நடிக்கை அனுமதித்தார். மைனா படம் திருப்பு முனையாக அமைந்தது. பிறகு விக்ரமுடன் நடித்தேன்.
நான் விக்ரமின் தீவிர ரசிகை. அவருடன் நடித்தது அதிர்ஷ்டம். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் கல்லூரிக்கு போய் படித்து வருகிறேன்.
தெலுங்கில் நாகார்ஜுனா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் தட வையாக பெரிய நடிகரான அவரை படப்பிடிப்பு தளத்தில் பார்த்த போது மயக்கமே வந்து விட்டது," என்றார்.

17 நவம்பர் 2011

கஸ்தூரியின் சின்னக் காதலன்.

'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ரொமான்ஸ் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.
செல்வா இயக்க, சினிமா கொட்டகை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் இடம்பெறுகின்றன.
இதில் ஒரு காதல்தான் சின்ன வயசு இளைஞன் உதய்க்கும், கல்யாணத்துக்கு காத்திருக்கும் கஸ்தூரிக்கும் இடையில் வரும் பொருந்தாக் காதல்.
கதைப்படி உதய் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் பெண் கஸ்தூரி. உதய்யைவிட மூத்தவர். ரொம்ப அன்னியோன்னியமாக பழகும் கஸ்தூரியிடம் ஒரு கட்டத்தில் தன் காதலைச் சொல்ல, அதை அவர் மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உதய், கஸ்தூரியை கற்பழிக்க முயற்சிக்கிறார்... என்று போகிறது இந்தக் காதல் கதை.
இடையில் கஸ்தூரிக்கும் உதய்க்கும் மகா கவர்ச்சியான கனவுக் காட்சி வேறு வருகிறதாம். இதில் கஸ்தூரி ஏக கவர்ச்சி காட்டியுள்ளாராம்.
இதுகுறித்துக் கேட்டபோது, கதைக்குத் தேவை என்பதால் இந்தக் காட்சிகளில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்ததாக தெரிவித்தார் கஸ்தூரி.
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பாலபாரதி இசையமைத்துள்ளார்.

16 நவம்பர் 2011

அது எப்பன்னு நாங்க சொல்லுவோம்!

சினிமாக்காரர்கள் கல்யாணத்தை மட்டும் இந்தத் தேதியில் நடக்கும் என்று யாரும் கணித்துச் சொல்லிவிட முடியாது. அட.. அது அவர்களே் அறிவிக்கிற தேதியிலாவது நடக்குமா என்றால், அதையும் உறுதியாக சொல்ல முடியாது!
காதலிப்பார்கள்... ஆனால் கேட்டால் இல்லவே இல்லை என்பார்கள். ரகசியமாக திருமணம் நிச்சயமாகியிருக்கும்.. ஆனால் விசாரித்தால் சத்தியமாய் இல்லை, பொய்ச் செய்தி என்பார்கள். ஆனால் ஒருநாள் மாலையும் கழுத்துமாக காட்சி தருவார்கள். இதற்கு முக்கிய காரணம், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பணமாக்கிக் கொள்ள வேண்டும் எனும் அவர்களின் நோக்கமே.
கைவசம் படங்களே இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் காதல் ஜோடிகள், புதிதாக இரண்டு பட வாய்ப்புகள், துபாயில் இரண்டு கச்சேரி, ஏதாவது விளம்பரப் பட வாய்ப்பு என்று வந்தால், அப்படியே திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கம். ஆனால் கல்யாண தேதியை அறிவித்துவிட்டால், யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். எனவே தொழில்ரீதியான பயம்தான் இந்த ரகசிய காத்தலுக்கு காரணம்.
ஜெனிலியாவின் கல்யாண சமாச்சாரமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷுக்கும் நிச்சயமாகிவிட்டாலும், அதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. அதற்குள் ஜெனிலியாவுக்கு புதுப்புது பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. வேலாயுதம் வேறு எதிர்பாராமல் நன்றாக ஓடுவதாக கூறப்படுவதால், மேலும் இரு பெரிய பட வாய்ப்புகள். இவற்றை விட நிச்சயம் எந்த நடிகைக்கும் மனசு வராதல்லவா...
பிப்ரவரி 4-ம் தேதி இவருக்கும் ரிதேஷுக்கும் திருமணம் என்று முடிவு செய்திருந்த நிலையில், கைவசம் இன்னும் பட வாய்ப்புகள் இருப்பதால், தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனக்கு என்றைக்கு திருமணம் என்பதை நாங்கள்தான் அறிவிப்போம். நிச்சயம் இந்தக் கல்யாணம் ரகசியமாய் நடக்காது. விரைவில் நாங்களே சொல்கிறோம். அதுவரை மீடியா இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது, என்றார்.

14 நவம்பர் 2011

இணையத் துடிக்கும் சிம்புவும் திரிசாவும்!

மீண்டும் இணைந்து நடிக்க விரும்புவதாக சிம்புவும் த்ரிஷாவும் கூறியுள்ளனர்.
அலை படத்தில் முதல்முறையாக சிம்புவும் த்ரிஷாவும் நடித்தனர். அந்தப் படம் வெற்றி பெறவில்லை. பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
கவுதம் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது.
நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு. இந்த வயது வித்தியாசமே இந்த ஜோடியின் சிறப்பாக சிலர் கூறுகின்றனர். எனவே இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.
த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்றார்.

11 நவம்பர் 2011

சினேகாவிடம் இப்படித்தான் காதல் வந்தது.

ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.
ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:
அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.
காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.
நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் 'ஐ பேட்' வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்," என்றார்.
நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.
விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.

08 நவம்பர் 2011

அன்னக்கொடியும் கொடி வீரனும்.

பாரதிராஜா இயக்கப் போகும் கனவுப் படமான அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் நாயகியாக கோ பட நாயகியும், முன்னாள் நாயகியும், பாரதிராஜாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டு நாயகியாக அறிமுகமானவருமான ராதாவின் மகளுமான கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.
பழம்பெரும் நாயகியான ராதாவின் மகள்தான் கார்த்திகா. இவர் கோ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி நல்ல கிராக்கிக்குள்ளாகியுள்ளார். அவரைத் தேடி பல பட வாய்ப்புகள் போனபோதும் கோ படம் போல நல்ல கதையம்சம் உள்ள படமாக பார்த்துக் கொண்டிருப்பதால் புதிய படம் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தனர் ராதாவும், கார்த்திகாவும்.
இந்த நிலையில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்தின் நாயகியாக கார்த்திகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் நாயகியாக, இனியா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகிருந்தது நினைவிருக்கலாம். முதலில் பிரியா மணியைத்தான் யோசித்திருந்தார் பாரதிராஜா. பின்னர் வாகை சூட வா படத்தைப் பார்த்த பின்னர் இனியாவை தனது நாயகியாக அவர் தேர்வு செய்தார் என தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் கார்த்திகா அந்த வேடத்திற்குத் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது. இடையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இனியா நிராகரிக்கப்பட்டுள்ளாரா அல்லது கார்த்திகா இன்னொரு ஹீரோயினாக நடிக்கப் போகிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

05 நவம்பர் 2011

உயிரையும் உயிரா நினைச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காய்.....!!!

தமிழ்ப் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிப்பதும், தணிக்கை செய்வதும் தொடர்கிறது. அவர்கள் என்ன நமது படங்களுக்கு தடை விதிப்பது... இலங்கையில் எனது படத்தை திரையிட அனுமதி தரமாட்டேன். கோடம்பாக்கம் நினைத்தால் கொழும்பு வருமானத்துக்கே செக் வைக்க முடியும், என்றார் இயக்குநர் / தயாரிப்பாளர் சசிகுமார்.
சர்ச்சைக்குரிய தமிழ் படங்களுக்கு இலங்கை அரசு தடை விதிக்கிறது. புதுப்படங்களை அங்குள்ள தணிக்கை குழுவுக்கு அனுப்பி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்களை நீக்குகிறது. இஷ்டம் போல் காட்சிகளை வெட்டித் தள்ளி அரை குறையாக தியேட்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தீபாவளிக்கு ரிலீசான 7ஆம் அறிவு படத்திலும் தமிழர்களுக்கு ஆதரவான வசனங்கள் நீக்கப்பட்டன. இலங்கையின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பத்திரிகைப் பேட்டியில், "தமிழனாகப் பிறந்த எல்லோருமே ஈழ உணர்வாளர்கள்தான். இதயத்தைப் பிளந்து காட்டித்தான் அதை வெளிப்படுத்தணும்கிற அவசியம் இல்லை. சராசரி சசிகுமாரா அந்த துயரத்துக்காகத் துடிச்சிருக்கேன். கதறி இருக்கேன். உணர்வோ உதவியோ... என்னால முடிஞ்சதை எப்பவுமே செய்றவன் நான். அதை வெளியே காட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.
இப்பவும் 'போராளி’ படத்துக்கான எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாதுங்கிறதுல நான் உறுதியா இருக்கேன். ஒரு தயாரிப்பாளரா இந்த முடிவு என்னைப் பாதிக்கும்தான். ஆனால், கண்ணீரும் கதறுலுமா நம்ம சொந்தங்கள் அல்லாடித் தவிக்கிற அந்த மண்ணில் படம் ஓட்டிக்காட்ட நான் விரும்பலை.
முன்னாடிலாம் கிராமப்புறங்களில் வயதானவங்க இறந்துட்டா தூக்கம் விழிக்கணுங்கிறதுக்காக துக்க வீட்டில் சினிமா ஓட்டுவாங்க. உலகத்தையே உலுக்கிய துக்கத்துக்கும் நாம படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறது நியாயமா படலை.
அங்கே மிச்ச சொச்சமா இருக்கிற தமிழர்களும் படம் பார்க்கிற மனநிலையில் இல்லை. சுற்றுலாவும் சினிமாவும்தான் இலங்கையோட பொருளாதார ஆதாரம். தொப்புள்கொடி உறவுனு துடிக்கிற நாம் எதுக்காக இலங்கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை கொடுக்கணும்? எவ்வளவு லாபத்தை இழந்தாலும், இனி நான் எடுக்கப்போற எந்தப் படத்துக்குமே எஃப்.எம்.எஸ். உரிமையை இலங்கைக்குக் கொடுக் கப்போறது இல்லை.
தமிழ் உணர்வுகளைத் தட்டி எழுப்புற மாதிரி ஒரு வசனம் வந்தால்கூட சம்பந்தப்பட்ட படத்தை இலங்கை அரசாங்கம் தடை பண்ணிடுது. சமீபத்தில்கூட இந்த மாதிரி கெடுபிடிகளை இலங்கை அரசு காட்டி இருக்கு. அவங்க என்ன நம்ம படங்களைத் தடை பண்றது?
கோடம்பாக்கம் மனசு வைத்தால் கொழும்புக்கே வருமானரீதியா செக் வைக்க முடியும். நமக்கும் இதில் இழப்பு இருக்கத்தான் செய்யும். என்ன பண்றது? உயிரையும் உயிரா நெனச்ச மண்ணையும் இழந்தவங்களுக்காக வருமானத்தை இழக்குறது தவறே இல்லை!'' என்று கூறியுள்ளார்.
சசிகுமாரின் இந்த அதிரடி முடிவு தமிழ் உணர்வு கொண்ட பல தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது.
சசிகுமார் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், "இலங் கைக்கு எஃப்.எம்.எஸ். உரிமை வழங்கலாமா, கூடாதா என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்கு நர்கள் சங்கம் உள்ளிட்டவை கலந்து ஆலோசித்து இப்படி ஒரு திட்டத்தைச் சொன்னால், நிச்சயமாக அதனை ஏற்று நடப்பேன். தமிழர்களின் வலி அறிந்த ஒரு தயாரிப்பாளர்களில் ஒருவனாக சசியின் கருத்துக்குத் தலைவணங்குகிறேன். சினிமா வுக்கு வருமானம் அவசியம்தான் என்றாலும், அதைவிட, தமிழனின் தன்மானம் முக்கியமானது!'' என்று கூறியுள்ளார்.

02 நவம்பர் 2011

சிம்பு எனக்கு தடை போடவில்லை.

ஜீவா படத்தில் நடிக்க வேண்டாம் என்று சிம்பு என்னிடம் கூறவில்லை. நான் எப்பொழுதும் சுயமாக முடிவு எடுப்பவள் என்று நடிகை ரிச்சா தெரிவித்துள்ளார்.
நடிகை ரிச்சா சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜீவாவின் புதிய படத்தில் நடிக்க ரிச்சா முதலில் சம்மதித்ததாகவும், பிறகு சிம்பு சொன்னதால் நடிக்க மறுத்ததாகவும் செய்திகள் வந்தது.
சிம்பு-ஜீவா மோதல் தமிழகமே அறிந்தது. கோ படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்தது. பின்னர் அவரை மாற்றி விட்டு ஜீவா நடித்தார். அதிலிருந்து இருவருக்குள்ளும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. சிம்பு ஏதாவது சொல்ல பதிலுக்கு ஜீவா ஏதாவது சொல்ல என்று அவர்களின் வார்த்தை விளையாட்டு முடிவின்றிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா படத்தில நடிக்க வேண்டாம் என்று ரிச்சாவிடம் சிம்பு தெரிவித்ததாக செய்தி வந்தது.
இது குறித்து ரிச்சா கூறியதாவது,
ஜீவா ஜோடியாக நடிக்குமாறு யாருமே என்னைக் கேட்கவில்லை. அப்படி இருக்கையில் ஜீவாவுடன் நடிக்கக் கூடாது என்று சிம்பு கூறியதாக செய்தி வந்தது. அது வெறும் வதந்தி தான். என் படம் தொடர்பான விஷயங்களில் யாரும் தலையிடுவதில்லை என்றார்.
இதற்கிடையே, நான் எப்பங்க ரிச்சாகிட்ட ஜீவா கூட நடிக்கக் கூடாதுன்னு சொன்னேன் என்று சிம்புவும் தெரிவித்துள்ளார்.
எங்கு 'வம்பு' என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் வம்பு வலுத்து வருவது மட்டும் தெரிகிறது!