பக்கங்கள்

16 நவம்பர் 2011

அது எப்பன்னு நாங்க சொல்லுவோம்!

சினிமாக்காரர்கள் கல்யாணத்தை மட்டும் இந்தத் தேதியில் நடக்கும் என்று யாரும் கணித்துச் சொல்லிவிட முடியாது. அட.. அது அவர்களே் அறிவிக்கிற தேதியிலாவது நடக்குமா என்றால், அதையும் உறுதியாக சொல்ல முடியாது!
காதலிப்பார்கள்... ஆனால் கேட்டால் இல்லவே இல்லை என்பார்கள். ரகசியமாக திருமணம் நிச்சயமாகியிருக்கும்.. ஆனால் விசாரித்தால் சத்தியமாய் இல்லை, பொய்ச் செய்தி என்பார்கள். ஆனால் ஒருநாள் மாலையும் கழுத்துமாக காட்சி தருவார்கள். இதற்கு முக்கிய காரணம், கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் பணமாக்கிக் கொள்ள வேண்டும் எனும் அவர்களின் நோக்கமே.
கைவசம் படங்களே இல்லாத நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் காதல் ஜோடிகள், புதிதாக இரண்டு பட வாய்ப்புகள், துபாயில் இரண்டு கச்சேரி, ஏதாவது விளம்பரப் பட வாய்ப்பு என்று வந்தால், அப்படியே திருமணத்தை தள்ளிப் போடுவது வழக்கம். ஆனால் கல்யாண தேதியை அறிவித்துவிட்டால், யாரும் வாய்ப்பு தரமாட்டார்கள். எனவே தொழில்ரீதியான பயம்தான் இந்த ரகசிய காத்தலுக்கு காரணம்.
ஜெனிலியாவின் கல்யாண சமாச்சாரமும் அப்படித்தான் ஆகிவிட்டது. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷுக்கும் நிச்சயமாகிவிட்டாலும், அதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. அதற்குள் ஜெனிலியாவுக்கு புதுப்புது பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. வேலாயுதம் வேறு எதிர்பாராமல் நன்றாக ஓடுவதாக கூறப்படுவதால், மேலும் இரு பெரிய பட வாய்ப்புகள். இவற்றை விட நிச்சயம் எந்த நடிகைக்கும் மனசு வராதல்லவா...
பிப்ரவரி 4-ம் தேதி இவருக்கும் ரிதேஷுக்கும் திருமணம் என்று முடிவு செய்திருந்த நிலையில், கைவசம் இன்னும் பட வாய்ப்புகள் இருப்பதால், தேதியை தள்ளிப் போட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜெனிலியா கூறுகையில், எனக்கு என்றைக்கு திருமணம் என்பதை நாங்கள்தான் அறிவிப்போம். நிச்சயம் இந்தக் கல்யாணம் ரகசியமாய் நடக்காது. விரைவில் நாங்களே சொல்கிறோம். அதுவரை மீடியா இதுபற்றி எதுவும் சொல்லக் கூடாது, என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக