பக்கங்கள்

31 அக்டோபர் 2011

தேவானந்திற்கு ஐந்தாண்டு சிறை!

டிவி நடிகை வைஷ்ணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சக டிவி நடிகரும், காதலருமான தேவானந்த்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
பல்வேறு டிவி தொடர்களில் நடித்தவர் வைஷ்ணவி. பாபா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும், இன்னொரு டிவி நடிகரான தேவானந்த் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 2006 ஏப்ரல் 15ம்தேதி வைஷ்ணவியை தேவானந்த் கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் இரவு வீடு திரும்பினார் வைஷ்ணவி. அப்போது அவரது முகத்தில் காயம் இருந்தது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் கூறுகையில், தேவானந்த் இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய வற்புறுத்துகிறார். இல்லையென்றால் யாருடனும் வாழ முடியாமல் செய்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.
பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் தேவானந்த் மீது புகார் கொடுத்தனர்.
போலீஸார் தேவானந்த் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று தேவானந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

29 அக்டோபர் 2011

ரிச்சாவிற்கு சிம்பு போட்ட தடை!

நடிகர் ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் இடையிலான மோதல் இன்னும் முற்றிவிட்டது. இதன் விளைவாக, தனக்கு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடிக்கும் ரிச்சா, ஜீவாவுடன் நடிகக் கூடாது என தடை விதித்துள்ளார் சிம்பு.
'கோ' படத்தில் நடிக்க முதலில் சிம்புவுக்குதான் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கதையில் சிம்புவின் தலையீடு இருந்ததால், அந்த வாய்ப்பை ஜீவாவுக்குக் கொடுத்தார் கேவி ஆனந்த்.
கோ சூப்பர் ஹிட் ஆனதால் அதில் ஏன் நடிக்கவில்லை என சிம்புமேல் பலரும் ஆதங்கப்பட்டனர். இந்த நிலையில் சிம்பு என் நண்பன் இல்லை என்று ஜீவா அறிவித்தது அவர்களின் மோதலை தீவிரமாக்கியது.
தற்போது ஜீவாவுடன் நடிகை ரிச்சா ஜோடி சேருவதை சிம்பு தடுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ரிச்சா முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் தனுஷுடன் “மயக்கம் என்ன”, சிம்புவுடன் “ஒஸ்தி” படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இயக்குனர் அகமது, தனது புதுப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிக்க ரிச்சாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாராம். இவர் ஏற்கனவே ஜெய் நாயகனாக நடித்த 'வாமணன்' படத்தை இயக்கியவர்.
ஜீவா ஜோடி என்பதால் முதலில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் ரிச்சா. எத்தனை நாள் கால்ஷீட் தருவேன் என்பதை பிறகு சொல்கிறேன் என்றும் உறுதியாக சொன்னாரம்.
அதை நம்பி பட வேலைகளை இயக்குநர் அகமது தொடங்கிய நிலையில், திடீரென அகமதுவுக்கு போன் செய்த ரிச்சா, ஜீவா ஜோடியாக நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். முதலில் சந்தோஷமாக கால்ஷீட் தருவதாக கூறிய ரிச்சா திடீரென மனம் மாறிய காரணம் புரியாமல் இயக்குனர் குழம்பி போனார்.
இப்போது ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்புவுடன் நடித்துக்கொண்டு இருக்கிறார் ரிச்சா. சிம்புதான் ஜீவாவுடன் நடிக்க வேண்டாம் என ரிச்சாவைத் தடுத்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.
ஜீவா படத்துக்குப் பதில் வேறு வாய்ப்பு தருவதாகவும் சிம்பு உறுதியளித்துள்ளாராம். எனவே ரிச்சா ஜீவாவை உதறியதாகச் சொல்கிறார்கள்.

28 அக்டோபர் 2011

மகளை பாராட்டினாராம் அப்பா.

ஏழாம் அறிவு படத்தில் சிறப்பாக நடித்ததாக மகள் ஸ்ருதியை கமல் ஹாஸனும், கவுதமியும் பாராட்டியுள்ளனர்.
லக் என்ற இந்தி படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஸ்ருதி ஹாஸன். பின்னர் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா ஜோடியாக 7 ஆம் அறிவு படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. ஸ்ருதி நடித்த முதல் தமிழ் படம் என்பதால் தந்தை கமல் ஆர்வமாக ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் போய் அப்படத்தைப் பார்த்தார். ஸ்ருதி நடித்த ஒவ்வொரு காட்சியையும் ரசித்தார். ஸ்ருதி நடிப்பு அவருக்கு ரொம்பப் பிடித்துப் போனது.
படம் பார்த்து முடிந்ததும் ஸ்ருதியிடம் சிறப்பாக நடித்து இருப்பதாக வெகுவாக பாராட்டித் தள்ளினாராம் கமல். நடிகை கவுதமியும் இந்தப் படத்தைப் பார்த்த பின், ஸ்ருதியை பாராட்டினார்.

25 அக்டோபர் 2011

விக்ரமின் கனவுக்கன்னிகள்!

ராஜபாட்டை படத்தில் ஹீரோ விக்ரம் கனவில் வரும் குத்துப் பாட்டில் ரீமா சென்னும் ஸ்ரேயாவும் குத்தாட்டம் போடுவதாக ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.
இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் கூறுகையில், "ராஜபாட்டை பக்கா கமர்சியல் படம். விக்ரம் ஜிம்பாய் கேரக்டரில் வருகிறார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. நான் சொன்னதை உள்வாங்கி விக்ரம் மிக பிரமாதமாக நடித்துள்ளார். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். அவருக்கு இன்னும் ஒரு கதை சொல்லி உள்ளேன். கண்டிப்பாக மீண்டும் படம் செய்யலாம் என்று கூறியுள்ளார்.
விக்ரம் கனவு காண்பது போன்ற பாடல் காட்சியொன்று உள்ளது. இதில் ஸ்ரேயா, ரீமாசென் இருவரும் நடிகைகளாகவே வந்து நடனம் ஆடுகின்றனர். இப்பாடல் காட்சி இத்தாலியில் படமாக உள்ளது.
அடுத்து விஷ்ணுவை வைத்து படம் இயக்குகிறேன். இது தெலுங்கிலும் தயாராகிறது. தெலுங்கில் வேறு ஹீரோ.
எனக்கென்று தனி பாணி கிடையாது. வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல என்று வித்தியாசமான கதைகளை படமாக்குவதே திட்டம்," என்றார் சுசீந்திரன்.
ராஜபாட்டையில் ரீமா - ஸ்ரேயா இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர் என முதலில் செய்தி வெளியாகியிருந்தது ஆனால் அப்போது இயக்குநர் சுசீந்திரன் இதை மறுத்து பேட்டியளித்திருந்தார். இப்போது அவரே அந்த செய்தியை ஒப்புக் கொண்டுள்ளார்!

23 அக்டோபர் 2011

சந்தர்ப்பத்தை பயன்படுத்திய காஜல்!

தம்மு தெலுங்குப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி பின்னர் திடீரென கழன்று கொண்டார் ஸ்ருதி. காரணம், அவருக்கு வந்த இந்திப்பட வாய்ப்பு.
விஷயம் வெளியான உடனே, ஜூனியர் என்.டி.ஆரை பல நடிகைகளும் மொய்க்க ஆரம்பித்தனராம். இவர்களில் தமன்னா, த்ரிஷா என டாப் ஸ்டார்களும் உண்டாம்.
ஆனால் என்.டி.ஆர், காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தார். உடனே சந்தோஷமாக நடிக்க ஒப்புக் கொண்டாராம் காஜல்.
காரணம், ஏற்கெனவே நான் வட இந்தியப் பெண் என்று பேசி தெலுங்கு நடிகர்-இயக்குநர்களிடம் கெட்டப் பெயர் சம்பாதித்துள்ளார் காஜல்.
இந்த நிலையில் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தால், மீண்டும் தெலுங்கில் ஒட்டிக் கொள்ளலாம் என காத்திருந்தபோது, இந்த லட்டு வாய்ப்பு வந்தது.
விடுவாரா... அதே நேரம் தனக்கு சம்பளமாக பெரும் தொகையைக் கேட்டாராம் காஜல். வேறு வழியில்லை என்பதால், கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டாராம் ஜூனியர் என்.டி.ஆர்.

21 அக்டோபர் 2011

காத்திருக்கும் சித்தாரா!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்இந்திய மொழி படங்கள் அனைத்திலும் நடித்தவர் நடிகை சி்த்தாரா. தமிழில் "புது புது ராகங்கள்", "புது வசந்தம்", "உன்னை சொல்லி குற்றமில்லை", "புதுப்புது அர்த்தங்கள்" உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாகவும், "நட்புக்காக", "படையப்பா" உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கேரக்டரிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார்.
இதற்கான காரணம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, நிறைய வரன்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வரும் வரன்கள் எல்லாம், திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். திருமணத்திற்கு பின்ன நல்ல வாழ்க்கை அமைந்தால் நடிக்காமல் இருக்கலாம், ஆனால் அப்படி ஒரு வாழ்க்கை அ‌மையவில்லை என்றால் என்ன செய்வது. என்னை பெண் பார்க்க வருபவர்களிடம் பரந்த மனப்பான்மை இல்லை. அப்படி இல்லாதவர்களிடம் நான் எப்படி குடும்பம் நடத்த முடியும்.
சினிமாவிற்கு முன்பு வரை சினிமாவை பற்றி நிறைய பயம் இருந்தது. ஆனால் சினிமாவிற்கு வந்தபின்னர், அதில் ஒரு நம்பிக்கையும், ஒரு பக்தியும் ஏற்பட்டது. சினிமாவை தேடி நான் வரவில்லை. சினிமா தான் என்னை தேடி வந்தது. சினிமாவை ரொம்பவே மதிக்கிறேன். அதனால், திருமணத்துக்குப்பின் நடிக்க மாட்டேன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். 25 வருடங்களாக நான் சினிமாவில் இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது.
நான் யாரையும் காதலிக்கவில்லை என்று பொய் சொல்ல மாட்டேன். காதலித்து இருக்கிறேன். அது, கல்யாணம் வரை போகவில்லை. காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். என்னை புரிந்துகொண்டு, நீ எப்பவும் போல நடிக்கலாம் என்று சொல்கிற கணவர் தான் வரவேண்டும். அப்படி ஒருவருக்காக காத்திருக்கிறேன் என்றார்.

18 அக்டோபர் 2011

பிரபுதேவாவை விட்டு பிரியமாட்டேன்!

"பிரபுதேவாவின் குழந்தைகள் எனக்குப் பிரச்சினையாக இருப்பதாகக் கூறுவதில் உண்மையில்லை. அவர்கள் இருப்பது எனக்கு முதலிலேயே தெரியுமே. எனவே அதற்காக, அவரை விட்டு பிரிவது என்ற எண்ணத்துக்கே இடமில்லை," என்று நடிகை நயன்தாரா கூறினார்.
நயன்தாரா மீதுள்ள காதலால் மனைவியை திட்டமிட்டு விவாகரத்து செய்துவிட்டவர் பிரபு தேவா. ஆனால் இப்போது நயன்தாரா - பிரபுதேவா இருவருக்குமே பிரச்சினை வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை அவர் ரகசியமாக பார்த்ததால் கோபித்துக் கொண்ட நயன்தாரா, பிரபு தேவாவை நடுத்தெருவில் நிறுத்திவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்து நயன்தாரா மட்டும் கடந்த இரு தினங்களாக பேட்டி கொடுத்து வருகிறார். ஆனால் பிரபு தேவா செல்போனைக் கூட அணைத்துவிட்டு, மும்பையில் ஷூட்டிங்கில் மூழ்கிவிட்டாராம்.
இந்த நிலையில், பிரபுதேவா தன் குழந்தைகளை முழுமையாக விலகி வந்தால்தான் திருமணம் என்று நயன்தாரா பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் அதையும் நயன்தாரா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "எனக்கும், பிரபுதேவாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. எங்களுக்கு இடையே உறவு முன்பைவிட பலமாக இருக்கிறது. நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம்.
அவருக்கு குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும். குழந்தைகள் எனக்கு பிரச்சினை இல்லை. பிரபுதேவாவை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்.
எங்களை பற்றி வதந்திகள் பரவுவது புதிது அல்ல. நிறைய பார்த்து விட்டோம். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எங்கள் திருமண தேதியை விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.

15 அக்டோபர் 2011

பிரபுதேவா நயன் திருமணம் நிறுத்தம்?

நடிகை நயன்தாரா மலையாள நடிகர் மோகன்லாலை காதலித்து பின்னர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிம்புவை காதலித்து பிரிந்தார். இதையடுத்து நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவை காதலித்து திருமணம் வரை வந்தது. இப்போதும் அந்த காதலும் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
நயன்தாரா -பிரபுதேவா காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.
இறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.
இதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.
இதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா. மும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிரடி மாற்றம் குறித்து சொல்லப்படும் காரணம் : முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா.
சென்னை வரும் போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.
சமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார்.
பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார். மேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம்.
இதையடுத்து பிரபுதேவா - நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக பேசப்படுகிறது.

14 அக்டோபர் 2011

ஆள் வைத்து மிரட்டும் புவனேஸ்வரி!

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டால் நடிகை புவனேஸ்வரி ஆள் வைத்து மிரட்டுகிறார் என்று சென்னை ஐகோர்ட்டில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த குருநாதன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், டி.வி. தொடர்களில் நடித்து வருவதாக நடிகை புவனேஸ்வரி என்னிடம் தெரிவித்தார். மேலும் டி.வி. தொடர்களை அவரே தயாரித்து வெளியிட இருப்பதாகவும், அதற்கு தேவையான பணம் தன்னிடம் இல்லை என்றும் கூறினார். எனவே இதற்காக ரூ.1.50 கோடி தொகையை கடனாக தரவேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான் அவர் கேட்ட தொகையை வழங்கினேன். ஆனால் அவர் டி.வி. தொடர் எதையும் தயாரிக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். இதனையடுத்து கடனாக கொடுத்த தொகையை திருப்பிக்கேட்டேன். ஆனால் அவர் தரமறுத்துவிட்டார். மேலும் என்னை ஆள்வைத்து மிரட்டினார். இதுபற்றி கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், புவனேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். கடனை தராமல் மிரட்டல் விடுத்த அவர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும், என்று தமது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி, குருநாதனின் மனுவுக்கு இன்னும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்கும்படி கே.கே.நகர் போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.

11 அக்டோபர் 2011

சினிமாவிலும் அம்மாவாகிறார் சிம்ரன்!

தெலுங்குப் படம் ஒன்றில் அம்மா வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை சிம்ரன்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கனவு தேவதையாகத் திகழ்ந்த சிம்ரன், திருமணத்துக்கு பின் பட வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் கதாநாயகி வேடம் வந்தால் நடிப்பேன் என்று அடம் பிடித்துவந்தார்.
ஆனால் அக்கா, அண்ணி வாய்ப்புகளே வந்தன. அந்த வேடங்களிலும் சில படங்களில் நடித்தார். அப்போது அம்மா வேடத்தில் நடிக்க பலர் அழைத்தனர். அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை. அம்மா வேடத்தில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்து வந்தார்.
தொடர்ந்து வாய்ப்புகளே இல்லாமல் போனதால் தற்போது அவர் பிடிவாதம் தளர்ந்துள்ளது.
தெலுங்கு படமொன்றில்அம்மா வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம். இவருக்கு மகனாக நடிப்பவர் உபேந்திரா. இருவரும் ஏற்கனவே சத்யம் படத்தில் நடித்துள்ளனர். உபேந்திராவுக்கு ஐம்பது வயதுக்கு மேல்! அவருக்கு அம்மாவாக நடிக்க சிம்ரன் ஒப்புக்கொண்டது திரையுலகில் ஒரு சின்ன ஆச்சர்யம்தான். ஆனால் பெரிய தொகையை இதற்கு சம்பளமாகப் பேசியுள்ளார் சிம்ரன் என்ற தகவல் தெரியவந்ததும் அந்த ஆச்சர்யமும் காணாமல் போய்விட்டது.
சினிமா உலகில் பணத்துக்குதானே முதலிடம்!

09 அக்டோபர் 2011

மாமனார் கொடுத்த பரிசு!

நடிகை ரம்பாவின் மகள் லான்யாவுக்கு அவரது அண்ணன் வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை பரிசாகக் கொடுத்து அசத்தியிருக்கிறாராம். ரம்பாவுக்கு என்ன அவ்வளவு பெரிய புள்ளையா இருக்கு என்று நினைக்க வேண்டாம். லான்யா 8 மாதக் குழந்தை.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். சமஸ்கிருதத்தில் லான்யா என்றால் தேவதை என்று பொருளாம்.
குழந்தை நல்லபடியாக பிறந்தால் திருப்பதி கோவிலுக்கு வருவதாக வேண்டிக் கொண்ட ரம்பா, லான்யாவுடன் இந்தியாவுக்கு வந்தார். திருப்பதி உள்பட பல கோவில்களுக்கு சென்று குட்டி தேவதையைத் தந்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏற்கனவே குளிருக்குப் பெயர்போன கனடாவில் குளிர்காலம் முடியும் வரை இந்தியாவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளார். அவரது கொலுக், மொலுக் மகளைப் பார்க்க பல திரை நட்சத்திரங்கள் ரம்பா வீட்டுக்கு வந்து செல்கிறார்களாம்.
இந்நிலையில் ரம்பாவின் அண்ணனும், தயாரிப்பாளருமான வாசு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர்-ஜாக்குவார் காரை 8 மாதக் குழந்தை லான்யாவுக்கு பரிசாகக் கொடுத்துள்ளாராம்.

07 அக்டோபர் 2011

பூச்சியை ருசித்து சாப்பிட்ட அசின்!

நடிகர் சல்மான் கான் அசினிடம் சவால்விட்டு அதில் தோற்றுப்போனார்.
நடிகர் சல்மான் கானும். அசினும் சேர்ந்து ரெடி என்ற சூப்பர்ஹிட் படத்தில் நடித்தனர். அந்த படப்பிடிப்பின்போது சல்மான் அசினிடம் சவால்விட்டார். அந்த சவாலில் இப்போது சல்மான் தோற்றுவிட்டாராம்.
அந்த சுவாரஸ்யமான சவால் பற்றி அசின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
அது குறித்து அசின் கூறுகையில், "சல்மான் ரெடி படப்பிடிப்பின் போது தான் பாங்காக் வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்த பூச்சியை வைத்திருந்தார். திடீர் என்று இந்த பூச்சியை நீங்கள் சாப்பிடுங்கள் பார்ப்போம் என்று சவால்விட்டார்.
பொதுவாக பெண்கள் பூச்சிகளைப் பார்த்தாலே ஓடுவார்கள். அதனால் தான் அவர் தைரியமாக சவால்விட்டார். ஆனால் நானோ சிறிதும் பயப்படாமல் அந்தப் பூச்சியை சாப்பிட்டேன். அதைப் பார்த்து அவர் அசந்துவிட்டார். நீங்கள் பூச்சியைப் பார்த்து கத்தி, கூச்சல் போடுவீர்கள் என்று நினைத்தேன் என்றார்.
நான் சல்மான் கானை மதிக்கிறேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் நான் ஒன்றும் அவரைக் காதலிக்கவில்லை. அவரைக் காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்ததில்லை. அவர் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன்," என்றார்.

03 அக்டோபர் 2011

முத்தமிட வைத்த நிஷா!

காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால் இப்போதே படு தெளிவாக இருக்கிறார். ஹீரோக்களுடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதில் இவர் நல்ல தேர்ச்சியடைந்து வருகிறாராம்.
காஜல் அகர்வாலின் தங்கச்சியான நிஷா அகர்வால்,இஷ்டம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அக்கா வழியில் தமிழில் தனி முத்திரை பதிக்க ஆர்வமாக இருக்கும் இஷா, இஷ்டம் படத்தில் விமலுடன் இணைந்து நடித்து வருகிறார்.
என்னதான் தான் காஜல் அகர்வாலின் தங்கச்சி என்றாலும் அக்காவும் தனக்கு ஒரு போட்டிதான் என்கிறார் இஷா. நடிப்பு என்று வந்து விட்டால் எல்லோருமே போட்டிதான். அந்த வகையில் காஜலும் எனக்குப் போட்டிதான் என்கிறார் இஷா.
சரி மேட்டருக்கு வருவோம், இஷ்டம் படத்தின் ஒரு காட்சியை சென்னை அருகே திரிசூலம் மலையில் வைத்துப் படமாக்கினர். அது ஒரு முத்தக் காட்சி. ஆனால் நிஷா உதட்டோடு உதடு பொருத்தி நடிக்க விமல் ரொம்பவே தயங்கினாராம்.
இதைப் பார்த்த நிஷாதான், ரொம்ப தைரியப்படுத்தி பரவாயில்லை, நடிங்க, முத்தமிடுங்க என்று தெம்பூட்டி விமலை தனது உதட்டில் முத்தமிட வைத்தாராம். இதைப் பார்த்து யூனிட்டே பாராட்டியதாம்.
இதெப்படி இருக்கு...!