பக்கங்கள்

29 டிசம்பர் 2011

பாங்காக் போகிறார் திரிஷா.

சமரன் படத்துக்காக பாங்காக் போகின்றனர் நடிகர் விஷாலும் ஹீரோயின் த்ரிஷாவும்.
சிம்புவின் அதிகப்பிரசங்கித்தனத்தால் பெரும் தோல்வியைத் தழுவிய ஒஸ்தி படத்துக்குப் பிறகு பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கும் புதிய படம் சமரன். விஷால் - த்ரிஷா ஜோடியாக நடிக்க, தீராத விளையாட்டுப் பிள்ளை படம் தந்த திரு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சமரன் என்றால் போர்வீரன் என்று அர்த்தம். பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணிக் கலைஞர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் கதை இயல்பானது. ஒரு சராசாரி மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள், அதனால் அவன்படும் பாடுகள்தான் இந்தப் படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை பார்க்காத புதிய அனுபவத்தை இந்தப் படம் உங்களுக்குத் தரும் என்கிறார் இயக்குநர் திரு. இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சாலக்குடியில் 15 நாட்கள் நடந்தது.
அடுத்த கட்டப் படப்பிடிப்பு வரும் ஜனவரி 20-ந்தேதி முதல் தாய்லாந்தில் 50 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. மேலும் ஐரோப்பாவின் சரித்திர பிரசித்தி இடங்களில் சண்டைக் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

27 டிசம்பர் 2011

மீண்டும் வருகிறார் ஷெரின்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபாயம் படம் மூலமாக திரைக்கு வருகிறார் ஷெரீன்.
ஏன் இந்த இடைவெளி என்று அவரிடம் கேட்டோம்?
இரண்டரை வருடம் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். ஓவியம் மற்றும் ஆயில்பெயிண்டிங் பற்றிய படிப்பு அது. அதில் தேறிய பிறகு மீண்டும் 'அபாயம்' படம் மூலம் பிரவேசம் செய்கிறேன். இரண்டு மணி நேர படம். எப்ப ஆரம்பமானது.
எப்ப முடிந்தது என்று தெரியாத அளவுக்குப் படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ணசாமி.
ஓவியக் கண்காட்சி வைப்பீர்களா?
இன்னும் முழுமையாக பயிற்றி எடுத்து நிறைய பெயிண்டிங் பண்ணிய பிறகு கண்காட்சி வைப்பேன்.
தமிழில் மீண்டும் நடிப்பீர்களா?
நிச்சயம் நடிப்பேன். நல்ல கதை, நல்ல டைரக்டர் என்றால் நாளைக்கே நான் ரெடி. ஜே.எஸ்.கே. பிலிம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் அபாயம் நிச்சயம் என்னை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்றார் ஷெரீன்.

23 டிசம்பர் 2011

விக்கிரமுக்கு ஈடுகொடுக்க அஞ்சலி தயார்.

விக்ரமுக்கு ஈடுகொடுத்து நடிக்க தயாராகி விட்டேன், என்று நடிகை அஞ்சலி கூறியுள்ளார். நடிகை அஞ்சலி கரிகாலன் படத்தில் விக்ரம் ஜோடியாகியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இது குறித்து அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், விக்ரம் படங்கள் எல்லாமே நல்ல கதையம்சம் உள்ளவை. அவருடன் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்தது. தற்போது அது நிறைவேறியுள்ளது. விக்ரம் திறமையான நடிகர். அவருடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரிய நடிகருடன் இணைந்து நடிப்பது எனக்கு சவாலாகவே இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைக்க தயாராகி வருகிறேன். விக்ரமுடன் ஈடு கொடுத்து நடிக்க கிட்டத்தட்ட தயாராகி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

22 டிசம்பர் 2011

நான் அப்படி நடிக்கவில்லை.

தி டர்ட்டி பிக்சர் படத்தில் ஆபாசமாக நடித்ததாக தன் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகை வித்யாபாலன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதை, த தர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாகி ரிலீசாகியுள்ளது. இதில் சில்க் ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன், நடித்துள்ளார். படத்தில் அவர் ஆபாசமாக நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டதால், அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நல்லகுண்டா போலீசார் வித்யாபாலன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனால் வித்யாபாலன் கைது ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் வித்யா பாலன் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நல்லகுண்டா போலீசார் பதிவு செய்த கிரிமினல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கீழ் கோர்ட்டில் நடக்கும் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு தாக்கல் செய்தார்.

16 டிசம்பர் 2011

நட்சத்திர கோட்டலில் ரிச்சா.

ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியதாக வந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அவரது பாய் பிரெண்ட் - காதலர் என்று சொல்லப்படும் சுந்தர்.
ரிச்சா தன் காதலர் சுந்தர் என்பவருடன் தங்க நட்சத்திர ஓட்டலில் ரூம் கேட்டதும். அதற்கு ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டதால், வேறு ஓட்டலுக்கு போய் ஒன்றாகத் தங்கியதும் சமீபத்தில் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தியாக வந்தது.
யார் இந்த சுந்தர்?
இந்த சுந்தர் வேறு யாரும் அல்ல... மயக்கம் என்ன படத்தில் ரிச்சாவின் பாய் பிரெண்டாக வந்து, பின்னர் காதலியை தனுஷுக்கு தாரை வார்த்துக் கொடுப்பாரே... அவர்தான்.
ரிச்சாவுடன் ஒரே அறையில் தங்கியது குறித்து அவரிடம் கேட்டபோது, "இந்த செய்தியில் அடிப்படை உண்மையே அல்ல. நானும் ரிச்சாவும் நெருக்கமான நண்பர்கள். மயக்கம் என்ன படத்தில் நடித்ததிலிருந்து எங்களுக்குள் நட்பு உள்ளது. அவரை வைத்து நான் எடுத்த போட்டோ ஷூட் படங்களைக் கொடுக்க ஓட்டலுக்குச் சென்றிருந்தேன். ஆனால் அதை மாற்றி செய்தி போட்டுள்ளனர்," என்றார்.

13 டிசம்பர் 2011

தமன்னாவால் குழம்பிய பக்தர்கள்!

பல லட்சம் பக்தர்கள் கூடும் புனித இடமான திருமலைக்கு ஜீன்ஸ் - டி சர்டில் கவர்ச்சியாக வந்து சாமி கும்பிடுவதா என நடிகை தமன்னாவுக்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் தொடர்ந்து முன்னணியில் உள்ளார் நடிகை தமன்னா. ராம் சரண் தேஜாவுடன் நடிக்கு ரச்சா உள்பட 5 தெலுங்கு படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இன்று ரச்சா படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார். ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. பல லட்சம் பக்தர்கள் கூடும் இடத்தில் இப்படி கவர்ச்சி காட்டி வரலாமா என கோவில் நிர்வாகத்தினரைக் கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்துவிட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார்.

தவறி விழுந்த ராம் சரண்:
ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் ஏற்பட்ட நெரிசலில் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை போலீசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார்.

10 டிசம்பர் 2011

அஜித் மீது சிம்புவின் விசுவாசம்.

தல அஜித்தின் தீவிர ரசிகரான சிம்பு, நண்பன் படத்தில் நடிக்க மறுத்தார். விஜய் நடிக்கும் படத்தில் நான் நடித்தால் சிம்பு ரசிகர்கள் என்னை கோபித்துக் கொள்வார்கள் என்று பகீரங்கமாக ஸ்டேட்மெண்ட் விடுத்து பரபரப்பு கிளப்பினார். ஆனால் இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாத விஜய், ஒஸ்தி படத்தின் இசையை கவிஞர் வாலியுடன் சேர்ந்து வெளியிட்டார். தற்போது அஜித் மீதான தனது விசுவாசத்தை நிரூபிக்கும் விதமாக ஒரு அதிரடியான காரியத்தைச் செய்திருக்கிறார் சிம்பு. அஜித்தின் - 50-வது படமான மங்காத்தா படம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. டிசம்பர் 8ம் தேதி சிம்புவின் ஒஸ்தி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகளை அலங்கரிக்கும் ஒரு அதிரடி விளம்பரம்தான் சிம்புவின் தல விசுவாசத்தைக் காட்டுகிறது. மங்காத்தா நூறாவது நாள் கொண்டாடும் நாளில்தான் தனது ஒஸ்தி வெளியாக வேண்டும் என்று சொன்னாராம் சிம்பு. மங்காத்தா வெளியாகி நூறு நாட்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இதை குறிப்பிடும் விதமாக ஒஸ்தி விளம்பரம் டிசைன் செய்யப்படுள்ளது. அஜித் மற்றும் சிம்பு ரசிகர்கள் இந்த விளம்பர யுத்தியை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை!

06 டிசம்பர் 2011

திருமணம் இப்போதைக்கில்லை.

பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.
நடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
சமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது "உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்," என்றார்.
ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது.

04 டிசம்பர் 2011

ரஜனிகாந்தின் தங்கை சினேகா.

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி அடுத்து நடிக்கும் படம் கோச்சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க, கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் வரவிருக்கும் படம் இது.
இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சினேகாவுடன் பேசி வருகின்றனர். ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் என்றும் செய்திகள் வந்துள்ளன.
இதையெல்லாமே இன்னும் சில தினங்களில் தெளிவாக்கிவிடுவோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று சௌந்தர்யா ரஜினி தெரிவித்துள்ளார்.