பக்கங்கள்

27 டிசம்பர் 2011

மீண்டும் வருகிறார் ஷெரின்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அபாயம் படம் மூலமாக திரைக்கு வருகிறார் ஷெரீன்.
ஏன் இந்த இடைவெளி என்று அவரிடம் கேட்டோம்?
இரண்டரை வருடம் படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றுவிட்டேன். ஓவியம் மற்றும் ஆயில்பெயிண்டிங் பற்றிய படிப்பு அது. அதில் தேறிய பிறகு மீண்டும் 'அபாயம்' படம் மூலம் பிரவேசம் செய்கிறேன். இரண்டு மணி நேர படம். எப்ப ஆரம்பமானது.
எப்ப முடிந்தது என்று தெரியாத அளவுக்குப் படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கிறார் கிருஷ்ணசாமி.
ஓவியக் கண்காட்சி வைப்பீர்களா?
இன்னும் முழுமையாக பயிற்றி எடுத்து நிறைய பெயிண்டிங் பண்ணிய பிறகு கண்காட்சி வைப்பேன்.
தமிழில் மீண்டும் நடிப்பீர்களா?
நிச்சயம் நடிப்பேன். நல்ல கதை, நல்ல டைரக்டர் என்றால் நாளைக்கே நான் ரெடி. ஜே.எஸ்.கே. பிலிம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் அபாயம் நிச்சயம் என்னை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என்றார் ஷெரீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக