பக்கங்கள்

30 அக்டோபர் 2010

விமானம் தாமதம்,கடுப்பான லட்சுமி ராய்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்குப் பயணமான லட்சுமிராய், தனியார் விமான சேவை குளறுபடியால் தன் லக்கேஜைத் தொலைத்து, விமானத்தையும் தவறவிட்டார்.
இதனால் சொந்த ஊருக்குப் போகாமல் மும்பையில் சகோதரி வீட்டிலேயே தங்கிவிட்டார்.
இதுகுறித்து லட்சுமிராய் கூறுகையில், "தீபாவளி பண்டிகை கொண்டாட எனது சொந்த ஊருக்கு செல்ல ஆசைப்பட்டேன். பெல்காம் செல்ல நேரடி விமானம் கிடையாது. சென்னையில் இருந்து பெங்களூர் சென்று, அங்கிருந்து மும்பை போய் காரில் பெல்காம் செல்லத் திட்டமிட்டேன்.
சென்னையில் தனியார் விமான நிலையத்தில் காலை 5.45 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், 7.30 மணிக்குதான் கிளம்பியது. தாமதம் காரணமாக நான் பெங்களூரில் இருந்து மும்பை செல்லும் விமானத்தை தவறவிட்டு விடுவேனே என்று அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்களோ சென்னை விமானம் பெங்களூர் போய் சேர்ந்த பிறகு தான் மும்பைக்கு செல்லும் விமானம் புறப்படும் என்றனர்.
ஆனால் பெங்களூர் சென்று இறங்கியபோது மும்பை விமானம் முன் கூட்டியே கிளம்பி போய் இருந்தது. நான் அதிர்ந்து போனேன். விமான நிலைய அதிகாரிகள் நாளை இதே நேரத்தில் கிளம்பும் விமானத்தில் உங்களை மும்பை அனுப்பி வைக்கிறோம் என்றனர். பெங்களூரிலிருந்து மும்பை போக ஒரு நாள் பெங்களூரில் காத்திருக்க முடியுமா?
எனக்கு ஆத்திரமாக வந்தது. தயாரிப்பு நிறுவனமொன்றில் சொல்லி மும்பைக்கு வேறு டிக்கெட் எடுத்து பயணமானேன். விமான நிலையத்தில் இறங்கியபோது எனது லக்கேஜ் மாயமாகி இருந்தது. வாழ்க்கையே வெறுத்துப் போனது.
இதனால் என் தீபாவளி ட்ரிப்பையே ரத்து செய்துவிட்டேன். மும்பையில் உள்ள எனது சகோதரி வீட்டில்தான் இந்த ஆண்டு தீபாவளி...", என்றார் கோபத்துடன்.

29 அக்டோபர் 2010

எல்லோரும் பாராட்டுறாங்க!-ரீமா சென்.

ரீமா சென்னுக்கு இன்று பிறந்தநாள். முன்னெப்போதையும் விட சந்தோஷமாக இந்த பிறந்தநாளைக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
அப்படியென்ன விசேஷம் இந்த ஆண்டு மட்டும்?
"காரணம் இருக்கே... இந்த ஆண்டு நான் நடித்த ஆக்ரோஷ் இந்திப் படம் வெளியாகியுள்ளது. இதில் எனக்குத்தான் அதிக முக்கியத்துவம். படம் வெளியானதும் பாலிவுட்டின் பெரிய டைரக்டர்கள் எல்லாம் என்னை கூப்பிட்டுப் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.
இதுவரை என்ன போன் நம்பரே தெரியாமலிருந்த டைரக்டர்கள் கூட, தெரிந்தவர்களிடம் நம்பர் வாங்கி என்னை கூப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்க..." என்கிறார் ரீமா குஷியாக.
அப்போ கோலிவுட் அவ்வளவுதானா... இனி இங்குள்ள ரசிகர்களை மறந்துவிடுவாரா?
"இல்லையில்லை... விரைவில் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கப் போகிறேன்...," என்றார்.
பிறந்த நாள் கொண்டாட்டமெல்லாம் எப்படி?
"என் தங்கை திஷா ஒரு பெரிய பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருக்கா. இந்த இரவு விருந்துக்கு 50பேரை மட்டும் கூப்பிட்டிருக்கேன்...", என்றார்.

27 அக்டோபர் 2010

விக்ரம் - அனுஷ்கா ஜோடி சேரும் தெய்வ மகன்!

மதராஸபட்டினம் புகழ் விஜய் இயக்க, விக்ரம் - அனுஷ்கா முதல்முறையாக ஜோடி சேரும் தெய்வ மகன் படப்பிடிப்பு துவஙகியது.
அனுஷ்காவின் உயரமும், வாளிப்பான உடலமைப்பும்தான் அவரது ப்ளஸ் என்பதால் தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் தமிழிலோ அவரது உயரமே எதிரியாகிவிட்டது.
உயரம் குறைந்த நாயகர்கள், அரையடி ஸ்டூல் அளவுக்கு ஷூ போட்டுக் கொண்டு அவருடன் நடிக்கவேண்டிய நிலை உள்ளதால், 'அனுஷ்காவா, வேண்டாம்... பக்கத்தில் நின்று பேசக் கூட முடியாது (?!)' என்று ஓரங்கட்டுகிறார்களாம். இப்படி அனுஷ்கா இழந்த வாய்ப்புகள் நான்கைந்து இருக்கும் என்கிறார்கள்.
ஆனால் இயக்குநர் விஜய்க்கு அந்த கஷ்டமில்லை தெய்வமகன் படத்தில். இந்தப் பட நாயகன் விக்ரமுக்கு சரியான ஜோடி எனும் அளவு படுபாந்தமாக அமைந்துள்ளதாம் இருவரின் பொருத்தமும்.
இந்தப் படத்தில் 7 வயது மகளை மீட்கப் போராடும் மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார் விக்ரம். அவருக்கு உதவும் நேர்மையான வக்கீலாக வருகிறாராம் அனுஷ்கா. 2001-ல் வெளியான 'ஐயாம் ஸாம்' என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் இது என்கிறார்கள்.

25 அக்டோபர் 2010

நீயா?நானா?பிரியாமணி,விமலாராமன் மோதல்!

தெலுங்குப் படம் ஒன்றின் க்ளைமாக்ஸ் காட்சியில் யாருக்கு அதிக முக்கியத்துவம் என்பதில் ப்ரியாமணிக்கும் விமலா ராமனுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
விஜய் என்ற புதிய இயக்குநர் இயக்கும் தெலுங்குப் படம் ஒன்றில் ப்ரியாமணியும் விமலா ராமனும் நடிக்கிறார்கள்.
சுமந்த் நடிக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் ஆரம்பத்தில் ப்ரியாமணியை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. அதுவரை குழப்பமின்றி போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கில், விமலா ராமன் வந்ததும் பிரச்சினை செய்ய ஆரம்பித்தாராம் ப்ரியாமணி. .
எனக்கு என்ன ரோல், விமலா ராமனுக்கு என்ன ரோல்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டாராம்.
க்ளைமாக்ஸில் தன்னை விட விமலா ராமனுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவம் என்பதால் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டாராம் ப்ரியாமணி.
"நான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகை ... நானும் அவளும் ஒண்ணா... நான் ஷூட்டிங்குக்கு வரலேன்னா என்ன பண்ணுவீங்க?", என்று ப்ரியாமணி எகிற, "உங்களுக்கு தரப்பட்ட முக்கியத்துவத்தைத்தான் ராவணன்ல பார்த்தோமே... அதுக்கு இது ஒண்ணும் குறைஞ்சிடலை... போங்க", என்று பதிலுக்கு எகிறியிருக்கிறார் இயக்குநர்.
விஷயம் கேள்விப்பட்ட விமலா ராமன், "பருத்தி வீரன்ல யார் நடிச்சிருந்தாலும் இந்த தேசிய விருது கிடைச்சிருக்கும். ஏன்னா அது எந்த நடிகையோட, நடிகரோட படமும் இல்லை. அமீர் சார் படம்...!" என தன் பங்குக்கு குத்த ஆரம்பித்துள்ளார்.

24 அக்டோபர் 2010

மன்மதன் அம்பு பிரமாண்ட வெளியீடு!

மன்மதன் தன் அம்பை நாணேற்றித் தயாராக வைத்திருக்கிறாராம். எந்த நிமிடத்திலும் எய்யப்படலாம் என்று சொல்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில் முத‌ல் முறையாக கமல்-த்ரிஷா இருவரும் ஜோடி சேர்ந்திருக்கின்றனர்.
எந்திரனைப் போல் இப்படத்தையும் பெரிய அளவில் வெளியிடத் திட்டம் வைத்திருக்கிறார்களாம். அதற்காக இந்தி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது இப்படம்.
எந்திரனைவிட ஒரு தியேட்டரிலாவது அதிகமாக ரீலீஸ் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் செயலில் இறங்கியிருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. அதற்கான விளம்பரத்துக்காகவே பல கோடிகளைச் செலவிட ஆயத்தமாகி வருகிறார்களாம்.

21 அக்டோபர் 2010

மீனாட்சியின் கவர்ச்சி உடையும்; பார்த்திபனின் ஏடாகூட கமெண்ட்டும்!

பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி.

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.
அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.
மீனாட்‌சியின் உடை பற்றி படத்தின் டைரக்டரும் ஹீரோவுமான கரு.பழனிப்பன் பேசுகையில், மீனாட்சி அணிந்து வந்திருக்கும் உடை எல்லோரையும் கவர்ந்து இழுக்கிறது. இந்த பங்ஷனுக்‌கு எப்படி வரணும்னு நான் மீனாட்சிக்கு போன் பண்ணி சொல்ல சொன்னேன். அசிஸ்டென்ட் டைரக்டர்கள் போன் பண்ணி நல்லா டிரஸ் பண்ணிட்டு வாங்கன்னு சொல்லியிருந்தாங்க. அப்புறமும் இப்படி… என்ன செய்ய?, என்றார். அதோடு படத்தில் இடம்பெறும் ஒரு வசனத்தை குறிப்பிட்டு பேசினார். “பையன் ஒழுங்கா படிக்காம மக்கா இருந்தான்னா போவட்டும். அவனை சினிமா ஹீரோவாக்கிட்டு போறேன்” என்பதுதான் அந்த டயலாக்காம்.

20 அக்டோபர் 2010

கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார்! நாயகிகளின் புது பாலிஸி!!

தமிழ் சினிமா நாயகிகளில் பலரும் சமீப காலமாக கவர்ச்சியை நம்பித்தான் காலத்தை ஓட்டுகிறார்கள் என்பதில் இருவேறு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. முன்பெல்லாம் சினிமாக்களில் கவர்ச்சிக்கு என்று தனி நாயகி இருப்பார்.
அவர் காமெடி நடிகருக்கு ஜோடியாகவோ, விலைமாது கேரக்டரிலேயோ அல்லது ஏதாவது தள்ளுவண்டி, இட்லிக்கடைக்காரியாகவோ நடிப்பார். அதற்கு பிறகு வந்த சினிமாக்களில் ஒரு பாடல் குத்துப்பாட்டாகவும், அந்த குத்துப்பாட்டில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டமும் இடம்பெற்றன.
ஆனால் சமீப காலமாக கவர்ச்சிக்கு தனி நடிகை தேவையில்லை என்று சொல்கிற அளவுக்கு படத்தின் நாயகிகளே கவர்ச்சி உடையில் கலக்க ஆரம்பித்துள்ளனர்.
சினிமாவில் நுழைந்தபோது பாவாடை தாவணியணிந்து பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்த நயன்தாரா பில்லா படத்தில் நீச்சல் உடையணிந்து ரசிகர்களை கிறங்கடித்தார். அதேபோல புதுமுக நடிகைகள் பலரும் எதற்கும் ரெடி என்கிற பாலிஸியுடன்தான் சினிமாவில் நுழைகிறார்கள். இதனால் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.
எத்தனை புதுமுகங்கள் வந்தாலும், எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் கவர்ச்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பாலிஸியுடன் இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ரீமா சென். பட வாய்ப்புகளுடன் தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் பல கண்டிஷன்களை போடும் ரீமா கடைசியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு வந்த வாய்ப்புகளையெல்லாம் பல காரணங்களுக்காக தட்டிக்கழித்த அவர், ஆக்ரோஷ் என்ற இந்திப்படத்தில் நடித்தார்.
அந்த படம் எதிர்பார்த்ததை விட பெரிய ஹிட் ஆகி விட்டதால் இனி மும்பையை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாராம்.

19 அக்டோபர் 2010

காதலியை குரூப் செக்ஸுக்கு அழைத்த இளவரசர் ஹரி!

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் இளைய மகன் இளவரசர் ஹாரி. 26 வயதான இவர் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக இருக்கிறார். இவர் ஜிம்பாப்வேயை சேர்ந்த 25 வயது பெண் செல்சி டேவியை காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையே 7 ஆண்டு காலமாக காதல் இருந்தது. இந்த காதல் இப்போது காணாமல் போய்விட்டது. இருவரும் பிரிந்து விட்டார்கள்.
செல்சி இப்போது வீட்டுமனைகளை உருவாக்கும் டான் பிலிப்சன்னை காதலிக்க தொடங்கி இருக்கிறார். இளவரசர் ஹாரி இப்போது லண்டன் இரவு விடுதிகளில் பல பெண்களுடன் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இவர்கள் பிரிந்ததற்கு காரணம் என்ன என்பது இப்போது தெரியவந்து உள்ளது.
மற்ற பெண்களுடன் சேர்ந்து (குரூப் செக்ஸ்) தன்னுடன் சந்தோஷமாக இருக்கும்படி அவர் காதலியை கேட்டுக்கொண்டார். இதை கேட்டு கொதித்து போன செல்சி, ஹாரியை ஒரேயடியாக உதறிவிட்டு போய்விட்டார்.

17 அக்டோபர் 2010

நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா!

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒருபோதும் அவ்வளவு சம்பளம் கேட்கவில்லை என்கிறார் தமன்னா.
தமிழ் சினிமாவின் ஹாட் ஸ்டாராக திகழ்பவர் தமன்னா. கை நிறையப் படங்களுடன் தமிழ், தெலுங்கில் பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் முன்னணிக் குதிரை. இந்த நிலையில் தமன்னா 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதை மறுக்கிறார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறுகையில்,
தமிழில் கார்த்தியுடன் சிறுத்தை, தெலுங்கில் அல்லு அர்ஜுன், நாக சைதன்யா படங்கள் என 3படங்களில் நடித்து வருகிறேன்.
அடுத்து தமிழில் தனுஷ் ஜோடியாக ஒரு படம், தெலுங்கில் ஜூனியர் என்.டிஆர், ராம் ஆகியோருடன் 2 படங்கள் உள்ளன. இவற்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை கால்ஷீட் இல்லை. ஆனால் சிலர் என்னிடம் வந்து கால்ஷீட் கேட்டனர். எனது நிலையைச் சொல்லி மறுத்து விட்டேன். இதனால் கோபமாகி நான் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.
கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன். அதைப் புரிந்து கொள்ளாமல் இப்படி வதந்தி பரப்புவது நியாயமா என்று விசனப்படுகிறார் தமன்னா.

13 அக்டோபர் 2010

5 படங்கள் ஒரு ஹீரோ!

ஜீவா தற்சமயம் 4 படங்களில் நடித்து வருகிறார். இதில் சாய்ரமணி இயக்கும் சிங்கம் புலியில் ஜீவாவுக்கு இரட்டை வேடம். வழக்கறிஞராகவும் மீன் வியாபாரியாகவும் அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
கே.வி ஆனந்தின் கோ, ஆர். கண்ணன் இயக்கத்தில் வந்தான் வென்றான், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ரவுத்திரம் ஆகியவை மற்ற மூன்று படங்கள்.
ஷங்கரின் 3 இடியட்ஸ் படத்தில் இவரது கேரக்டர் நிச்சயமாகும் பட்சத்தில் இந்த லிஸ்ட் 5 படங்களாக மாறும். ஜமாய்ங்க ஜீவா.

11 அக்டோபர் 2010

நயன்தாரா மேனேஜர் – பிஆர்ஓ நீக்கம் – பல லட்சம் மோசடி?

தனக்கு மேனேஜராக இருந்த அஜீத் மற்றும் பிஆர்ஓ ஜான்சன் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளார் நயன்தாரா.
இதன் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் திரையுலகை அதிர வைத்துள்ளது.
பிரபலமான அந்த ஜவுளிக்கடை விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். ஆனால் நயன்தாராவிடம் அந்தத் தொகையை காட்டாமல் ரூ 60 லட்சம்தான் சம்பளம் பேசப்பட்டதாக மேனேஜர் அஜீத் மற்றும் பிஆர்ஓ சொன்னதாகக் கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் சந்தேகம் கொண்ட நயன்தாரா, நேரடியாக சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை உரிமையாளரிடமே தொடர்பு கொண்டு விசாரிக்க, அவரும் முதலில் மழுப்பி, பின்னர் உண்மையைக் கூறியுள்ளார்.
கோபத்தை அடக்கிக் கொண்ட நயன்தாரா, மீண்டும் மேனேஜரையும், பிஆர்ஓவையும் அழைத்து விசாரிக்க அவர்கள் தொடர்ந்து அந்த ரூ 60 லட்சம் கதையையே தொடர்ந்தார்களாம்.
கஷ்டப்பட்டு நடிப்பது நான், சம்பளம் பேசுவதாகக் கூறி எனக்கே தெரியாமல் பணத்தை அபகரிப்பதா?”, என்று கோபம் காட்டிய நயன்தாரா, உடனடியாக இருவரையும் நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுவரை நயன்தாரா தொடர்பான அனைத்துப் படங்களுக்கும் இந்த இருவர்தான் சம்பளம் பேசினார்களாம். அதிலெல்லாம் எந்த அளவு பணம் கணக்கில் வராமல் போனதோ என்று அங்கலாய்த்தாராம் நயன். ஆனால் சட்டப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது (திருடனுக்கு தேள் கொட்டிய கதை!) என்ற சூழல் காரணமாக பல்லைக் கடித்துக்கொண்டு அமைதி காக்கிறாராம் நயன்தாரா.
ஆனால் இதுகுறித்து அஜீத்திடம் கேட்டபோது, நானாகவே நயன்தாராவிடமிருந்து விலகி வந்துவிட்டேன் என்றும், பணவிவகாரம் பற்றிய எதுவும் உண்மையில்லை என்றும், கூறினார்.
சம்பந்தப்பட்ட பிஆர்ஓவைத் தொடர்பு கொண்டால், அவர் போனையே எடுக்கவில்லை!

09 அக்டோபர் 2010

எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்!

சினிமா நகைச்சுவை நடிகரும், அதிமுகவில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
69 வயதாகும் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் 1986ம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படத்தில் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.
இவர் பாட்டி சொல்லைத் தட்டாதே, மாப்பிள்ளை, உழைப்பாளி, ஆத்தா உன் கோவிலிலே, சின்னப்பதாஸ், காக்கை சிறகினிலே, கதாநாயகன், நாடோடி பாட்டுக்காரன், தங்கைக்கோர் கீதம், வண்டிச்சோலை சின்னராசு, தங்கமான புருஷன், உனக்காக எல்லாம் உனக்காக, உயிருள்ளவரை உஷா, காதல் ரோஜாவே, ஒன்ஸ்மோர், புதிய மன்னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

08 அக்டோபர் 2010

ஜெனிலியாவுக்குப் பெருசு பல்லு – கே.எஸ்.ரவிக்குமார் விட்ட ‘ஜொள்ளு’!

ஜெனிலியாவுக்கு பல் வரிசை பெரிசா இருந்தாலும், ஆள் பிரமாதமான அழகுடன் இருக்கிறார் என்று ஜெனிலியாவின் பல்லை வைத்து உத்தமபுத்திரன் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஜொள்ளினார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
வழக்கமாக பார்த்திபன்தான் இப்படி அக்கு வேறு ஆணி வேறாக ஹீரோயின்களின் அழகை விமர்சித்து புளகாங்கிதப்படுவார். அந்த பெருமைக்குரிய வரிசையில் நேற்று தன்னையும் நுழைத்துக் கொண்டார் கே.எஸ்.ரவிக்குமார்.
ரெடி என்ற பெயரில் தெலுங்கில் எடுத்த படத்தை ரீமேக் செய்துள்ளனர் உத்தமபுத்திரன் என்ற பெயரில். தனுஷ்தான் நாயகன், ஜெனிலியாதான் நாயகி. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. புன்னகை இளவரசி சினேகா குத்துவிளக்கை ஏற்றி வைத்து மங்களகரமாக விழாவைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் ஜெனிலியாவின் அழகைப் புகழ்ந்து அகமகிழ்ந்தார். அவர் பேசுகையில்,
படத்தின் கதாநாயகி ஜெனிலியா, அழகான நடிகை. முத்து பல் வரிசை என்று சொல்வார்கள். அவருக்கு பல்லுதான் கொஞ்சம் பெரிசு. என்றாலும், அழகாகத்தான் இருக்கிறார் என்றார் ரவிக்குமார்.
இவராவது பரவாயில்லை, ஜெனிலியாவைப் போல ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை என்று ஒட்டுமொத்தமாக ஜொள்ளி குதூலகலித்தார் விவேக்.
அவர் பேசும்போது, ஜெனிலியாவை பார்த்தால், பக்கத்து வீட்டு பெண் போல் தெரிகிறார் என்று சொன்னார்கள். பக்கத்து வீட்டில், இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததில்லை. ஜெனிலியா, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் மற்ற கதாநாயகிகள் மாநில அழகிகள் என்றால், இவர் இந்திய அழகி என்றார் விவேக்.
சென்னையில், மழையால் ஈரம் என்றால், இவர்கள் பேசியதால் அந்த மேடையே ஓவர் ஈரமாகிப் போச்சு போங்கோ…!

07 அக்டோபர் 2010

நயன், பிரபுதேவா ஜோடியாக சுற்றுவதை தடை செய்க-ரமலத் அதிரடி.

தனது கணவரை நடிகை நயனதாராவின் பிடியிலிருந்து மீட்டுத் தரக் கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள பிரபுதேவாவின் மனைவி ரமலத், இன்று புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், வழக்கில் நயனதாராவையும் சேர்க்க வேண்டும். பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும். இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
தனது கணவருடன் நடிகை நயனதாரா கள்ளத் தொடர்பு வைத்துள்ளார். அவரிடமிருந்து பிரபுதேவாவை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் நான் விவாகரத்துக்கு உடன்பட மாட்டேன் என்று கூறி குடும்ப நல கோர்ட்டை அணுகியுள்ளார் ரமலத்.
ரமலத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் பிரபுதேவா அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து வக்கீல்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் இன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் ரமலத். இதற்காக இன்று குடும்பநல கோர்ட்டுக்கு வந்த ரமலத்துடன் அவரது குழந்தைகளும் வந்திருந்தனர்.
வழக்கறிஞர் ஆனந்தன், ரமலத் சார்பில் தாக்கல் செய்த மனுவில்,
நானும் பிரபுதேவாவும் கடந்த 9.8.1995ல் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமணம் இந்து முறைப்படி நடந்தது. எங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது.
பிரபுதேவா-நயனதாரா கள்ளக்காதல்
ஆனால் நயன்தாரா வருகைக்கு பிறகு பிரபுதேவா நடவடிக்கைகள் மாறின. அவரை வைத்து எனது கணவர் வில்லு என்ற படத்தை இயக்கினார். அப்போது நெருக்கமாக பழகினர். அவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தற்போது பிரபுதேவா வீட்டுக்கு வருவதில்லை. நயன்தாராவுடனேயே இருக்கிறார்.நயன்தாராவை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேட்டி அளித்துள்ளார். நயன்தாராவும் என்னை தொடர்பு கொண்டு இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்.
நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்து கொள்வது அநீதி, நானும் என் குழந்தைகளும் பிரபுதேவாவை சார்ந்து வாழ்கிறோம்.
கல்யாணத்திற்கு தடை விதிக்க வேண்டும்
எனவே பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்து கொள்வதற்கு இக்கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க வேண்டும். நயன்தாராவும், பிரபுதேவாவும் பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக சென்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் பேட்டி அளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும்.
தங்களை கணவன், மனைவியாக பாவித்து பேட்டி அளிப்பதை தடை செய்ய வேண்டும். நயன்தாராவை இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார் ரமலத்.
சற்றும் மனம் தளராத பிரபுதேவா-டிசம்பரில் கல்யாணமாம்!
ரமலத் இப்படி சட்ட ரீதியான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளபோதிலும் நயனதாரா மீதான மோகத்தை பிரபுதேவா சற்றும் குறைத்துக் கொள்வது போலத் தெரியவில்லை.
டிசம்பரில் வைத்து நயனதாராவை கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நானும், நயனதாராவும், இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார் பிரபுதேவா.

05 அக்டோபர் 2010

யோகா கத்துக்க…! – த்ரிஷாவுக்கு ஷ்ரியா அட்வைஸ்.

“யோகா கத்துக்க… ஹெல்த்துக்கு நல்லது. எப்போதும் இளமையாகத் தெரிய உதவும்.. “- இதுதான் சமீபத்தில் த்ரிஷாவுக்கு நடிகை ஷ்ரியா அனுப்பிய செய்தி.
ஏன் இந்த திடீர் அட்வைஸ்..?
கோவையில் உள்ள அந்த ஆசிரமத்துக்கு தொடர்ந்து செல்லும் ஷ்ரியா, அங்கு உடற்பயிற்சி மற்றும் யோகா கற்று வருகிறார். இதனை மற்றவர்களுக்கும் சொல்லி, ஆசிரமத்துக்கு வருமாறு அட்வைஸ் பண்ணுகிறார்.
சரி, ஷ்ரியாவின் இந்த அட்வைஸுக்கு த்ரிஷா என்ன பதில் சொன்னார்..?
“நீ சொல்றது உண்மைதான். நானும் இந்த ஆசிரமத்தின் சென்னைக் கிளையில் சேர்ந்துவிட்டேன். இப்போ தினமும் யோகா பண்றேன். இல்லேன்னா மாஸ்டர் விடமாட்டேங்கிறார்.. ஆனாலும் எனக்கு இந்தப் பயிற்சி ரொம்பப் பிடிச்சிருக்கு..!

04 அக்டோபர் 2010

குத்தாட்ட நடிகைகளை மிஞ்சினர்: கவர்ச்சிக்கு மாறிய கதாநாயகிகள்!

முந்தைய கால கட்டத்தில் கவர்ச்சிக்கென சி.ஐ.டி. சகுந்தலா, ஜெயமாலினி, ஜோதிலட்சுமி இருந்தனர். அவர்களை தொடர்ந்து டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா, அனுராதா வந்தார்கள். அவர்கள் அரைகுறை ஆடையுடன் ரசிகர்களுக்கு கிளு கிளுப்பூட்ட பயன்படுத்தப்பட்டனர்.
இப்போது அது போன்ற நடிகை வகையறாக்கள் மங்கிப்போய் விட்டார்கள். கதாநாயகிகளே அவர்கள் பணியை கையிலெடுத்து கொண்டனர். புதிதாக வரும் கதாநாயகிகள் கவர்ச்சியின் எல்லை வரை தொடுகிறார்கள்.
சீ சீ என பத்மினி, சரோஜாதேவி காலத்தில் முகம் சுழிக்கப்பட்ட நீச்சல் உடை காட்சிகளிலும் கலக்குகிறார்கள். இதனால் சமீப காலங்களில் தலை தூக்கிய சில குத்தாட்ட நடிகைகளும் ஓரிரு படங்களோடு காணாமல் போயினர்.
நமீதாதான் அதிகபட்ச கவர்ச்சிக்கு அச்சாரம் போட்டார். தமிழில் நம்பர் ஒன் கதாநாயகி அந்தஸ்தில் இருந்த நயன்தாரா “பில்லா” படத்தில் நீச்சல் உடைக்கு இறங்கினார். அதன் பிறகு அனைத்து கதாநாயகிகளுக்கும் துணிச்சல் வந்தது. ஆடை கட்டுப்பாடுகளை அவிழ்த்து போட்டனர்.
குடும்ப பாங்காகத்தான் நடிப்பேன் என அடம் பிடித்த சினேகா தெலுங்கு படங்களில் கவர்ச்சி மழை பொழிகிறாராம். முத்தக்காட்சிகளிலும் வரிந்து கட்டுகின்றனர்.
சிம்பு- நயன்தாரா முத்தக்காட்சி போஸ்டர்கள் சில வருடங்களுக்கு முன் நகரமெங்கும் சூடேற்றின. திரிஷாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் உதட்டோடு உதடு பதித்தார். அருந்ததிக்கு பின் தமிழ் மார்க்கெட்டில் வலுவாக காலூன்றியுள்ள அனுஷ்காவும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கிறார்.
புதுவரவு நாயகிகளான தபஸ்ரீ, ஹன்சிகா மோட்வாணி போன்றோரும் கவர்ச்சியை வாரி இறைக்கின்றனர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா….? என பாடவைத்த நாயகிகள் ஆடை அவிழ்ப்பு செய்து ஹாலிவுட் தோற்றத்துக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

01 அக்டோபர் 2010

தமிழ்ப் படமும் வேண்டாம்… தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்! – அனுஷ்கா.

சிங்கம் படம் ரிலீஸுக்குத் தயாரான நேரம்… அனுஷ்காவைப் பற்றி சில செய்திகள் இப்படி கசிந்தன.
“அனுஷ்கா மகா உயரமான நடிகையாச்சே…அவரை ஹீரோயினாக்குவதில் எக்கச்சக்க பிரச்சினைகள்”, “ஒத்துழைப்பு சரியில்லை” என்றெல்லாம் சிங்கம் படத்தின் முக்கியப் புள்ளி ஒருவர் சொன்னதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கடுப்பான அனுஷ்கா, இனி தமிழில், அதுவும் உயரம் குறைந்த ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவோடு தெலுங்குக்கே திரும்பினார்.
தமிழில் பல பெரிய தயாரிப்பாளர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்ட அவரை, சமாதானப்படுத்தி அழைத்து வந்தது சிம்புவும் ‘வானம்’ பட இயக்குநர் கிரிஷ்ஷும்தானாம்.
இப்போது மேலும் நான்கு புதிய தமிழ்ப் படங்களில் நடிக்குமாறு பெரும் தொகையுடன் அனுஷ்காவை அணுகியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.
அவர்களிடம், “வேண்டவே வேண்டாம். உங்கள் பட நாயகர்கள் உயரம் குறைந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் பழியை என்மீது போடுவார்கள். எதற்கு வம்பு… எனக்கு தெலுங்கில் நிறைய வாய்ப்புகள் உள்ளன” என்று பெரிய கும்பிடு போட்டாராம்.