பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2011

மீண்டும் சில்க் ஸ்மிதா!

80களில் தென்னிந்தியத் திரையுலகைக் கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தின் நாயகி வித்யா பாலனின் படு ஹாட்டான படங்கள் வெளியாகியுள்ளன.
சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.
இதில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.
இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன்.
இந்தப் படங்களைப் பார்க்கும்போது சில்க் வேடத்தில் நடிக்க பொருத்தமில்லாதவர் வித்யா என்ற வாதம் அடிபட்டுப் போகும் என்றே தெரிகிறது.

26 ஆகஸ்ட் 2011

திஷாவின் கவர்ச்சிக் கலக்கல்.

தமிழ்ப்படம் பெரிய வெற்றிப்படமாகியும்கூட அந்தப் படத்தின் நாயகி திஷா பாண்டேக்கு நிறைய வாய்ப்புகள் அமையவில்லை. அந்தக் குறையை தீர்த்துவிடும் என அவர் பெரிதும் நம்புவது மயங்கினேன் தயங்கினேன் படத்தைத்தான்.
திருமாவளவனின் ஆசியுடன் தாய்மண் திரையகம் வழங்கும் படம் என கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தின் நாயகன் நிதின் சத்யா.
எஸ்டி வேந்தன் இயக்கும் இந்தப் படத்தில் திஷா பாண்டேயின் கவர்ச்சிதான் ஹைலைட் என்கிறார்கள். போதாக்குறைக்கு தேஜாஸ்ரீயும் படத்தில் உண்டு. போதும் போதும் எனும் அளவுக்கு கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்களாம்.
கால் டாக்ஸி டிரைவரான நிதின் சத்யா, டெலிபோன் ஆபரேட்டரான திஷா மீது காதலாவதுதான் கதை. இதில் தமிழ் சினிமாவுக்கே உரிய அத்தனை மசாவலா சமாச்சாரங்களையும் சேர்த்து படமாக்கியிருக்கிறாராம் வேந்தன்.
தமிழ்ப்படம் படத்துக்கு இசையமைத்த கண்ணன்தான் இந்தப் படத்துக்கும் இசை. ஜான் மக்கள் தொடர்பை கவனிக்க சுடர் முருகையா, ராணி ஜீவானந்தனம், எஸ்டி வேந்தன் மற்றும் மகாதேவன் தயாரிக்கிறார்கள்.
படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

24 ஆகஸ்ட் 2011

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி!

ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைஃபுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை இதே தொகைக்கு அணுகி பேசிப் பார்த்தார் இயக்குநர் தரணி. சிம்புவும் தனது பழைய தொடர்புகளை தூதுவிட்டுப் பார்த்தாராம். நயன்தாரா சம்மதிக்காத நிலையில், வேறு சில டாப் நடிகைகளை அணுகிப் பார்த்தனர்.
ஆனால் யாரும் சரியாக வராத நிலையில், கத்ரீனா கைஃபிடம் பேசினர். அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்க, உடனே ஓகே சொல்லுமாறு நாயகன் சிம்பு கூறிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் ரஜினியின் ராணா நாயகி தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.
ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இதுவரை ஸ்ரேயாவுக்குதான் இருந்தது. அதை தகர்த்துவிட்டார் கத்ரீனா இப்போது!

19 ஆகஸ்ட் 2011

சினேகாவின் கவர்ச்சி!

குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை இன்று வரை பாதுகாத்து வைத்திருக்கும் சினேகா முதல் முறையாக கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்.
ஆனால் இது சினிமாவுக்கு அல்ல, ஒரு அழகு சாதனப் பொருள் விளம்பரத்துக்காக.
சமீபத்தில் இந்த விளம்பரப் படத்துக்கான ஷூட்டிங் ஏவிஎம்மில் நடந்தபோது, சினேகாவைப் பார்த்தவர்கள் பிரமித்து நின்றார்கள்.
வெளிர் ரோஜா நிற லோ கட் சிங்கிள் பீஸ் மிடியில், அசத்தலாக போஸ் கொடுத்தார் சினேகா. இந்த விளம்பரம் மலேஷியாவைச் சேர்ந்த நிஷா அழகு சாதனப் பொருள்களுக்காக எடுக்கப்பட்டது.
இந்த அழகு சாதனத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியதே சினேகாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்திய தொலைக்காட்சிகளில், சினிமாவில் கூட பார்த்திராத அழகிய கவர்ச்சி உடையில் 'சினேகா தரிசனம்' காணலாம்.

16 ஆகஸ்ட் 2011

விக்ரமை எனக்கு பிடித்துவிட்டது!

நான் ஜோடியாக நடித்த இரண்டு ஹீரோக்கள் விக்ரம் மற்றும் விஷாலின் படங்கள் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் நடிகை ஸ்ரேயா.
சிவாஜியில் ரஜினியுடன் நடித்த பிறகு, மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஒரு ரவுண்ட் நடித்து முடித்துவிட்டார் ஸ்ரேயா. அவர்களில் விக்ரம் மற்றும் விஷாலும் உண்டு.
விகரமுடன் கந்தசாமியில் நடித்தார். விஷாலுடன் தோரணையில் ஜோடி சேர்ந்தார்.
இப்போது ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரேயா, தமிழில் சமீபத்தில் அவர் பார்த்த படங்கள் குறித்துப் பேசினார்.
அவர் கூறுகையில், "சமீபத்தில் விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படம் பார்த்து பிரமித்துப் போனேன். பிரமாதமாக நடித்திருந்தார். கந்தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. ஆனால் தெய்வத் திருமகள் அவரை இன்னொரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்விட்டது.
அதில் அவரது கிருஷ்ணா கேரக்டர் அற்புதமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் துவங்கி விட்டேன்.
நான் பிரமித்த இன்னொரு ஹீரோ விஷால். அவர் நடித்த அவன் இவன் படம் எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும். அந்த அளவு அற்புதமாக நடித்திருந்தார்.
என்னுடைய இன்னொரு ஹீரோ ஜீவா நடித்த கோ படமும் பார்த்தேன். பிரமாதமாக இருந்தது. ஜீவா அசத்தலாக நடித்திருந்தார்", என்றார்.

13 ஆகஸ்ட் 2011

உதட்டோடு உதடு சேர்க்க மறுத்த நாயகன்!

அஜ்மல்-அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜ சோழன் டைரக்டு செய்து வரும் படம், `கருப்பம்பட்டி.' இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிக்கட்ட காட்சிகள் பழனியில் படமாக்கப்பட்டன.
காட்சிப்படி, அஜ்மல் தன் காதலை சொல்ல-அபர்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். அதற்கு பரிசாக அஜ்மல் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் தர வேண்டும். கதாநாயகி அபர்ணாவிடம் டைரக்டர் காட்சியை விவரிக்க, அதன் முக்கியத்துவம் கருதி அபர்ணா நடிக்க சம்மதித்தார்.
அஜ்மலிடம் காட்சியை சொன்னதும், ``உதட்டுடன் உதடு சேர்த்து முத்த காட்சியில் நடிக்க மாட்டேன்'' என்றார். இதனால் படப்பிடிப்பு குழுவினர் மத்தியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. கதாநாயகிதான் மறுப்பார் என்று எதிர்பார்த்த டைரக்டருக்கு, அஜ்மல் மறுத்தது ஏமாற்றத்தை அளித்தது.
உங்களிடம் கதை சொல்லும்போது கூட இந்த காட்சியை பற்றி விவரித்து இருந்தேனே'' என்று டைரக்டர் வற்புறுத்தி கேட்டும், அஜ்மல் பிடிவாதமாக நடிக்க மறுத்தார்.
இதனால் 2 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தயாரிப்பாளர் சுந்தர் கே கதாநாயகன் அஜ்மல், டைரக்டர் பிரபுராஜ சோழன் ஆகிய இருவரையும் சமாதானப் படுத்தினார்.
அதன்பிறகு உதட்டு முத்த காட்சி மாற்றப்பட்டு, கன்னத்தில் முத்தமிடுவது போல் படமாக்கப்பட்டது.
முத்த காட்சியில் நடிக்க மறுத்தது பற்றி அஜ்மலிடம் கேட்டபோது,
நான் சினிமா நடிகர் ஆவதை என் பெற்றோர்கள் விரும்பவில்லை. அவர்கள் விருப்பப்படி ரஷியாவில் டாக்டருக்கு படித்து முடித்து, `டிகிரி'யை அவர்களிடம் கொடுத்துவிட்டு, நடிப்பு துறைக்கு வந்தேன். அப்போது என் பெற்றோர்கள் சில நிபந்தனைகளை எனக்கு விதித்தார்கள்.
நடிகைகளுக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. விரசமான காட்சிகளில் நடிக்கக்கூடாது. இரட்டை அர்த்த வசனம் பேசக்கூடாது'' என்று அவர்கள் கேட்டுக்கொண்டபடி, இன்று வரை உறுதியுடன் இருந்து வருகிறேன். நான் உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்து நடித்தால், வீட்டில் சேர்க்க மாட்டார்கள்’’என்று கூறினார்.

12 ஆகஸ்ட் 2011

இம்ரானை அறைந்த கத்ரீனா!

பாலிவுட் நடிகர் இம்ரான் கானை சக நடிகை கத்ரீனா கைப் பளார் பளான கன்னத்தில் அறைந்துள்ளார். அதுவும் 16 தடவை!
உடனே கற்பனையைத் தட்டிவிடாதீங்க. செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகும் பாலிவுட் படம் 'மேரே பிரதர் கி துல்ஹன்'. அந்த படத்தில் ஆமீர் கான் மருமகன் இம்ரான் கான், கத்ரீனா கைப், பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர். அதில் ஒரு காட்சியில் கத்ரீனா இம்ரானை அறைய வேண்டும்.
கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் என்ன கடுப்போ என்னவோ தெரியவில்லை. 16 டேக் வாங்கியிருக்கிறார். கன்னம் சிவக்க, சிவக்க அறை வாங்கியிருக்கிறார் இம்ரான்.
16 டேக்குக்கு பிறகு இயக்குனர் ஓகே சொல்ல அன்றைய படபிடிப்பு முடிந்தது.
மறுநாள் படபிடிப்புக்கு வந்த இம்ரானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும், நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம். அதனால் இன்றும் கன்னதில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர். பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும், அமைதியாக அறை வாங்கினார்.
காதல் படங்களுக்குப் புகழ்பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ்-ன் மேரே பிரதர் கி துல்ஹன் ஒரு முக்கோணக் காதல் கதை. சகோதரனுக்காக பெண் பார்க்கச் சென்றவன் அந்த பெண் மீது காதல் கொள்கிறான். இறுதியில் அந்த பெண் யாருக்கு என்பதுதான் கதை!

08 ஆகஸ்ட் 2011

இந்துவானார் நயன்தாரா.

பிரபு தேவாவைத் திருமணம் செய்வதற்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார் நடிகை நயன்தாரா.
15 ஆண்டுகளுக்கு முன் ரம்லத் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து, 3 குழந்தைகள் பிறந்து, அதில் மூத்த குழந்தை இறந்த நிலையில், விவாகரத்து செய்தார் பிரபு தேவா. முஸ்லிமாக இருந்த ரம்லத், பிரபுதேவாவுக்காக மதம் மாறி லதா என்று புதுப்பெயர் சூடிக் கொண்டார். ஆனால் நயன்தாரா மீதான காதல் காரணமாக ரம்லத்தை உதறினார் பிரபு தேவா. சமீபத்தில்தான் ரம்லத் - பிரபு தேவா விவாகரத்தை அறிவித்தது குடும்ப நல கோர்ட்.
இப்போது பிரபு தேவா அடுத்த கல்யாணத்துக்கு தயாராகிறார். நயன்தாராதான் இவருக்கு மனைவியாகப் போகிறார். ஆனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரபு தேவாவுக்காக நயன்தாரா மதம் மாறுவாரா அல்லது நயனுக்காக பிரபு தேவா மதம் மாறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இப்போது தனக்காக மனைவியை விவாகரத்து செய்த பிரபு தேவாவுக்காக, மதம் மாறிவிட்டார் நயன்தாரா.
நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் முறைப்படி இந்து மதத்துக்கு மாறினார். நேற்று கொச்சியிலிருந்து சென்னை வந்த நயன்தாரா, ஆரிய சமாஜத்தில் வேத விற்பன்னர்கள் முன்னிலையில் 'சுத்த பரிகாரம்' செய்தார்.
பி்ன்னர் வேத மந்திரங்களை உச்சரித்தபடி, இந்துவாக மாறினார்.
இந்து மதத்துக்கு மாறுவதை பெருமையாகவும் சந்தோஷமாகவும் உணர்வதாக நயன்தாரா பின்னர் தெரிவித்தார். இந்த மத மாற்றத்துக்கு யார் வற்புறுத்தலும் காரணமல்ல என்றும் இது எனது தனிப்பட்ட விருப்பம், உரிமை என்றும் அவர் கூறினார்.
நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன். சினிமாவுக்காக வைக்கப்பட்ட இந்த நயன்தாரா என்ற பெயரையே இனி தன் நிரந்தரப் பெயராக பயன்படுத்தப் போகிறாராம்.

03 ஆகஸ்ட் 2011

திரிஷாவின் மாப்பிளை யார்?

நடிகை த்ரிஷாவுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது, அவர் மணமுடிக்கப்போகும் மாப்பிள்ளை இளம் தொழில் அதிபரா? அல்லது சாப்ட்வேர் என்ஜினீயரா? என்பது செப்டம்பர் மாதம் தெரிந்து விடும். ஜோடி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் த்ரிஷா. லேசா லேசா படத்தில் தான் முதன்முதலாக கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்தபடம் வருவதற்கு முன்னாலேயே மவுனம் பேசியதே படம் ரிலீசாகி விட்டது. இந்த படம், 2002-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. கடந்த 10 வருடங்களாக த்ரிஷா தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இதுதவிர இந்தியிலும் ஒருபடம் பண்ணிவிட்டார். தற்போது த்ரிஷாவுக்கு சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தாலும், சமீப காலமாக அம்மணி சினிமாக்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு காரணம் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.
ஏற்கனவே பலமுறை திருமண வதந்திகளில் சிக்கியிருக்கும் த்ரிஷாவுக்கு, இப்போது உண்மையிலேயே திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் த்ரிஷாவை, பெண் கேட்டு 2 வரன்கள் வந்துள்ளன. இரண்டு பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர், இளம் தொழில் அதிபர். இன்னொருவர், சாப்ட்வேர் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர். இவர்களில் தன், மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறாராம் த்ரிஷா. ஆனால் அவர் யார்? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் த்ரிஷா திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல.பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

01 ஆகஸ்ட் 2011

படிக்கப்போறேன் என்கிறார் ஷம்மு.

காஞ்சிவரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஷம்மு. இவர் மலையன், மாத்தியோசி படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
இவர் தற்போது நடித்துள்ள மயிலு, பாலை படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் ஷம்மு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு மருத்துவ படிப்பை தொடர அமெரிக்க செல்வதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷம்மு கூறியதாவது:
நான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் அமெரிக்காதான். ஆனால் அடிப்படையில் நான் ஒரு தமிழ் பெண். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்னைக்கு வந்துவிட்டேன்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சென்ட்ரல் புளோரிடா பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பை மீண்டும் தொடரை இருக்கிறேன்.
நான் சினிமாவுக்கு வந்து தற்செயலான ஒரு நிகழ்வு. எனக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது.
மீண்டும் சினிமாவுக்கு வருவேனா? என்பதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.