பக்கங்கள்

24 ஆகஸ்ட் 2011

ஒரு பாட்டுக்கு ஒரு கோடி!

ஒஸ்தி படத்தில் சிம்புவுடன் குத்தாட்டம் போட நடிகை கத்ரீனா கைஃபுக்கு ரூ 1 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வேடத்தில் நடிக்க நயன்தாராவை இதே தொகைக்கு அணுகி பேசிப் பார்த்தார் இயக்குநர் தரணி. சிம்புவும் தனது பழைய தொடர்புகளை தூதுவிட்டுப் பார்த்தாராம். நயன்தாரா சம்மதிக்காத நிலையில், வேறு சில டாப் நடிகைகளை அணுகிப் பார்த்தனர்.
ஆனால் யாரும் சரியாக வராத நிலையில், கத்ரீனா கைஃபிடம் பேசினர். அவர் 1 கோடி ரூபாய் சம்பளம் கேட்க, உடனே ஓகே சொல்லுமாறு நாயகன் சிம்பு கூறிவிட்டாராம்.
இன்னொரு பக்கம் ரஜினியின் ராணா நாயகி தீபிகா படுகோனேவிடமும் இதே ஆஃபரை வைத்துள்ளனர். அவர் இன்னும் எந்த பதிலும் சொல்லாததால், கத்ரீனாவையே ஒப்பந்தம் செய்துவிடலாம் என்ற முடிவில் உள்ளனராம்.
ஒரு குத்தாட்டப் பாட்டுக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இதுவரை ஸ்ரேயாவுக்குதான் இருந்தது. அதை தகர்த்துவிட்டார் கத்ரீனா இப்போது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக