
ஏற்கனவே பலமுறை திருமண வதந்திகளில் சிக்கியிருக்கும் த்ரிஷாவுக்கு, இப்போது உண்மையிலேயே திருமணம் நடைபெறவிருக்கிறது. திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் த்ரிஷாவை, பெண் கேட்டு 2 வரன்கள் வந்துள்ளன. இரண்டு பேருமே சென்னையை சேர்ந்தவர்கள். ஒருவர், இளம் தொழில் அதிபர். இன்னொருவர், சாப்ட்வேர் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர். இவர்களில் தன், மனதுக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறாராம் த்ரிஷா. ஆனால் அவர் யார்? என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை. திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற இருக்கிறது.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் த்ரிஷா திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல.பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக