பக்கங்கள்

29 டிசம்பர் 2010

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புத்தான்.-ப்ரியாமணி.

ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புதான். இனி இந்த மாதிரி படங்களில் நடிக்கமாட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியாமணி.
பருத்திவீரன் படம் மூலம் மறு வாழ்வு பெற்றவர் நடிகை ப்ரியாமணி. ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு எல்லோரும் பாவாடை தாவணி கெட்டப்பையே தருவதாகவும், கிளாமர் உடைகளில் ஆட விருப்பமாக இருப்பதாகவும் கூறி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ப்ரியாமணி.
ஆனால் பருத்திவீரன் ரேஞ்சுக்கு அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதில் கிடைத்ததோ துக்கடா வேடம்.
இந்த நிலையில் அவர் நடித்து தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ரத்தசரித்திரம் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் இப்படிக் கூறுகிறார், "ஆந்திராவில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம்தான் அந்த படத்தின் கதை. அதனால் இப்படம் ஆந்திராவில் சுமாராகப் போனது. ஆனால் தமிழில் ஓடவில்லை. நான் நடித்த பருத்திவீரன் படத்தை பார்த்துதான் இப்படத்திற்காக ராம்கோபால் வர்மா என்னை தேர்வு செய்தார். எனக்கு கொடுத்த வேடத்தில் நான் நூறு சதவீத உழைப்பை கொடுத்தேன். நானே டப்பிங்கும் பேசினேன். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது பெரிய வருத்தம் தந்துள்ளது. இந்த மாதிரி படங்களை ஒப்புக் கொள்வது தவறுதான். இனி ரத்த சரித்திரம் போன்ற சின்ன வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதையும், பாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்", என்று கூறியுள்ளார்.

24 டிசம்பர் 2010

போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவித்த ஐஸ்வர்யா ராய்!

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகை ஐஸ்வர்யா ராயின் சூட்கேஸ் விமான நிலையத்தில் மாயமானது. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாமல் தவிப்புக்குள்ளானார் ஐஸ். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவசரம் அவசரமாக டிரஸ்ஸை தயார் செய்து கொடுத்து ஐஸ்வர்யாவைக் காப்பாற்றினர். அவசர டிரஸ்ஸாக இருந்தாலும் அதிலும் அசத்தலாக தோன்றி அனைவரையும் அசத்தி விட்டார் ஐஸ்வர்யா.
சென்னையில் நடந்த ஒரு புரமோஷனல் நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து வந்தார் ஐஸ்வர்யா. நிகழ்ச்சியில் போட்டுக் கொள்வதற்கான விசேஷ உடையுடன் சென்னை வந்து இறங்கிய ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி. அவரது டிரஸ் இருந்த சூட்கேஸைக் காணவில்லை. இதனால் நிகழ்ச்சியில் போட்டுக் கொள்ள டிரஸ் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஐஸ்வர்யாவுக்கு டென்ஷனாகி விட்டது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொண்ட ஐஸ்வர்யா, நிலைமையை விளக்கி, நான் டிராக் சூட்டிலேயே நிகழ்ச்சிக்கு வந்து விடட்டா என்று கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகி விட்டது. கொஞ்சம் பொறுமையா இருங்க என்று ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்திய அவர்கள் அவசரம் அவசரமாக ஒரு புதிய டிசைனர் டிரஸ்ஸையும், அதற்கேற்ற ஷூவையும் தயார் செய்து ஐஸ்வர்யாவிடம் வழங்கி நிலைமையை சமாளித்தனர்.
ஐஸ்வர்யாவின் சூட்கேஸ் காணாமல் போனது தங்களது தவறுதான் என்பதை சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் ஒத்துக் கொண்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் அவரது பேக்கை கண்டுபிடித்துக் கொடுத்தனர் விமான நிறுவனத்தினர்.
சும்மா சொல்லக் கூடாது, நிலவை எத்தனை மேகம் வந்து மறைத்தாலும், நிலவின் பொலிவு அப்படியேதான் இருக்கும் என்பதைப் போல அவசரம் அவசரமாக கிடைத்த டிரஸ்ஸைப் போட்டுக் கொண்டு வந்தாலும், படு அட்டகாசமான அழகுடன் காட்சி அளித்தார் ஐஸ்வர்யா.
இருக்காதா பின்னே, உலக அழகின்னா சும்மாவா...!

15 டிசம்பர் 2010

திருநங்கை கல்கி திரைப்பட நாயகியாக புது அவதாரம் எடுத்துள்ளார்.

சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வருபவர் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர். தமிழகத்தின் பிரபலமான திருநங்கைளில் இவரும் ஒருவர். திருநங்கைகள் நலனுக்காக பாடுபட்டு வருபவர்.
இந்த நிலையில் தற்போது கல்கி திரைப்பட நாயகியாகியுள்ளார். நர்த்தகி என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் கல்கி. திருநங்கைகள் குறித்த படம் இது. திருநங்கைகளை நல்ல வெளிச்சத்தில் காட்டும் கதை என்பதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக கூறுகிறார் கல்கவி.
புன்னகைப் பூ கீதா இப்படத்தை தயாரிக்கிறார். விஜயபத்மா இயக்குகிறார். திருநங்கைகளின் வாழ்க்கையை அழகுற சித்திரித்த முதல் படம் என்ற பெருமை இப்படத்திற்குக் கிடைக்கும் என்கிறார்கள் படக் குழுவினர்.

12 டிசம்பர் 2010

சிம்புவுக்காக துடிக்கும் ஷம்மு!

சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஷம்மு துடியாத் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சிம்புவுக்கு திரையுயலகில் நிறைய நண்பர்கள். அவர்களில் ஆண்களைப் போலவே பெண்களும் நிறையவே உள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஷம்மு.
மலையாளத்து ஷம்மு, காஞ்சிவரம் படம் மூலம் நடிகையாக வந்தவர். தொடர்ந்து சில படங்களில் நடித்த ஷம்மு இப்போது தமிழில் லைம் லைட்டில் இல்லை.
தமிழில் நிறையப் படங்கள் இல்லாதது குறித்து ஷம்முவிடம் கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. நல்ல கதைகளாக வரும் படங்களை மட்டுமே ஏற்று நடிக்க காத்திருக்கிறேன். கதைக்குத் தேவையான கவர்ச்சிக்கும் நான் தயார்தான். ஆனால் கவர்ச்சிக்காக கதையில் காட்சிகளைத் திணிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்கிறார்.
நல்ல கதைக்காக காத்திருக்கும் ஷம்மு, சிம்புவுடனும் நடிக்க துடிப்புடன் இருக்கிறாராம்.
இவர் சிம்புவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர். ஆனால் இதுவரை தனக்கு சிம்பு ஒரு படத்தில் கூட வாய்ப்பு தரவில்லையே என்று ஏக்கப்படுகிறார் ஷம்மு. சிம்புவுக்கு நான் நெருங்கிய தோழிதான். ஆனால் இதுவரை அவர் என்னை ஒரு படத்தில் கூட நடிக்க கூப்பிடவில்லை. அவர் எப்போது கூப்பிட்டாலும் உடனே கால்ஷீட் தர தயாராகவே இருக்கிறேன். பிற படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சரி, சிம்பு கேட்டால் எத்தனை நாள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயாராம் ஷம்மு.
ஷம்முவுக்கேற்ற ஜம்மென்ற கதை ரெடியானால் கூப்பிடலாம் என்று சிம்பு இருக்கிறாரோ என்னவோ!

09 டிசம்பர் 2010

கமல்,த்ரிஷா இருவரையும் கைதுசெய்ய வேண்டும்.

நடிகர் கமல்-த்ரிஷா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மன்மதன் அம்பு. இப்படத்தில் கமல் எழுதியுள்ள பாடல் ஒன்று பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கோவை இந்து மக்கள் கட்சியின் பிரச்சார அணி செயலாளர் கிருஷ்ண கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து புகார் மனு கொடுத்தனர்.
அப்புகார் மனுவில், ’’மன்மதன் அம்பு படத்தின் திரைப்பட பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இந்த படத்தில் கமலஹாசன் எழுதியுள்ள “கண்ணோடு” எனத் தொடங்கும் பாடல் மிகவும் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், தமிழ் பெண்களை கேவலப்படுத்தும் வகையிலும் உள்ளது. மேலும் இந்து சமய உணர்வுகளை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
தமிழ் வேதமான பிரபந்தம் குறித்து அவதுறு பரப்பும் நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் பெண்கள் கடை பிடிக்கும் வரலட்சுமி நோன்பை அசிங்கப் படுத்தும் வகையிலும், வக்கிரமான பாலுணர்வை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது.
இந்து சமய கடவுளான அரங்கநாதர் குறித்தும் அவதூறு செய்யப்பட்டுள்ளது. இது ரெங்கநாதரின் பக்தரான எனக்கும், எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் பெண்கள் இந்த பாடல் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த பாடலை எழுதிய கமலஹாசன் மீது மத உணர்வை புண்படுத்துதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வக்கிரமான பாலுணர்வுகளை தூண்டுதல் ஆகிய குற்றங்களை செய்ததற்காக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளனர்.

07 டிசம்பர் 2010

நமீதா ஏன் இப்படி ஆனார்!

விழாக்கள், வர்த்தக நிகழ்ச்சிகளுக்கு எக்குத் தப்பான ட்ரஸ்ஸில் வந்து எல்லோரது இதயத் துடிப்பையும் எகிற வைப்பது நமீதாவின் வழக்கம்.
நேற்று நடந்த இளைஞன் பட விழாவுக்கு வந்திருந்த நமீதா ஜாக்கெட் என்ற பெயரில் வெறும் பிரா மட்டுமே அணிந்து வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முன்பக்கம் முழுசாக மூடிக் கொண்டிருந்த நமீதா, முதுகுப் பக்கத்தை கிட்டத்தட்ட முழுசாகவே திறந்து வைத்து 70 எம்எம் ஷோ காட்டினார்.
இதில் அனைவரையும் கவர்ந்த விசயம், நமீதாவின் பின்கழுத்திலிருந்து முதுகு வரை நீண்டிருந்த டாட்டூ. இந்த கறுப்பு நிற டாட்டூவை அவர் பெங்களூரில் குத்திக் கொண்டாராம். பார்க்க செம கவர்ச்சியாக இருக்கிறது என பலரும் கூறியதால், இப்போது வேறு சில கவர்ச்சிப் பிரதேசங்களிலும் குத்திக் கொள்ளப் போகிறாராம் டாட்டூவை.. அதாவது முன் கழுத்து, தோள் பட்டையில்!!
த்ரிஷா ஏற்கெனவே கழுத்துக்குக் கீழே டாட்டூ குத்திக் கொண்டுள்ளார். இப்போது நமீதா பேக் சைடில் குத்தியுள்ளார்.

05 டிசம்பர் 2010

கை நிறையப் படங்களுடன் லட்சுமி ராய்!

முன்னணி நடிகையாக இல்லாவிட்டாலும் கூட கை நிறையப் படங்களுடன் பிசியாக காணப்படும் லட்சுமி ராய் திரையுலகினருக்கு பெரும் அதிசயமாக தோன்றுகிறார்.
லட்சுமி ராய் இதுவரை ஒரு ஸ்டார் என்ற அந்தஸ்தையே எட்டவில்லை. ஆனாலும் படு பிசியாக காணப்படுகிறார். தொடர்ந்து செய்திகளில் அடிபட்டவண்ணமிருக்கிறார்.
தமிழில் தற்போது அஜீத்துடன் மங்காத்தா, ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ஆகிய படங்களில் நடித்து வரும் லட்சுமி ராய்க்கு மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் கைவசம் இருக்கிறதாம்.
தற்போது மங்காத்தா படத்திற்காக பாங்காக்கில் முகாமிட்டுள்ளார் லட்சுமி ராய். அதை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் மலையாளப் படங்களில் நடிக்கப் போகிறார்.
மலையாளத்தில் கிறிஸ்டியன் பிரதர்ஸ், கேஸனோவா, யோதா 2 ஆகிய படங்களில் நடித்துத வருகிறார் லட்சுமி ராய்.
மங்காத்தா தவிர தமிழில் லட்சுமி ராய் நடித்து வரும் இன்னொரு படம் காஞ்சனா. முனி படத்தின் 2வது பாகமாக இது உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் அந்தஸ்து இல்லை, முக்கியத்துவம் வாய்ந்த நடிகையாகவும் இல்லை. ஆனாலும் படு பிசியான நடிகையாக லட்சுமி ராய் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

01 டிசம்பர் 2010

நான் யாரையும் காதலிக்கவில்லை,-சரண்யா.

"நான் யாரையும் காதலிக்கவில்லை; தாயார் துன்புறுத்துகிறார்; அவருக்கு அறிவுரை கூறுங்கள், என்று மாயமானதாக கூறப்பட்ட நடிகை சரண்யா போலீசில் தெரிவித்துள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது மகள் சரண்யா(22). சினிமா நடிகை. "காதல், பேராண்மை படத்தில் நடித்துள்ள இவர், "மழைக்காலம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த மஞ்சுளா, தன் மகள் சரண்யாவை காணவில்லை என்று புகார் அளித்தார். புகாரை அடுத்து, விசாரணை நடந்து வந்த நிலையில், தி.நகர் போலீஸ் நிலையம் வந்த நடிகை சரண்யா, உதவி கமிஷனர் மனோகரனை சந்தித்து தன் நிலை குறித்து விளக்கியுள்ளார்.
அப்போது சரண்யா, "என் தாயார் கூறியது போல் நான் யாரையும் காதலிக்கவில்லை. சினிமா தொடர்பாக என் அம்மாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனக்கு நிறைய படங்களில் வாய்ப்பு கிடைத்ததால், வீட்டில் இருந்து வெளியேறி வெளியில் தங்கி நடித்து வருகிறேன். நான் சென்னையில் தான் இருக்கிறேன். என் தாயார் என்னை துன்புறுத்துகிறார். நான் எல்லாவற்றையும், அவரிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை; அவருக்கு அறிவுரை கூறுங்கள் என்று கூறியுள்ளார்.