பக்கங்கள்

20 ஏப்ரல் 2011

மலையாளத்தில் மீண்டும் ஷகீலா!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர்களை தனது கவர்ச்சிக் குலுக்கல் படங்களால் கதிகலங்க வைத்த ஷகிலா, 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.
தமிழில் காமெடி ரோல்களில் அறிமுகமாகி, கவுண்டமணியின் ஜோடியாக பிரபலமான ஷகிலா, திடீரென்று மலையாளத் திரையுலகின் தவிர்க்க முடியாத அங்கமானார். அவர் நடித்த பிட் படங்களுக்கு கேரளாவிலும் ஆந்திராவிலும் ஏகப்பட்ட வசூல். 10 லட்சம் செலவழித்தால் போதும், அதைவிட பத்துமடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், முன்னணி ஹீரோக்களான மம்முட்டி, மோகன்லால் படங்களைக் கூட திரையிட பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் போனார்கள்.
இதனால் கடுப்பான மலையாள நடிகர்கள் சிலர் ஷகிலாவுக்கு மிரட்டல் விடும் அளவுக்குப் போனதாக செய்திகள் வெளியாகின.
அதன்பிறகு ஷகிலாவும் மலையாளத் திரையுலகை விட்டு ஒரேயடியாக ஒதுங்கினார். தமிழ், கன்னடப் படங்களில் கேரக்டர், காமெடி வேடங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். இப்போது தமிழ், கன்னடத்தில் 12க்கும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.
விரைவில் வரவிருக்கும் சண்முகிபுரம் என்ற படத்தில் தஷி இசையில் ஒரு பாடல் கூட பாடியுள்ளாராம் ஷகிலா.
மலையாளத்தில் மீண்டும் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றனவாம் அவருக்கு. இதுகுறித்து அவர் கூறுகையில், “மலை‌யா‌ளத்‌துல கி‌ட்‌டத்தட்‌ட ஏழு வருடத்‌தி‌ற்‌கு பி‌றகு தே‌ஜா‌ பா‌ய்‌ என்‌கி‌ற படத்‌தி‌ல்‌, சுரா‌ஜ்‌ சா‌ர்‌ கா‌ம்‌பி‌னே‌ஷன்‌ல நடி‌ச்‌சுக்‌கி‌ட்‌டு இருக்‌கே‌ன்‌. பி‌ரி‌தி‌வி‌ரா‌ஜ்‌ முக்‌கி‌ய வே‌டத்‌தி‌ல நடி‌க்‌கி‌ற படம்‌ இது. ரொ‌ம்‌ப ரொ‌ம்‌ப முக்‌கி‌கியமா‌ன ரோ‌ல்‌. இப்‌போ‌து அங்‌கே‌ நி‌றை‌ய கமர்‌சி‌யல்‌ படங்‌களுக்‌கு கே‌ட்‌கி‌றா‌ங்‌க. எனக்‌கு கே‌ரக்‌டர்‌ ரோ‌ல்‌ தருறா‌ங்‌க. சந்‌தோ‌ஷமா‌ இருக்‌கு,” என்‌றா‌ர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக