பக்கங்கள்

24 ஏப்ரல் 2011

எய்ட்சால் கவலையுறும் ப்ரீத்தி!

எய்ட்ஸ் நோயால் தலைகுனிவு ஏற்பட்டிருப்பதாக கன்னக்குழியழகி என வர்ணிக்கப்படும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கவலை தெரிவித்துள்ளார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ப்ரீத்தி ஜிந்தா, சோகமயமாக அளித்த பேட்டியொன்றில், இந்தியாவில் உள்ள ஒட்டு மொத்த லாரி ஓட்டுனர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேருக்கு எயிட்ஸ் நோய் பாதித்துள்ளது. அதிலும் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா,ஹிமாச்சல பிரதேஷம் ஆகிய பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்கள்தான் அதிக அளவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களைக் கேட்டதும் மிகவும் கவலையடைந்துவிட்டேன். லாரி ஓட்டுனர்களிடம் எயிட்ஸ் நோய் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் போனதால்தான், இந்தளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கண்டீப்பாக நான் ஏதாவது செய்தே தீருவேன். எய்ட்ஸ் நோய் அதிகரித்துக் கொண்டே போனால் அது இந்தியாவிற்கே தலைகுனிவு மட்டுமல்ல, எல்லா விதத்திலும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதற்கான பிரச்சாரத்தில் விரைவில் ஈடுபடப் போகிறேன், என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக