பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2012

"நான் அக்காவா?" கோபத்தில் ரீமா

தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார். 'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார். 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?. நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன். ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை. எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.

27 ஆகஸ்ட் 2012

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி!

Actress Sujibala Suicide Attempt நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆகஸ்ட் 2012

ஹன்ஸிகா தமன்னா அக்கப்போர்!


வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது. ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது. இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம். தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.

19 ஆகஸ்ட் 2012

ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான்!

kolaveri anirudh actress andria lip lock goes viral
ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார். இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.

02 ஆகஸ்ட் 2012

விருந்தில் நடந்த விஷயங்களை சொல்ல முடியுமா?

தமன்னா
சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் தங்கள் நட்பை 'மெட்ராஸ் சிமெண்ட்' போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம். அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி. இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம். அப்படி என்னதான் பேசினீர்கள்... தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற்கு தமன்னா கூறிய பதில் இது: தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது. ‘வேங்கை' படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!) தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?," என்றார். பார்றா... உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!