பக்கங்கள்

27 டிசம்பர் 2012

பாரம் தாங்காமல் விழுந்த ஜோடிகள்!

உனக்கு 20 எனக்கு 40
தடதடவென்று ஓடிவந்த ஹீரோயின், ஹீரோ இடுப்பின் மீது டக்கென்று ஏறினார். ஆனால் நடிகையின் பாரம் தாங்காமல் நிலை குலைந்த ஹீரோ பொத்தென்று விழுந்தார்.அவர் மீ்து ஹீரோயினும் விழுந்தார். ரெண்டு பேருக்கும் லேசான காயமாம். உனக்கு 20 எனக்கு 40 என்ற படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இந்தக் கூத்து நடந்ததாம். கொடைக்கானலில் வைத்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. இடுப்பு ஒடிந்து விழுந்த ஹீரோவின் பெயர் அக்ஷய். அவர் மீது ஏறிய நடிகையின் பெயர் ஷாலினி.இப்படத்தின் கதை ஏடாகூடமானது. அதாவது கிட்டத்தட்ட அபூர்வ ராகங்கள் கதை போலத்தான். ஹீரோயினின் தந்தை மீது ஹீரோயினின் தோழிக்கு காதல் வருகிறதாம். அது என்னாகிறது, எங்கு போய் முடிகிறது என்பதுதான் படத்தின் கதையாம்.படத்தின் ஹீரோயின்களாக ஷாலினியும், அம்ருதாவும் நடிக்கிறார்கள்.இதில் ஷாலினியின் தந்தை மீதுதான் அம்ருதா காதல் கொள்கிறார்.இப்படத்தின் ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் கொடைக்கானலில் படமாக்கினர். அப்போதுதான் ஹீரோ அக்ஷயின் இடுப்பின் மீது ஷாலினி ஓடி வந்து ஏறுவது போன்ற காட்சியைச் சுட்டனர்.ரிஹர்சல் பார்த்த பின்னரே காட்சிக்குப் போனார்கள். ஷாலினி வேகமாக ஓடி வந்து அக்ஷய்இடுப்பின் மீது தவ்வி உட்கார்ந்தார். ஆனால் அப்போது பாரம் தாங்க முடியாமல் அக்ஷய் கீழே விழ, அவர் மீது ஷாலினியும் விழுந்தார்.விழுந்த வேகத்தில்இரண்டு பேருக்குமே அடிபட்டு விட்டது. படக்குழுவினர் ஓடி வந்து இருவரையும் தூக்கி விட்டனர். காலை உதறச் செய்தனர். பின்னர் முதலுதவிக்குப் பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர்.ஹீரோ கூட லேசான காயத்துடன் தப்பி விட்டார். ஆனால் ஹீரோயின் ஷாலினிக்குத்தான் இடுப்பில் பலத்த அடிபட்டு காயமாகி விட்டதாம்.

26 டிசம்பர் 2012

தமன்னாவின் சம்பளம் 1.5கோடி!

விஷ்ணுவர்த்தன் திரைப்படத்தை தொடர்ந்து அஜீத் அடுத்ததாக சிறுத்தை இயக்குனர் சிவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தை விஜய வாஹினி நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். முதன் முறையாக இந்தப் படத்தின் மூலம் அஜீத்துடன் ஜோடி சேருகிறார் நடிகை தமன்னா. இதற்காக அவர் ரூ. 1.5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. வேங்கை படத்துக்குப் பிறகு தெலுங்கு திரையுலகிற்கு முக்கியம் கொடுத்து வரும் தமன்னா தற்போது அஜீத்துடன் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

20 டிசம்பர் 2012

கூவத்தில் குதித்து நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் தற்கொலை!

 Nithyasri Mahadevan S Husband Commits Suicide பிரபல கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் கணவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயற்சித்ததால் கர்நாடக இசையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. பிரபல பின்னணிப் பாடகி டி.கே. பட்டம்மாளின் பேத்தி நித்யஸ்ரீ மகாதேவன். கர்நாடக இசைப் பாடகியான இவர் பெரும்பாலான திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். இவரது கணவர் மகாதேவன் இன்று காலையில் சென்னை கோட்டூர் பாலத்தில் காரில் வந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறியுள்ளனர்.. இன்று காலை மகாதேவன் ஒரு சொகுசுக் காரில் கோட்டூர்புரம் வந்ததாகவும். அங்கு பாலத்தில் வண்டியைநிறுத்தி விட்டு கூவம் ஆற்றில் குதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த சாலையில் சென்றோர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருடன் விரைந்து வந்தனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின்னர் இறந்த உடலே சிக்கியது. அவரது உடலை சோதனை செய்ததில் அவர் பின்னணிப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் என்று தெரியவந்தது. அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை நித்யஸ்ரீ தற்கொலை முயற்சி இதனிடைய கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட உடன் நித்யஸ்ரீயும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை உறவினர்கள் காப்பாற்றி உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 டிசம்பர் 2012

கவர்ச்சியில் பைரவி கோஸ்வாமி..!

ஏற்கனவே கவர்ச்சி லட்டுகளின் திணிப்பாலும், குவிப்பாலும் திக்குமுக்காடிக் கொண்டிருக்கும் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் மேலும் ஒரு கவர்ச்சி கொடிமுந்திரியைக் கோர்த்து விட்டுள்ளனர். அவர்தான் பைரவி கோஸ்வாமி. இசை என் வாழ்க்கை, அதுதான் என் மூச்சு என்று கூறி வருபவர் பைரவி கோஸ்வாமி, போல்டு அன்டு ப்யூட்டிபுல் என்று கவர்ச்சிக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் கோஸ்வாமி ஏற்கனவே மாடலாக இருந்தபோதும், இந்திப் படங்களில் நடித்த போதும் கவர்ச்சியை கலந்து கட்டி அடித்தவர். ஏற்கனவே பீஜா, மை ஃப்ரண்ட் கணேசா படத்தில் கவர்ச்சியில் கலக்கியவர்தான் பைரவி. பட்டி ஆன் சுட்டி படத்திலும் கலக்கியவர். இப்போது சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.தமிழ் சினிமாவில் எப்படி பாபு கணேஷ் அந்த சாதனை, இந்த சாதனை என்று பயமுறுத்தி கலக்குகிறாரோ அதேபோலத்தான் இந்த சதீஷ் ரெட்டியும். இவரது படம்தான் த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ். வீணா மாலிக் முக்கிய ரோலில் நடிக்கிறார்.இப்படத்தில் கவர்ச்சிக்கே முக்கியப் பாத்திரம் தரப்படுவதாக தெரிகிறது. காரணம், வீணா மாலிக் உள்பட பல கவர்ச்சி நடிகைகளை அடுத்தடுத்து புக் செய்து கொண்டிருக்கிறார் தயாரிப்பாளரான ரெட்டியும், இயக்குநரான ஹாரூன் ரஷீத்தும்.அந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்துள்ளார் பைரவி கோஸ்வாமி. இவரது பெயரைச் சொன்னாலே புல்லரித்துப் போகும். அப்படி ஒரு கவர்ச்சிக்குச் சொந்தக்காரப் பெண்ணாம் இவர்.த சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் இப்போது பைரவியையும் சேர்த்து விட்டனர். இப்படத்தில் அவர் செக்ஸியான போஸ்கள், பிகினி உடை நடனங்கள் என தனது அழகை அள்ளிக் கொட்டப் போகிறாராம்.பைரவி கவர்ச்சியில் மட்டுமல்லாமல் பேச்சிலும் கூட செம தில்லாகத்தான் இருக்கிறார். அவர் கூறுகையில், நான் ரொம்ப போல்டானா ஆள். எனவே போல்டான சீன்களில் நடிக்க நான் தயங்கியதே கிடையாது. ரசிகர்களை மகிழ்விப்பது மட்டுமே எனது ஒரே வேலை. எதைக் காட்டினால் ரசிகர்கள் மகிழ்வார்களோ அதைக் காட்ட நான் தயங்கவே மாட்டேன்.எனக்கு இசை என்றால் கொள்ளைப் பிரியம். இசைக்கு அடிமை நான். இசை இல்லாமல் இருக்க முடியாது. அதுதான் எனது வாழ்க்கையும் கூட என்றார் பைரவி.பைரவிக்கு கவர்ச்சி புதிய விஷயமே இல்லை. மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி என்ற படத்தில் கவர்ச்சியில் ரசிகர்களை நனைய விட்டிருந்தார் பைரவி. அப்படத்தில் அனுபம் கெரும், அமிதாப் பச்சனும் நடித்திருந்தனர். என்னென்ன பண்ணத் திட்டமிட்டிருக்கிறாரோ பைரவி...!

09 டிசம்பர் 2012

மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்!

அடிதடி, மிரட்டிப் பறித்தல், அச்சுறுத்தல் என கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, “எனக்கு எதிராக பெரிய சதியே நடைபெறுகிறது. அதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார். தற்போது, 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். புவனேஸ்வரி தொடர்பாக, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரு உயர் போலீஸ் அதிகாரி, “அவரை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்” என கேட்டுக் கொண்டதாக, ஒரு தகவல் அடிபடுகிறது. தமக்கு எதிரான சதித்திட்டத்தை போட்டிருப்பது யார் என்பதை புவனேஸ்வரி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

03 டிசம்பர் 2012

ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!

ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது நீர்ப்பறவை. கிளிநொச்சிப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கரைக்கு வந்த சிறுவன், அவன் வாழ்வு, காதல், கண்ணீர், மதம், குடும்பம் கடைசியாக எப்படி சாகடிக்கப்படுகிறான் என்பதை நீர்ப்பறவை காட்சிபடுத்துகிறது. ஆழமான கதாபாத்திரங்கள், அசரவைக்கும் நடிப்பு, அற்புதமான லொகேஷன், நெகிழவைக்கும் காட்சியமைப்புகள் என அனைத்து விதத்திலும் நீர்ப்பறவை பிரமிக்கவைக்கிறது. 80களில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு மீனவனின் கதை. ராமேஸ்வரக் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு, தன் குடும்பம் சுடப்பட்ட நிலையில் கிடக்க, அந்த பிணங்களைப் பார்த்தபடி ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான். அந்த படகு தமிழகத்தின் கரைவந்து சேர தமிழகத்தின் கிறிஸ்தவ மீனவர் குடும்பத்தில் மகனாய் வாழ்கிறான் அந்த சிறுவன். அம்மா அதிக செல்லம் கொடுத்து வளர்க்க, குடிபோதைக்கு அடிமையாகிறான். கைநடுக்கம் எடுத்தால் சாராயம் குடிக்க ஓடிவிடுவான். இப்படி மீன்பிடி தொழிலுக்குப் போகாமல் சாராயம் குடித்து ஊருக்குள் கெட்ட பேரை சம்பாதித்து வைத்தபடியே சுற்றித்திருகிறான் அருளப்பசாமி (விஷ்ணு). இந்த குடிகார அருளப்பசாமியின் வாழ்க்கையில் அதிசயமாய் வந்து சேர்கிறாள் எஸ்தர் (சுனைனா). குடிப்பதற்கு எஸ்தரிடம் அருளப்பசாமி போய் சொல்லி காசு கேட்க, அவன் சொன்னது பொய் என்பது எஸ்தருக்கு பின்னர் தான் தெரியவருகிறது. ஊரே திட்டித்தீர்க்கும் அருளப்பசாமியின் தலையில் கைவைத்து ‘ஆண்டவரே இவரை மன்னியும், இவரை மாற்றும், இந்த மகனை உம்மிடம் ஒப்படைக்கிறோம்’ என்று ஜெபம் பண்ணுகிறாள், அந்த நொடி ஏதோ ஒரு மாற்றத்தை தனக்குள் உண்ர்கிறான் அருளப்பசாமி. அவன் திருந்தி வாழவும், சொந்தமாக ஒரு படகு வாங்கி தொழில் செய்யவும் காரணமாய் இருக்கிறாள் எஸ்தர். சிறுவயதிலிருந்தே தேவாலயத்தில் வளர்ந்த எஸ்தருக்கும், அருளப்பசாமிக்கும் காதல் மலர்கிறது. உருகி உருகி காதலித்தவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். ஒரு நாள் அதிகாலையில் தன் மனைவியிடம் இன்னொரு குழந்தைக்கு அனுமதி கேட்க, அதெல்லாம் இப்ப முடியாது முதல்ல கடலுக்கு போங்க என்று வம்படியாக மீன்பிடிக்க கடலுக்கு அனுப்பிவைக்கிறாள். சிரித்துக்கொண்டே கடலுக்குள் சென்ற அருளப்பசாமி திரும்ப கரைக்கு வரவே இல்லை! அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் ஊகிக்க முடிந்தாலும், அந்த காட்சிகள் பார்க்கும் போது இதயம் கனக்கிறது. தன் கணவருக்கு நடந்த இந்த சோகத்தை பிளாஷ் பேக்-காக சொல்கிறார் நிகழ்கால எஸ்தர் நந்திதாதாஸ். தன் கணவரை தானே கொன்று தன் வீட்டில் புதைத்துவிட்டார் என்று நந்திதாதாஸ் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து துவங்குகிறது திரைக்கதை. இலங்கை கடற்படையினறால் தமிழக மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போய்யிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார். தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக சுட்டுக்கொல்லப்படும் அந்த ஜீவன்களுக்கு நாம் ஒரு துளி கண்ணீர் விட நீர்ப்பறவை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை. படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. நல்ல நடிகர்களை தேர்வு செய்த இயக்குனருக்கு இன்னொரு சபாஷ். சரண்யா, தம்பி ராமைய்யா, நந்திதா தாஸ், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அழகம்பெருமாள், ப்ளாக் பாண்டி, ’பூ’ராம் என அனைவரும் நடிப்பில் வெளுத்துவாங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தை விஷ்ணுவை தவிர வேறு யாராவது இவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். சுனைனா அமைதியான கிறிஸ்துவப் பெண்ணாக அசத்துகிறார். கரைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனிடம் நீ எந்த ஊருப்பா என்று கேட்க, அவன் கிளிநொச்சி என்று பதில் சொன்னதும் ‘யார் வீட்டு மகனோ மகனோ, தாய்வீடு வந்தது பிள்ளை...’ என்று வைரமுத்துவின் வரிகள் இசையாய் வந்து விழும் நேரம் இதயத்தில் மழையடிக்கிறது. மதம் வெவ்வேறாக இருந்தாலும் மனிதர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர். இஸ்லாமியராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் ‘நான் கும்பிடுகிற ஏசய்யாவா உங்கள நெனைகிறேன்’ என்று விஷ்ணுவின் அப்பா உதவி கேட்பதும், விஷ்ணுவுக்கு படகு செய்துகொடுக்கும் சமுத்திரக்கனி அதில் ‘தேவனுக்கே மகிமை’ என்று எழுதி வைப்பதும் எதார்த்தங்களாக இருந்தாலும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஷ்ணுவின் குடிபழக்கத்தை குணமாக்கும் மருத்துவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதையும், அந்த மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் போட்டோ இருப்பதையும் நாம் கவனிக்கமுடிகிறது. அவருக்கு விஷ்ணுவின் அப்பா ஒரு பெரிய மீனை பரிசாக கொடுக்கும் காட்சி நெகிழவைக்கிறது. ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. மீனவன சுட்டுக் கொன்னுடா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க என்பதும், என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு என்று நந்திதாதாஸ் சொல்வதும் நச் வசனங்கள். குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் என்று ஜோசப் பாரதி என்ற கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமைய்யா அடிக்கடி காமெடி வெடி போடுகிறார். நிறம் மாறும் கடலை நிஜம் மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எத்தனையோ மசாலா படங்களை தயாரித்திருந்தாலும் ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்ததால் உதயநிதியின் மேல் மரியாதை அதிகரிக்கிறது. எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழன் என்ற காரணத்திற்காக சுடப்படும் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அரசாங்கமே எடுக்க முடியாத நிலையில், நீர்ப்பறவை திரைப்படத்தில் என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் தமிழ் சினிமாவின் பார்வை இதன் மீது திரும்பி இருப்பது பாராட்டுக்குறியது. எவ்வளவோ ரத்தம் பார்த்துவிட்ட தமிழனுக்கு ஒரு துளி கண்ணீராய் ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!

24 நவம்பர் 2012

ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன்?

நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் நகை திருடியது ஏன் என, கைது செய்யப்பட்டுள்ள வேலைக்கார பெண் ஜோதி, பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். சென்னை ஈச்சம்பாக்கத்தில் வசிக்கும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாய் நித்யா, 64. படுக்கை அறை அலமாறியில் வைக்கப்பட்டு இருந்த, வைர வளையல் உள்பட, 35 சவரன் திருடு போயிருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், நீலாங்கரை போலீசார் , வேலைக்கார பெண் ஜோதி, 22.யை நேற்று கைது செய்துள்ளனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:ஆந்திர மாநிலம் குண்டூரில் பெற்றோர் வசிக்கின்றனர். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது.வரதட்சணையாக, 50 சவரன் கேட்டனர். ஏழ்மை நிலையில் இருக்கும், என் தந்தையால் அவ்வளவு நகை போட முடியாது என்பதால், என்ன செய்வதென்று தவித்தேன்.வேலைக்கார பெண்ணாக இருந்த போதிலும், சினிமா நடிகை ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தாரின் நம்பிக்கையை பெற்று இருந்தேன்.அந்த வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் எனக்கு அத்துபடி. படுக்கை அறை அலமாரியில் வைக்கப்பட்டு இருந்த வைர வளையல், தங்க வளையல், சிவப்பு, பச்சை கல் பதித்த நெக்லஸ், தங்க நாணயங்கள் என, சிறுக சிறுக திருடினேன். 35 சவரன் மட்டும் திருடியிருந்ததால், மீதிதேவைப்பட்ட, 15 சவரனையும் திருடும் வேலையை துவங்கினேன்.பச்சை கல் பதித்த வைர வளையலை, நடிகை ரம்யா கிருஷ்ணன், விரும்பி அணிவார். அந்த நகையை, நான் திருடிவிட்டதால், காணாமல், வீடு முழுக்க தேடினர். மாட்டிக் கொள்வோம் என, பயந்து, ஆந்திராவுக்கு தப்ப முயன்ற போது போலீசில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு ஜோதி, போலீசில் தெரிவித்து உள்ளார்.

11 நவம்பர் 2012

ஸ்ரீரம்யா தமிழுக்கு வருகிறார்!

தெலுங்குப் படம் ஒன்றுக்காக, காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக நிஜமாகவே மொட்டை போட்டுக் கலக்கிய நடிகை ஸ்ரீரம்யா தற்போது தமிழுக்கு வந்துள்ளார். யமுனா படத்தின் நாயகிதான் இந்த ஸ்ரீரம்யா.மணிரத்தினத்தின் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கணேஷ்பாபு. இவர் இப்போது இயக்குநராகியுள்ளார். இவரது முதல் படம்தான் யமுனா. இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள தெலுங்கு நடிகை ஸ்ரீரம்யா குறித்து மிகப் பெருமையாக பேசுகிறார் கணேஷ் குமார். ஏன் கணேஷ் என்று கேட்டால் அவர் சொன்ன பதிலைப் பாருங்கள். பல முன்னணி நாயகிகளை நான் இப்படத்திற்காக அணுகினேன். ஆனால் அவர்கள் நடிக்க மறுத்து விட்டார்கள்.சிலர் நடிக்க முன்வந்தபோதும் அவர்கள் பாத்திரத்திற்கு சரியாகப் பொருந்தவில்லை.இந்த நிலையில்தான் ஸ்ரீரம்யாவை நான் அணுகினேன். ஸ்ரீரம்யா 1940 ல ஒக கிராமம் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை வென்றவர். மிகச் சிறப்பான நடிகை.அந்தப் படத்தில் நிஜமாகவே மொட்டை போட்டு அதிர வைத்தவர்.அவ்வளவு சிறிய வயதில் தலையை மொட்டை அடிக்க ஒரு பெண்ணுக்கு மனசே வராது. ஆனால் பாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக மொட்டை போட்டுக் கொண்டு நடித்தவர் ரம்யா. இதனால்தான் அவரையே எனது படத்தின் நாயகியாக்கினேன் என்றார் கணேஷ் குமார்.யமுனா படத்தின் கதையைச் சொன்னதுமே டக்கென்று நான் இதில் நடிக்கிறேன் என்று சொல்லி விட்டாராம் ஸ்ரீரம்யாவும். எனவே இதனால் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரிய வருவது என்னவெனில் தெலுங்குத் திரையுலகிலிருந்து மேலும் ஒரு நல்ல நடிகை வருகிறார் என்பதே....

04 நவம்பர் 2012

சர்ச்சையை ஏற்படுத்திய பிரேசில் அழகி.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த கவர்ச்சி மாடல் அழகியான நானா கோவியா, சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில், சேதத்திற்கு மத்தியில் நின்று புகைப்படமெடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அமெரிக்கா சோகத்தில் மூழ்கிக் கிடக்கும்போது இப்படியா அதை வைத்து விளம்பரம் தேடிக்கொள்வது என்று பலரும் அவரை கிண்டலடிக்கிறார்களாம். விழுந்து கிடக்கும் மரம், சேதாரங்களுக்கு மத்தியில் நின்றபடி விதம் விதமாக போஸ் கொடுத்துள்ளார் நானா. இந்த நிலையில் நானாவை விமர்சிக்கும் வகையிலும், அவரைத் திட்டுவதற்காகவும் ஏராளமானோர் பேஸ்புக் கணக்குகளைத் தொடங்கி அவரை சரமாரியாக திட்டி வருகின்றனராம். 30 வயதான நானா, பிளேபாய் பத்திரிக்கைக்காக நிர்வாண போஸ் கொடுத்து முன்பு கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாண்டி புயல் சோகத்தை ஏற்படுத்திச் சென்ற ஒன்று. ஆனால் அதைக் கொண்டாடும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார் நானா. இது கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல், மலிவான செயலுமாகும் என்று பலரும் நானாவைத் திட்டி வருகின்றனர். அவரைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்பட்ட பேஸ்புக் பக்கங்களில் கடலில் மூழ்கும் டைட்டானிக் கப்பல் அருகே நானா நிற்பது போலவும், உலகின் பல்வேறு அசம்பாவித சம்பவங்களைப் பார்த்து நானா இரசிப்பது போலவும் அவரது படத்தைப் போட்டுள்ளனராம்.

29 அக்டோபர் 2012

பிரியாணியால் விலகினாராம் ரிச்சா!

richa on briyani confusion பிரியாணி படத்தின் கதையை திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு மாற்றியதால் தான் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டாராம் ரிச்சா கங்கோபாத்யாயா. சிம்பு, தனுஷ் என அடுத்தடுத்து ஜோடி போட்டு பட்டையைக் கிளப்பியவர் ரிச்சா. ஆனால் அதற்குப் பின்னர் பார்ட்டியை ஆளைக் காணோம். இடையில் திடீரென வெங்கட் பிரபுவின் பிரியாணி படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதே வேகத்தில் அப்படத்தில் ஹன்சிகா மோத்வானி புக் ஆனதாகவும் செய்திகள் வந்ததால் ரிச்சா மேட்டர் குழப்பமானது.

23 அக்டோபர் 2012

சுபா திடீர் மரணம்!

maalai pozhuthin mayakathile heroine subha dies மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது. மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது. இதில் நாயகியாக நடித்திருந்தவர் சுபா புத்தெல்லா. இன்று காலை அவர் திடீரென மரணமடைந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததாகவும், அதனால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 அக்டோபர் 2012

அதிர வைக்கும் அஞ்சலி!

19 Actress Anjali Is Strict Diet Aid0128அங்காடித்தெரு அஞ்சலியை கலகலப்பு படம் மாஸ் நடிகையாக்கி விட்டது. அதுவரையில் அவரை கண்டுகொள்ளாதிருந்த அண்டை மாநில இயக்குனர்கள் அந்த படத்தில் அவர் நறுக் ஆட்டம் போட்டதைப்பார்த்து ஆடிப்போனார்கள். இந்த குடும்ப நடிகைக்குள் இப்படியும் ஒரு அயிட்டம் நடிகை குடியிருக்கிறாரா? என்று அசந்து போனார்கள். அதனால் அதே மூடில் அஞ்சலியை ஆந்திராவுக்கு வரவைத்து கேட்ட சம்பளத்தை கொடுத்து கால்சீட்டையும், அஞ்சலியையும் கேட்ச் பண்ணி விட்டனர். என்னதான் தமிழ் சினிமா தன்னை வளர்த்தது என்றாலும், தெலுங்கு தாய் மொழியாயிற்றே அதனால் அடுத்து அங்கு முகாம்போட்டு கல்லாக்கட்ட தீர்மானித்து விட்டார் அஞ்சலி. அதனால் தமிழில் நடித்து வரும் சேட்டை உள்ளிட்ட சில படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு ஆந்திர கரையோரம் முழுநேரமும் ஒதுங்க இருக்கிறார் அம்மணி.

14 அக்டோபர் 2012

நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!

Arjun Daughter Make Her Debut நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை. பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம். எத்தனையோ ஹீரோக்கள் கேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம். அர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம். "என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்," என்கிறார் ஹீரோ விஷால். விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.

08 அக்டோபர் 2012

சுஜிபாலா வேணாம் முறுக்கிக் கொண்ட இயக்குநர்!

New Director Cancels His Marriage With Sujibala நடிகை சுஜிபாலா எனக்கு வேண்டாம்... திருமணத்தை ரத்து செய்கிறேன் என்று அறிமுக இயக்குநர் ரவிக்குமார் கூறியுள்ளார். 'உண்மை' என்ற தலைப்பில் படம் இயக்கி வரும் புதிய இயக்குநர் ரவிக்குமாருக்கும் அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. பிறகு இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சுஜிபாலா தற்கொலைக்கு முயன்றார். ஆனால் இதை மறுத்து சுஜிபாலா, நிச்சயிக்கப்பட்டபடி ரவிக்குமாரை திருமணம் செய்வேன் என்றார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன் நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் உள்ள சுஜிபாலா வீட்டுக்கு ரவிக்குமார் திடீரென்று சென்றார். அப்போது சுஜிபாலாவுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டதாம். திருமணத்துக்கு மறுத்ததுடன் சுஜிபாலைவை பிடித்து தள்ளிவிட்டு வீட்டை விட்டு அவர் வெளியேறிவிட்டதாக கூறப்பட்டது. அப்போது வீட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டாராம். இந்த நிலையில் இயக்குனர் பி.ரவிக்குமார் சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, திருமணம் ரத்தாகிவிட்டதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், "எனக்கும் சுஜிபாலாவுக்கும் இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் தற்போது எங்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட்டோம். திருமணம் ரத்தாகிவிட்டது. இனி எனக்கும் சுஜிபாலாவுக்கும் எந்த உறவோ தொடர்போ இல்லை," என்றார்.

05 அக்டோபர் 2012

போதையில் இளைஞர்கள்:சரண்யா வேதனை

போதை என்ற குறும்படத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்களை திருத்தும் பாத்திரத்தில் நடித்த நடிகை காதல் சரண்யா மிகுந்த மனவேதனை அடைந்தாராம். இதனை அந்த படத்தை இயக்கிய இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். வெண்ணிலா கபடி குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ் தற்போது போதை என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார். போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி, நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா. போதையின் பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது. இந்த படத்திற்காக நிஜத்திலேயே போதைக்கு அடிமையான இளைஞர்களை சந்தித்த சரண்யா அவர்களின் எதிர்காலம் பற்றி மிகவும் கவலைப்பட்டார் என்று இயக்குநர் செல்வகணேஷ் கூறியுள்ளார். இந்த கதாபாத்திரம் சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

30 செப்டம்பர் 2012

வீதியில் தவித்த ஸ்ரேயா!

தோழிகளை அழைத்து வர சென்றபோது நடிகை ஸ்ரேயாவின் கார் பஞ்சரானதால் மும்பையில் பெரும் ட்ராபிக் நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரேயாவை மக்கள் திட்டித் தீர்த்தனர். ஸ்ரேயாவின் சொந்த ஊர் மும்பைதான். அவரைப் பார்க்க வெளிநாட்டிலிருந்து சில தோழிகள் வந்துள்ளனர். இவர்களை நேரில் வரவேற்க விமான நிலையத்துக்கே கிளம்பினார் ஸ்ரேயா. தோழிகளை ஏற்றிக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. அப்போது மும்பை மெயின் ரோடில் அவர் கார் பஞ்சராகி நின்றது. இதனால் பெரும் ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது. மிகுந்த பதட்டத்துடன் தன் தந்தை மற்றும் உறவினர்களை அழைத்தார் ஸ்ரேயா. அதற்குள் வாகன ஓட்டிகள் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டு திட்ட ஆரம்பித்தனர். வெகு சிலர் மட்டும் வேடிக்கைப் பார்த்தனர். வேதனை மற்றும் ஆத்திரத்தில் கண்கலங்க நின்று கொண்டிருந்தார் ஸ்ரேயா. சற்று நேரத்தில் அவர் தந்தை போலீசாருடன் வந்து சேர, பிரச்சினையை சமாளித்து வீடு திரும்பினார். தோழிகள் முன்னிலையில் தனக்கு நேர்ந்த இந்த சங்கடம் குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரேயா, மிக மோசமான அனுபவம் அது என்றார்.

27 செப்டம்பர் 2012

நயன்தாராவால் தவிக்கும் ஜெய்!

நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல் இருக்கிறாராம். நயன்தாரா, ஆர்யா நடிக்கும் படத்தில் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் நடிக்கிறார். அதிலும் படத்தில் நயனை காதலிக்கிறார். படத்தில் அவர்களுக்கு ஒரு டூயட் கூட இருக்கிறது. நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது, அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம். இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் மனிதர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம். அட்லீ எடுக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. முக்கோண காதல் கதை கொண்டது இப்படம். ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிசியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார். கவலைப்படாதீங்க ஜெய், நயன் ரொம்பவே நல்லவர். தைரியமா போய் நடிங்க. ஜெய் நடித்து கடைசியாக வந்த படம் எங்கேயும் எப்போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

16 செப்டம்பர் 2012

சதைப்பிடிப்பான பெண்களைத்தான் பிடிக்கும்!

வித்யா பாலன்
சற்றே சதைப்பிடிப்பான, இயல்பான வளைவு நெளிவுகளுடன் கூடிய பெண்கள்தான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், அவர்கள் அதைத்தான் சொல்வார்கள் என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன். இதுகுறித்து வித்யா கூறுகையில், பெண்களைப் பொறுத்தவரை ஒல்லிக்குச்சியாக இருந்தால் அழகு கிடையாது. சற்றே சதைப்பிடிப்புடன் இருக்க வேண்டும். இயல்பான வளைவு நெளிவுகள் இருக்க வேண்டும். அதுதான் அழகு. ஆண்களைக் கேட்டுப் பாருங்கள், உங்களுக்கே தெரியும். இந்தியப் பெண்களுக்கு மட்டுமே இயல்பான வளைவு நெளிவுகள் அழகாக அமைந்துள்ளன. அவர்களின் உடல்அமைப்பே கவர்ச்சிகரமானதுதான். என்னைப் பொறுத்தவரை எனது உடல் அழகு மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு, பெருமை உண்டு. என்னை நானே ரசித்துக் கொள்வேன், அதில் தவறேதும் இல்லை. டர்ட்டி பிக்சர்ஸ் படத்துக்காக நான் சற்றே சதை போட்டேன். தற்போது அது குறைந்து விட்டது. இதற்காக நான் அதிகம் மெனக்கெடவில்லை. எனது சதைப் பிடிப்பு சற்று குறைந்திருந்தாலும், அது வெளியில் தெரியாத வகையில்தான் எனது உடல் வாகு அமைந்துள்ளது. டர்ட்டி பிக்சர்ஸ் முடிந்தவுடனேயே எனது உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. எனக்கு பனாரசி சேலைகள் என்றால் உயிர். எங்காவது போவதாக இருந்தால் அந்த சேலையைத்தான் நான் உடுத்திக் கொள்வேன். சேலைதான் பெண்களுக்கு கூடுதல் அழகு தெரியுமா என்று அழகாக சிரித்தபடி கூறுகிறார் வித்யா பாலன். சரி கல்யாணம் எப்போ என்று கேட்டால். அதுகுறித்து நான் சிந்திக்கவே இல்லையே. அவசரமும் இல்லை. அவசரம் காட்டவும் நான் விரும்பவில்லை. நடக்கும்போது எல்லோருக்கும் தெரிவித்து விட்டுத்தான் செய்வேன், போதுமா என்று கூறி விடை பெற்றார் வித்யா.

14 செப்டம்பர் 2012

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு இல்லை!

பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக பாலிவுட்டில் தகவல் பரவியது. இது பற்றி அவர் கூறியதாவது: என்றைக்குமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ளும் தேவை எனக்கு ஏற்படவில்லை. இறைவன் எனக்கு எத்தகைய அழகை கொடுத்தானோ அதில் திருப்தியாக இருக்கிறேன். என்னைப்பற்றி பலர் பலவிதமாக எண்ணுகிறார்கள். நான் நிறம் சற்று குறைந்திருப்பதாகவும், சாதாரண தோற்றம் கொண்டவளாக இருப்பதாகவும் பரவலாக பேசுகிறார்கள். ஆனாலும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. தொடக்க காலங்களில் மேக்கப் போடுவது எப்படி என்பதுகூட எனக்கு தெரியாது. பல்வேறு படங்களில் நடித்த பிறகே அதுபற்றி புரிந்துகொண்டேன். பல நடிகைகளின் நிலைமை இதுதான். நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறுகிறார்கள். பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதற்கு நான் எதிரி அல்ல. அழகையும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தும் என்ற நிலையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்வதில் தவறு இல்லை. ஆனால் அதுவே மனதை ஆட்டிப் படைக்கும் என்ற நிலை ஏற்பட் டால் அது தவறு. எனக்கு நம்பிக்கை தருவது என்னுடைய படங்களின் வெற்றிதான். நடிகையாக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் மேம்போக்கான தோற்றங்களை பார்த்து என்னை எடைபோடுவது பிடிக்காது. எனது பல வயதில் பல்வேறு தோற்றங்களில் நான் மாற்றம் அடைந்திருக்கிறேன். அதற்கு காரணம் என் தோற்றத்தில் நான் செலுத்திய கவனம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ அந்த தோற்றம் எனக்கு பிடித்தவகையில் இருக்கிறது.

12 செப்டம்பர் 2012

நானியின் ஜோடி ப்ரணீதா!

Pranitha
ப்ரணீதா.
நான் ஈ புகழ் நானி தனது அடுத்த படத்தை தமிழில் செய்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் ப்ரணீதா. நானியின் முதல் நேரடி தமிழ்ப் படம் வெப்பம். கவுதம் மேனன் உதவியாளர் இயக்கிய அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. அடுத்த படம் நான் ஈ. தமிழ் - தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றது. விரைவில் நூறாவது நாளைத் தொடவிருக்கிறது. இவர் அடிப்படையில் தெலுங்கு நடிகராக இருந்தாலும், தனது அடுத்த படம் தமிழில் இருக்க வேண்டும் என விரும்புகிறாராம். பாலிவுட் படம் ஒன்றினை இதற்காக தமிழில் ரீமேக் செய்கிறார்கள். விஷ்ணுவர்தனின் உதவியாளர் கோகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். அதேநேரம் இப்போது நானியின் கைவசம் 3 தெலுங்குப் படங்கள் இருப்பதால், இந்தப் படத்தை உடனடியாகத் தொடங்க முடியாது என்று தெரிவித்துள்ளாராம்.

07 செப்டம்பர் 2012

'மைதிலி'க்காக 'பிகினி'க்குத் தாவிய சதா!

Sadaசுத்தமாக ஓய்ந்து போய்க் கிடக்கிறது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டுள்ளாராம் சதா. பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றியுள்ளார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்துள்ளாராம். நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருக்கிறார் சதா. படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழைதானாம். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியுள்ளாராம் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா. ஒரு இளம் பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையிலான உறவு குறித்த கதையாம் இது.... அதைச் சொல்லுங்க முதல்ல!

04 செப்டம்பர் 2012

முகத்தை காட்டாமல் ஓடிய பிரீத்தி ஜிந்தா!

What Was Preity Zinta Hiding பிராக்கில் இருந்து மும்பை திரும்பிய பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா விமான நிலையத்தில் தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்துக் கொண்டே சென்று காரில் ஏறினார். பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா பிராக்கில் நடந்த ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பை வந்தார். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தனர். மேலும் செய்தியாளர்களும் அங்கு கூடியிருந்தனர். வழக்கமாக சிரித்தபடியே போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, ரசிகர்களைப் பார்த்து கை ஆட்டிவி்ட்டுப் போகும் அவர் இம்முறை யாருக்குமே முகத்தை காட்டவில்லை. தனது கையாலும், முடியாலும் முகத்தை மறைத்தபடியே அங்கிருந்து வெளியேறினார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பிரீத்திக்கு என்னாச்சு, இப்படி முகத்தை மறைத்துக் கொண்டே போய்விட்டார் என்று முணுமுணுத்தனர். அவரது தாடை வீங்கியிருந்ததை அங்கிருந்தவர்கள் பார்ததுவிட்டனர். அது கீழே விழுந்து அடிபட்டதா அல்லது ஏதாவது லடாயா என்று தெரியவில்லை. அவர் முகத்தை மறைத்தாலும் புகைப்படக்காரர்கள் அதையும் விடாமல் போட்டோ எடுத்துத் தள்ளினர். அந்த போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரீத்திக்கு என்னாச்சு என்பது தான் அனைவரின் கேள்வியும்.Actress Preity Zinta

02 செப்டம்பர் 2012

பணத்துக்காக பலருடனும் உறவு கொண்டுள்ளேன்... !

முன்பு பணத் தேவைக்காக பலருடனும் உடலுறவு வைத்துள்ளேன் என்று பகிரங்கமாக கூறியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா. சில நடிகைகள் வாயைத் திறந்தாலே பலானதாகவே இருக்கும். அந்த வரிசையில் ஷெர்லினும் ஒருவர். டிவிட்டரில் இவர் லேட்டஸ்டாக சொல்லியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்துக்காக பலருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாக வெகு ஓப்பனாக கூறியுள்ளார் ஷெர்லின். இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு பலமுறை டிவிட்டரில் உங்களுடன் படுக்க வேண்டும். என்ன ரேட் என்று சொல்லுங்கள் என்று கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகிறார்கள். கடந்த காலத்தில் நான் பலமுறை பணத்திற்காக உறவு வைத்துக் கொண்டுள்ளேன். பணம் எனக்கு அப்போது நிறைய தேவைப்பட்டது. இதற்காக நான் இதில் ஈடுபட்டேன். அதில் எனக்கு வருத்தமோ, தயக்கமோ ஏற்படவில்லை. ஒரு முறை கூட நான் ஓசியில் யாருடனும் படுத்ததில்லை. எல்லாமே பணத்திற்காகத்தான். எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்திருந்தேன். ஆனால் இப்போது நான் அப்படியில்லை. என்னுடைய வாழ்க்கைத் தரத்தின் அளவு மாறி விட்டது. இப்போது அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று உணர்கிறேன் என்று கூறியுள்ளார் ஷெர்லின்.

31 ஆகஸ்ட் 2012

"நான் அக்காவா?" கோபத்தில் ரீமா

தனது திருமணத்திற்கு பிறகு அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வந்து இருப்பதாக கிண்டல் செய்கிறார்கள் என்று ரீமா சென் கோபப்படுகிறார். 'மின்னலே', 'தூள்', 'செல்லமே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் ரீமா சென். 1982ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' படம் ரீமேக்காகி வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிப்பில் அவரது உறவுக்காரப் பெண் சினேஹா இயக்கி வருகிறார். தமன்குமார், பியா, பிந்து மாதவி நடிக்கிறார்கள். இதில் ரீமா சென் முக்கிய பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக, ஹீரோவின் அக்காவாக நடிக்கிறார். 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக்கில் நடிப்பது குறித்து ரீமா சென் தெரிவித்து இருப்பது " எனக்கு திருமணமாகிவிட்டதால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வந்துவிட்டதாக சிலர் கிண்டல் செய்கிறார்கள். திருமணம் ஆகிவிட்டால் வயது கூடிவிடுமா? இல்லை அழகுதான் குறைந்துவிடுமா?. நான் இப்போதும் அழகாக, கிளாமராக இருக்கிறேன். அதனால் அக்கா அண்ணி கேரக்டரில் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் படத்தை பொறுத்தவரை இந்தியில் ஹேமமாலினி நடித்த பவர்ஃபுல் கேரக்டர் என்பதால் நடித்தேன். ரீமேக்கில் எனது கேரக்டரை விரிவுபடுத்தி, காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். 18 வயது சின்ன பெண் இயக்குகிறார் அவரை ஊக்கப்படுத்த வேண்டியது சீனியர் என்கிற முறையில் எனது கடமை. எனக்கு கிளாமர் நடிகை என்று பெயர் இருப்பது சந்தோஷம்தான். ஆனால் எந்தப் படத்திலும் உடம்பை காட்டி நடிக்கவில்லை. நான் முழுக்க சேலை அணிந்து வந்தாலும் கிளாமராக தெரிவேன். இது கடவுள் கொடுத்த வரம். " என்று தெரிவித்து இருக்கிறார்.

27 ஆகஸ்ட் 2012

நடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி!

Actress Sujibala Suicide Attempt நடிகை சுஜிபாலா அதிக அளவு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்று உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இயக்குநர் தங்கபர்ச்சானின் பள்ளிக்கூட்டம், இயக்குநர் ராசு மதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி நாயகனாக நடித்து வருகிறார். சுஜிபாலாவை ரவிக்குமார் திருமணம் செய்ய விரும்பி அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஜூலை 5-ந் தேதியன்று ரவிக்குமாருக்கும் சுஜிபாலாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென சுஜிபாலா அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமணத்துக்கு விருப்பம் இல்லாதநிலையில்தான் சுஜிபாலா தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தற்போது உடல்நிலை தேறியுள்ள சுஜிபாலா விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 ஆகஸ்ட் 2012

ஹன்ஸிகா தமன்னா அக்கப்போர்!


வேட்டை படத்தின் தெலுங்குப் பதிப்பில் ஒப்பந்தமான ஹன்ஸிகா நீக்கப்பட்டு, அவருக்கு பதில் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் இரண்டு முன்னணி நடிகைகளுக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மாதவன், ஆர்யா நடித்து தமிழில் ரிலீசான வேட்டை படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் கதாநாயகிகளாக நடிக்க ஹன்சிகா, ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் அமலாபால் நடித்த கேரக்டரில் ஹன்சிகாவும், சமீரா ரெட்டி நடித்த வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது. ஆன்ட்ரியாவும் ஹன்ஸிகாவும் அக்கா தங்கை போல போஸ் கொடுத்து மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தனர். ஆனால் அது புஸ்ஸாகிவிட்டது. இப்போது திடீரென படத்திலிருந்து ஹன்ஸிகா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமன்னாவை தேர்வு செய்துள்ளனர். இன்றைய தேதிக்கு தமன்னா தெலுங்கில் ஹாட். அவரது சமீபத்திய படம் '100 பர்சன்ட் லவ்' படம் செம ஹிட் என்பதால் இந்த முடிவு என்றும் படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் ஹன்ஸிகாவோ, தனது பட வாய்ப்பை தமன்னா பறித்து விட்டதாக ஆத்திரத்தில் உள்ளாராம். தமன்னாவை மிகக் கடுமையாகத் திட்டி தனக்கு நெருக்கமானவர்களிடம் கருத்து தெரிவித்து வருகிறாராம் ஹன்ஸிகா.

19 ஆகஸ்ட் 2012

ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான்!

kolaveri anirudh actress andria lip lock goes viral
ஆன்ட்ரியாவை கிஸ் அடித்தது நிஜம்தான். ஆனால் அது என் பர்சனல் விஷயம். யாரோ என் செல்போனிலிருந்து அந்தப் படங்களை எடுத்து வெளியிட்டுவிட்டனர் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். நடிகை ஆண்ட்ரியாவும், இசை அமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாயின. இந்த படங்கள் 18 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது இருவருக்கும் நெருக்கமான உறவு இருந்தது என்றும் ஆன்ட்ரியா கூறினார். இப்போது அனிருத்துடன் அந்த உறவு முறிந்துவிட்டது என்று ஒப்புக் கொண்டார். இப்போது அனிருத்தும் தன் பங்குக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆன்ட்ரியாவும், நானும் முத்தமிட்ட படங்கள் எனது செல்போனில்தான் இருந்தன. அது பழைய படம். இப்போது வெளிவந்து இருக்கிறது. அதை யாரோ எனக்கு தெரியாமல் டவுன் லோடு செய்து வெளியிட்டுள்ளனர். இது எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எனக்கென்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை இருக்கிறது. அதை இப்படி பகிரங்கப்படுத்தி விமர்சிப்பது வருத்தம் அளிக்கிறது. நான் பார்க்கிற பெண்களையெல்லாம் முத்தமிடுகிறவன் அல்ல. ஏற்கனவே நடந்த தவறுகள் மறுபடியும் நடக்காமல் பார்த்துக் கொள்வேன். நான் பெண்களை மிகவும் மதிப்பவன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது குடும்பத்தினர் எனக்கு துணையாக இருந்தனர்," என்றார்.

02 ஆகஸ்ட் 2012

விருந்தில் நடந்த விஷயங்களை சொல்ல முடியுமா?

தமன்னா
சமீபத்தில் நடந்த தனுஷின் பிறந்த நாள் விழாவில் செம குஜாலாக ஆட்டம் போட்டவர் நடிகை தமன்னா. தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் மட்டுமல்ல, தனுஷுக்கும் தமன்னாவுக்கும் கூட கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸெல்லாம் ஏகத்துக்கும் ஒர்க் அவுட் ஆனதால், இருவரும் தங்கள் நட்பை 'மெட்ராஸ் சிமெண்ட்' போடாத குறையாக இறுக்கமாக்கிக் கொண்டுள்ளார்களாம். அந்த உறவின் உரிமையில், ஐஸ்வர்யாவை விட ஒரு படி அதிகமாகப் போய் பார்ட்டியில் அன்பைப் பொழிந்தாராம் அம்மணி. இருவரும் அடிக்கடி காதருகில் கிசுகிசுப்பாக தெலுங்கில்தான் மாட்லாடிக் கொண்டார்களாம். அப்படி என்னதான் பேசினீர்கள்... தனுஷ் அப்படியென்ன ஸ்பெஷல் என்று சிலர் கேட்டதற்கு தமன்னா கூறிய பதில் இது: தனுஷ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ரொம்ப சுதந்திரமாக உணர்ந்தேன். மறக்கமுடியாத விருந்து அது. ‘வேங்கை' படத்தில் இருந்து நானும் தனுஷும் நெருக்கமான நண்பர்கள் (அதைச் சொல்லணுமா!) தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். எந்த வேலையாக இருந்தாலும், அதை மீறி கலந்து கொள்வேன். அவர் பிறந்த நாளில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம். ரொம்ப உணர்வுப் பூர்வமான நிகழ்வுகள் அவை. விருந்தில் நடந்த விஷயங்கள் பற்றி சொல்ல முடியுமா?," என்றார். பார்றா... உடம்பெல்லாம் மச்சம்ங்கிறது இதானா?!

28 ஜூலை 2012

தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு!

Aishwarya Not Attended Dhanush Birthday ஆனாலும் புதுசாக, அநியாயத்துக்கு செயற்கையாக நட்பை விளம்பரப்படுத்தி வரும் ஜோடி என்றால் அது தனுஷும் சிம்புவும்தான்! நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம், இந்த இருவரும் கடந்த காலங்களில் எவ்வளவு முடியுமோ அந்த அளவு ஒருவரையொருவர் கேவலமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவரவர் ரசிகர்களையும் பயன்படுத்தத் தவறியதில்லை. குறிப்பாக கொலவெறி பாட்டு வெளியான சமயத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களில் சிம்புவின் கமெண்டுகள், அது பற்றி தனுஷ் தந்த பதில்களைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இப்போதோ, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... எங்களைப் போல நண்பர்கள் உண்டா என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்கள். கூடவே இதெல்லாம் மீடியா வேலை என்று வேறு பிட்டைப் போட்டிருக்கிறார்கள். இருக்கட்டும். இன்று தனுஷுக்குப் பிறந்த நாள். இந்த பிறந்த நாளையொட்டி நேற்று இரவு ஏகப்பட்ட நட்சத்திரங்களை அழைத்து மெகா தண்ணி பார்ட்டி கொடுத்திருக்கிறார் தனுஷ். அதில் சிம்புவும் ஆஜர். கூடவே அவர்கள் வயது 'தோழிகள்' ராதிகா போன்றவர்களும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். தமன்னா, பிரேம்ஜி என பார்ட்டிகளுக்கென்றே பிறந்தவர்களும் வந்திருந்தனர். சேவல் வடிவில் (ஆடுகளம் ஹீரோல்ல...) கேக்கெல்லாம் வெட்டி கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்த பிறந்த நாள் விழா விருந்தில், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இல்லை!!

25 ஜூலை 2012

அமலா பால் அமெரிக்காவில் சிகிச்சை?

மீடியா முழுக்க அமலா பால் புராணம்தான் கடந்த நான்கு நாட்களாய். அம்மணி அமெரிக்கா போய் வந்தாராம். அந்தப் புராணத்தை தனக்கு தெரிந்த நாலு மீடியாக்காரர்களிடம் சொல்லி வைக்க, அவர்கள் கொஞ்சம் சுமாரான அமலா பாலுக்கு அசத்தலாக அலங்காரம் பண்ணி அம்சமான செய்தியாக உலாவ விட்டுவிட்டார்கள்... அதுவும் எப்படி? 'முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்ற வெற்றிப் படங்களில் (??!!) நடித்த அமலா பால்' என்றுதான் அடைமொழியே கொடுத்திருந்தனர்! செய்தியைப் படித்துவிட்டு, அமலாபால் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்க்கும் கோடம்பாக்கவாசிகள், 'நண்பா தெரியுமா சேதி... அம்மணி அங்கே போய் விழாவில் சும்மா ஒப்புக்கு இரண்டு நாள் இருந்துவிட்டு, அடுத்து கமுக்கமாக ஒரு வேலை செய்திருக்கிறார். அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் அழகை எடுப்பாகக் காட்ட சிகிச்சை செய்தாராம்...", என்று கிசுகிசுக்கிறார்கள். ஆனால் அமலா பாலே, அமெரிக்காவில் புது மேக்கப், புது சிகை அலங்காரம் மட்டும்தான் பண்ணிக்கொண்டேன் என்று விளக்கம் வேறு அளித்துள்ளார். எப்படியோ... இந்த சாக்கில் முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை போன்றவற்றை பெரிய வெற்றிப் படமாக்கிவிட்டனர், அமலா பாலின் 'நிருப(அன்)பர்கள்'!

22 ஜூலை 2012

காஜலுடன் இணையத் துடிக்கும் கோவிந்தா...!

வயதானாலும் இன்னும் குஷியும், கும்மாளமுமாக இருக்கும் கோவிந்தாவுக்கு புது ஆசை வந்துள்ளது. அதாவது சிக்கென்று இருக்கும் காஜல் அகர்வாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் அது. கோவிந்தாவுக்கு இப்போது பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இல்லை. கடைசியாக அவர் சல்மான் கானுடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் மறுபடியும் ஒரு ரவுண்டு வர ஆர்வமாக உள்ள கோவிந்தா, இந்த முறை பக்கா இளம் நாயகி ஒருவருடன் இணைந்து காட்சி தர தீர்மானித்துள்ளாராம். இதற்காக அவர் குறி வைத்திருப்பது காஜல் அகர்வாலையாம். சிங்கம் இந்திப் படத்தில் நடித்திருந்தார் காஜல். தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். இவருடன் இணைய இப்போது துடியாத் துடிக்கிறாராம் கோவிந்தா. இதுகுறித்து கோவிந்தா தரப்பில் கூறுகையில், துரந்தர் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கப் போகிறார் கோவிந்தா. இதற்கான டைக்டரை தேடி வந்தார். இறுதியில் ரஜ்னிஷ் ராஜ் தாக்கூரை அவர் முடிவு செய்துள்ளார். மேலும் தனக்கு ஜோடியாக காஜல் அகர்வாலைப் போட வேண்டும் என்றும் தீர்மானமாக உள்ளார் கோவிந்தா. இதுதொடர்பாக அவரை பார்த்தும் பேசியுள்ளார். காஜல் இன்னும் ஒன்றும் சொல்ல்வில்லை. அவர் ஓ.கே. சொல்லிவிட்டால் சுறுசுறுப்பாக படப்பிடிப்பைத் தொடங்கி விடுவார் கோவிந்தா என்கிறார்கள். காஜல் கோவிந்தாவுடன் சேருவாரா...?

18 ஜூலை 2012

கார்த்திக்கு சம்பளம் ரூ 14 கோடி!

ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானதாகும். 'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை. இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது. சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத், சூர்யா போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

13 ஜூலை 2012

காதலனுக்குப் (முன்னாள்?) போட்டியாக களமிறங்கும் நயன்தாரா!

நயன்தாரா
நடிகை என்ற எல்லையைத் தாண்டி, அடுத்த கட்டத்துக்கும் பயணிக்க தயாராகிவிட்டார் போலிருக்கிறது நயன்தாரா. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் புதிய படத்தில், நடிகையாக மட்டுமல்ல... உதவி இயக்குநராகவும் பணியாற்றி வருகிறாராம். அதிலும் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உதவி இயக்குனர் வேலைக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறாராம். படப்பிடிப்புகளில் கிளாப் போர்டு அடிப்பது, படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக வருவது, படப்பிடிப்பு முடிந்தபின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கடைசி ஆளாக போவது என உதவி இயக்குனருக்கான அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறாராம் நயன்தாரா. இப்படத்தில் உதவி இயக்குனர் பட்டியலில் நயன்தாரா பெயரும் இடம்பெறப் போகிறதாம். விரைவில் புதுப்படமொன்றை இயக்கும் திட்டம் உள்ளதாகவும் நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு இயக்குநர் ஆகும் ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது. தாடிக்குப் போட்டியாக இருக்குமோ!

10 ஜூலை 2012

ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?

Magath Manoj Fight Tapsi Public டாப்சியை காதலிக்கும் போட்டியில் நடிகர்கள் மனோஜ் மஞ்சுவும், மகத்தும் விருந்தில் ஒருவரோடு ஒருவர் அடித்து சண்டை போட்டுக் கொண்டனர். மங்காத்தா படத்தில் நடித்தவர் மகத். என்னைத் தெரியுமா படத்தில் அறிமுகமானவர் மஞ்ச் மனோஜ். தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன். தமிழில் அடுத்து வருவான் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மகத்துக்கும், டாப்சிக்கும் ஏற்கனவே நெருங்கிய தொடர்பு இருந்தது. படப்பிடிப்புக்காக டாப்சி சென்னை வரும்போதெல்லாம் அவரை பிக்கப் செய்வது மகத்தானாம். ஆனாலஸ் மஞ்ச் மனோஜை சந்தித்த பிறகு மகத்தை தொங்கலில் விட்டாராம் டாப்ஸி. மனோஜும், டாப்சியும் ஒன்றாக குடித்தனம் நடத்துகிறார்கள் எனும் அளவுக்கு தெலுங்குப் படவுலகில் செய்திகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. டாப்சியை தன்னிடம் இருந்து அபகரித்து கொண்டதாக மனோஜ் மீது மகத் ஆத்திரத்தில் இருந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு சென்னை நட்சத்திர ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் தெலுங்கு, தமிழ், நடிகர்-நடிகைகள் பங்கேற்றனர். இதுவும் சரக்குப் பார்ட்டிதான். அப்போது மகத்தும் - மனோஜும் சந்தித்துக் கொண்டனர். உடனே, டேய் டாப்ஸி என் ஆளு.. நீ அவகிட்ட பேசாதே என ஒருவருக்கொருவர் சவுண்ட் விட ஆரம்பித்துள்ளனர். ஆவேசப் பேச்சு சீக்கிரமே ஆபாசப் பேச்சாக மாற, ஒரு கட்டத்தில் கைகலப்பில் இறங்கினர். மகத் சட்டையை பிடித்து இழுத்து மனோஜ் அடித்து உதைத்தார். பதிலுக்கு மகத்தும் தாக்கினார். விருந்துக்கு வந்திருந்தவர்கள் இருவரையும் பிடித்து இழுத்துச் சென்றனர். இதுகுறித்து மகத்திடம் கேட்டபோது, தகராறு நடந்தது உண்மைதான் என ஒப்புக்கொண்டார். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. மனோஜ் என்மேல் ஏன் கோபமாக இருக்கிறார் என்று புரியவில்லை. இந்த சண்டைக்கு நான் காரணமில்லை, என்றார். ஆனால் மனோஜ் மஞ்சுவின் சகோதரி, லட்சுமி மஞ்சு இருவருக்கும் தகராறு நடைபெறவில்லை என்று மறுத்துள்ளார். தகராறு நடந்த இடத்தில் லட்சுமியும் இருந்தார் என சண்டையை விலக்கிவிட்டவர்கள் தெரிவித்தனர். இந்த சண்டையை விட மகா சுவாரஸ்யம்., சண்டையை விலக்கிவிட்ட ஒரு இளம் இயக்குநர் விட்ட கமெண்ட்: 'ஒரு சப்ப பிகருக்கே இந்த சண்டையாடா?'

05 ஜூலை 2012

முத்தம் ஓகே! - அஞ்சலி

Actress Anjali Photo Galleryசேட்டை படத்தில் இரண்டு நாயகிகள். ஒருவர் அஞ்சலி. இன்னொருவர் ஹன்ஸிகா. இந்தப் படம் இந்தியில் வெளியான டெல்லி பெல்லியின் ரீமேக் என்பது தெரிந்திருக்கும். ஒரிஜினல் கதைப்படி, ஹீரோ ஹீரோயினுக்கு ஒரு நெருக்கமான படுக்கையறைக் காட்சி உண்டு. அந்தக் காட்சியை அப்படியே எடுப்பதா... அல்லது கொஞ்சம் மாற்றுவதா என்று யோசித்த இயக்குநர், கதாநாயகி அஞ்சலியிடம், படுக்கையறைக் காட்சியில் நடிக்கிறீர்களா.. அல்லது உதட்டோடு உதடு முத்தம் தரும் காட்சியாக அதை மாற்றிவிடலாமா என்று சாய்ஸ் வைத்திருக்கிறார். அஞ்சலி சற்றும் தயங்காமல், எனக்கு லிப் டு லிப் சீன் ஓகே என்றாராம். ஆர்யாவுடன் படு ரொமான்டிக்காக அந்த முத்தக் காட்சியில் நடித்தும் கொடுத்தாராம். இதுகுறித்து பின்னர் அவர் அளித்த விளக்கம்: படுக்கயறைக் காட்சியில் நடித்தால் பெயர் கெட்டுப் போகும். அதான் முத்தக்காட்சி பரவால்லேன்னு ஒத்துக்கிட்டேன் என்றாராம். அப்போ மங்காத்தாவில் படுக்கையறைக் காட்சியில் வந்தது அஞ்சலியின் டூப்போ!

04 ஜூலை 2012

மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை!

Tapsee Denies Affair With Manoj தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் பாபுவின் மகன் நடிகர் மனோஜுடன் தனக்கு காதல், இருவரும் ஒன்றாக வசிக்கிறார்கள் என்று வரும் செய்திகளில் உண்மையில்லை என்கிறார் நடிகை டாப்ஸி. ஆடுகளம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான டாப்ஸி, இப்போது அஜீத் படத்தில் நடித்து வருகிறார். டாப்ஸிக்கும் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகனான நடிகர் மஞ்சு மனோஜ் குமாருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. இருவரும் தாலி கட்டாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகிறது. இருவரும் விழாக்களில் ஒன்றாக பங்கேற்றும் வருகிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து வரும் செய்திகள் பற்றி கோபமடைந்துள்ள டாப்ஸி கூறுகையில், "மனோஜையும் என்னையும் இணைத்து அடிக்கடி கிசுகிசுக்கள் வருகின்றன. இதை பரப்புவது யார் என்று எனக்கு தெரியும். மனோஜுக்கும் எனக்கும் காதல் இல்லை. மஞ்சு மனோஜ் அவரது குடும்பத்துடன் வசிக்கிறார். நான் மாதாபூரில் உள்ள எனது வீட்டில் வகிக்கிறேன். ஹாலிவுட்டில் நடிகர், நடிகைகள் நண்பர்களாக இருக்கின்றனர். ஆண், பெண் டாக்டர்களும் நண்பர்களாக உள்ளனர். நாங்கள் ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.

29 ஜூன் 2012

அமலா போட்ட சம்பளச்சண்டை!

Amala Paul Photosமைனா படம் மூலம் பிரபலமானவர் அமலாபால். விக்ரமுடன் “தெய்வத் திருமகள்” படத்தில் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். அமலாபாலை வெளிநாட்டில் நடந்த திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவொன்றில் நடனம் ஆடுவதற்காக சமீபத்தில் அழைத்து சென்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார். விழா துவங்கியதும் அவரை நடனமாட அழைத்தனர். ஆனால் சம்பளம் தராததால் ஆட மறுத்து விட்டார். ஓட்டல் லாபியில் நின்று பேசியபடி சம்பளம் தராதது ஏன்? என்று விழா அழைப்பாளர்களிடம் ஆவேசமாக பாய்ந்து ரகளையில் ஈடுபட்டார். முழு தொகையும் கொடுத்தால்தான் ஆடுவேன் என அடம் பிடித்தார். அமலாபால் தகராறு செய்வதை ஓட்டலுக்கு வந்து போனவர்கள் வேடிக்கை பார்த்தனர். விழா அமைப்பாளர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, அமலாபால் ரகளை செய்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டனர். சம்பளத்துக்காக அவர் தகராறு செய்யவில்லை. விமான டிக்கெட் எடுத்து கொடுக்கும் பிரச்சினையில் தான் அவர் சண்டை போட்டார் என்றனர். அவர் கேட்டபடி டிக்கெட் எடுத்து கொடுத்த பிறகு அவரது அம்மா மற்றும் உறவினருடன் விமானத்தில் புறப்பட்டார் என்றனர்.

20 ஜூன் 2012

துப்பட்டாவால் மறைக்கும் நயன்தாரா!

Nayantara Hides Prabhu Deva Tatto நயன்தாரா தன் கையில் உள்ள பிரபுதேவாவின் பெயரை துப்பட்டாவால் மறைத்துக் கொண்டிருக்கிறார். நயன்தாராவும், பிரபுதோவாவும் உருகி, உருகி காதலித்தனர். கடைசியில் பார்த்தால் ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றுவிட்டனர். காதலித்த காலத்தில் பிரபுதேவாவின் பெயரை நயன்தாரா தனது இடது கையில் பச்சை குத்தினார். காதல் முறிந்த பிறகும் அவர் அந்த பச்சையை இன்னும் அழிக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது கையில் உள்ள பச்சையை அழிக்க வெளிநாடு சென்றார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை என்று நயன் தெரிவித்தார். இந்நிலையில் அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நயன் கலந்து கொண்டார். அவர் கையில் உள்ள பிரபு தேவாவின் பெயரை எப்படியாவது போட்டோ எடுத்துவிட வேண்டும் என்று புகைப்படக்காரர்கள் முயன்றார்கள். அவர் முக்கால் கை உள்ள சுடிதார் அணிந்து துப்பட்டாவால் தன் கையில் உள்ள பச்சையை மறைத்துச் சென்றார். புகைப்படக்காரர்கள் முட்டி மோதி ஒரு வழியாக அந்த பச்சையை போட்டோ எடுத்துவிட்டனர். பிரபுதேவா என்னவென்றால் நயன் முடிந்து போன விஷயம் என்கிறார். ஆனால் நயன்தாராவோ பிரபுதேவாவின் பெயரை இன்னும் அழிக்காமல் வைத்துள்ளார்.

16 ஜூன் 2012

அமெரிக்காவில் தேன்நிலவு கொண்டாட்டம்!

Sneha Prasanna Fly Off Us சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் காதல் ஆரம்பமானது, இருவரும் ஜோடி சேர்ந்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலிருந்துதான். இந்தப் படத்தில் நடிக்க ஒத்திகை பார்க்க, இருவரும் அமெரிக்காவில் ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். கணவன் - மனைவியாக நடிக்க ஒத்திகை பார்த்தனர். அப்போதுதான் இருவருக்கும் காதல் பூத்தது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் காதலித்து, கடந்த மாதம் தம்பதிகளாகினர். திருமணமாகிவிட்டாலும் அவர்களால் ஹனிமூனை உடனடியாகக் கொண்டாட முடியவில்லை. தான் நடிக்க வேண்டிய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சினேகா. ஒருவழியாக இரவு பகல் பார்க்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போதுதான் இல்லற வேலைகளை ஆரம்பித்துள்ளனர் புதுமணத் தம்பதிகள். தேனிலவுக்காக எங்கே போகலாம் என்ற குழப்பமே இருவருக்கும் இல்லையாம். காரணம், தங்கள் காதல் ஆரம்பித்த அமெரிக்காவுக்கே செல்ல முடிவெடுத்திருந்தார்களாம். தங்கள் முடிவை இரு தினங்களுக்கு முன் அமைதியாக செயல்படுத்தினர் சினேகாவும் பிரசன்னாவும். இருவரும் நேற்று முன்தினம் ஹனிமூனுக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றனர்!

13 ஜூன் 2012

த்ரிஷாவின் குத்துச்சண்டை!

trisha0011.jpgபூலோகம் படத்தில் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்து போன இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் ‘லேடி பாக்ஸர்' என்று த்ரிஷாவிற்கு பெயர் சூட்டியுள்ளாராம். இதை பத்திரிக்கையாளர் சந்திப்பில் த்ரிஷாவே கூறியுள்ளார். உனக்கும் எனக்கும் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி, த்ரிஷா இணையும் படம் பூலோகம். இதில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். கதாநாயகி த்ரிசாவிற்கு வலுவான பாத்திரமாம். இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் த்ரிஷா கூறியுள்ளதாவது, பூலோகத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். படத்தில் என்னுடைய ரோல் ரொம்ப வெயிட்டானது. ஜெயம் ரவியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் பெண்ணாக இப்படத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டருக்கு பலமே நான் தான். படத்தில் என்னுடைய கேரக்டரை பார்த்து டைரக்டர் என்னை குத்துச்சண்டை வீராங்கனை என்று தான் அழைக்கிறார் என்று கூறியுள்ளார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. பூலோகம் படத்தை நவம்பர் 15ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

10 ஜூன் 2012

முகத்தை திருப்பும் அசின்!


Asin%20Reallife%20%281%29.jpgமும்பையில் கோலிவுட் ஹீரோயின்களைப் பார்த்தால் நடிகை அசின் முகத்தை திருப்பிக் கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
அசின் மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில் தான் பெரிய நடிகையாகி கொடிகட்டிப் பறந்தார். இங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று பாலிவுட் ஆசை வந்து அங்கு சென்றார். அவர் என்றைக்கு பாலிவுட் சென்றாரோ அன்றில் இருந்து அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள், செய்திகள் வெளி வருகின்றன.
பாலிவுட் படங்களில் வாய்ப்பு பெறுவதற்காக அசின் தான் தன்னைப் பற்றி தானே வதந்திகளைப் பரப்புவகாக பாலிவுட் ஹீரோயின்கள் கூறுகிறார்களாம். யார் என்ன கூறினாலும் சளைக்காமல் இருக்கும் அசின் தானே பாலிவுட்டின் நம்பர் 1 ஹீரோயின் என்று கூறிக் கொள்கிறார். அங்கு அவர் மூன்று ஹிட் படங்கள் கொடுத்துவிட்டாராம் அதனால் தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
இனி தமிழ் படங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று அவர் கூறியதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் அவரைப் பற்றி புதிய செய்தி கிடைத்துள்ளது. நம்ம கோலிவுட் ஹீரோயின்கள் யாரையாவது மும்பையில் பார்த்தால் அசின் ஒரு வார்த்தை கூட பேசமால் முகத்தை திருப்பிக் கொள்கிறாராம். கோலிவுட் ஹீரோயின்கள் இது ஏன் இவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று கேட்கிறார்களாம்.

09 ஜூன் 2012

கவர்ச்சிக்கு முக்கியத்துவம்!

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அங்காடித்தெரு படம் மூலம் ஹிட் நாயகி ஆனார். அந்த படத்தை தொடர்ந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அஞ்சலியிடம் கால்ஷீட் கேட்டு அணுகியும் கொடுக்க முடியாத நிலை உருவாகின.அங்காடித்தெருவுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒப்புக் கொண்ட படங்கள். ஏற்கனவே கமிட் ஆகியிருந்த சின்ன பட்ஜெட் படங்கள் சிலவற்றில் நடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் இருந்த அஞ்சலி புதிய படங்களில் ஒப்பந்தமாகாமல் இருந்தார். இப்போது பழைய கமிட்மெண்ட்கள் அனைத்தையும் முடித்து விட்ட அஞ்சலி, இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். கலகலப்பு கவர்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருவதால் இதுவரை நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த அஞ்சலி இனிமேல் கவர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

07 ஜூன் 2012

ஈர்ப்பு இல்லையே...!

Veena Malikதி டர்ட்டி பிக்சர்ஸ்-சில்க் சக்கத் ஹாட் மகா என்ற கனனடப் படத்தில் சி்ல்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து வரும் வீணா மாலிக்கின் கவர்ச்சி ஸ்டில்கள் உலா வர ஆரம்பித்துள்ளன. ஆனால் வித்யா பாலன் அளவுக்கு வீணாவிடம் ஈர்ப்பில்லையே என்ற உச்சுக் கொட்டும் குரல்களும் கூடவே கிளம்பியுள்ளன. வித்யா பாலன் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியையும், வித்யாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்த படமான டர்ட்டி பிக்சர்ஸ் தற்போது பல மொழிகளிலும் ரீமேக் ஆகிறது. கன்னடத்தில் திரிஷூல் இயக்கத்தில் இப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த வீணா மாலிக் இதில் நாயகியாக நடிக்கிறார். அவர இடம் பெற்றுள்ள பட ஸ்டில்கள் ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன. வித்யா பாலனின் டர்ட்டி பிக்சர் படங்கள் வெளியானபோது அது காட்டுத் தீ போல படு வேகமாக பரவியது. மேலும் வித்யாவின் கவர்ச்சி அழகுணர்வுடன் ரசிக்கப்பட்டது. இருப்பினும் வீணாவின் படங்களுக்கு அந்த அளவுக்கு கெளரவம் கிடைக்கவி்ல்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. படத்தைப் பார்த்துட்டு உங்க கமெண்ட்டைச் சொல்லுங்க...Veena Malik

03 ஜூன் 2012

த்ரிஷா, ராணா காதல் முறிவு!

Bipasha Behind Rana Daggubati Trisha Split தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தியும், த்ரிஷாவும் பிரிய பாலிவுட் கவர்ச்சிக் கன்னி பிபாஷா பாசு தான் காரணம் என்று கூறப்படுகிறது. தெலுங்கு நடிகர் ராணா டக்குபாத்தி பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். ஜான் ஆபிரகாமை பிரிந்த பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கும், ராணாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவின. இதைக் கேட்டு பதறிய ராணா ச்சே, ச்சே நானும் பிபாஷாவும் காதலர்கள் எல்லாம் கிடையாது நல்ல நண்பர்கள் மட்டுமே என்றார். மேலும் தனது நீண்ட நாள் காதலியான த்ரிஷாவுடனான உறவு நன்றாக இருப்பதாகவும், அவரை பிரியும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். இந்நிலையில் ராணா, த்ரிஷா காதல் முறிந்துவிட்டதாகவும், அதற்கு காரணம் பிபாஷா என்றும் பேச்சு அடிபடுகிறது. இது குறித்து ராணாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், பிபாஷாவுடன் ராணா நெருக்கமானது த்ரிஷாவை கடுப்பாக்கியுள்ளது. மேலும் ராணா பாலிவுட்டில் பிசியாக இருப்பதால் அவர் ஹைதராபாத் வர நேரம் கிடைப்பதில்லை. அதே சமயம் கட்டா, மீட்டாவில் நடித்தாலும் த்ரிஷாவின் பாலிவுட் கனவு நிறைவேறவில்லை என்றார். த்ரிஷாவுக்கு முன்பு ஸ்ரேயாவை டேட் செய்தார் ராணா. த்ரிஷா என்ட்ரியால் ஸ்ரேயா காதல் முறிந்தது. தற்போது பிபாஷாவால் த்ரிஷா காதல் முறிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

01 ஜூன் 2012

அஜித்திற்கு ஜோடி அனுஷ்கா?

சிறுத்தை பட இயக்குனர் சிவா எடுக்கும் படத்தில் தல அஜீத் குமார் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. கார்த்தியை வைத்து சிறுத்தை படம் எடுத்த சிவா தற்போது அஜீத் குமாரை வைத்து ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். இந்த படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவிருக்கிறது. இதில் அஜீத் குமாருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம். அவரை சந்தித்து கதை சொன்னவுடன் அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாம். தான் இந்த படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வெறும் பேச்சு, பேச்சாகத் தான் இருக்கிறது. விருப்பம் தெரிவி்த்த அவர் கால்ஷீட் பற்றி மூச்சு விடவில்லையாம். இருப்பினும் அவர் விரைவில் கால்ஷீட் தருவார் என்று சிவா மலை போல் நம்புகிறாராம். அப்படி அனுஷ்கா ஒப்புக் கொண்டால் அஜீத்துடன் அவர் ஜோடி சேரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அஜீத் விஷ்ணுவர்தனின் படத்தில் பிசியாக இருக்கிறார். அனுஷ்கா கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், விக்ரமுடன் தாண்டவம், ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் விரைவில் அஜீத் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

30 மே 2012

நீ தமிழில் பாடக்கூடாது....!

Premgi Miffed With Singer Girish ஐபிஎல் இன்னும் என்னென்ன சண்டையை 'வலித்து'க் கொண்டு வருமோ... இந்த முறை இரு கோலிவுட் நட்சத்திரங்கள் மோதிக் கொண்டுள்ளனர். அவர்கள் பிரபல நடிகர் பிரேம்ஜி மற்றும் பாடகர் கிரிஷ். சென்னையை தோற்கடித்து கொல்கத்தா அணி கோப்பையை வென்றதையடுத்து, இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா வீட்டில் ஒரு பார்ட்டி நடந்தது. விடிய விடிய நடந்த இந்த மது விருந்தில் கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாரூக்கான், அவர் மனைவி கவுரி, நடிகர் அக்ஷய் குமார், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ் சினிமா பாடகரும் நடிகை சங்கீதாவின் கணவருமான கிரிஷும் இதில் கலந்து கொண்டு, விருந்துக்கு வந்தவர்களுடன் போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்ததும் கோபமடைந்த பிரேம்ஜி, "சென்னை அணியை தோற்கடித்த கொல்கத்தா அணி ஓனர்கூட விருந்தில் கலந்து கொண்டது சரியா... இனி நீ தமிழில் பாடக்கூடாது. போய் கொல்கத்தால பாடித்தான் பிழைக்கணும்," என ட்வீட் செய்தார். உடனே கிரிஷ், "டேய்... அது பிரபு தேவா கொடுத்த விருந்துடா... நான் அவர்கூட தான் போட்டோ எடுத்துக்கிட்டேன். அந்த விருந்துக்கு ஷாரூக் வந்திருந்தார் அவ்வளவுதான்," என பதில் கூறியிருந்தார். பிரேம்ஜியும் கிரிஷும் நண்பர்களும்கூட. எனவே இந்த ட்விட்டர் சண்டை பற்றிக் கேட்டதற்கு, "எங்களுக்குள் சண்டை எதுவும் இல்லை. பிரேம்ஜியின் கமெண்டை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்றார். பிரேம்ஜி கூறுகையில், "சும்மா வாய் சண்டைதான். ஐபிஎல் வேற முடிஞ்சிடுச்சா.. ஒரே போர்.. அதான் கிரிஷை கலாய்ச்சேன்," என்றார் தன் பாணியில்...