பக்கங்கள்

09 டிசம்பர் 2012

மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்!

அடிதடி, மிரட்டிப் பறித்தல், அச்சுறுத்தல் என கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி, “எனக்கு எதிராக பெரிய சதியே நடைபெறுகிறது. அதனால்தான் என் மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்படுகின்றன. அதை சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார். தற்போது, 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் புவனேஸ்வரி. அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாயவுள்ளதாக கூறப்படுகிறது. சைதாப்பேட்டை கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். புவனேஸ்வரி தொடர்பாக, சிறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசிய ஒரு உயர் போலீஸ் அதிகாரி, “அவரை சிறையில் மனம் கோணாதபடி கவனித்துக் கொள்ளுங்கள்” என கேட்டுக் கொண்டதாக, ஒரு தகவல் அடிபடுகிறது. தமக்கு எதிரான சதித்திட்டத்தை போட்டிருப்பது யார் என்பதை புவனேஸ்வரி வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக