பக்கங்கள்

21 பிப்ரவரி 2014

குத்து ரம்யாவிற்கு எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை 'குத்து' ரம்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,நடிகைகள் பலர் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை கொண்டுள்ளனர். அசின் எதிர்ப்பை மீறி இலங்கைக்கு சென்று வந்தார். பாவனா தமிழ் படங்களை டப்பிங் செய்யக் கூடாது என்று கன்னட நடிகர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். தற்போது குத்து ரம்யா ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையை எதிர்க்கிறார்.ஆயுள் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்வது அரசின் வழக்கமான நடைமுறை. பிரதமராக இருந்தவருக்கும் சாதாரண மனிதருக்கும் சட்டம் என்பது சமமானதுதான். கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என்று அரசின் முடிவை எதிர்ப்பது ஏற்புடையது அல்ல. குத்து ரம்யாவை தமிழ் திரையுலகம் நிரந்தரமாக புறக்கணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.