பக்கங்கள்

24 பிப்ரவரி 2012

காதல் இல்லை!

மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையை நான் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. நான் யாரையும் காதலிக்கும் நிலையிலும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பாவனா.

சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகமானவர் பாவனா. ஒரு ரவுண்ட் வந்த பிறகு, தெலுங்குக்குப் போய்விட்டார். அங்கு கொஞ்ச காலம் பரபரப்பாக நடித்தார். இப்போது மீண்டும் மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள நடிகரும் கிரிக்கெட் வீரருமான ராஜீவ் பிள்ளையை அவர் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் பாவனா மலையாள நடிகர் அணிக்கு தூதுவராக பணியாற்றினார். அந்த அணியில் ராஜீவ் பிள்ளை முன்னணி வீரராக இருந்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக சொல்கிறார்கள்.

ஆனால் இதை மறுத்துள்ளார் பாவனா. "ராஜீவ்பிள்ளையும் நானும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில்தான் சந்தித்தோம். அவரை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் அவரை நான் காதலிக்கவில்லை. இந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை," என்றார்.

ராஜீவ் பிள்ளையும் இந்த செய்திகளை மறுத்துள்ளார்.

எவ்வளவு வேகமா மறுக்கிறாங்களோ அந்தளவுக்கு தீவிர காதல் இருக்கு என்று சினிமா டிக்ஷனரி சொல்கிறது... பார்க்கலாம்!

18 பிப்ரவரி 2012

வந்தது மூன்றும் போச்சோ?

இந்த வாரம் வெள்ளிக்கிழமை அமலா பால் நடித்த மூன்று படங்கள் வெளியாகின. அமலா பாலைப் பொறுத்தவரை இது ரொம்ப ரொம்ப ஹேப்பியான சமாச்சாரம்.

ஆனால் படம் பார்த்தவர்களுக்கே மண்டைக் காய்ச்சல்.
அதர்வாவுடன் இவர் நடித்த படம் முப்பொழுதும் உன் கற்பனைகள் நேற்று பெரிய அளவில் வெளியானது. நம்பர் ஒன் டெக்னீஷியன்ஸ், நல்ல நிறுவனம், பிரமாண்ட தயாரிப்பு என அனைத்தும் இருந்தும், இந்தப் படம் ரசிகர்களைக் கொஞ்சம் குழப்பியடித்தது என்பதே உண்மை. நகர்ப்புறங்களிலேயே இந்த நிலை என்றால், இன்னும் மற்ற ஏரியாக்களில் எப்படியோ?
அடுத்து காதலில் சொதப்புவது எப்படி? - படத்தின் ரிசல்டையே தலைப்பாக வைத்த மாதிரி இருந்தது படம். சித்தார்த் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு.
இதே படம் தெலுங்கில் லவ் பெயிலியர் என்ற பெயரில் வெளியானது. அதுவும் நேற்றே வெளியாகிவிட்டது.
ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாவது இன்றைய நாட்களில் ஒரு ஹீரோயினுக்கு பெரிய விஷயம்தான். ஆனால் இந்தப் படங்களின் முடிவு, இனி இப்படி ஒரு வாய்ப்பு அமலாவுக்கு அமையுமா என கேட்க வைத்துவிட்டது!

15 பிப்ரவரி 2012

மீண்டும் சிம்புவின் ஜோடியாகிறார் நயன்?

நயனின் முன்னாள் காதலன் சிம்பு, தனது புதிய படத்தில் ஜோடியாக நடிக்க அவருடன் பேச்சு நடத்தி வருகிறார் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே நயன்தாராவை தனது ஒஸ்தி படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார் சிம்பு. அப்போது நடிக்க மறுத்துவிட்டார் நயன். ஆனால் இப்போது, பிரபு தேவாவை விட்டு முற்றாக விலகிவிட்ட நிலையில், அனைத்து வித வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இப்போது அஜீத்தின் அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயன், அடுத்து சிம்புவின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் ஒரு முக்கிய இயக்குநர்.
நயன்-சிம்பு மீண்டும் ஜோடி என்ற செய்தியால் கிளம்பவிருக்கும் பரபரப்பு நல்ல வசூலைக் கொட்டும் என நம்புகிறார்களாம்!

14 பிப்ரவரி 2012

மீண்டும் கமலை எதிர்பார்க்கும் அசின்.

தசாவதாரத்தில் கிடைத்த மாதிரி கமலுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன், என்று அசின் கூறியுள்ளார்.
தமிழில் உச்சத்தில் இருந்தபோது, வந்த வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பைக்குப் போய் செட்டிலானவர் அசின். இப்போது இரண்டு மூன்று இந்திப் படங்களில் நடித்தாலும், தமிழில் பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்வதில் ஆர்வம் காட்டுகிறார்.
ரஜினியின் கோச்சடையானில் ஹீரோயின் உறுதி செய்யப்படாமல் இருந்த போது, ரஜினியுடன் நடித்தால் சந்தோஷப்படுவேன், வாய்ப்பு கிடைக்குமா? என்று ஒரு கல் விட்டுப் பார்த்தார். ஆனால் அங்கு தீபிகா படுகோன் வந்துவிட்டார்.
இந்த நிலையில், கமல் - ஷங்கர் - ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தில் அசின் நடிப்பதாக சிலர் 'கிளப்பிவிட்டிருந்தனர்.' ஆனால், அது வெறும் புரளி என அசின் தெரிவித்துள்ளார் (இவரே சொல்லியிருப்பாரோ!).
அவர் மேலும் கூறுகையில், "தசாவதாரத்தில் கமலுடன் நடித்தது மறக்கமுடியாதது. மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு வந்தால் மகிழ்வேன்.இப்போதைக்கு பேஸ்புக்கில் 'டச்'சிலிருக்கிறோம்", என்றார்.

10 பிப்ரவரி 2012

புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நயன்தாரா உதவி.

தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை நாசமாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரண நிதிக்கு நடிகை நயன் தாரா ரூ5 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.
தொழிலதிபர்கள், திரை உலக நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோரும் தானே புயல் நிவாரண நிதி வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை நடிகை நயன் தாரா இன்று சந்தித்தார்.
தானே புயல் நிவாரண நிதியாக ரூ5 லட்சத்துக்கான காசோலையை அவர் முதல்வரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயன், அனைவரும் தானே புயல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

04 பிப்ரவரி 2012

தாலி கட்டிய பெண்ணை கைவிட்டோடிய பிரபுதேவாவின் தந்தை!

எனக்கு தாலி கட்டி, குழந்தை பெற்ற பிறகு, ஏமாற்றிவிட்டு ஓடிய டான்ஸ் மாஸ்டர் சுந்தரம், அதன் பிறகுதான் பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். இப்போது நான் கஷ்டப்படுகிறேன், ஜீவனாம்சம் தரவேண்டும் என வழக்கு தொடர்துள்ளார் பெண் நடன இயக்குநர் தாரா.
பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரம். நூற்றுக்கணக்கான படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியவர். இவர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவின் தந்தை ஆவார். மாஸ்டர் சுந்தரம் மீது பெண் நடன இயக்குனர் தாரா உயர்நீதிமன்றத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கும் எனக்கும் 38 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. எனக்கு அவர் தாலி கட்டினார். ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தினோம்.
பிறகு ஊருக்கு போய் விட்டு வருவதாக சொல்லி விட்டுப் போனார் அங்கு பிரபு தேவாவின் தாயை திருமணம் செய்து கொண்டார். கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டதாக கூறி என்னிடம் வருத்தப்பட்டார்.
எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றபின் நான்கு மாதம் என்னுடன் சேர்ந்து இருந்தார். அதன் பிறகு என்னை ஏமாற்றி விட்டு ஓடி விட்டார். இதனால் மனதளவில் நான் பாதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தேன். என் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் அவர்தான் தந்தை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனது மகன் தந்தையின் ஆதரவின்றி இருக்கிறான்.
பொருளாதார ரீதியாக நாங்கள் இப்போது மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம்.
எங்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என்றுதான் இத்தனை நாள் அமைதியாக இருந்தோம். ஆநால் இப்போது நாங்களே இவ்வளவு கஷ்டப்படுவதால், எங்களுக்கு உள்ள உரிமையை கோருகிறோம்," இவ்வாறு மனுவில் கூறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்துக்கு நீதிமன்றத்துக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
ஏற்கெனவே பிரபு தேவா எக்கச்சக்க குடும்ப சிக்கலில் உள்ளார். ரம்லத்தை காதலித்து கல்யாணம் செய்துகொண்டு, மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு பிரிந்துவிட்டார். அடுத்து நயன்தாராவை திருமணம் செய்வதாகக் கூறி, கொஞ்சநாள் சேர்ந்து வாழ்ந்த பிறகு, சமீபத்தில் பிரிந்துவிட்டார். இப்போது இன்னொரு நடிகையுடன் தொடர்பிலிருப்பதாகக் கூறுகிறார்கள்.
பிரபு தேவாவுக்கு முன்பே அவரது தந்தை சுந்தரமும், இதே வேலையைத்தான் செய்திருக்கிறார் என்பது இந்த வழக்கு மூலம் உறுதியாகியுள்ளது.
விதி படத்தில் மறைந்த நடிகை சுஜாதா பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது... 'குடும்ப வழக்கம்... வாழையடி வாழை'!

02 பிப்ரவரி 2012

ஒரு வழியா தப்பித்தேன்!

பெரிய நெருக்கடியி்ல இத்தனை நாள் சிக்கித் தவித்தேன். இப்போது ஒருவழியாக மீண்டுவிட்டேன், என்று நடிகை நயன்தாரா கூறினார்.
பிரபு தேவாவுடன் தீவிர காதலில் இருந்தார் நயன்தாரா. பிரபு தேவாவுக்காக சினிமா வாழ்க்கையைத் துறந்தார். கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.
ஆனால் பிரபு தேவா தன்னை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, அவர் வேறு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட நயன்தாரா, இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உறவைத் துண்டித்துக் கொண்டார்.
இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் வந்தாலும், சம்பந்தப்பட்ட இருவரும் இதுபற்றி எதுவும் கூறாமல் இருந்தனர்.
இந்த நிலையில் மீண்டும் தமிழ், தெலுங்கில் பிஸியாகிவிட்ட நயன்தாரா முதல் முறையாக தனது காதல் முறிவு குறித்து மறைமுறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தேன். அது எனக்கு மிகுந்த நெருக்கடியில் சிக்கியிருந்தது உண்மைதான். இப்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன்.
இனி முழு கவனமும் சினிமாதான். இப்போது தெலுங்கு படத்தில் நாகார்ஜூனா ஜோடியாக நடிக்கிறேன். அது ஒரு காதல் கதை.
தமிழ் திரையுலகம் எனக்கு பெரிய நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது. தெலுங்கு பட உலகம் என்னை இன்னொரு படி உயரத்தில் கொண்டு போனது. இந்த இரு மொழிகளிலுமே தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.