பக்கங்கள்

14 டிசம்பர் 2013

அஞ்சலி ஆந்திராவில் தரிசனம்!

அஞ்சலி 
அஞ்சலி இந்த நாட்டில்தான் இருக்கிறாரா, வெளிநாட்டில் போய் ரகசியத் திருமணம் செய்து கொண்டாரா என சூடான விவாதமே நடந்து வரும் வேளையில், ஆந்திர மாநில சிவன் கோயில் ஒன்றில் அஞ்சலி சாமி கும்பிட்ட தகவல் பரவியதால் ரசிகர்கள் அங்கு திரண்டனர். சென்னையிலிருந்து வெளியேறி மாதக் கணக்கில் ஆந்திராவிலேயே தங்கியுள்ளார் அஞ்சலி. சென்னையிலிருந்த தன் புதிய வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதால், அதை மீட்க சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு எதிராக சித்தி பாரதிதேவியும், இயக்குநர் களஞ்சியமும் வெவ்வேறு வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர். ஆனால் இவற்றில் எதிலும் அஞ்சலி ஆஜராகவில்லை. தமிழ்ப் படங்களிலும் நடிக்க மறுத்துவிட்டார். தெலுங்கிலும் அவருக்குப் படமில்லை. எனவே அஞ்சலி வெளிநாட்டில், ஒரு பெரும் புள்ளியுடன் செட்டிலாகிவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் ஆந்திராவில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் அவர் நேற்று சாமி கும்பிட்டார். அங்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகமும், தாயார் பிரமராம்பிகாவிற்கு குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டார். அஞ்சலியை காண ரசிகர்கள் முண்டியடித்தனர். பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். சித்தியிடம் ஏற்பட்ட மோதல் குறித்து அஞ்சலியிடம் கேட்டபோது, நான் சாமி கும்பிட வந்தேன். இங்கு எதுவும் பேசவிரும்பவில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விவரமாகப் பேசுவேன், என்று கூறிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

30 நவம்பர் 2013

நடன இயக்குனர் ரகுராம் காலமானார்!

மகள் காயத்ரியுடன் ரகுராம் மாஸ்ரர் 
பிரபல சினிமா நடன இயக்குனர் ரகுராம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. நடன குடும்பத்தில் இருந்து வந்தவர் ரகுராம். அதன் வெளிப்பாடாக இவரும் சினிமாவில் நடன இயக்குனராக களம் இறங்கினார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடன இயக்குனராக சுமார் 1000 பாடல்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். சென்னை, மகாலிங்கபுரத்தில் தனது வீட்டில் வசித்து வந்த ரகுராமிற்கு இன்று(நவ., 30ம் தேதி) மதியம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். மறைந்த ரகுராமிற்கு கிரிஜா என்ற மனைவியும், காயத்ரி ரகுராம், சுஜா ரகுராம் என்ற இரு மகள்களும் உள்ளனர். கிரிஜாவும் நடன இயக்குனர் தான். இவர் பிரபல நடன இயக்குனர் கலாவின் சகோதரி ஆவார். மகள்கள் காயத்ரியும், சுஜாவும் நடன இயக்குநர்களாக உள்ளனர். இதில் காயத்ரி ரகுராம் சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மறைந்த ரகுராமின் உடல் சென்னை, மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம், வை ராஜா வை படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றுள்ளார். தந்தை மறைவுக்கு குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வந்த பிறகு, ரகுராமின் இறுதிசடங்கு திங்களன்று(டிச. 2ம் தேதி) நடைபெறுகிறது.

23 நவம்பர் 2013

ஸ்ருதியை தாக்கியது பிரபல நடிகரின் மனைவி?

  • பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரின் மனைவி ஏற்பாட்டில்தான் ஸ்ருதி ஹாஸன் தாக்கப்பட்டதாக பரபரப்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன மும்பை மீடியாவில்.ஸ்ருதி ஹாஸன் வீட்டிலிருந்த போது அவரை மர்ம மனிதன் தாக்கிவிட்டு ஓடியது தெரிந்ததே. ஸ்ருதிஹாஸன் தாக்கப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் மனைவி? இதுகுறித்து ஸ்ருதிஹாஸன் முதலில் போலீசில் புகார் செய்யவில்லை. காரணம், அந்த தாக்குதல் நடந்தபோது, அவர் வீட்டில் ஒரு பிரபல இந்தி நடிகர் இருந்ததாகவும், புகார் செய்தால இந்த விவகாரம் வெளியில் வந்துவிடும் என்று அஞ்சியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தாக்குதல் குறித்து நேற்றுதான் போலீசில் புகார் செய்தார் ஸ்ருதிஹாஸன். ஆனால் இப்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் அதிர வைத்துள்ளது. கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார் ஸ்ருதி என்றும் இதற்கு ஒரு பிரபல கான் நடிகர்தான் காரணம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.இதைவிட அதிர வைக்கும் விஷயம், ஸ்ருதியைத் தாக்க இந்த நபரை ஏவியவர் அந்த நடிகரின் மனைவிதானாம். ஸ்ருதி புகார் தந்ததுமே, அந்த நடிகர் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு, இந்த புகாரை வாபஸ் பெற்றுக் கொள். இல்லாவிட்டால் என் பெயர் நாறிவிடும், என வற்புறுத்தினாராம்.அபார்ட்மென்ட்டில் உள்ள அனைவரும் பார்க்கும் வகையில் ஸ்ருதியுடன் பிரச்சினை செய்ய வேண்டும் என்று சொல்லித்தான் அந்த நபரை நடிகரின் மனைவி ஏற்பாடு செய்திருந்தாராம். அவர் நினைத்தது கிட்டத்தட்ட இப்போது நடந்துவிட்டது. ஸ்ருதி தாக்கப்பட்டதை விட, அதன் பின்னணி பற்றித்தான் அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.முக்கிய பத்திரிகைகளின் நிருபர்களுக்கு இந்த விஷயத்தை நடிகரின் மனைவியே போன் போட்டு சொன்னதும் அம்பலமாகியுள்ளது."நடிகருடனான தொடர்பை ஸ்ருதி இத்துடன் நிறுத்திக் கொள்ளாவிட்டால், நிச்சயம் அடுத்தமுறை நானே நேரில் வந்து அனைவருக்கும் தெரியும் வகையில் சண்டை போடவும் தயங்கமாட்டேன்... என் கணவருடன் சேர்ந்து அவரது கள்ளத் தொடர்புகளும் அம்பலமாகட்டும்," என்றும் எச்சரித்துள்ளாராம் நடிகர் மனைவி.இந்தத் விவரங்கள் இப்போது தமிழ்ப் பத்திரிகைகள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

    20 நவம்பர் 2013

    ஷ்ருதி ஹாசனை பலாத்காரம் செய்ய முயற்சி!

    கமல் ஹாஸன் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாஸனின் மும்பை வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவலாளிகள் விரட்டியுள்ளனர். ஸ்ருதி ஹாஸன் அவரிடமிருந்து விலகி, அந்த நபரை பாதுகாவலர்கள் துணையுடன் விரட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் எதுவும் இன்னும் பதிவாகவில்லை. வீடு புகுந்து ஸ்ருதி ஹாஸனை தாக்கி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்... பாலிவுட்டில் பரபரப்பு! ஆனால் இந்த சம்பவத்தால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளாராம் ஸ்ருதி. இந்தியில் பிஸியான நடிகையாக உள்ளார் ஸ்ருதி ஹாஸன். அவரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒரு நபர் பின்தொடர்ந்து வந்தாராம். ராமய்யா வஸ்தாவய்யா படப்பிடிப்பின்போது ஸ்ருதியை அவர் நெருங்க முயன்றுள்ளார். ஆனால் படக்குழுவினர் விரட்டியடித்துவிட்டனர். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாந்த்ராவில் ஸ்ருதி தங்கியுள்ள வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, பாதி தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்துள்ளார் ஸ்ருதி ஹாஸன். உடனே சட்டென்று உள்ளே நுழைந்த அந்த நபர், ஸ்ருதியை கட்டிப்பிடித்து, கழுத்தை நெறிக்க முயன்றாராம். உடனே சுதாரித்துக் கொண்ட ஸ்ருதி, அந்த நபரை பலமாக வெளியில் தள்ளி கதவை தாழிட முயன்றாராம். அதே நேரம் பலமாகக் குரலெழுப்பி செக்யூரிட்டிகளை அழைத்துள்ளார். அவர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து இழுத்து விரட்டியடித்துள்ளனர். ஸ்ருதியின் மும்பை ஏஜென்ட் இத்தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த நபர் யார், ஸ்ருதியைக் காதலித்த ரசிகரா... ஸ்ருதியின் மீதான தனிப்பட்ட பகை காரணமா என்பது குறித்து எதுவும் தெரியாது என அந்த ஏஜென்ட் தெரிவித்தார். ஆனால் தங்களுக்கு இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை என்று மும்பை போலீஸ் துணை கமிஷனர் செர்ரிங் டோர்ஜ் தெரிவித்தார்.

    14 நவம்பர் 2013

    இளையதளபதி எல்லாம் சும்மா!

    என் வாழ்க்கையில் அப்பா அம்மா மனைவி குழந்தைக்குப் பிறகு எனக்கு எல்லாமே என் நண்பன் விஷால்தான். இளையதளபதி அது இதெல்லாம் சும்மா, என்று கண்கலங்கினார் நடிகரும் விஜய்யின் தம்பியுமான விக்ராந்த். விக்ராந்த்... நடிகர் விஜய்யின் ரத்த சொந்தம். சித்தி மகன். அவர் கற்க கசடற படத்தில் அறிமுகமான போதே, விஜய்யின் தம்பி என்றுதான் தன்னை காட்டிக் கொண்டார். படத்திலும் விஜய்க்கு ஏக பில்டப் தரும் காட்சிகள் உண்டு. அதன் பிறகு, எங்கள் ஆசான், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். நட்சத்திர கிரிக்கெட்டில் செஞ்சுரி அடிக்க முடிந்த அவரால், சினிமா நட்சத்திரமாக திரையில் ஜெயிக்க முடியவில்லை. இந்த நேரத்தில்தான் விஷால் அவருக்குக் கைகொடுத்தார். தான் மிகுந்த நெருக்கடியில் இருந்த போதும், தன்னைவிட மிகவும் நெருக்கடியில், கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்த விக்ராந்துக்கு தன் சொந்தப் படமான பாண்டிய நாட்டில் சிறு வேடம் கொடுத்தார். அதன் விளைவு இன்று விக்ராந்துக்கு நல்ல பெயர். அத்துடன் நிற்கவில்லை விஷால். தன் சொந்தப் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படத்தில் முழு ஹீரோவாக விக்ராந்தையே நடிக்க வைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார். இத்தனையும் சேர்த்து விக்ராந்தை நெக்குருக வைத்துவிட்டது. உங்க சொந்த அண்ணன் இளையதளபதி செய்யாததை, இந்த அண்ணன் விஷால் செய்திருப்பது குறித்து? என கேட்டபோது, "நான் உண்மையிலேயே சொல்றேன். விஷால் என்னை ஹீரோவா வெச்சு படம் பண்றார்ங்கிறதுக்காக சொல்லல. நானும் விஷாலும் 12 வருஷமா ப்ரெண்ட்டா இருக்கோம். என்னோட அப்பா, அம்மா, என்னோட மனைவி, குழந்தைக்கப்புறம் அவனுக்குத்தான் எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணிருக்கு. அதனால தான் என்னை வெச்சி படம் பண்றேன்னு சொல்றாப்ல. மத்தபடி ‘இளையதளபதி' அது இதெல்லாம் சும்மா... அதையெல்லாம் பேச விரும்பல," என்றார்.

    09 நவம்பர் 2013

    தமன்னாவுக்கு ஈடு கொடுக்க முடியாத கதாநாயகர்கள்!

    தமன்னா 
    தமன்னாவுடன் டான்ஸ் ஆட வேண்டும் என்பதை நினைத்தாலே தெலுங்கு ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம். தமன்னா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் டான்ஸ் ஆடுவதில் வல்லவர். எவ்வளவு கஷ்டமான ஸ்டெப்பாக இருந்தாலும் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். அவர் சோலோவாக ஆடும்போது பிரச்சனை இல்லை. ஆனால் டூயட் பாடல்களுக்கு ஆடுகையில் தெலுங்கு ஹீரோக்கள் அதிலும் சீனியர்களுக்கு மூச்சு முட்டுகிறதாம். தமன்னா வேகத்திற்கு ஈடுகொடுத்து ஆட முடியாமல் ஹீரோக்கள் அல்லாடுகிறார்களாம். அதனால் டான்ஸ் மாஸ்டரை அழைத்து ஸ்டெப்ஸ் போடும்போது எங்களை மனதில் வைத்து சொல்லிக் கொடுங்கள். தமன்னாவை நினைத்து ஸ்டெப்ஸ் வேண்டாம், எங்களால் முடியவில்லை என்கிறார்களாம். ஹீரோக்கள் தனக்கு ஈடாக ஆட முடியாததால் தன்னால் தனது நடனத் திறமை முழுவதையும் வெளிப்படுத்த முடியவில்லை என்ற கவலை தமன்னாவுக்கு என்கிறார்கள்.

    29 அக்டோபர் 2013

    நிசாவுக்குத்தான் திருமணம்!

    என் தங்கை நிஷாவுக்குத்தான் உடனடியாக திருமணம் செய்யப் போகிறோம். எனக்கு இன்னும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் திருமணம் என்று கூறியுள்ளார் காஜல் அகர்வால்.நடிகை காஜல்அகர்வால் புதிய படங்களில் நடிக்க மறுப்பதாகவும், சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெலுங்கு திரையுலகில் கடந்த வாரம் பரபரப்பு பேச்சு நிலவியது.இந்த பேச்சு, ஹாட் நியூஸாக தெலுங்கு மீடியாவில் வலம் வந்தது.அதற்கேற்ப, காஜலும் சில தினங்களாக மவுனம் காத்தார்.தமிழில் ஜில்லா என்ற படம் மட்டுமே அவர் கைவசம் உள்ளது. தெலுங்கில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.இந்த நிலையில் இன்று தன் திருமண செய்தி, படங்களில் நடிக்காதது பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறியுள்ளார் அவரது செய்தித் தொடர்பாளர்.அதில், "காஜல்அகர்வால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டார். தங்கை நிஷா அகர்வாலுக்குதான் இப்போது திருமணம் நடக்கிறது.அந்த திருமண வேலைகளில் காஜல்அகர்வால் பிஸியாக இருக்கிறார்.இப்போது ஜில்லாவில் நடித்து வரும் காஜல்,அடுத்து இரு தெலுங்குப் படங்களுக்கும் ஒரு புதிய தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பார்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் காஜல் அகர்வால் திருமணம் நடக்கும். இப்போதைக்கு திருமணம் பற்றிய எண்ணமில்லை அவருக்கு,"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    22 அக்டோபர் 2013

    அஞ்சலி நடிக்கிறார்!

    அஞ்சலி எங்கே இருக்கார்? என்ன பண்றார்? என்பது புரியாத புதிர். ஆனாலும் அக்கட பூமியில் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறார் அஞ்சலி.சீனியர் ஹீரோ வெங்கடேஷூக்கு ஜோடி என்றாலும் அஞ்சலி ஓ.கே சொல்லத் தயங்குவதில்லை. தெலுங்கில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் நடித்த படம் தான் 'சீதம்மா வாகிட்லோ சிறுமல்லே செட்டு'. மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தா நடித்தார். அப்போது, அஞ்சலி வெங்கடேஷூக்கு ஜோடியாக நடித்தார். மகேஷ்பாபுவுக்கு அண்ணியாக நடிக்க எப்படி சம்மதித்தீர்கள்? என்று அஞ்சலியைக் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தனர். அதற்கெல்லாம் அசராமல் பதில் சொன்னதால் தான், இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு அஞ்சலிக்குக் கிடைத்திருக்கிறது. இந்தியில் அபிஷேக் பச்சன், அஜய் நடிதத 'போல் பச்சான்' படம் தெலுங்கில் 'மசாலா' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷூக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லாமல், டோலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.

    18 அக்டோபர் 2013

    மீண்டும் கைதானார் பவர் ஸ்டார்!

    பவர் ஸ்டார் அடைமொழியுடன் திரியும் நடிகர் சீனிவாசன் மீது இதுவரை ஆறு மோசடி வழக்குகள் உள்ளன. ஏழாவதாக, டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 50 கோடி கடன் வாங்கித் தருவதாகக்கூறி பணம் மோசடி செய்த வழக்கில் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அந்த வழக்கில் திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டவர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் நேற்று மீண்டும் படாவதி ஸ்டார் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவர் மீது சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டுக்கும், கார் ஆவணத்தில் இருந்த நம்பருக்கும் வித்தியாசம் இருந்ததால் இந்த வழக்கு சீனிவாசன் மீது போடப்பட்டது. அந்த வழக்கில் சீனிவாசன் ஜாமின் வாங்கியிருந்தார். அது காலாவதியானதைத் தொடர்ந்து நேற்று சென்னை வந்த சிவகாசி போலீஸார் அவரை கைது செய்தனர். திஹார் மீண்ட நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் சீனிவாசன். சிவகாசி போலீஸாரின் நடவடிக்கையால் சீனிவாசனின் சினிமா முயற்சி மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கிறது.

    15 அக்டோபர் 2013

    சிம்புவுக்கு சரியான ஜோடி!

    சிம்புவுக்கு சரியான ஜோடி ஆன்ட்ரியாதான் என்று கூறியுள்ளார் விடிவி கணேஷ். 'விண்ணைத் தாண்டி வருவாயா ' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்டுப் பிரபலமானவர் கணேஷ். அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது' படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது. இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளரான கணேஷ் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில்சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார். இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது, 'சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது , இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் படத்தை முடித்து பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன்," என்கிறார் . இங்க என்ன சொல்லுது படத்தை வின்சென்ட் செல்வா இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா, சந்தானம், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

    25 செப்டம்பர் 2013

    குடியில் மூழ்கும் திரிஷா!

    ‘த்ரிஷா குடிக்கிறதை நிறுத்தவே மாட்டாரா?’இப்படித்தான் ஆரம்பிக்கிறது த்ரிஷா பற்றி ஒரு தெலுங்கு மீடியா வெளியிட்டுள்ள செய்தி. என்ன நடந்தது? சமீபத்தில் ஹைதராபாதின் தாஜ் பஞ்சாரா ஹோட்டலில் நடந்த இரவு விருந்துக்குப் போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. அவருடன் நடிகை சங்கீதாவும் மகேஸ்வரியும் போயிருக்கிறார்கள். உடன் வந்தவர்கள் கொஞ்சம் லைட்டான சரக்கில் இறங்கி, த்ரிஷா மட்டும் செம ஹாட்டில் இறங்கி, போதையின் உச்சத்துக்குப் போய் ஆட்டம் போட்டிருக்கிறார். அங்கிருந்தவர்களுடன் தகராறு, கலாட்டா என விவகாரம் எல்லை மீற, ஓட்டல் சிப்பந்திகள் வலுக்கட்டாயமாக த்ரிஷாவை வெளியேற்றினார்களாம். த்ரிஷா – நள்ளிரவு மது விருந்துகள் – கலாட்டா என்பது வாசகர்களுக்குப் புதிய விஷயமும் இல்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆரம்பித்த த்ரிஷாவின் போதை கலாட்டா வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என எங்கே போனாலும் தொடர்கிறது. பார்க் ஷெராட்டன் ஓட்டலில் முற்றாக நினைவிழந்த த்ரிஷாவை போலீசார் காரில் அழைத்துவந்து விட்டதாக முன்பு ஒரு செய்தி வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம்.

    21 செப்டம்பர் 2013

    ஆபாசமாக வந்து நின்ற சமீரா ரெட்டி!

    தமிழில் வாரணம் ஆயிரம், அசல், வேட்டை, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கு தற்போது தென்னிந்திய மொழிகளில் படவாய்ப்பில்லை. ஆனால், இந்தியில் அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். அப்படி நடிக்கும் படங்களில் படுகவர்ச்சியாக நடித்து அங்குள்ள நடிகைகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் அங்குள்ள படாதிபதிகள் சிறந்த கமர்சியல் நடிகை என்ற முத்திரையை சமீரா மீது குத்தி விட்டனர். ஆக, அவரது படக்கூலியும் தற்போது கிடுகிடுவென்று உயர்ந்து நிற்கிறதாம். அதனால்தான் மற்ற மொழிகளில் நடிப்பது பற்றி யோசிக்காமல் முழுநேர இந்தி நடிகையாகியிருக்கிறாராம் சமீரா ரெட்டி. இந்தநிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோவில் சமீராவும் கலந்து கொண்டாராம். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களைவிட படு ஆபாசமாக டிரஸ் அணிந்திருந்தாராம் சமீராரெட்டி. அதைப்பார்த்து விழாவுக்கு வந்திருந்தோர் ஆட்சேபணை தெரிவித்தார்களாம். ஆனால் சமீராவோ, பேஷன் ஷோவில் இப்படி உடையணிந்து நடந்தால்தான் பியூட்டி. இப்படித்தான் ஹாலிவுட் நடிகைகள் வருவார்கள். அதை பின்பற்றித்தான் நானும் வந்திருக்கிறேன். அதனால் அழகை அருவருப்பாய் பார்க்காமல் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று உரக்க குரல் கொடுத்தாராம் சமீரா. இதையடுத்து இந்த விவகாரத்தை சர்ச்சையாக்க நினைத்தவர்கள் வாயடைத்து நின்றார்களாம்.

    17 செப்டம்பர் 2013

    நழுவியது பிரபல நடிகையின் உடை!

    சமீபத்தில் துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினி திவிவேதியின் உடை திடீரென நழுவியது. இதில் நடிகையை விட பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி, உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, மேடைக்கு ஓடினார். விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார். பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது (கன்னடப் படம் சிவாவில் நடித்ததற்காக). தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்," என்றார்.

    14 செப்டம்பர் 2013

    ஆன்ட்ரியாவுடன் சேர்ந்த அனிருத்?

    முத்த சர்ச்சைக்குப் பிறகு ஆன்ட்ரியா என் படத்தில் பாடியது உண்மைதான். ஆனால் இருவரும் ஒரே இடத்தில் சேர்ந்து பணியாற்றவில்லை. நான் மும்பையில் இருந்தேன், அவர் சென்னையில் இருந்து பாடினார் என்று விளக்கம் அளித்துள்ளார் அனிருத். 3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறி' பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத். இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏக பரபரப்பு கிளம்பியது. இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா. இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார். ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது. இதை அனிருத் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான். இந்தபாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன். அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை," என்றார். அடேங்கப்பா.. இது ரொம்பப் புதுசா இருக்கே!!

    08 செப்டம்பர் 2013

    கேயார் வெற்றி, தாணு தோல்வி!

    திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.. கேயார் வெற்றி, தாணு தோல்விதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் இயக்குநர் கேயார் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தயாரிப்பாளர் தாணு தோல்வியடைந்தார். 2013-2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், குஷ்பு என பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாக்களித்தனர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இயக்குநர் கேயார் 449 வாக்குகளும், எதிர்த்துப் போட்டியிட்ட கலைப்புலி தாணு 252 வாக்குகளும் பெற்றனர். இதனால் கேயார் வெற்றி பெற்றார். இரு துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407 வாக்குகளுடனும், டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்றும் வெற்றி பெற்றனர். இரு செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இப்பதவிக்குப் போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். மொத்தத்தில் கேயார் அணியினரே பெரும் வெற்றியைப் பெற்றனர்.

    14 ஆகஸ்ட் 2013

    பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா!

    தூத்துக்குடியில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வீ.ரஜேந்திரபூபதி பாடகி சுசீலாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். விழாவில் பாடகி சுசீலா, மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து ரசிகர்களிடையே பேசிய அவர், கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன். அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின. மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான் என்றார். விழாவின்போது அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திரைப்படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்களை அவரது மருமகள் சந்தியா, மருத்துவர் பிரேம சந்திரன் உள்ளிட்ட பாடகர்கள் மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பின்னர், விழா மலர் வெளியிடப்பட்டது. வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, டி.ஏ. தெய்வநாயகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் பரமசிவன், ராஜேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    02 ஆகஸ்ட் 2013

    இயக்குனர் சேரனுக்கு இப்படி ஒரு மகள்!

    காதலை பிரிக்கப் பார்க்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார்: டைரக்டர் சேரன் மகள் போலீசில் புகார்தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது.முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர். சந்துருவை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார். என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன். அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

    24 ஜூலை 2013

    மஞ்சுளாவுக்கு கண்ணீர் அஞ்சலி!

    மஞ்சுளாவின் திடீர் மரணம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகமே திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. ர‌ஜினிகாந்த் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.அவரைப் பார்த்ததும் கதறி அழுதபடி ர‌ஜினியை விஜயகுமார் கட்டிக் கொண்டார். அதேபோல் சரத்குமார் வந்த போதும் விஜயகுமாரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. பாக்யரா‌ஜ்,பூர்ணிமா பாக்யரா‌ஜ்,சாந்தனு,சினேகா,பிரசன்னா,லட்சுமி,ராதிகா சரத்குமார்,தேவி ஸ்ரீ பிரசாத்,ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ்,கவுண்டமணி, பாண்டியராஜன்,ராதாரவி,ஒய்.‌ஜி.மகேந்திரன்,ஜாக்குவார் தங்கம்,மீனா,ரம்யா கிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் மஞ்சுளாவின் உடலுக்கு இறுதி ம‌ரியாதை செலுத்தினர்.

    01 ஜூன் 2013

    பார்வதி பிடிவாதம் தளர்ந்தது!

    parvathymelton2காதல் காட்சிகளில் நெருக்கமாக நடிக்க மாட்டேன் என்று கூறிவந்த பார்வதியின் பிடிவாதம் உடைந்தது. சசி இயக்கத்தில் ‘பூ’ படத்தில் அறிமுகமானவர் பார்வதி. இப்படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. அதன்பிறகு ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் மட்டும் நடித்தார். கவர்ச்சியாகவோ, நெருக்கமான காட்சிகளிலோ நடிக்க மாட்டேன் என்று கூறி பல படங்களை ஒதுக்கி வந்தார். இந்நிலையில், பரத்பாலா இயக்கும் ‘மரியான்’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதில் தனுஷுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருக்கிறாராம். இதையடுத்து அவரது பிடிவாதம் உடைந்துவிட்டதாக கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. தனுஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது கூச்சமாகவே இருந்தது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ‘‘காதல் கதைகள் என்றால் எனக்கு அலர்ஜி. ‘மரியான்’ படம் ரிலீஸ் ஆன பிறகு காதல் கதைகள் எனக்கு வெள்ளமென திரண்டு வரும். ஆனாலும் அவற்றை நான் ஏற்கப் போவதில்லை. நல்ல கதாபாத்திரத்துக்காக எப்போதும்போல காத்திருப்பேன்’’ என்றார்.

    09 மே 2013

    மேலங்கி இல்லாத பூஜா காந்தி!

    ‘கரிமேடு’ படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக,மேலங்கி அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். உண்மை சம்பவம்,பெங்களூர் அருகே தண்டுபாளையம் என்ற இடத்தில் தொடர்ந்து நடைபெற்ற 91 கற்பழிப்புகள், 106 கொலைகள், 203 கொள்ளைகளை மையமாக வைத்து, ‘கரிமேடு’ என்ற படம் தயாராகி இருக்கிறது.அக்கிரமங்கள் செய்த மனித மிருகங்களை, காவல் துறையினர் உயிரை பணயம் வைத்து, கடமை உணர்வுடன் எப்படி வேட்டையாடினார்கள்? என்பதை இந்த படத்தில் உணர்வுப்பூர்வமாக படமாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் பூஜா காந்தி கொள்ளை கும்பலின் அழகியாக மேலங்கி அணியாமல் துணிச்சலாக நடித்து, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். படத்தில் அவர், பீடியை பற்ற வைத்து புகைப்பது போன்ற காட்சியும் வருகிறது. பூஜா காந்தி ‘கொக்கி,’ ‘திருவண்ணாமலை’ ஆகிய படங்களில் நடித்தவர். இந்த படத்தை சீனிவாசராஜு டைரக்டு செய்து இருக்கிறார். அருந்ததி, காஞ்சனா, கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆகிய படங்களை வெளியிட்ட ராம.நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இந்த படத்தை பற்றி ராம.நாராயணன் கூறியதாவது:–
    ‘‘வீடுகளில் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளே புகும் ஒரு கும்பல் பெண்களை கற்பழித்து, கொள்ளையில் ஈடுபடுவதுதான் இந்த படத்தின் கதை. இந்த படத்தை பார்த்து அதிர்ந்து போனேன். விறுவிறுப்பாக படமாக்கி இருக்கிறார்கள். கொலை கும்பலில் உள்ள ஒரு பெண்ணாக பூஜா காந்தி நடித்து இருக்கிறார். படத்தில் அவர் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசின் விருது கிடைத்து இருக்கிறது. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மத்தியில் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.’’ இவ்வாறு ராம.நாராயணன் கூறினார்.

    06 மே 2013

    முத்தத்திற்கு அஞ்சமாட்டேன்!

    சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்க மகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார் நடிகர் அர்ஜூன். பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். இதில் அவர் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார். பூபதி பாண்டியன் இயக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். 'நாடோடிகள்' படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். சினிமா என்றாலே முத்தக் காட்சிகள் இருக்குமே, அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பீர்களா..? என ஐஸ்வர்யாவை கேட்டால் உடனே நடிப்பேன் என்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது : “என் அப்பா என்னை மிகவும் தைரியமான பெண்ணாகத்தான் வளர்த்திருக்கிறார். சினிமாவுக்கு நடிக்க வந்த பிறகு இந்தக்காட்சிகளில் மட்டும் தான் நடிப்பேன், அந்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்ல முடியாது, ஒரு படத்தின் திரைக்கதைப்படி காட்சிக்கு மிகவும் முக்கியம் என்றால் முத்தக்காட்சியில் நடிக்கவும் கூட முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்” என்றார்.

    27 ஏப்ரல் 2013

    பேசிக்கொண்டேயிருக்கும் அபிநயா!

    அபினயா 
    ‘விழித்திரு’ படத்தில் ரேடியோ ஜாக்கியாக அபிநயா நடிக்கிறார். கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு, எரிகா பெர்னாண்டஸ், தன்ஷிகா, சாரா உட்பட பலர் நடிக்கும் படம், ‘விழித்திரு’. விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை இயக்கும் மீரா கதிரவன் கூறியதாவது: படத்தின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் நடந்துவருகிறது. இது திரில்லர் படம். இரவில் நடக்கும் கதை என்பதால் சென்னை சாலைகளில் இரவில் படம்பிடித்து வருகிறோம். படத்தில் அபிநயா, தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் ரேடியா ஜாக்கியாக வருகிறார். படத்தில் எஃப்.எம்மும் முக்கிய கேரக்டராக வருகிறது. படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர் என்பதால் சில ரேடியோ ஜாக்கிகளைச் சந்தித்த அபிநயா, பயிற்சி பெற்றார். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இவரது கேரக்டரும் ஒன்றாக இருக்கும். டெக்னிக்கலாகவும் படம் புதுமையாக இருக்கும். குறிப்பாக ஒளிப்பதிவு மிரட்டும். இதற்காக விஜய் மில்டன் அதிகம் மெனக்கெடுகிறார். இவ்வாறு மீரா கதிரவன் கூறினார்.

    26 ஏப்ரல் 2013

    ஷ்ரேயாவால் கலங்கும் நடிகர்!

    ஸ்ரேயா 
    நடிகை, ஷ்ரேயாவை, இப்போதெல்லாம், தமிழில், அதிகமாக பார்க்க முடியவில்லை. ஆனால், தெலுங்கில் அம்மணி, ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதுவும், சாதா ரவுண்டுஅல்ல, அதிரடியான கவர்ச்சி ரவுண்டு. விரைவில் வெளியாகவுள்ள, "பவித்ரா என்ற படத்தில், கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம். ஷ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம், தெலுங்கின் இளம் நடிகரான, ஆதிக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே, தெலுங்கில், இவர் நடித்த இரண்டு படங்களும், அவுட். இதனால், தற்போது நடித்துள்ள, "சுகுமாருடு என்ற படத்தை, பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இதில், பெரிய சோகம் என்னவென்றால், "பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான்,"சுகுமாருடு படமும் வெளியாகிறது. ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில், "சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ, என, பீதி அடைந்துள்ளாராம், அந்த இளம் நடிகர்.

    23 ஏப்ரல் 2013

    திமிர் பிடித்த அழகி நித்யாமேனன்!

    நித்தியா மேனன் 
    ‘‘நான் டைரக்டு செய்த நடிகைகளில், நித்யாமேனன் திமிர் பிடித்த அழகி’’ என்று டைரக்டர் சேரன் கூறினார். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய சேரன் இப்போது, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாகவும், நித்யாமேனன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்த படம் தொடர்பாக டைரக்டர் சேரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களின் இழப்பில் இருந்து வெளியே வருவதற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். என்றாலும், டைரக்டு செய்யவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. எதையோ வைத்து சுமந்து கொண்டிருந்தது போல் உணர்ந்தேன். கிராமத்து படம் எடுத்தால், ஏளனமாக பார்க்கிறார்கள். சேரனுக்கு இதுதான் வரும் என்று நினைக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிற மாதிரி ஒரு படம் டைரக்டு செய்ய ஆசைப்பட்டேன். இந்த படம், வேறு ஒரு சேரனை அடையாளப்படுத்துகிற படம். தொடர்ந்து வெற்றி படம் கொடுத்தால், ஒரு மரியாதை கிடைக்கும். தோல்வி படம் கொடுத்தால், திரும்பி பார்க்க மாட்டார்கள். இது இயல்பான விஷயம். இந்த படத்துக்காக சில கதாநாயகர்களை அணுகியபோது, நிராகரித்தார்கள். நான் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. ஆங்கிலத்தில் கதை சொன்னால்தான் சில கதாநாயகர்கள் ‘கால்ஷீட்’ கொடுக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் என்னை நான் நிரூபித்துக் காட்ட விரும்பினேன். நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான். திரும்ப திரும்ப தூக்கிவிட்டுக் கொண்டிருப்பான். ஐதராபாத் போய் சர்வானந்த், நித்யாமேனன் ஆகிய இருவரையும் பார்த்தேன். இரண்டு பேருமே நிறைய கதை கேட்டவர்கள், எளிதில் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த படத்தின் கதையை கேட்டதும், இரண்டு பேரும் உடனே நடிக்க சம்மதித்தார்கள். சந்தானம் எனக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து வியந்து போனேன். சாதித்து விட்டோம் என்ற கர்வம் அவரிடம் இல்லை. எங்க அம்மாவுக்கு உங்க படங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க, உங்க படத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார்கள் என்றார். நான் டைரக்டு செய்த நடிகைகளில் நித்யாமேனன், திமிர் பிடித்த அழகி. கதாபாத்திரமாக மாறக்கூடிய நடிகை. உணர்வுகளை அற்புதமாக முகத்துக்கு கொண்டு வருகிறவர்.’’ இவ்வாறு சேரன் கூறினார். பேட்டியின்போது நடிகர்கள் சர்வானந்த், கிட்டி, ஜெயப்பிரகாஷ், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

    21 ஏப்ரல் 2013

    உள்ளூர் மாப்பிளைதான் வேணும்-த்ரிஷா

    திரிஷா 
    த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம். திரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். இந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார். த்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது. த்ரிஷா கல்யாணம் செய்யப்போகும் அந்த சென்னைக்காரர் யாரோ?

    14 ஏப்ரல் 2013

    என் வாழ்க்கை என் கையில்-அஞ்சலி

    ‘‘இனி என் வாழ்க்கை என் கையில் தான். திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார்.

    பரபரப்பு:
    சென்னை வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, கடந்த 8–ந்தேதி திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் இருந்தபடி போன் மூலம் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் இதுவரை அம்மா என்று அழைத்து வந்த பாரதிதேவி, என்னை பெற்ற அம்மா அல்ல. என் அம்மாவின் தங்கை. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து, என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறினேன்’ என்று அவர் கூறினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் சித்தாப்பாவுடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்தும் திடீரென்று மாயமானார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்? என்பதும் மர்மமாக இருந்தது. காணாமல் போன அஞ்சலியை கண்டுபிடித்து தரும்படி அவருடைய சித்தி பாரதிதேவி, போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.

    படப்பிடிப்பு:
    அஞ்சலி ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, அவர் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக படஅதிபர் சுரேஷ் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், 2 நாட்களில் நான் போலீசார் முன்பு ஆஜராவேன் என்று அஞ்சலி கூறியிருந்தார். அதன்படி அவர், நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

    வாக்குமூலம்:
    போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி, ‘நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத் அருகில் உள்ள என் தோழியின் சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சூழ்நிலையில், நடிகை அஞ்சலிக்கு, படஅதிபர் சுரேஷ் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். ‘இந்த படம் முடியும் வரை குடும்ப பிரச்சினைகளையும், சண்டைகளையும் தள்ளி வைத்துவிடு. படத்தை முடித்துக்கொடுக்கும் வரை எங்கள் அனுமதியில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது’ என்று நிபந்தனைகள் விதித்ததை தொடர்ந்து, அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அந்த ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அஞ்சலி நேற்று தெலுங்கு டெலிவிஷன் சேனல்களுக்கு வீடியோ கேசட் அனுப்பி வைத்தார். டெலிவிஷனில் ஒளிபரப்பான அந்த வீடியோ கேசட்டில் அவர் கூறி இருப்பதாவது:–

    மன்னிப்பு:
    கடந்த சில நாட்களாக என் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விட்டன. அவை இப்போது முடிந்து விட்டன. அந்த சம்பவங்களால் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்–நடிகைகள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் எழுந்த சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் இனி யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. இக்கட்டான சமயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்னால் எனது குடும்பத்தினரும் வேதனைப்பட்டு உள்ளனர். அதற்காக வருந்துகிறேன்.

    என் வாழ்க்கை என் கையில்:
    இனி நான் சினிமா தொழிலில் முழு கவனம் செலுத்துவேன். இனி என் சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் என் கையில்தான். அவற்றை நானே கவனித்துக் கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கட்கிழமை (நாளை) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். புனேயில் திங்கட்கிழமை நடைபெறும் ‘போல் பச்சன் போல்’ இந்தி படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். ‘பலுப்பு’ தெலுங்கு படத்தையும் விரைவில் முடித்துக்கொடுத்து விடுவேன். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறினார்.

    10 ஏப்ரல் 2013

    நான் பத்திரமாக இருக்கேன்-அஞ்சலி

    ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமான நடிகை அஞ்சலி தனது தாய் பார்வதி தேவிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீது மோசடி புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து வெளியேறிய அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் அவரைக் காணவில்லை. அவர் மாயனது குறித்து அவரது அண்ணன் ரவிசங்கர் மீது சந்தேகமாக உள்ளதாக அவரது சித்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    08 ஏப்ரல் 2013

    'என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும்...!

    என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் அதற்கு என் சித்தியும் அவருக்கு நெருக்கமாக உள்ள டைரக்டர் களஞ்சியமும்தான் பொறுப்பு என்று நடிகை அஞ்சலி தெரிவித்தார். நடிகை அஞ்சலிக்கும், இத்தனை நாளாய் அவரது அம்மா என்று திரையுலகம் நினைத்துக் கொண்டிருந்த பாரதி என்ற பெண்மணிக்கும் கடும் சண்டை மூண்டுள்ளது. பாரதி உண்மையில் தனது தாய் இல்லை என்றும், சித்தி முறை உறவினர் என்றும் அஞ்சலி கூறியுள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணம் முழுவதையும் சித்தி பாரதியும் அவருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் களஞ்சியமும் அபகரித்துக் கொண்டதாகவும், தன் உயிருக்கு அவர்களால் ஆபத்து நேரக் கூடும் என்றும் அஞ்சலி அச்சம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிக்கவே ஹைதராபாதில் குடியேறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "என் குடும்பத்தினருக்கு செய்யாத பல விஷயங்களை என் சித்தி குடும்பத்தினருக்கு செய்தேன். என் உடன்பிறந்தவர்களைக் கூட நான் பார்ப்பதில்லை. எல்லாமே சித்திக்குத்தான் கொடுத்தேன். ஆனால் அவர் நன்றியில்லாமல் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். நான் இத்தனை காலமும் நடித்து சம்பாதித்த பணம் முழுவதையும் அவர் சுருட்டிக் கொண்டார். இதற்கு இயக்குநர் களஞ்சியமும் உடந்தை. இனி என் மீது அபாண்டமாக எப்படி வேண்டுமானாலும் பழி போடுவார்கள். என் உயிருக்கே கூட ஆபத்து வரும் வாய்ப்புள்ளது. எனவேதான் சென்னையிலிருந்து ஹைதராபாத் வந்து விட்டேன். என் உடம்பில் சிறு கீறல் விழுந்தாலும் கூட அதற்கு முழு பொறுப்பு என் சித்தியும் இயக்குநர் மு களஞ்சியமும்தான். இன்னும் சில தினங்களில் பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு உண்மைகளையும் சொல்லப் போகிறேன்," என்றார்.

    31 மார்ச் 2013

    நிறைவான வேடம்,நிம்மதியான வாழ்க்கை-திரிஷா

    இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நிறைவான வேடங்கள், நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம் என்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் 2002-ல் அறிமுகமாகி, பத்தாண்டு காலத்தை முன்னணி கதாநாயகியாகவே வெற்றிகரமாகக் கடந்தவர் த்ரிஷா. இன்றைய சூழலில் இது ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரம் போன்ற படங்களில் நடிக்கிறார் த்ரிஷா. பத்தாண்டுகள் முன்னணி கதாநாயகியாக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. எனக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டியிருந்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சினிமாவில் அதுவும் முன்னணி கதாநாயகி இடத்தில் இருப்பது பெருமை, என் அதிர்ஷ்டம். ஒரு காலத்தில், ராத்திரி - பகல் என்று பார்க்காமல் ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்திருக்கிறேன். காரணம், வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாதே என்பதால். இன்று என் மனசு விரும்பும் பாத்திரங்களில் நடிக்கிறேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். அந்த பரபரப்பும் நிம்மதியற்ற சூழலும் இல்லாத நிலையில், முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அனுபவித்து நடிக்கிறேன். இனி எண்ணிக்கை முக்கியமில்லை. இருக்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டு, நல்ல படங்களில் நடிக்க வேண்டும்," என்றார்.

    26 மார்ச் 2013

    என் கனவு ஈடேறவில்லை-காஜல்

    நடிகையானதால் படிப்பை தொடர முடியவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவை கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய்யின் ‘ஜில்லா’ அடங்கும். இது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: அதிகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவு. ஆனால் அது நனவாகவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்த போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் நிறைவேறவில்லை. ஆனாலும் அந்த லட்சியத்தை கைவிடுவதாக இல்லை. தபால் மூலம் எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவில் கல்லூரி மாணவி வேடங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி மாணவி வேடங்கள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக எம்.பி.ஏ. மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இயக்குனர்களிடம் படத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்குவது போன்று ஒரு காட்சி வைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    26 பிப்ரவரி 2013

    தமிழ் நடிகைகளுடன் போட்டி!

    Bollywood heroine comes to competition with Tamil actressesகோலிவுட் ஹீரோயின்களுக்கு போட்டியாக வருகிறார் மற்றொரு பாலிவுட் ஹீரோயின் பிரணிதி சோப்ரா. ‘இஷ்க்ஸாதே என்ற இந்தி படத்தில் நடித்தவர் பிரணித¤ சோப்ரா. இவர் தமிழில் உருவாகும் ‘சும்மா படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஹீரோவாக நடிப்பதுடன் ஸ்கிரிப்ட் எழுதி இயக்குகிறார் மதன். இவர் டாக்டர் ராஜசேகரின் தங்கை மகன். மதன் கூறும்போது, ‘காடுகளுக்குள் புதைந்திருக்கும் பல ரகசியம் வெளியுலகுக்கு தெரிவதில்லை. அதை அம்பலமாக்கும் கதைதான் இது. இந்தியில் வெற்றிபடத்தில் நடித்த பிரணிதி சோப்ரா ஹீரோயின். மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளார். இவர்களுடன் சுமன் ஷெட்டி, சேஷு, டி.பி.கஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெய் ஒளிப்பதிவு. ஆர்.தயாளன் இசை. எஸ்.எஸ்.எஸ் தயாரிப்பு. இதன் ஷூட்டிங் தேனி, குரங்கணி மற்றும் அச்சங்கோவில், தலக்கோணம், காளஹஸ்தி என தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. இப்படத்துக்கு ‘சும்மா என டைட்டில் வைத்ததற்கு காரணம் காடுகளில் புதைந்திருக்கும் ரகசியம்போல் இந்த டைட்டிலிலும் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது என்பதை உணர்த்தத்தான்‘ என்றார்.

    19 பிப்ரவரி 2013

    மூத்த நடிகர்களை அவமதிக்கவில்லை-அசின்

    நடிகை அசின் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மூத்த நடிகர்களைவிட இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிப்பதே எனக்கு வசதியாக உள்ளது என்று கூறியிருந்தார். தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் நடிப்பது சங்கடமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அசின் பேட்டி வயதான இந்தி நடிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், அஜய்தேவ்கான் போன்ற மூத்த நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். இவர்கள் அசின் மேல் ஆத்திரத்தில் இருக்கிறார்களாம். அசினுக்கு இந்திப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இவர்கள் தடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அசின் படங்கள் இல்லாமல் இருக்கிறார் என்கின்றனர். இதுகுறித்து அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் அளித்த பேட்டியில் எந்த உள்நோக்கமும் இல்லை. இளம் ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுவது தவறு அல்ல. இதற்காக மூத்த நடிகர்களை அவமதிக்கிறேன் என்று வதந்தி பரப்பப்படுகிறது. வயதான கதாநாயகர்களை மதிக்கிறேன். நான் சொன்ன கருத்தை அவர்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். பத்திரிகைகள்தான் இந்த பிரச்சினையை பூதாகாரமாக்குகின்றன. எனக்கு சினிமா படங்கள் இல்லை என்று யார் சொன்னது இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கப் போகிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இவ்வாறு அசின் கூறினார்.

    09 பிப்ரவரி 2013

    திரிஷாவின் அதிரடிக் கருத்து!

    கதையளப்போம்.கொம் 
    பரிசோதனைக் கூடங்களில் முயல், எலி போன்ற அப்பாவி விலங்குகளை பயன்படுத்துவதை விட பாலியல் குற்றவாளிகளை பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்று திரிஷா சிபாரிசு செய்துள்ளார். நாடு முழுவதும் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான லேப்களில் நிறைய முயல், எலி போன்றவைகளை அடைத்து வைத்து அவற்றுக்கு மருந்தை செலுத்தி பரிசோதனை நடத்துகிறார்கள். இந்த முறையை தடை செய்ய வேண்டும் என்று திரிஷா கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் ,"நான் பிராணிகள் பாதுகாப்பு அமைப்பில் இருக்கிறேன். பரிசோதனை கூடங்களில் பிராணிகள் பயன்படுத்துவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். ஜெயிலில் நிறைய குற்றவாளிகள் உள்ளனர். குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்தவர்களும் சிறையில் இருக்கிறார்கள். பரிசோதனைக் கூடங்களில் அப்பாவி விலங்குகளுக்கு பதிலாக இந்த குற்றவாளிகளை பரிசோதனைக்கு பயன்படுத்தி தண்டிக்கலாம். "இவ்வாறு திரிஷா கூறினார். நடிகை திரிஷா பிராணிகள் பாதுகாப்பு அமைப்புக்கு உதவியாக இருக்கிறார். தெரிவில் திரியும் நாய்களை பிடித்து வளர்த்து தத்து கொடுக்கவும் செய்கிறார். தற்போது பரிசோதனைக் கூடங்களில் எலி, முயலை பயன்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    05 பிப்ரவரி 2013

    தேவைப்பட்டால் பிகினி உடையணிந்து நடிப்பேன்!

     பேட்டி கொடுப்பதற்கு பீஸ் கேட்ட நடிகை இனியாவாகைசூடவா இனியா, என்னிடம் எக்கச்சக்கமாக திறமை உள்ளது. அதனால் எக்காரணம் கொண்டும் உடம்பைக்காட்டி நடிக்க மாட்டேன் என்று ஆரம்பத்தில் ஏகத்துக்கு எடுத்து விட்டு வந்தார். அதன்காரணமாக, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்நோக்கியிருந்த இனியாவை டி.வி நடிகர்களுடன் ஜோடி சேர்த்து விட்டனர். இதனால் அவரது நிலைமை படுமோசமாகி விட்டது. ஸ்பாட்டில்கூட ஒரு கதாநாயகி என்பதை மறந்து விட்டு சின்னத்திரை நடிகைகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகளைத்தான் இனியாவுக்கும் செய்து தருகிறார்களாம். அவர் கேரளத்தில் இருந்து சென்னை வந்தால், தங்குவதற்கு மிகச்சிறிய ஓட்டல்களில்தான் அறை எடுத்து கொடுக்கிறார்களாம். சாப்பாடு வசதியும் பெரிதாக கிடையாதாம். இப்படி வேகமாக எகிறிய தனது மார்க்கெட் அதே வேகத்தில் இப்போது இறங்கி விட்டதால், மனசொடிந்து போயிருந்தார் இனியா. அதனால் தனது கொள்கைகளை தளர்த்தினால் ஒழிய இனி ஏறுமுகத்தில் தனது மார்க்கெட் செல்ல வாய்ப்பில்லை என்பதை புரிந்து கொண்ட நடிகை, இப்போது சின்னத்திரை நடிகர் செந்திலுடன் நடித்துள்ள கண்பேசும் வார்த்தைகள் படத்தில் சில காட்சிகளில் கவர்ச்சியை தூவியிருக்கிறார். அதோடு, இதையடுத்து கதைக்கு அவசியம் என்றால் பிகினி நடிகையாகவும் மாறுவேன் என்று கிக்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் இதுவரை இனியாவை கண்டுகொள்ளால் இருந்த படாதிபதிகள்வட இப்போது இந்த கேரள குட்டியும், நயன்தாராவுக்கு தங்கை மாதிரிதான் இருக்கிறார். இவரையும் பில்லா நயன்தாராவாட்டம் கவர்ச்சி நடிகையாக்கி விடுவோம் என்று முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் முழுநேர கவர்ச்சிக்கோதாவில் இறங்க தனது உடல்கட்டை உரம்பாய்ச்சும் வேலைகளில் படுதீவிரமாகியிருக்கிறார் இனியா.

    12 ஜனவரி 2013

    நீச்சல் உடையை காட்டி பயமுறுத்துகிறார்கள்!

    நீச்சல் உடையை காட்டி பயமுறுத்துகிறார்கள் என்று அட்டக்கத்தி பட நாயகி நந்திதா கூறியுள்ளார். அடுத்தடுத்து கிளாமர் பட வாய்ப்புகள் வந்ததால் அவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளாமல் ஒதுங்கியிருக்கிறார் நந்திதா. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், நான் ஒன்றும் பெரிய மாடர்ன் பொண்ணு கிடையாது. இதை பலரிடம் பலமுறை சொல்லியும் உங்களுக்கு கிளாமர் வேடம்தான் சரியாக வரும் என்கிறார்கள். சிலர் கதையை சொல்லிவிட்டு, நீச்சல் உடையிலும் நடிக்க வேண்டியிருக்கும் என்று கூறி பயமுறுத்துகிறார்கள். இதில் எனக்கு துளியும் சம்மதம் இல்லை. கதை பிடித்துப்போய், கதைக்கு தேவையான கிளாமர் தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பது குறித்து முடிவெடுப்பேன், என்று கூறியுள்ளார். தற்போது நந்திதா புதுமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்கும் நளனும் நந்தியும் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

    06 ஜனவரி 2013

    நயன்தாராவை போட்டியாக நினைக்கவில்லை- த்ரிஷா

    த்ரிஷா
    த்ரிஷாவும், நயன்தாராவும் சமகாலத்து நடிகைகள். நயன்தாரா ஐயா படத்தில் அறிமுகமானார் என்றால், த்ரிஷா லேசா லேசா படத்தில் அறிமுகமானார். இருவருமே விஜய், அஜீத் என இரண்டு நடிகர்களுடன் ஒரே காலகட்டங்களில் டூயட் பாடி வந்தனர். இதனால் அந்த சமயத்தில் தனக்கு வர இருந்த சில வாய்ப்புகளை நயன்தாரா அபேஸ் பண்ணி விட்டதாக அப்போது திரைக்குப்பின்னால் த்ரிஷா கொடி பிடித்ததும் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது மீண்டும் நயன்தாரா பீல்டுக்குள் வந்திருப்பதால் அவர்களது தொழில் போட்டி தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றி த்ரிஷாவைக் கேட்டால், நயன்தாராவுக்கும், எனக்குமிடையே தொழில் போட்டி ஒரு சமயத்தில் நடந்தது உண்மைதான். ஆனால் இப்போது நான் யாரையுமே போட்டியாக நினைக்கவில்லை. காரணம், நானும் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகி விட்டது. அதனால் இனி போட்டி என்பதை தவிர்த்து இன்னும் எனக்குள் இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்போது நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட நடிகைளெல்லாம் எனது உயிர்த்தோழிகளாகி விட்டனர். அதனால் எங்களுக்குள் போட்டி பொறாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் த்ரிஷா.