பக்கங்கள்

26 மார்ச் 2013

என் கனவு ஈடேறவில்லை-காஜல்

நடிகையானதால் படிப்பை தொடர முடியவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவை கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய்யின் ‘ஜில்லா’ அடங்கும். இது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: அதிகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவு. ஆனால் அது நனவாகவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்த போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் நிறைவேறவில்லை. ஆனாலும் அந்த லட்சியத்தை கைவிடுவதாக இல்லை. தபால் மூலம் எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவில் கல்லூரி மாணவி வேடங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி மாணவி வேடங்கள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக எம்.பி.ஏ. மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இயக்குனர்களிடம் படத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்குவது போன்று ஒரு காட்சி வைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக