பக்கங்கள்

27 செப்டம்பர் 2010

சென்னையை மறக்கமாட்டேன்: அசின்.

சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன் என்று நடிகை அசின் கூறினார்.
சென்னையில் ஷூட்டிங்கில் பங்கேற்றபோது அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் தீவிர ரசிகை நான்.
தமிழில் அவர் இயக்கிய பிரண்ட்ஸ் மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். மலையாளத்தில் வெளிவந்த பாடிகார்ட் படத்தில் நான்தான் நடிப்பதாக இருந்தது. அப்போது ஹிந்திப் படங்களில் பிசியாக இருந்ததால் நடிக்க முடியாமல் போய்வவிட்டது.
இப்போது அதே பாடிகார்ட் படம்தான் தமிழில் காவலனாக ரீமேக்காகிறது. சித்திக்தான் இயக்குகிறார். இந்த படத்தில் நான் நடிப்பதில் மகிழ்ச்சி. ஹிந்தியில் நடிப்பதால் தமிழை மறந்துவிடவில்லை. என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது தமிழ் திரையுலகம்தான். சென்னையை எப்போதும் மறக்கமாட்டேன். இனி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

24 செப்டம்பர் 2010

த்‌ரிஷாவை முத்தமிட மறுத்த நடிகர்.

கூலி கொடுத்தும் கரும்பு தின்ன மறுத்தவரைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? த்‌ரிஷா சம்மதம் தெ‌ரிவித்தும் அவரை முத்தமிட மறுத்த நடிகரைப் பற்றி வேறெப்படி சொல்வது?
இந்தியில் வெளியான லவ் ஆ‌ஜ் கல் படத்தை தெலுங்கில் ‌ரீமேக் செய்கிறார்கள். சைஃப் அலிகான் நடித்த வேடத்தில் பவன் கல்யாண், தீபிகா படுகோன் வேடத்தில் த்‌ரிஷா.
லவ் ஆ‌ஜ் கல்லில் வருவதைப் போன்ற லிப் டு லிப் முத்தக் காட்சியை தெலுங்கிலும் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார் இயக்குனர். பவன் கல்யாணுக்கு முத்தம் தர த்‌ரிஷா தயார். ஆனால் பவன் கல்யாண் தனது வயசுக்கும், கௌரவத்துக்கும் ச‌ரிவராது என்று த்‌ரிஷாவை முத்தமிட மறுத்திருக்கிறார்.
பவன் கல்யாணை என்ன சொல்வது. ஜென்டில்மேன் என்பதா? இல்லை பிழைக்க‌த் தெ‌ரியாதவர் என்பதா?

22 செப்டம்பர் 2010

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயதுப் பெண் அமெரிக்க டீன் அழகியாக தேர்வு.

அனிஷா பனீசர் என்ற 16 வயது இந்திய வம்சாவளிப் பெண், அமெரிக்காவின் பர்பக்ட் டீன் என்ற அழகிப் பட்டத்தை வென்றுள்ளார். ஆனால் அவர் இங்கிலாந்து பிரஜை என்பதால் இந்தப் பட்டத்தை அவருக்குத் தரக் கூடாது என்று தோல்வி அடைந்த அழகிகளின் பெற்றோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
அனிஷா தனது குடும்பத்தினருடன் இங்கிலாந்தின் கிளாமர்கானில் உள்ள லங்கான் என்ற இடத்தில் வசித்து வருகிறார். கார்டிப்பில் உள்ள ஹோவல்ஸ் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தனது விடுமுறை கால வீட்டுக்கு அவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். வந்த இடத்தில் டீன் ஏஜ் அழகிகளுக்கான பர்பக்ட் டீன் அழகிப் போட்டி குறித்து கேள்விப்பட்டு அதில் கலந்து கொண்டார்.
இதில், அமெரிக்காவில் பிரபலமான பல்வேறு டீன் ஏஜ் அழகிகள் 30 பேர் கலந்து கொண்டனர். ஆனால் அத்தனை பேரையும் தனது அசத்தல் அழகு மற்றும் அறிவால் தோற்கடித்து விட்டார் அனிஷா. இதையடுத்து அவருக்கு 2000 டாலர் பரிசுத் தொகை கிடைத்தது. ஆனால் அனிஷாவுக்கு பட்டத்தைக் கொடுத்ததற்கு தோல்வி அடைந்த அழகிகளும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்கு எப்படி அமெரிக்க அழகிப் போட்டி பரிசைத் தரலாம் என்று அவர்கள் முறையிட்டனர். ஆனால் இதை நிராகரித்துள்ளார் அனிஷா. இதெல்லாம் பொறாமையால் வரும் வார்த்தைகள். அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதற்காக வெற்றி பெற்ற என்னை வி்மர்சிப்பது தவறு என்றார் படு கூலாக.
அனிஷாவுக்கு அமெரிக்காவில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிறுவனத்தில் பயிற்சி பெறவும் இந்தப் போட்டி மூலம் 18,000 டாலர் ஸ்காலர்ஷிப் தொகையும் கிடைத்தது. மேலும் தனியாகவும் ஒரு டிவி நிகழ்ச்சியை அவர் நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

21 செப்டம்பர் 2010

பெண்ணின் நிர்வாணப் படத்தை இணையத்தில் விட்ட நபர் கைது.

தாம் முன்னர் திருமணம் செய்யவிருந்த பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவவிட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிமன்றில் நிறுத்தப்பட்டார். குறித்த பெண்ணுக்கு இன்னொருவருடன் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இந்நபர் அப்பெண்ணின் நிர்வாணப் படங்களை இணையத்தில் உலாவ விட்டுள்ளார். இப்படங்களை அவர் கையடக்கத் தொலைபேசி மூலமும் உலாவ விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இன்னொரு நபரையும் போலீசார் தேடிவருகின்றனர். கைதான நபரை ஒக்ரோபர் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

20 செப்டம்பர் 2010

எந்திரனால் வந்த நெருக்கடி... !

உற்சவம் வரும்வரை சாமியும் கருவறையில்தான், தேரும் தெருவரைதான்’ என்ற நிலையில் உள்ளனவாம் தற்போது வெளியாகவிருக்கும் சில தமிழ்ப் படங்கள்.
எந்திரன்’ இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அக்டோபர் 1ல் வெளியாகிறது.
அந்தவகையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் அமெரிக்காவில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் என்றப் பெருமையை பெற்றுள்ளது எந்திரன்.
உலகமெங்கும் எதிர்பார்த்த ஒரு படம் வெளியாகிறது என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், எந்திரன் வெளியாவதில் சில வருத்தங்களும் இல்லாமல் இல்லை.
பொதுவாகவே, எந்த ஒரு பெரிய நடிகர்களின் படம் வெளியாகிறது என்றால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்போ, அல்லது வெளியான சிலதினங்களுக்குப் பின்போதான் சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாகும். இது வழக்கம்தான். என்றாலும், மற்ற மொழிப் படங்களைவிட தமிழ் படங்களுக்கு இந்த நெருக்கடி ரொம்பவே அதிகம்தான்.
அதிலும் எந்திரன் படவெளியீட்டால் பாதிப்புக்கு உள்ளாகும் படங்கள் கொஞ்சம் ஏராளம்தானாம்...
ஆரம்பத்தில் எந்திரன் எப்போது வெளியாகும் என்பது எவருக்கும் தெரியாத மர்ம நாவலாக இருந்து வந்தது. அந்தா இந்தா என்று செப்படம்பர் 24ந் தேதி எந்திரன் ரிலீஸ் என எந்திரன் படக்குழு முதலில் வெளியிட்டது. ஆனால் அதன்பிறகு வந்த சில தகவல்கள் எந்திரன் ரிலீஸ் தேதியை கன்னீத்தீவு கதையாக நீட்டித்துக்கொண்டிருந்தன. எப்படியோ ஒருவழியாக அக்டோபர் 1ல் எந்திரன் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாகவே இப்போது தெரிவிக்கப்பட்டுவிட்டது.
செப்படம்பர் 24ந் தேதி வெளியாக வேண்டிய எந்திரன், அக்டோபர் 1ந்தேதி வரை தள்ளிப்போனதற்கான காரணமும் கொஞ்சம் காரசாரமாகவே உள்ளது.
ஆர்யா - நயன்தாரா நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துக்காகத்தான் எந்திரன் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டதாக சினிமாவட்டாரங்களில் கிசுகிசுக்கபட்டும் வருகிறது. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசன். ஆனாலும், உலகமெங்கும் படத்தை வெளியிட்டிருப்பது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்புக்கும், சன் பிக்சர்ஸ் தரப்புக்கும் நடந்த ஒருவாரகால பேச்சுவார்த்தையின் பலன்தான் எந்திரன் ரிலீஸின் காலதாமதம். (ஓ... பாஸுக்கு வழிவிட்டதா மாஸு)
என்னதான் எந்திரன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து, இப்போது பெற்றுவரும் வெற்றிக்கு கெடுவைத்துவிடுமே என்று வருத்தப்பட்டு வருகிறதாம் பாஸு டீம். இந்தப் படத்திற்கு ஏற்பட்ட நிலைதான் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களுக்கும்.
வெளியான படங்களைவிட வெளியாகப்போகும் படங்களுக்கும் அதேகதிதான். சிக்கு புக்கு, ஈசல், வ குவாட்டர் கட்டிங், சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, உள்ளம் தள்ளாடுதே, பட்டாபட்டி 50 - 50 மற்றும் தனுஷ் நடித்த ஆடுகளம், சீடன் உட்பட 30 க்கும் மேற்பட்டப் படங்கள் எந்திரனால் தியேட்டர் கிடைக்காமல் காத்திருக்கின்றனவாம்.
எவ்வளவு பெரிய ஹீரோக்களின் படங்களையும் ஜீரோ ஆக்கிய சின்னப் பட்ஜெட் படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் கணக்கின்றி உள்ளன. எண்பதுகளில் எடுத்து கொண்டால்...‘கரகாட்டக்காரன்’ படம் அப்போது வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்கள் அத்தனையையும் ஓரங்கட்டியது.
ஏன்...! ரஜினிகாந்தின் ‘படையப்பா’ படம் வெளியான போது, புது முகங்கள் மட்டுமே நடித்த ‘மோனிஷா என் மோனலிஷா’படம் வெளியாகி ஹிட்டும் ஆனது.
அதைவிட கடந்த ஆண்டுகளில் வெளியான சுப்பிரமணியபுரம், வெண்ணிலாக் கபடிக்குழு, பசங்க, நாடோடிகள், ஈரம் போன்றப் படங்கள் பெரிய அளவில் விளம்பரங்கள் ஏதுமில்லாமலே அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களே தராத வெற்றியை மிகப்பெரிய அளவில் பெற்றன. பெரிய படம், சின்னப் படம் என்பது எல்லாம் பட்ஜெட்டில்தான். படத்தின் வெற்றியில் இல்லை...
என்னதான் மாஸ் படங்களுக்கு ஆரம்பத்தில் மவுசு இருந்தாலும் தரமான படங்கள் மட்டும்தான் மக்கள் மனதில் இருக்கும்...

18 செப்டம்பர் 2010

நமீதா நடிக்கும் 'ஃபயர்'!!!


ஃபயர் என்ற பெயரில் தெலுங்கில் தயாராகும் புதிய படத்தில் நமீதா கவர்ச்சிக் கொடி கட்டவுள்ளாராம்.
அதிரடியும், கவர்ச்சியும் கலந்த மசாலாப் படமாக இது உருவாகப் போகிறதாம். படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பவர் நமீதா. படத்தை அப்துல்லா இயக்க, கரீமுன்னிசா தயாரிக்கிறார்.
இப்படம் குறித்து அப்துல்லா கூறுகையில், 'நமீதாவை நாயகியாகப் போட்டு ஃபயர் படத்தை உருவாக்கப் போகிறேன். நமீதாவுக்கு இதில் முக்கியமான ரோல். இதுவரை பார்த்திராத நமீதாவை இதில் காணலாம்.
படத்தில் சண்டைக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்படவுள்ளன. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு ஹாங்காங்கிலும், ஆஸ்திரேலியாவிலும் நடைபெறவுள்ளது. படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அதேபோல 2 நாயகர்களும் படத்தில் நடிக்கின்றனர். ஆனாலும் நமீதாவுக்கே முக்கியத்துவம் அதிகம்' என்றார்.

17 செப்டம்பர் 2010

அத மட்டும் கேட்காதீங்க - அசின் மறுப்பு.

ஈழத்தமிழர்களை கொன்றுக்குவித்த சிங்கள பூமிக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. அதை மீறி அசின் இலங்கை சென்றார். அசின் மீது தமிழ் சினிமா அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தன.
அப்போது அசின் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தன. அதனால் விஜய் - அசின் நடித்த்துவரும் காவலன் திரைப்படம் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
அதன் பிறகு ‘சென்னைக்கு வரவே பயமாக இருக்கு’ என்ற அசின் தமிழகத்திலும், தமிழ்த்திரையுலகிலும் சுதந்திரப் பறவையாக வலம் வரத்தொடங்கினார்.
இப்படியான நிலையில் 16ந் தேதி இரவு சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் காவலன் படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய், அசின், வடிவேலு, இயக்குனர் சித்திக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கண்டிப்பாக கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு ‘கேள்வி’... கேட்கப்பட்டது. ஆனால் பதில் தான் ம்ம்ம்ஹூம்... ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் - சித்திக் இணைந்திருக்கும் படம் ‘காவலன்’. இந்தப் படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவையான திரைக்கதையில் பயணிக்கிறதாம். வழக்கமான விஜய்யின் கமர்ஷியல் ஆக்‌ஷன் இதில் குறைவு. வடிவேலுவின் கூட்டணியில் காமெடிக் கொடி மிகமிக உயரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் படம் காவலன். சுருக்கமாக சொன்னால் இன்னொரு பிரண்ட்ஸ்.
சரி; இப்போ படத்தை விட முக்கியமான ஒரு விஷயத்துக்கு வருவோம்...
அசின் இலங்கை போன விவகாரத்தால், அவர் நடிக்கும் படங்களை புறக்கணிக்கப்போவதாக சில அரசியல் அமைப்புகள் சொல்லியுள்ளன. இதை எப்படி சமாளிக்கப் போகிறீங்க? என்ற கேள்வி காவல் படக்குழுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் சித்திக்,“படத்தை நல்லபடியா எடுத்து முடிப்பது என் கடமை. அதை முதலில் சிறப்பா முடிக்கனும். படம் வெளியாகும் போது ஏற்படும் பிரச்சனை பற்றி அப்போ பார்த்துக்கலாம்” என்றார்.
இந்தக் கேள்விக்கு விஜய்யின் பதில் மௌனம் மட்டுமே... மற்ற சில கேள்விகளுக்கு மட்டும்தான் வாயைத் திறந்தார்.
“ அசின் இந்திப் படங்களில் தற்போது பிஸியா இருக்காங்க. அவரை மீண்டும் தமிழுக்கு கொண்டுவரனும் என நினைத்தேன். வந்துட்டாங்க. இந்தப் படம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே நடிக்க வேண்டிய படம், அப்போது என்னால இதில் நடிக்க முடியாத சூழ்நிலை. அந்த வாய்ப்பு இப்போ அமைந்திருக்கு.
இந்தப் படத்தின் தலைப்பு, காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமாக கூறப்பட்டது. ஆனால் படதுக்கு ‘காவலன்’என்றுதான் தலைப்பு வச்சிருக்கோம். இதைத் தெரியப்படுத்ததான் இந்த பிரஸ் மீட்டிங். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீசாகுது.’’ என்று தனது படத்தைப் பற்றி மட்டுமே பேசி முடித்தார் விஜய்.
அசின் பேசும் போது , “விஜய்யுடன் நான் நடிக்கும் 3வது படம் இது. இதற்கு முன் நானும் விஜய்யும் நடித்த சிவகாசி, போக்கிரி படங்கள் பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகும். சித்திக் சாரின் படங்களை சின்னக் குழந்தையிலிருந்து பார்த்துட்டு வாரேன். இப்போ அவரின் படத்தில் நான் நடிக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே பெருமையான விஷயம்” என்று வேகவேகமாக பேசினார்.
ஏன் அவர் அப்படி அவசரம் அவசரமாக பேசினார் என்பது எல்லோரும் அறிந்துதான். எங்க நம்மிடம் இலங்கை சென்றுவந்த விவகாரம் பற்றி கேட்டு விடுவார்களோ? என்று நினைத்தவரிடம்... அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.(இந்தப் பிரச்சனைக்கு அவர்தானே காரணம். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்காமல் வேற யாரிடம் கேட்பது)
ஆனால் அதற்கு, “அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’ என்று மட்டும் கோபமாக கூறிவிட்டார் அம்மணி.
அப்படியே ஒருவேளை காவலன் படம் வெளியாவதில் ஏதாவது சிக்கல் வந்தால், அவருக்கென்ன... அம்மணிக்குதான் பாலிவுட் நடிகர்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்குதுல்ல...

16 செப்டம்பர் 2010

கவர்ச்சி வலம் வரும் பிரியாமணி!

தெலுங்குப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் நடிகை பிரியாமணி. பிகினி உடைகள் என்றாலும் அவர் கவலைப்படுவதில்லை. படு கவர்ச்சி உடைகளை அணிந்து நடித்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
தற்போது அடுத்த கட்டமாக ஹீரோவுக்கு இங்கிலீஷ் கிஸ் தரும் காட்சியில் நடித்துள்ளார். விஜி சிபிவிஸ்தா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பிரியாமணி நடிக்கிறார். இதில் சுமந்த் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடியும் கட்டத¢தை நெருங்கியுள்ளது.
இதுவரை தயாரான காட்சிகளை பட யூனிட் திரையில் பார்த்திருக்கிறது.
சுமந்த்-பிரியாமணி ஜோடியின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என அனைவரும் பாராட்டினார்களாம். இதையடுத்து இயக்குனர் விஜிக்கு ஒரு யோசனை தோன்றியது.
இதில் இருவரையும் முத்தக் காட்சியில் நடிக்க வைத்தால் என்ன என்பதுதான் அது. தயங்கியபடியே பிரியாமணியிடம் கேட்க, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் பிரியா. கூச்ச சுபாவம் காரணமாக ஹீரோ சுமந்த் தயங்கினாராம். பின் ஒரு வழியாக அவரையும் சம்மதிக்க வைத்துவிட்டார் விஜி.
இதையடுத்து ஸ்டுடியோவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் மட்டுமே இருக்க சுமந்த்-பிரியாமணி நடித்த ஆங்கில முத்தக் காட்சி படமாகியுள்ளது. படத்தில் இக்காட்சி ஹைலைட்டாக இருக்கும் என்கிறது யூனிட்.
தெலுங்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனாலும் என்ன அந்தப் படத்தை தமிழில் டப் செய்யமாட்டார்களா என்ன....அப்போது தமிழ் ரசிகர்களும் அந்தப் படத்தைப் பார்த்து ஆனந்தமடைவார்கள் என்கிறது படத் தயாரிப்பு குழு.

15 செப்டம்பர் 2010

ஆபாச போட்டோ-நயன்தாரா மாட்டல்!

நடிகை நயன்தாரா மீதான ஆபாச போஸ்டர் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுகிறது. அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படம் கடந்த 2008 ம் ஆண்டு வெளியானது. கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்டன. அதில் நயன்தாரா ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன.
இது பொதுமக்கள் மனதை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி திருவனந்தபுரம் கோர்‌டில் நாகராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்தின் டைரக்டர் ராஜுசுந்தரம், ஆபாச போஸ் கொடுத்த நடிகை நயன்தாரா, தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
ஆனால் போலீசார் இந்த வழக்கில் ஆதாரங்கள் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை முடித்து விட்டனர். இதையடுத்து முதலில் வழக்கு தொடர்ந்த நாகராஜ் மீண்டும் கோர்ட்டில் புதுவழக்கு தொடர்ந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

12 செப்டம்பர் 2010

பிரபுதேவாவுக்கு வந்த கோபம்!

முதல் ஷோவிலேயே ஏகப்பட்ட அப்ளாஸ்களும், எல்லை மீறிய விசில் சப்தமுமாக களை கட்டிவிட்டது பாஸ் என்கிற பாஸ்கரன். ஆர்யாவும் சந்தானமும் அடிக்கிற ரகளைகள் தியேட்டரையே துவம்சம் ஆக்குகின்றன. நயன்தாராவுக்கு பல படங்களுக்கு பிறகு இந்த படத்ம்தான் ஹிட்! ஆர்யாவுக்கு சமீபத்தில் வந்த மதராச பட்டினத்தை அடுத்து ஒரு சூப்பர் ஹிட்! இன்னும் கொஞ்சம் ஃபிரியா வுட்ருந்தா விசில் சத்தம் காதை கிழிச்சிருக்கும். ஆனால் அதைதான் அவரு கெடுத்துப்புட்டாரே என்று பொருமல் சவுண்டு கேட்கிறது பா.எ.பா யூனிட்டில். வேறொன்றுமில்லை. படத்தில் நயன்தாராவை சந்தானம் கிண்டல் செய்கிற காட்சிகளை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள் தியேட்டரில். இப்படியெல்லாம் எனக்கு டயலாக் இருந்திச்சு தெரியுமா என்று மாஸ்டரிடம் சொல்லியிருப்பார் போலிருக்கிறது நயன்தாரா.
படம் முடிஞ்சதும் நான் பார்க்கணும் என்று கூறிவிட்டாராம் மாஸ்டர். வேறு வழியில்லாமல் படத்தை போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். அதில் சில காட்சிகளில் மாஸ்டரையும் வம்புக்கு இழுத்திருந்தாராம் சந்தானம். அந்த சீன்களையெல்லாம் வெட்டிவிட வேண்டும் என்று இவர் பிரஷர் கொடுக்க மூக்கால் அழுது கொண்டே வெட்டித் தள்ளியிருக்கிறார் டைரக்டர்.
இரண்டு பேரும் லவ் பண்ணிக்கிட்டு இருக்கிற இந்த நேரத்தில் அந்த டயலாக்குகள் வெட்டப்படாமல் இருந்திருந்தா ரசிகர்கள் இன்னும் கொண்டாடி இருந்திருப்பாங்களே என்கிறாராம் இயக்குனர் ராஜேஷ்.

அங்காடித் தெரு போல்...


கௌதமன் இயக்கத்தில் எழுத்தாளர் நீல.பத்மநாபனின் "தலைமுறைகள்' நாவல் "மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது. கௌதமன், சீமான் கதாநாயகர்களாக நடிக்க அஞ்சலி நாயகியாக நடித்துள்ளார். கார்த்திகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஞ்சலி, ""கற்றது தமிழ்', "அங்காடித் தெரு' படங்களில் வந்த பெயர்களைப் போல் இந்தப் படமும் எனக்கு பெயர் வாங்கித்தரும். மகிழ்ச்சி படத்தில் நடித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதில் குழலி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி என்ற தலைப்பை இத்தனை நாள் எப்படித்தான் விட்டு வைத்திருந்தார்களோ தெரியவில்லை. இதுவரை முழு கிராமத்துப் பெண்ணாக நடித்ததில்லை. இப்படம் அந்தக் குறையை தீர்த்து வைத்துள்ளது. "அங்காடித் தெரு' போல் இந்த வருடத்தில் இதுவும் சிறந்த படமாக இருக்கும்'' என்றார்.

11 செப்டம்பர் 2010

பிரபல நடிகையின் கணவர் கைது.

திருவண்ணாமலையைச் சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்.பி., முருகையனின் பேரன் எஸ்.தணிகைவேல். இவர் திருவண்ணாமலை, சென்னை போன்ற இடங்களில சக்தி பைனான்ஸ் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகை பாரதியை ரகசிய திருமணம் செய்தார். கடந்த மாதம் வங்கிகளை ஏமாற்றியதாக மத்திய புலனாய்வுத்துறையால் கைது செய்யப்பட்டு, ஜாமீனில வெளியே வந்தார். இந்நிலையில் தற்போது ஆள் கடத்தல் வழக்கில் மீண்டும் தணிகைவேலை திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்தூர் காவல்நிலைய போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுபற்றி காவல்நிலைய ஆய்வாளர் இளவழகனிடம் கேட்டபோது, 2006ஆம் ஆண்டு புதுப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் தணிகைவேலுக்கு கடன் தந்துள்ளார். அந்தப் பணத்தை அவர் திருப்பி கேட்டபோது, அவரை அடியாட்களை வைத்து தணிகவேல் கடத்தியுள்ளார். இவரை அப்போது கைது செய்தோம். அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமலும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஏமாற்றி வந்தார். மேலும் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கில் ஆஜராகும்போது, இங்குள்ள வழக்கை மறைத்து நீதிபதியிடம் பொய் சொல்லியுள்ளார். இது எங்களுக்கு தெரிந்ததும், அவர் மீதான வழக்குப் பதிவு பற்றி தகவல் தெரிவித்தோம். அவர்கள் கைது செய்வதற்கான ஆணையை தந்தனர். அதன்பின்பே தணிகைவேலை கைது செய்தோம் என்றார்.
தற்போது உடல்நிலையை காரணம் காட்டி தற்போது தணிகைவேல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 செப்டம்பர் 2010

மீனா மீது ரஜனியின் அக்கறை.

அவ்வளவு களேபரத்திலும் மீனாவை பார்த்து நலம் விசாரித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இடம் சவுந்தர்யா திருமண வரவேற்பு.
சற்றே பூசிய அழகான மீனா இப்போ ஆறு மாசம். வேறு கல்யாணமாக இருந்திருந்தால் வீட்டிலிருந்தே ஒரு பொக்கே அனுப்பியிருப்பார். சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணமாச்சே. சுமையோடு காரேறி வந்துவிட்டார்.
அவ்வளவு கூட்டத்திலும் அலுங்காமல் குலுங்காமல் அழைத்து வந்தார்கள் செக்யூரிடிகள். மணமக்களை வாழ்த்திவிட்டு நகர்ந்த மீனா, ரஜினியையும் பார்த்து பேசினார்.
அந்த நேரத்தில்தான் எத்தனை மாசம்மா என்று விசாரித்தாராம் சூப்பர் ஸ்டார். ஆறாவது மாசத்திலிருந்து ரொம்ப ஜாக்ரதையா இருக்கணும். நிறைய பழங்கள் சாப்பிடணும் என்று அட்வைஸ் கொடுத்தவர், படுக்கும்போது எந்த பக்கமா திரும்பி படுக்கிறே? வலது கை பக்கமாவா? இடது கை பக்கமாவா? என்று கேட்க வெட்கத்தில் முகம் சிவந்து போனார் மீனா.
அவர் கேட்டதற்கு பின்னால் ஒரு வலுவான காரணம் இருப்பதை அப்புறம்தான் புரிந்து கொண்டார் மீனா. பெண்கள் இடது பக்கமாக படுத்தால் பெண் குழந்தை பிறக்குமாம்.
எந்த பக்கம் என்று சொன்னாரா மீனா?

ஆபாசமாக நடித்ததாக வழக்கு: தள்ளுபடி செய்யக்கோரி மல்லிகா ஷெராவத் முறையீடு.

ரஜினிகாந்த் போரிலே என்பவர் தம்மீது தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரி பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிடம் முறையீடு செய்துள்ளார்.
ஆபாசமாக நடித்ததாக மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யக் கோரி யாவத்மால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவ்டா முதல் வகுப்பு ஜூடிசியல் நீதிமன்றத்தின் முன்பு ரஜினிகாந்த் போரிலே என்பவர் 2009ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
'ஷாதி கே பெஹலே', 'மர்டர்' மற்றும் 'மான் கயா முகல் இ அஸம்' போன்ற படங்களில் மல்லிகா ஷெராவத் ஆபாசமாக நடித்ததாகவும், அது இளைஞர்களையும், சமுதாயத்தையும் பெரிதும் பாதித்துள்ளதாகவும் ரஜினிகாந்த் போரிலே தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக மல்லிகாவுக்கு இந்த நீதிமன்றம் 2010 ஏப்ரல் 3ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. எனினும் நீதிமன்றத்தில் மல்லிகா ஆஜராகவில்லை.
தற்போது அவ்வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி மல்லிகா ஷெராவத் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.கோடே, இதுதொடர்பாக மகாராஷ்டிர அரசுக்கும், ரஜினிகாந்த் போரிலேவுக்கும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

08 செப்டம்பர் 2010

ஆபாச கான்செப்ட் டைரக்டர் வீட்டில் கல்வீச்சு!

உயிர், மிருகம் என்று இரண்டு படங்களிலுமே ஊர் வாயை மெல்ல வைத்தவர் டைரக்டர் சாமி. அவரது முன்றாவது படமான சிந்து சமவெளி பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. அதோடு நில்லாமல் நாலா புறத்திலும் சாமிக்கு அர்ச்சனை(?) வந்த வண்ணம் இருக்கிறதாம். நேற்று காலை அவரது வீட்டில் கல்லெறி சம்பவங்களும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பதினெட்டு வயசில் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் அப்பா, தாயில்லாத அந்த மகனை கல்லு£ரி ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கிறார். மருமகளுடன் அந்த வீட்டில் தங்கியிருக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் மீதே காதலாகி உறவு கொள்கிறார் என்பதாக போகிறது கதை. அதுமட்டுமல்ல, இந்த கள்ளக்காதலுக்கு மருமகளும் உடன்படுகிறாள் என்பதுதான் பேரதிர்ச்சி.
மக்களின் ரீயாக்ஷன் எப்படியோ? திரையுலக வட்டாரத்தில் இந்த படத்திற்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது. உதவி இயக்குனர்கள் பலர் கூடி கூடி பேசுகிறார்கள். கொதிக்க கொதிக்க திட்டுகிறார்கள். தியேட்டர் விசிட்டுக்கு வந்த சாமியை சுற்றி வளைத்ததாகவும் கேள்வி. இந்த நிலையில்தான் இன்று காலை இந்த சம்பவம். அவரது வீட்டில் கல்லெறிந்ததுடன், வாராண்டாவில் நிறுத்தி வைத்திருந்த அவரது காரையும் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியிருக்கிறார்கள் யாரோ?
கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சாமி.

07 செப்டம்பர் 2010

பாலியல் தொடர்பின் பின் படுகொலை!

இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இவர் Bern நகரில் உள்ள Flora Park இல் வைத்து 52 வயதுடைய ஆண் ஒருவரை கத்தியால் குத்தி 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்திருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டவரும் இலங்கையர் ஆவார்.
இவர் இந்நபரை வீதியில் சந்தித்துக் கூடவே பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். பின் அந்நபருடன் பாலியல் தொடர்பு கொண்ட பின் கத்தியால் குத்திப் படுகொலை செய்திருக்கின்றார். குத்து வாங்கியவரின் குழறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்களும், பொலிஸாரும் அந்த இடத்தில் குவிந்து விட்டனர்.
திட்டமிட்டு படுகொலை செய்தார் என்று இளம்யுவதி குற்றவாளியாகக் காணப்படலாம். ஆனால் இவர் ஒரு நீண்ட கால மன நோயாளி என்று குடும்பத்தினரும், இவரின் மருத்துவரும் கூறுகின்றார்கள்.
இவர் மனநோய் காரணமாக வன்முறை எண்ணங்களால் தூண்டப்படுகின்றமை உண்டு என்றும் முன்பு 16 வயது சொந்த சகோதரன் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொல்ல முயன்றிருக்கின்றார் என்றும் குடும்பத்தினர் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட மன நோயாளியை வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்க்காமல் சமூகத்துடன் கலந்து வாழ குடும்பத்தினர் அனுமதித்து வருகின்றமை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன.

03 செப்டம்பர் 2010

தாம்பத்திய உறவை சலிக்காமல் காப்பது எப்படி!


தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரிடமிருந்து விலக்கிவைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப்படுகிறது.
ஆகவே, `உறவு’ வெறும் கடமையாக ஆகிவிடாமல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி? அதற்கு சில `படிகளை’ எடுத்துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள்.
அவை பற்றி…
முதல் படி :
வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் வெளிச்சத்திலும், வெளிச்சத்திலேயே படுக்கையறை விளையாட்டை வைத்துக்கொள்ள விரும்புபவர் என்றால் இருட்டிலும் உறவை வைத்து பாருங்களேன். புதிய சூழல் ஒரு புது எழுச்சியை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். எப்போதும் துணையின் எதிர்பார்ப்புக்கு மட்டும் ஈடுகொடுப்பதற்கு பதிலாக தாமே முன்வந்து முயற்சியை மேற்கொள்வது துணையின் ஆர்வத்தைத் தூண்டும் என்கின்றனர். `செக்சியான ஒரு சிறு நடனம், கவர்ச்சியான உள்ளாடைகள் உங்களின் கணவரை ஈர்க்கக்கூடும்’ என்று பெண்களுக்குக் கூறுகிறார்கள்.
இரடாவது : படி
தனித்தனியே சுற்றுலா பிரிந்திருபது அன்பையும், பாசத்தையும் மட்டுமல்ல, ஆசையையும் கூட்டும். எனவே முடிந்தால் தம்பதி கள் இருவரும் தனித்தனியே வெளி யிடங்களுக்குச் சில நாட்களுக்குச் சென்று வாருங்கள். இது சற்றுக் கடினம்தான். ஆனால் திட்டமிட்டு ஒருங்கிணைத்தால் இதற்கான ஏற் பாடுகளைச் செய்ய முடியும். ஒரு வாரம் பிரிந்திருந்து பாருங்கள், இரு வரும்… பரஸ்பரம் அணைப்பை எதிர்நோக்கும் ஆர்வம் எகிறும் என்று மனோவியல் வல்லுநர்கள் தெரிவிக் கின்றனர். நாட்கணக்கில் பிரிந்தி ருக்க வாய்பில்லாதவர்கள், ஒருவரிடம் ஒருவர் விலகியிருக்கும்படி மணிக்கணக்கில் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்துங்கள், ஆனால் அதே நேரம் அதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் செக்சாலஜிஸ்ட்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
முன்றாவது படி :
ஒரு புதிய இடத்தில்… ஒரு புதிய இடத்தில் அல்லது அமைதியான உணவகத்தில் ஒருநாள் மாலையில் தன்னை வந்து சந்திக்குமாறு துணைக்குக் குறிப்பு எழுதி வைங்கள். அங்கே நீங்கள் ஈர்க்கும் விதமாக ஆடை அணிந்து சென்று, ஒரு முலையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொள்ளுங் கள். உங்கள் துணைவர் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்பார்போடு அங்கு வருவார். உங்களைக் கண்டு பிரமித்து போவார். ஒரு பொது இடத்தில் காதலர்கள் சந்தித்துக் கொள்ளும் `த்ரில்’ அங்கே இருக்கும். நெருப்பும் பற்றிக் கொள்ளும். புதிய கோணங்கள், புதிய இடங்கள் எப்போதும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று குடும்ப நல மருத்துவர் தெரிவிக்கிறார்.
நான்காவது படி :
பிளாஷ்பேக்’கில் முழ்குவது… நீங்கள் முதன்முதலாக `அது’ வைத்துக்கொண்ட இடம், அந்த சூழலை மறக்க முடியுமா? அப்போது அவர்(ள்) நடந்துகொண்ட விதம், துணையிடம் தெரிந்த பதற்றம், சிரிப்பை வர வழைத்த சிறு குளறுபடிகள் எல்லாவற்றைம் மறக்க முடியாதல்லவா? அவை எல்லாவற் றைம் ஒருமுறை `பிளாஷ்பேக்’ ஓட்டி பாருங்கள். தேனிலவின்போது எடுத்த புகைபடங்கள், வீடியோவை பாருங்கள். அந்த நாட்களில் நீங்கள் பின்னணியில் ஒலிக்க விட்ட இசையை மீண்டும் ஒருமுறை ஒலிக்க விடுங்கள். மறுபடியும் அந்த ஆரம்பகால வேகம், தாகம் பிறக்கும் என்கிறார்கள்.
ஐந்தாவது படி :
தடாலடியான செயல்பாடுகள் விறுவிறுப்பு, `த்ரில்’லை ஏற்படுத்தும் செயல்கள் `டோபோமைனை’ விடுவிக்கின்றன என்கிறார், ரட்சர்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெலன் பிஷர். காதல் உணர்வுடன் தொடர்புடைய ரசாயனம் `டோபோமைன்.’ உறவு விருப்பத்துக்கான ஹார்மோனாகிய `டெஸ்ட்டோஸ்டிரோனின்’ அளவை `டோபோமைன்’ கூட்டுகிறது. வேகமான ஆற்றில் படகைச் செலுத்துவது, உயரமான இடத்திலிருந்து தக்க பாதுகாபுடன் தலைகீழாகக் குதிக்கும் `பங்கி ஜம்பிங்’ போன்றவை உங்களுக்கு உதவக்கூடும். சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபடுவது `எடார்பினை’ விடுவித்து உங்களை ஓர் உச்சத்தில் வைக்கி றது, அப்போது `பங்கி ஜம்பிங்’ போன்றவை கூடத் தேவையில்லை என்கிறார் குடும்ப நல ஆலோசனை நிபுணர் வர்க்கா. நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டில் ஈடுபடலாம் அல்லது சிறு உடற்பயிற்சியை நாடலாம் என்றும் அவர் யோசனை கூறுகிறார்.
ஆறாவது படி :
விலகி… சீண்டி… தம்பதிகளை பொறுத்தவரை படுக்கையறையில் சற்றே விலகியிருப்பது பொதுவாக பரிந்துரைக்கபடுவது இல்லை. இருவரில் ஒருவர் மட்டும் ஆசை கொண்டு அதற்கு அடுத்தவர் இசைந்து கொடுப்பது, `அவசரமான உறவுகள்’ வைத்துக்கொள்வதற்கு இரண்டு வார கால விடுப்பு அளியுங்கள். ஒரு குறிப்பிட்ட நாளில் `அதை’ வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுங்கள். அதுவரை நீங்கள் உங்கள் துணையைச் சீண்டி வாருங்கள். விலகியிருக்கும் அந்த ஒரு வார காலம் `அவருக்கு’ நீண்ட காலமாகத் தெரியும். அதன் பின் படுக்கையில் இணைம்போது அற்புதமாகவும் இருக்கும். ஆனால் இதுகுறித்து இருவரும் பேசி சம்மதம் என்றால் மட்டுமே ஈடுபடுங்கள், `விடுப்பு’ காலம் மிகவும் அதிகமாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் பாலியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

02 செப்டம்பர் 2010

கணவனின் கண்முன்னேயே காதலனுடன் ஓடிப்போன பெண்.




காலைக் காட்சி முடிந்து வெளியே வந்ததும் புவனேஸ்வரி, தியேட்டர் முன் பைக்குடன் நின்றிருந்த இருவரைக் காண்பித்து, "எனது நெருங்கிய உறவினர்கள்' என, ரமேஷிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரும் இருவரிடமும் நலம் விசாரித்தார். பின் புவனேஸ்வரி, "நான் உறவினருடன் பைக்கில் பேசிக் கொண்டே வருகிறேன். நீங்கள் அந்த பைக்கில் வாருங்கள்' எனக் கூறி மற்றொரு பைக்கை காண்பித்தார். அதனை நம்பிய ரமேஷ் ஒரு பைக்கிலும், புவனேஸ்வரி மற்றொரு பைக்கிலும் வீட்டிற்கு புறப்பட்டனர். புவனேஸ்வரியை ஏற்றிக் கொண்டு முன்னால் சென்ற பைக் சிறிது தூரத்தில் ரமேஷின் பார்வையிலிருந்து மறைந்தது.
ரமேஷை ஏற்றிச் சென்றவர் திடீரென பைக்கை நிறுத்தி, "இங்கேயே நில்லுங்கள். இதோ வந்து விடுகிறேன்' எனக் கூறிவிட்டு மாயமானார். வெகு நேரம் காத்திருந்த மாப்பிள்ளைக்கு சந்தேகம் வரவே, தனது மொபைல் போனில் வீட்டிற்கு பேசலாம் என பார்த்தபோது, யாரிடமும் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அனைத்து எண்களும் அழிக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் சாலக்கரையில் வீட்டிற்குச் சென்று பார்த்த போது தான், தன் மனைவி சினிமா தியேட்டரில் தனது மொபைல் போனை வாங்கி அனைத்து எண்களையும் திட்டமிட்டு அழித்தது தெரிந்தது. உறவினர் எனக்கூறி பைக்கில் வந்தவரை அறிமுகம் செய்து வைத்தது அவரின் காதலன் என்ற தகவலை அறிந்த ரமேஷ் நிலைகுலைந்தார். பெண்ணின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியைத் தேடி வருகின்றனர்.

01 செப்டம்பர் 2010

திருமண ஆசை இப்போது இல்லை:



பிரபல வலைதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் ராகுல் காந்தி திருமணம் செய்து கொள்ள ஏற்ற ஜோடி நடிகை வித்யாபாலன் என பலர் வாக்களித்து இருக்கிறார்கள். ""ராகுல் காந்தி போல எனக்கும் திருமண ஆசை இப்போது இல்லை. அப்படியிருக்க ஏன் இந்த கருத்துக் கணிப்பு'' டிவிட்டரில் சொல்லி பூரித்திருக்கிறார் வித்யாபாலன்.