பக்கங்கள்

29 ஜனவரி 2012

சிறந்த ஜோடி பிரிந்தது!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும் நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவா டைரக்டு செய்த வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் விவாகரத்து செய்துகொள்ள சம்மதித்தார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்துக்கு மாறினார். அத்துடன் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார். ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டது. அந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் நயன்தாரா கண்ணீர்விட்டு அழுதபடி, பிரியா விடை பெற்றார். நயன்தாரா இனிமேல் நடிக்கமாட்டார்' என்று பிரபுதேவா அறிவித்தார்.
பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்ததும், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நயன்தாரா எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இருவரும் சென்னை போர்ட்கிளப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபுதேவா, தன்னை ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா கருதினார். இதுவே அவர்களுக்குள் பூசலை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் சுமுகமாக பேசி பிரிவது என்று முடிவு செய்ததாகவும், அதன்படி, பிரபுதேவா, நயன்தாராவை விட்டு பிரிந்து மும்பை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா, பிரபுதேவாவை பிரிந்து, சொந்த ஊரான கொச்சிக்கு போய்விட்டார். அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
சந்தோசம்', மிஸ்டர் பெர்பக்ட்' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கிய தசரத், அடுத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் மூலம் நயன்தாரா திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார்.
தமிழில் அஜீத் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும் அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனிமேல் பிரபுதேவாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை, அவருடன் பேசுவதில்லை என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறாராம். அதேபோல், பிரபுதேவாவும், நயன்தாராவுடன் போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம்.. இரண்டுபேரின் காதல், ஒரேயடியாக முறிந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் மீண்டும் நடிக்கப்போவது உண்மை தான்'' என்று மட்டும் கூறினார்.

26 ஜனவரி 2012

பூஜைக்கேற்ற பூவிது!

நடிகை தமன்னா தற்போது பக்திப் பழமாகி விட்டாராம். எப்பப் பார்த்தாலும் ஹோமம், புனஸ்காரம் என்று புகையும், பூஜையுமாக பிசியாக இருக்கிறாராம்.
ஒரு காலத்தில் தமன்னாவுக்கு தமிழில் அத்தனை மவுசு இருந்தது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்த வேங்கைக்குப் பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அம்மணி தெலுங்கில் பிசியாகத் தான் இருக்கிறார். சும்மா ஓடி, ஓடி நடிக்கிறார்.
ஆனால் தற்போது தமன்னாவைப் பார்ப்பவர்கள் என்னாச்சு இந்த பொண்ணுக்கு இப்படி பக்தி மானாய் மாறிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறார்களாம்.
என்ன நம்ப முடியவில்லையா, அட நம்புங்கப்பா. ஹைதராபாத் வந்தால் போதும் தமன்னா கோவில் கோவிலாக ஏறி இறங்குகிறாராம். அட அப்படி என்ன தான் உருகி, உருகி வேண்டுகிறார் என்று தான் தெரியவில்லை.
மும்பைக்கு சென்றால் தனது வீட்டில் ஹோமம், பூஜை நடத்துகிறாராம். தற்போது தமன்னா இருக்குமிடம், போகுமிடமெல்லாம் பக்தி மயமாக உள்ளது.
பார்த்து, புகை ஜாஸ்தியாக கண்ணைக் கெடுத்துடப் போகுது...!

21 ஜனவரி 2012

கட்சியில் இணைந்தார் பூஜா!

நிர்வாண கோலத்தில் நடித்து கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நடிகை பூஜா காந்தி (தமிழில் கொக்கி படத்தில் நடித்தவர்), தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் நேற்று முறைப்படி இணைந்தார்.
அவருக்கு தேவே கவுடா மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி உறுப்பினர் அட்டை வழங்கினார்.
முங்காரு மலே என்ற படம் மூலம் கன்னடத்தில் முன்னணி நடிகையானவர் பூஜா காந்தி. சஞ்சனா என்ற பெயரில் தமிழில் கொக்கியில் அறிமுகமாகி, பின்னர் அர்ஜுன் ஜோடியாக திருவண்ணாமலையில் நடித்தார்.
கன்னடப் படம் தண்டுபால்யாவில் நிர்வாணமாகத் தோன்றி சமீபத்தில் சர்ச்சை கிளப்பினார். கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததும் தான் அப்படி நடிக்கவில்லை என்று மறுத்தார். ஆனாலும் எதிர்ப்பு ஓயவில்லை.
இந்த நிலையில் திடீரென அரசியலில் குதித்துள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் தான் சேர்ந்தது குறித்து பூஜா கூறுகையில், "முன்னாள் முதல்வர் குமாரசாமியை எனக்கு மிகவும் பிடிக்கும். கர்நாடகத்தில் நான் படப்பிடிப்புக்குப் போகும் இடங்களிலெல்லாம் குமாரசாமியின் நல்ல திட்டங்களைச் சொல்லி மக்கள் வாழ்த்தினர். அதனால்தான் இந்தக் கட்சியில் இணைந்தேன்," என்றார்.
பூஜா காந்திக்கு முன் நடிகை ரம்யா காங்கிரஸில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பழைய நடிகை ஜெயந்தி (பாலச்சந்தரின் பேவரிட் நடிகை), தாரா மற்றும் ஸ்ருதி ஆகியோர் ஏற்கெனவே அரசியலில் உள்ளனர்.

18 ஜனவரி 2012

விபச்சாரியாக விரும்பும் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா தற்போது ஆங்கில படமொன்றில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில்,
’’நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா வேதம் படத்தில் அதுபோன்ற கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி பட மொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன.
இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரை சந்தித்து இருக்கிறேன். சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம்.
அதை விளம்பரமாக எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2012

அது நான் இல்லை-காஜல்.

நடிகை காஜல் அகர்வால் மேலாடையின்று அரை நிர்வாணத்தில் “போஸ்” கொடுத்தது போன்ற படம் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காஜல் அகர்வால், ’’நான் குடும்பபாங்கான வேடங்களில் “மாடர்ன் டிரஸ்” அணிந்து நடிக்கிறேன். நான் எப்படிப்பட்ட பெண் என்பது ரசிகர்களுக்கு தெரியும். எனது அரை நிர்வாணப் படம் இண்டர்நெட்டில் வெளியானதை பார்தது அதிர்ச்சியானேன். எனது குடும்பத்தினர் வருந்தினர். நான் ரொம்ப வேதனைப்பட்டேன்.
அதுபோல் “போஸ்” கொடுக்கும் பெண் நான் அல்ல. சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன்.
மகேஷ் பாபுவுடன் “பிசினஸ்மேன்” படத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிகிறது. தமிழில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தயாரான “சிங்கம்” படத்தில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளேன்.
இந்தியை விட தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் உள்ளது. தென் இந்திய நடிகை என்று சொல்வதையே விரும்புகிறேன்.
எனது பாதி நேரம் பயணத்திலேயே கழிகிறது. படப்பிடிப்புக்காக சென்னை, ஐதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து கொண்டே இருக்கிறேன். கஷ்டப்பட்டால்தான் எல்லாம் கிடைக்கும். உழைப்பு இல்லாவிட்டால் பின்தங்கி விடுவோம்’’என்று தெரிவித்துள்ளார்.

14 ஜனவரி 2012

மனம் தளராத ஐஸ்வர்யா தனுஷ்!

சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.
செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.
ஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா... ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா...
தனுஷ் - ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், "நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் - ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் நிதானமாக.

09 ஜனவரி 2012

அர்த்தமே இல்லாத பாடலென்றால் அது கொலைவெறிதான்!

கொலைவெறி பாட்டு ஹிட்டானதில், தனுஷின் ஆட்டமும் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது.
சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், பிரதமர்கள் என பெரிய மனிதர்களின் நட்பும் அரவணைப்பும் இந்தப் படம் மூலம் தனுஷுக்குக் கிடைத்தாலும், கடும் சர்ச்சைகள், எதிர்ப்புகளுக்கும் பஞ்சமில்லை.
இந்தப் பாடல் வெளியான உடனேயே பெண்கள் அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. பின்னர் இலக்கியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர். உலகளவில் பிரபலமாகும் அளவிற்கு தரமான பாடலா? என்று கேள்வி எழுப்பினர் சிலர். ரசிகர்களை முட்டாளாக்கிவிட்டனர் என்று கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் கொலவெறி பாடலுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.
"எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இல்லாத பாடல் ஒன்று என்றால் அது 'ஒய்திஸ் கொலவெறி டி...' பாடலாகத்தான் இருக்க முடியும்.
இது அர்த்தமற்ற ரசனையாக உள்ளது. நல்ல அர்த்தங்களும், தத்துவங்களும் நிறைந்த பாடல்கள் ஏராளம் உள்னன. அவற்றுக்கு கூட இவ்வளவு வரவேற்பு இல்லை. இந்த பாடலுக்கு கிடைத்திருக்கிறது என்றால், அதன் மீதான ரசனையை என்ன வென்று சொல்வது?" என்று கூறியுள்ளார்.

05 ஜனவரி 2012

தப்பு தப்பா பேசுறாங்க"சுருதி வருத்தம்.

நடிகர் தனுஷூடன் ஸ்ருதிஹாசன் நெருங்கி பழகுவதாகவும், அதனால் ஐஸ்வர்யா வீட்டில் புகைச்சல் உண்டாகியுள்ளதாக வந்துள்ள செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகளான ஸ்ருதிஹாசன் 7ம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, இப்போது தனுஷூடன் 3 படத்தில் நடித்து வருகிறார்.
படம் வெளிவருவதற்கு முன்பே 3 படத்தில் இடம்பெற்றிருக்கும் கொலவெறி பாடல் தனுஷை பிரதமர் விருந்தில் பங்கேற்கும் அளவுக்கு கொண்டு போய் நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொலவெறி சொந்தக்காரர் தனுஷூம் – 3 படத்தின் ஹீரோயின் ஸ்ருதி ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருப்பதாகவும், இதனால் தனுஷின் மாமனார் கொலவெறியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை பற்றி கேள்விப்பட்ட ஸ்ருதி ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில் வலைதளத்தில் இவ்வாறு எழுதியுள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த தகவல் முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்றது, தனுஷ் என்னுடன் நடிக்கும் சக நடிகர். ஐஸ்வர்யா எனது நெருங்கிய தோழி. இப்படிப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் சம்பந்தப்பட்டவர்களையும், அவரைச் சார்ந்தவர்களையும் வேதனைப்படுத்தும். புத்தாண்டு அன்று நான் என் தாயாருடன் கோவாவில் இருந்தேன். சினிமா நட்சத்திரம் என்றாலே வதந்திகளுக்கு ஆளாக வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் ஏற்கனவே திருமணம் ஆன, அதுவும் எனக்கு நெருக்கமான குடும்பத்தின் உறுப்பினருடன் இப்படி இணைத்துப் பேசுவது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

02 ஜனவரி 2012

வித்யாபாலனுக்கு விருது!

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து கலக்கிய வித்யாபாலனுக்கு தனியார் அமைப்பு ஒன்று சிறந்த நடிகை விருது வழங்க தேர்வு செய்துள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமானது.
ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது.
சில்க் ஸ்மிதாவின் அண்ணன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நடிகர் வினுச் சக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். சில்க்ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்த வித்யாபாலன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்தியா முழுவதும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
தற்போது இதில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கிறது. நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வருகிற 21-ந்தேதி நடத்தும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.