பக்கங்கள்

18 ஜனவரி 2012

விபச்சாரியாக விரும்பும் ஸ்ரேயா!

நடிகை ஸ்ரேயா தற்போது ஆங்கில படமொன்றில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில்,
’’நடிகைகள் எல்லோருக்கும் விலைமாது வேடத்தில் நடிக்க ஆர்வம் உண்டு. எனக்கும் விபசாரியாக நடிக்க ஆசை இருக்கிறது. அனுஷ்கா வேதம் படத்தில் அதுபோன்ற கேரக்டரில் நடித்தார். விலைமாது வேடத்தில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும். வங்காள மொழி பட மொன்றில் நான் விலை மாதுவாக நடிக்கிறேன்.
மிக சிறந்த இடத்தை பிடித்த நடிகைகள் எல்லோருமே இந்த கேரக்டரில் நடித்து உள்ளனர். இந்தியை விட தென் இந்திய மொழி பட வாய்ப்புகளே எனக்கு அதிகம் வருகின்றன.
இந்தி திரையுலகம் ஆணாதிக்கம் மிகுந்ததாக உள்ளது. நடிகைகளுக்கு அங்கு முக்கியத்துவம் இல்லை. கவர்ச்சிக்கும் டூயட் பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், ‘’கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் என்னை தொடர்புபடுத்தி பேசுகின்றனர். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. ஒரு பேஷன் ஷோவில் மட்டும் அவரை சந்தித்து இருக்கிறேன். சல்மான்கானுடன் நான் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். அவர் நல்ல மனிதர். எனக்கு மரியாதை அளிப்பவர். எல்லா பெண்களையுமே அவருடன் இணைத்து பேசுவது சகஜம்.
அதை விளம்பரமாக எடுத்துக் கொள்வது உண்டு. ஆனால் நான் அது போல் மலிவான விளம்பரம் தேட மாட்டேன்’’ என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக