பக்கங்கள்

29 ஜனவரி 2012

சிறந்த ஜோடி பிரிந்தது!

விரைவில் மாலையும் கழுத்துமாக பிரவுதேவாவும் நயன்தாராவும் தோன்றுவார்கள் என்று எதிர்பார்த்தால், இப்போது இருவரும் பிரிய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிரபுதேவா டைரக்டு செய்த வில்லு' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு பிரபுதேவாவின் மனைவி ரமலத் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் விவாகரத்து செய்துகொள்ள சம்மதித்தார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவாவை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக நயன்தாரா கிறிஸ்தவ மதத்தில் இருந்து விலகி, இந்து மதத்துக்கு மாறினார். அத்துடன் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்தார். ராமராஜ்யம்' என்ற தெலுங்கு படம்தான் அவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்பட்டது. அந்த படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் நயன்தாரா கண்ணீர்விட்டு அழுதபடி, பிரியா விடை பெற்றார். நயன்தாரா இனிமேல் நடிக்கமாட்டார்' என்று பிரபுதேவா அறிவித்தார்.
பிரபுதேவா, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்ததும், தன்னை திருமணம் செய்துகொள்வார் என்று நயன்தாரா எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. இருவரும் சென்னை போர்ட்கிளப்பில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிரபுதேவா, தன்னை ஏமாற்றிவிட்டதாக நயன்தாரா கருதினார். இதுவே அவர்களுக்குள் பூசலை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து நயன்தாராவும், பிரபுதேவாவும் சுமுகமாக பேசி பிரிவது என்று முடிவு செய்ததாகவும், அதன்படி, பிரபுதேவா, நயன்தாராவை விட்டு பிரிந்து மும்பை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா, பிரபுதேவாவை பிரிந்து, சொந்த ஊரான கொச்சிக்கு போய்விட்டார். அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.
சந்தோசம்', மிஸ்டர் பெர்பக்ட்' ஆகிய தெலுங்கு படங்களை இயக்கிய தசரத், அடுத்து ஒரு புதிய தெலுங்கு படத்தை டைரக்டு செய்கிறார். அதில், நாகார்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். அந்த படத்தின் மூலம் நயன்தாரா திரையுலகில் மறுபிரவேசம் செய்கிறார்.
தமிழில் அஜீத் கதாநாயகனாக நடிக்க, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும் அவர் கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இனிமேல் பிரபுதேவாவுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை, அவருடன் பேசுவதில்லை என்பதில் நயன்தாரா உறுதியாக இருக்கிறாராம். அதேபோல், பிரபுதேவாவும், நயன்தாராவுடன் போனில் பேசுவதை நிறுத்திக்கொண்டாராம்.. இரண்டுபேரின் காதல், ஒரேயடியாக முறிந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டபோது, "நான் மீண்டும் நடிக்கப்போவது உண்மை தான்'' என்று மட்டும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக