பக்கங்கள்

02 ஜனவரி 2012

வித்யாபாலனுக்கு விருது!

சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து கலக்கிய வித்யாபாலனுக்கு தனியார் அமைப்பு ஒன்று சிறந்த நடிகை விருது வழங்க தேர்வு செய்துள்ளது.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து டர்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் இந்தியில் படமானது.
ஏக்தா கபூர் தயாரித்த இந்தப் படம், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியானது.
சில்க் ஸ்மிதாவின் அண்ணன் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நடிகர் வினுச் சக்கரவர்த்தி எதிர்ப்பு தெரிவித்தார். சில்க்ஸ்மிதா வேடத்தில் கவர்ச்சியாக நடித்த வித்யாபாலன் மீதும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இந்தியா முழுவதும் இப்படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.
தற்போது இதில் நடித்த வித்யாபாலன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். படத்துக்கும் சிறந்த படத்துக்கான விருது கிடைக்கிறது. நேஷனல் மீடியா நெட்வொர்க் அமைப்பு வருகிற 21-ந்தேதி நடத்தும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக