பக்கங்கள்

10 ஏப்ரல் 2013

நான் பத்திரமாக இருக்கேன்-அஞ்சலி

ஹைதராபாத் ஹோட்டலில் இருந்து மாயமான நடிகை அஞ்சலி தனது தாய் பார்வதி தேவிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அஞ்சலி தனது சித்தி பாரதி தேவி மற்றும் இயக்குனர் களஞ்சியம் மீது மோசடி புகார் தெரிவித்தார். இதையடுத்து சென்னையில் இருந்து வெளியேறிய அவர் போல் பச்சன் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஹைதராபாத் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கி ஷூட்டிங் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் அவரைக் காணவில்லை. அவர் மாயனது குறித்து அவரது அண்ணன் ரவிசங்கர் மீது சந்தேகமாக உள்ளதாக அவரது சித்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அஞ்சலி இன்று தனது அம்மா பார்வதிக்கு போன் செய்து தான் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். தான் இருக்கும் இடத்தை தெரிவிக்காத அவர் தற்போதைய பிரச்சனைகளால் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதனால் தான் ஹோட்டலில் இருந்து சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக