பக்கங்கள்

17 செப்டம்பர் 2013

நழுவியது பிரபல நடிகையின் உடை!

சமீபத்தில் துபாயில் நடந்த சிமா விருது வழங்கும் விழாவில் பிரபல கன்னட நடிகை ராகினி திவிவேதியின் உடை திடீரென நழுவியது. இதில் நடிகையை விட பார்வையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். துபாயில் நடந்த இந்த விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், ஒரு கலவை பாடலுக்கு மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. அப்போது திடீரென அவரது ஸ்கர்ட் நழுவி, உள்ளாடை தெரிய, ரசிகர்கள் அதிர்ந்தனர். ஆனால் இது எதுவுமே தெரியாமல் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் ராகினி. இதைப் பார்த்த நடிகையும் தயாரிப்பாளருமான லட்சுமி மஞ்சு, மேடைக்கு ஓடினார். விளக்குகளை அணைக்கச் சொன்ன அவர், ராகினியை உள்ளே அழைத்துப் போய் உடையைத் திருத்தினார். பின்னர் மீண்டும் மேடைக்கு வந்து மிச்சத்தையும் ஆடிவிட்டுச் சென்றார் ராகினி. இந்த விழாவில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விமர்சகர் விருது கிடைத்தது (கன்னடப் படம் சிவாவில் நடித்ததற்காக). தனது உடை நழுவியது குறித்து கருத்து தெரிவித்த அவர், "எதுவோ தப்பா இருக்கேன்னு நினைச்சிக்கிட்டேதான் டான்ஸ் பண்ணேன். நல்ல வேளை விளக்குகளை அணைச்சிட்டாங்க. ஒரு விபத்துதான். அதை நான் மறக்க விரும்புகிறேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக