பக்கங்கள்

17 ஏப்ரல் 2011

த்ரிஷாவின் முரட்டுத்தனம்!

என்னிடம் அன்பாக பேசினால் நானும் அன்பாக பேசுவேன், அதேசமயம் முரட்டுதனமாக பேசினால் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம், என் குணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறுகிறார் த்ரிஷா. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இம்மாதம் 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டளிக்க காலையிலேயே கர்ப்பிணி பெண்கள், வயதான தாத்த, பாட்டி முதல் இளைஞவர்கள் வரை அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்தனர். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரசான்சிஸ் சேவியர் பள்ளியில் ஓட்டுபோட தனது தாயார் உமா, பாட்டி சாரதா ஆகியோருடன் 1மணிக்கு சென்றார் நடிகை த்ரிஷா. அப்போது த்ரிஷா வரிசையில் நிற்காமல் நேராக ஓட்டுபோடும் அறைக்கு சென்றார். அப்போது அவருக்கும், வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒரு வாக்காளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து நடிகை த்ரிஷா விளக்கமளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓட்டும்போடும் போது என்னை வரிசையில் நிற்கும்படி சொன்னது தவறல்ல. ஆனால் அந்த வாக்காளர் சொன்ன விதம் தான் தவறானது. நடிகையென்றால் என்ன கேவலமானவர்களா..? வரிசையில் நின்று ஓட்டுப்போடுங்கள் என்று அன்போடு கூறியிருந்தால் நானும் வரிசையில் நின்றிருப்பேன். ஆனால் அந்த வாக்காளர் முரட்டுதனமாக பேசியதால் நானும் அவருடன் தகராறில் ஈடுபட வேண்டியதாயிற்று. என்னிடம் அன்போடு பேசினால், நானும் அன்போடு பேசுவேன். அதை‌விட்டு முரட்டுதனமாக பேசுபவர்களிடம் நானும் அப்படித்தான் பேசுவேன். அது என்னுடைய சுபாவம் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக