பக்கங்கள்

07 ஏப்ரல் 2011

ஓராண்டுக்கு தொடர் பிஷி என்கிறார் ஹன்ஷிகா.

அடுத்த ஓராண்டுக்கு பிஸியாக இருப்பேன் என்று நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியுள்ளார். தமன்னா, டாப்ஸி பன்னு வரிசையில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் வெள்ளாவிப் பெண் ஹன்சிகா மோத்வானி. ஆந்திராவை சேர்ந்த இவர், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அவர் நடித்து ஒரு படம் கூட ரீலிஸ் ஆகாத நிலையில் அடுத்த ஓராண்டுக்கு பிஸி நாயகியாகி விட்டார். அந்த அளவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது தமிழ் சினிமா. இளம் நடிகர்கள் மட்டுமில்லாமல் மூத்த நடிகர்கள் சிலரும் ஹன்சிகாவை தங்கள் நாயகியாக்க கால்ஷீட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹன்சிகாவின் பார்வையோ... 3 கோடிக்கும் அதிகமாக சம்பளம் பெறும் ஹீரோக்கள் மீது மட்டுமே இருக்கிறதாம். அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடி வருவது குறித்து ஹன்சிகா அளித்துள்ள பேட்டியொன்றில், அடுத்த ஓராண்டுக்கு என்னோட கால்ஷீட் டைரி ஃபுல் ஆகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. கதைகளை தேர்ந்தெடுத்த நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். எனது படம் ரீலிஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை, என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்திலும் ஹன்சிகாதான் நாயகி என்பது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக