பக்கங்கள்

11 ஏப்ரல் 2011

குழப்பத்தில் இருக்கும் தமன்னா!

தெலுங்கில் தயாரிப்பாளருடன், தான் மோதலில் ஈடுபட்டதாக வந்த வதந்தியால் வருத்தத்தில் இருக்கிறார் தமன்னா. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னாவிற்கு கைவசம் ஒரே ஒரு படம்(வேங்கை) மட்டுமே உள்ளது. அதுவும் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இருக்கிறார் தமன்னா. அங்கு ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தெலுங்கில் நாக சைதன்யாவுடன் 100% காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் தமன்னா. இப்படத்தின் போது தயாரிப்பாளருக்கும், இவருக்கும் சம்பளம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதனை மறுத்து உள்ளார் தமன்னா. இதுகுறித்து அவர் கூறியதாவது, சினிமாவிற்கு வந்துவிட்டாலே கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கும் பஞ்சம் இருக்காது. என்னைப்பற்றியும் நிறைய வதந்தி மற்றும் கிசுகிசுக்கள் வந்துள்ளது. அப்போதெல்லாம் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனால் இப்போது தயாரிப்பாளருடன் எனக்கு பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு ‌மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருகிறேன். நான் யாரிடமும் இதுவரை பிரச்சனை செய்தது இல்லை. சம்பளம் தொடர்பாக தயாரிப்பாளருக்கும் எனக்கு எந்த மோதலும் கிடையாது. பொதுவாக ஒரு நடிகையின் சம்பளம் படத்தின் பட்ஜெட் மற்றும் அந்த நடிகையின் மார்க்கெட் நிலவரம் இரண்டையும் வைத்து தான் தீர்மாணிக்கப்படுகிறது. என்னுடைய சம்பளமும் அதுபோலத்தான் தீர்மாணிக்கப்பட்டது. தயாரிப்பாளரே எனது நடிப்பு தி‌றமையை பார்த்து சம்பளத்தை ஃபிக்ஸ் செய்தார். நான் எதுவும் சம்பளத்தை உயர்த்தி கேட்கவில்லை. படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து வெகுவாக பாராட்டினார் தயாரிப்பாளர். எனக்கும், தயாரிப்பாளருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதுபோன்ற வதந்திகளால் எனது கேரியர் பாதிக்கப்படும் என்று வருத்தத்துடன் கூறுகிறார் தமன்னா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக