பக்கங்கள்

13 ஆகஸ்ட் 2010

கிளாமராக நடிக்க தயங்க மாட்டேன்.



கிளாமராக நடிக்க தயங்கமாட்டேன் என்று மலர் மேல்நிலைப்பள்ளி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ள நடிகை ஹசிகா தெரிவித்தார்.பொறியியல் கல்லூரி மாணவியான ஹசிகாவின் சினிமா விஜயம் பற்றி கேட்ட போது அவர் அளித்த பதில்:பெங்களூர்தான் சொந்த ஊர். சின்ன வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்தது. படித்து முடித்த பின்னர் சினிமாவில் நடிக்கும் முடிவில் இருந்தேன். அது போலவே இப்போது சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் போது மாடலிங், விளம்பரம் என ஆர்வம். தெலுங்கு, கன்னடம் என நிறைய சினிமா வாய்ப்புகள் அப்போதே வந்தன.ஆனால் தமிழ் படத்தில்தான் அறிமுகமாக வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். இதோ இப்போது நினைத்தப்படியே தமிழில் அறிமுகம் கிடைத்திருக்கிறது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு பின் அடுத்த படம். நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். மலர் மேல்நிலைப்பள்ளி படத்தில் பள்ளி மாணவியாக நடிக்கிறேன். முழுக்க முழுக்க காதல் படம். மாதுரி தீட்சித் என் ரோல் மாடல். அவரைப் போல் எல்லா கேரக்டர்களிலும் நடிக்க வேண்டும். தமிழில்தான் தொடர்ந்து நடிக்க போகிறேன். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் தெரியும். கதைக்கு தேவை என்றால் கிளாமருக்கு தடையில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக