பக்கங்கள்

29 ஏப்ரல் 2012

ரீமா விரும்பும் வேடம்!

Reema Senகல்யாணத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழில் ரீவிசிட் அடிக்கும் ரீமா சென் தான் நடிக்கப் போகும் புதிய படத்தில் கிளாமர் பகுதி நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டுள்ளாராம்.
ரீமா சென்னுக்கு தமிழ் உள்பட எந்த மொழியிலும் வாய்ப்பில்லாமல் போனதால் அவர் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்தவரை கல்யாணம் செய்து கொண்டு சற்றே ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஹனிமூன் டிரிப்பை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
விஜய் தான் உருவாக்கியுள்ள கில்லி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தை ரீமேக் செய்யப் போகிறார். இதுதான் விஜய் தயாரிப்பில் உருவாகும் முதல் படம். இபப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரீமா சென் வருகிறார்.
இந்த கேரக்டர் தனக்கு தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ரீமா சென். இப்படத்தின் கதாநாயகி ரீமா சென் அல்ல என்றாலும் கூட படத்தின் கதையோட்டத்தில் ரீமாவுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் இந்த கேரக்டரிலும் தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும் என்று கூறியுள்ள ரீமா, அதற்கேற்றார்போல கிளாமரான முறையில் கேரக்டரை வடிவமைக்குமாறு இயக்குநரிடம் அன்புக் கோரிக்கை வைத்துள்ளாராம்.
இயக்குநர் 'சரீமா' என்று சொன்னாரா என்பது தெரியவில்லை...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக