பக்கங்கள்

26 செப்டம்பர் 2015

நயன்தாராவால் போக்கு வரத்துத் தடை!

சேலத்தில் புடவைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகை நயன்தாரவைப் பார்க்க கூட்டம் குவிந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே புடவைக் கடை ஒன்றை நடிகை நயன்தாரா இன்று காலை திறந்து வைத்தார். அப்போது நயன்தாராவை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், இளம்பெண்கள் மட்டுமின்றி சிறுவர்கள் முதல்
பள்ளி,கல்லூரி மாணவர்கள் வரை கூட்டம் அலைமோதியது.இதனால் சேலம் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் பெண்கள்,கைக் குழந்தையோடு நெரிசலில் சிக்கி தவித்தனர்.இளம் பெண்கள் நயன் தாரவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்களின் மேல் விழுந்து நெரிசலில் சிக்கிய கொடுமையும் அரங்கேறியுள்ளது. மேலும் கூட்ட நெரிசலில் பல பெண்களின் நகைகள் களவு போனதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதுதான்யா 'தானா'வந்த கூட்டம் என்ற கமெண்டும் கூட்டத்தில் எதிரொலிக்கவே செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக