பக்கங்கள்

16 ஜூலை 2016

பாகிஸ்தானின் பிரபல மொடல் அழகி கொலை!

http://img.vikatan.com/news/2016/03/18/images/5.jpgபாகிஸ்தானின் பிரபல மாடல் மற்றும் சோஷியல் மீடியா பிரபலமுமான குவான்டீல் பலோச், அவரது சொந்த சகோதரனால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரின், நடவடிக்கையால் அதிருப்தியடைந்த சகோதரனால், குவான்டீல் 'கவுரவ கொலை' செய்யப்பட்டதாக தெரிகிறது. சோஷியல் மீடியாவான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் எதிர் கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அவ்வப்போது பரபரப்பை கிளப்பி வந்தவர் குவான்டீல். மாடல் நடிகையாகவும் பிரபலமானவர்.கடந்த வரும் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றால், நிர்வாணமாக ஓட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர். ஆனால், இந்தியா அந்த போட்டியில் வென்றதால், பல ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில், முல்தானில் பெற்றோர் வசித்து வருவதால் ரம்ஜான் கொண்டாக அங்கு சென்றிருந்தார் குவான்டீல். நேற்றிரவு அவர் நன்கு தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் சகோதரர் வசீம். இன்று காலைதான் இதுகுறித்து தெரியவந்தது. போலீசார் தலைமறைவாக உள்ள வசீமை தேடி வருகிறார்கள். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு குவான்டீல் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று வசீம் பலமுறை எச்சரித்ததாகவும், அதை குவான்டீல் புறம் தள்ளியதால் 'கவுரவ கொலை' செய்யப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக