பக்கங்கள்

31 ஜனவரி 2011

கவர்ச்சிக்கு ஆசைப்படும் அஞ்சலி!

குடும்பப் பாங்கான நடிகை என்று எழுதுவதைப் படிக்கும் போது இனித்தாலும், பைசா மேட்டர் என்று வந்தால், கவர்ச்சி நடிகைகளுக்கு மட்டும்தான் ஏகத்துக்கும் 'மீட்டர்'!
சினேகா போல ஓரிரு நடிகைகள்தான் கடைசி வரை முழு கவர்ச்சிக்கு நோ சொல்லிவிட்டு நடிப்பைத் தொடர்கிறார்கள். மற்றவர்கள் முதல் படத்தில் முத்தழகியாக வந்து, அடுத்தடுத்த படங்களில் முற்றும் துறந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். சினிமா அப்படி!
இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ளவர் நடிகை அஞ்சலி. கற்றது தமிழில் அறிமுகமானாலும், அங்காடி தெருதான் இவருக்கு விலாசம் கொடுத்தது. இடையில் ஆயுதம் செய்வோம் படத்தில் கவர்ச்சி காட்ட முயன்றார். படம் பப்படமாகிவிட்டது.
இப்போது வரிசையாக பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எதிர்ப்பார்த்த 'ரேட்' கிடைத்தபாடில்லை. எனவே மீண்டும் கவர்ச்சி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் அஞ்சலி.
"இப்போதுதான் பெரிய வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. மகிழ்ச்சியாக உள்ளது. அழுது வடிகிற பாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று சிலர் நம்பிக்கொண்டுள்ளனர். இதை மாற்றத்தான் கவர்ச்சியான வேடங்களாக இருந்தாலும் உடனே ஒப்புக் கொள்கிறேன்.
அஜீத்துடன் மங்காத்தா படத்திலும் நடிக்கிறேன். ஏ.ஆர். முருகதாஸ், படமொன்றிலும் நடிக்கிறேன்...", என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக