பக்கங்கள்

01 பிப்ரவரி 2011

பூஜா நடிப்புக்கு முழுக்கு!

ஜே.ஜே" படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூஜா, அஜீத்துடன் "அட்டகாசம்", மாதவனுடன் "தம்பி", ஜீவாவுடன் "பொறி" என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். நடிப்பு திறமை இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்‌லை. கடைசியாக டைரக்டர் பாலா இயக்கத்தில் வெளிவந்த "நான் கடவுள்" படத்தில் கண்பார்வையற்ற பெண்ணாக நடித்தார். வித்யாசமான கேரக்டர் என்பதால் நிச்சயம் தனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் விருதும் கிடைக்கவில்லை, மேற்கொண்டு படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் மனம் நொந்துபோன பூஜா, சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது பூஜாவை பற்றி விசாரித்தபோது அவர் பெங்களூரில் செட்டிலாகிவிட்டதாக கூறப்படுகிறது. பூஜா ஒரு நடிகை மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த மேலாளாரும் கூட. பெங்களூரில் உள்ள முன்னணி ஐ.டி.கம்பெனி ஒன்றில் மேனஜராக பணியாற்றி வருவதாகவும், கம்யூட்டர் இன்ஜினீயர் ஒருவரை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வருங்கால கணவரின் கோரிக்கையை ஏற்று சினிமாவிற்கு முழுக்கு போட்டதாகவும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக