பக்கங்கள்

07 பிப்ரவரி 2011

ஏன்தான் என்னைப்பத்தி இவ்ளோ செய்திகள் வருதோ!

எப்படித்தான் இந்த செய்தியெல்லாம் வருதோ... நாளும் ஒரு விதமான செய்தி என்னைப் பற்றி வருகிறது என்று கூறியுள்ளார் த்ரிஷா.
சில தினங்களாக இணையதளங்களில் த்ரிஷா பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
த்ரிஷாவுக்கு திருமணம் என்று அவருக்கு நெருக்கமான சிலரே வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். அவரது தாயார் உமா கிருஷ்ணன் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் மும்முரமாக உள்ளாராம்.
இன்னொரு பக்கம் எப்படியாவது ரஜினியின் ஜோடியாக ராணாவில் நடித்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம் த்ரிஷா.
இந்த நிலையில் அவரது மார்பில் உள்ள (நீண்ட காலமாக) டாட்டூவுக்கு புதிய விளக்கம் கற்பித்து இணையங்களில் செய்திகள் வரத்துவங்கியுள்ளன. தொடர்ந்து தன்னைப் பற்றி வரும் செய்திகள் குறித்து இப்படிக் கூறியுள்ளார் த்ரிஷா:
"அது ஏன் என்னைப் பத்தி மட்டும் இவ்ளோ செய்திகள் வருதுன்னே தெரியல. கல்யாண மேட்டர்ல நிறைய கற்பனை செய்திதான் வருது. நானே சொல்றேன். எதுக்கு அவசரம். மத்த செய்திகள் எதுவும் இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக